Total Pageviews

Sunday, March 2, 2014

காந்தீயமும் இந்து மதமும் !!




எல்லா வேதங்களும் இறைவனிடமிருந்தே வந்துள்ளன ! ஆனால் அவை அந்தந்த காலசூழ்நிலை மற்றும் இனங்களை பொருத்து அவை பகுதிபகுதியாக வெளிபட்டுள்ளன !


எவையுமே முழுமையானவையுமல்ல ; அதுபோல இறைவனிடமிருந்து வராதவையுமல்ல !

தங்களது வேதம் மட்டுமே இறைவனிடமிருந்து வந்துள்ளதாக ஒவ்வொரு மதங்களும் அடுத்த மதத்தை அழிக்கமுற்படுவதில் மனித தவறுகளும் அசுர சக்திகளின் பின்புலமும் உள்ளது !

ஆதி தர்மமான இந்து மதம் மற்ற மதங்களை எதிர்க்காமல் அவற்றின் மைய கருத்துகளை தனக்குள் சுவீகரித்துக்கொள்வது அதன் இயல்பாக இருந்ததாலேயே இது வரை நிலைத்துள்ளது !

உள்ளும் புறமும் எத்தனையோ சீர்கேடுகள் தாக்குதல்கள் நேர்ந்தாலும் அது அழியாததின் ரகசியம் இதுவே !

புத்தருக்கு முன்பு உயிர்ப்பலியை வேள்வியாக யாகம் செய்வதையே வழிபாடாக செய்து கொண்டிருந்த பிராமணர்கள் புத்தம் மற்றும் சமண மதத்தின் வளர்ச்சியால் சகல கோவிலகளும் அடைக்கப்பட்டு வேறு தொழிலுக்கும் போனார்கள் !

ஆனால் மீண்டும் சைவமும் வைணவமும் தழைத்த போது குறைந்த பட்சம் கோவில் பூசை செய்பவர்கள் புலால் உண்ணாதவர்களாக இருக்கவேண்டும் என்பது நியதி ஆக்கப்பட்டது !

புத்தமும் சமணமும் இப்படி முக்கிய விசயங்கள் - அதாவது உயிர்ப்பலியை தவிர்த்தல் என்ற கோட்பாடு இந்து மதத்தில் சூவீகரிக்கப்பட்டதால்தான் அடங்கிப்போனது !

அதுபோல இன்றைக்கு சவால் விடும் ஆப்ராகாமிய மதங்களை அடக்க வேண்டுமானால் அவைகளில் வெளிப்படுத்தப்பட்ட முக்கிய சாரமான ஏக இறை கொள்கையை நாம் சூவீகரித்தாக வேண்டும் !

உலகின் ஆதி ஏக இறை மார்க்கம் வைணவம் என்பதை மறந்து விடலாகாது !

சகல வெளிப்பாடுகளும் நாராயணன் என்றால் அவற்றை வெளிப்படுத்திய ஒருவர் -- ஆதிமூலம் அவற்றிர்க்கு வெளியே நிற்கிறார் என்பது உண்மை !

அந்த ஆதிமூலம் அரூபமானவர் ! அவரை குருவாகிய நாராயணன் மூலமாக வழிபடுவதே `` ஓம் நமோ நாராயணாய `` என்ற மூல மந்திரம் !

நாராயணாய ; என்றுதான் மந்திரம் உள்ளது நாராயணா என நாராயணனை அழைக்கவில்லை மாறாக நாராயணனாக ஆனவனை அழைக்கிறது



நாராயணனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணாய

சிவனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ சிவாய


மனிதனை விட உயர்ந்த சக்திகள் அனைத்தையும் குருவாக வைத்து அரூப இறைவனை வழிபடுவது என்ற ஆதி இந்து மத நெறியை நாம் பட்டை தீட்டிக்கொண்டோமானால் அதற்குள் கிரிஸ்த்தவமும் இசுலாமும் அடங்கி விடும் !

சிவன் விஸ்ணு பிரம்மா மற்றும் யார் மூலமாகவும் அருப இறைவனை வழிபடுவது என மாற்றிக்கொண்டோமானால் அது யாரையும் இழிவுபடுத்தாது ; எந்த சக்தியையும் அவ மரியாதை செய்யாது என்பதை புரிந்துகொள்ளவேண்டும் !

காந்தி மும்மத சகிப்புத்தன்மையை வலியுறுத்தியது மேற்கண்ட இலக்கை நோக்கிய முயற்சி என்றாலும் போதிய தெளிவின்மை அப்போது அவருக்கு இருந்ததால் தோல்வியடைந்தார் !

சிறுபான்மையினரை பாதுகாப்பதாக நினைத்து அவ்ர்களின் மற்றும் இந்துக்களின் முரண்பாடுகளுக்கு பலியானார் !

பொது சிவில் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தால் இத்தனை சண்டை சச்சரவுகள் வந்திருக்காது !

சிவில் விசயங்களில் சாரியத் சட்டத்தை அமுல்படுத்திக்கொள்ள உரிமை கொடுத்து விட்டு கிரிமிணல் விசயங்களில் தண்டனையை இந்திய சட்டங்களின்படி கொடுப்பது என்பது முஸ்லீமகளுக்கு மிகவும் இனிமையான மார்க்கமாக இந்தியாவில் தெரிகிறது !

இந்திய கோர்ட்டுகள் குற்றத்தை உறுதி செய்தால் முஸ்லீம்களுக்கு தண்டனை குரானின் படி நடுத்தெருவில் நிறுத்தி கசையடி கையை காலை வெட்டுவது கல்லால் அடிப்பது என கொடுத்திருந்தால் அது இனிமையற்ற மார்க்கம் என்று கண்டுகொண்டிருப்பார்கள் ! ஏக இறை வழிபாட்டை மட்டும் வைத்துக்கொண்டு அரேபிய வாண்கோழிகளாக மாறுவதை விட்டுவிடுவார்கள் ! இந்தியர்களாகவே இருந்திருப்பார்கள் !

சலுகைகள் இன்றைக்கு தவறுதலாக மாற்று மதங்களாலும் சாதிகளாலும் பயன்படுத்தடும் நிலை வந்துவிட்டது !

மத நல்லிணக்கம் என்பது மத வெறியாக பரிணமித்து விட்டது !

சாதி கொடுமை என்பது சாதி வெறியாக வளர்ந்துகொண்டிருக்கிறது !

இது காந்தியத்தில் குறைகளை சரிசெய்து கொண்டு வளரவேண்டிய நேரம் இது !

இந்து மதத்திற்குள் கிரிஸ்தவத்தையும் இசுலாத்தையும் சுவீகரிக்கவேண்டிய தருணம் இது !



நாராயணனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணனாய

ஆதிசேஷனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ ஆதிசேஷாய

நாராயணியாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணியாய

சிவனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ சிவாய

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி


No comments:

Post a Comment