Total Pageviews

Sunday, March 2, 2014

பட்டகாலே படும் ! கெட்டகுடியே கெடும் !

சிலருக்கு மட்டும் நோவுகள் மேல் நோவுகள் வந்துகொண்டே இருக்கும் ! நிம்மதி என்பதே இருக்காது !

கொடுமை கொடுமை என்று கோவிலுக்கு போனால் அங்கும் ரெண்டு கொடுமை வந்து திங்குதிங்கு குதிக்குது என்பார்கள் !

காரணம் ஒன்றே ஒன்று தான் ! அது நீங்கள் பல பிறவியெடுத்த முதிர்ந்த ஆத்மா என்பதுதான் !


நான் சொல்வதை நிதானமாக கேட்டு உணரத்தொடங்கினால் விரைவாக எளிதாக பேரானந்தத்தை அடைய உங்களால் முடியும் !

நீங்கள் ஒரு ஆத்மா மற்ற மிருகங்களைப்போல அல்ல ; மனித ஆத்மா ஏறக்குறைய அழிவற்றது - நியாயத்தீர்ப்பு நாள் வரை ! அது பரமாத்மாவையே போன்றது ! அதன் ஒரு பிண்ணம் !

நீங்கள் பல பிறவி எடுத்துள்ளீர்கள் ! இன்னும் பல பிறவி எடுப்பீர்கள் ! இதில் நீங்கள் செய்த நல்லது கெட்டது அதனால் விளைந்த அணுபவம் என்ற அறிவு ஞானம் மட்டுமே உங்கள் கூட ஒவ்வொரு பிறவியிலும் வரும் !

இன்றைய உறவிணர்கள் ; உங்கள் கணவர் ; மனைவி ; பிள்ளைகள் கூட அடுத்த பிறவியில் கூட வரப்போவதில்லை

உங்கள் ஆத்மா ஆண் பெண் பேதமற்றது அடுத்த பிறவியில் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ பிறக்கக்கூடும்

சென்ற பிறவியின் பாவ புண்ணியங்களின் விகிதங்கள் மாறுவதால் அந்த உறவிணர்கள் இப்போது அவரவருக்கு ஏற்ற இடத்தில் பிறவியெடுத்திருப்பார்கள்

ஒரு ஏரியில் சில கட்டைகள் மிதக்கின்றன அவைகளில் சில கொஞ்ச நேரம் வரை சேர்ந்து பயணிக்கும் பிறகு பிரிந்து விடும் பிறகு வேறு ஜோடிகளுடன் இருக்கும் பிறகும் பிரிந்து விடும் இதுபோலத்தான் உறவிணர்கள்

இந்த சரீரத்தில் உங்கள் ஆத்மா வந்ததால் சிலருடன் ரத்தபாசம் உங்களுக்கு உள்ளது அது இப்பிறவிக்கு நிரந்தரம் போல தோன்றினாலும் நிரந்தரமல்ல ; தற்காலிகமானது

கடமைக்காக நாம் இவர்களுடன் இருக்கவும் அன்பு செலுத்தவும் ஆழாக்கவும் அன்பை எதிர்பார்க்கவும் வேண்டியுள்ளது ஆனாலும் முந்தய பிறவியில் இவர்கள் அன்னியர்களாகத்தன் இருந்தார்கள் அடுத்த பிறவியிலும் அன்னியரே

உங்களுக்கு உள்ள ஒரே நிரந்தர உறவு நீங்கள் எதிலிருந்து தனித்தன்மை அடைந்தீர்களோ அந்த பரமாதமா மட்டுமே ! அந்த பரமாத்மாவை நீங்கள் நாடி அதன் நிரந்தர அன்பை - பேரானந்தத்தை உணரத்தொடங்கி விட்டீர்களானால் உங்கள் மனதில் ஒரு வெறுமை உண்டாகியிருக்கிறதே அதிலிருந்து விடுதலை கிடைத்து விடும்
நீங்கள் யாரிடமிருந்து பிரிந்து தனித்த ஆத்மாவாக எப்போது ஆனீர்களோ அப்போது உங்கள் ஆத்மாவில் பாவம் இருந்திருக்காது அதனால் உலகில் சக ஆத்மாக்களுடன் சேர்ந்து உலக இன்பங்களை துய்க்க அதிக வாய்ப்பும் சந்தர்ப்பத்தாலும் ; உலகியல் பாவங்களில் மூழ்கி பரமாத்வாவிடமிருந்தே வெகு தூரம் வந்து விட்டீர்கள்

நன்றும் தீதும் பிறர்தர வரா என்பது தமிழ் முதுமொழி

இந்த உலக இன்பங்களுக்காக நீங்கள் செய்த பாவங்கள் இப்போது பிறர் மூலமாக உங்களை வந்து உறுத்துகிறது

ஆனாலும் இந்த உறுத்துதல் - துன்பங்கள் மூலமாக மட்டுமே மனித ஆத்மா கடவுளை தேடும் நிலைக்கு வரும்

ஒரு வகையில் கடவுள் நமக்கு அனுமதிக்கும் துன்பம் அவர் நம் மீது காட்டுகிற ஒரு உறவு ஒரு மொழி

யார் உங்களை எப்படி புண்படுத்தினாலும் முற்பிறவிகளில் இதுபோலத்தான் நாமும் நடந்துகொண்டோம் என்று எண்ணிக்கொள்வோமானால் நோவு குறையும் நிதானம் சாந்தம் உண்டாகும் நோவுகளை பரமாத்வுடன் தியானிக்க நேரத்தை ஒதுக்கினோமானல் நம் மனம் பஞ்சு போலாகிவிடும்

வண்டி ஓட ஓட டயருக்கு காற்றடிக்க அவசியம் ஏற்படுவதுபோல பிரார்த்தனை அல்லது தியானம் அவசியம் !

நமது ஆத்மா எதிலிருந்து வந்ததோ அந்த பரமாத்மா - நாராயணனே ! அவரே பரமாத்மா !

அவர் அவ்வப்போது பூமியில் அவதாரமாக வந்தது ஸ்ரீராமர் ; கிரிஸ்ணர் ; இயேசு ஆகியோரே !

இவ்வாறு அவதாரமாக வருகிற மனிதனுக்கு பொதுப்பெயர் முருகன் - சற்குரு ! நாராயணனே சற்குரு !

கடவுளிடமிருந்து வந்த முதலாவது வெளிப்பாடாகிய அவரது சத்தமே நாராயணன்

அதுவே சகல படைப்புகளாக வெளிப்பட்டது ! சகல படைப்புகளையும் தன்னுள்ளே தாங்கி வெளிப்படுத்தி அழித்து அடக்கி என்று எல்லாமே அந்த நாராயணனில் - பரமாத்மாவில்தான் நடக்கிறது !

எனவே நாம் யாரில் இருக்கிறோமோ அந்த நாராயணன் மீது அன்பு கொள்ளவேண்டும் ! நாராயணனிலிருந்து உள்ளத்தால் நாம் விலகி நிற்கிறோமல்லவா அந்த இடைவெளியே வெறுமைக்கும் துன்பத்திற்கும் காரணம் !

நாரயணனை சற்குருவாக வைத்து கடவுளை வேண்டுவது அல்லது கடவுளை தியானிப்பது என்பதுவே முக்திக்கு ஒரே வழி !

நாராயணன் என்ற சற்குருவை அருபமாக உணரும்வரை அவரது மனித வெளிப்பாடுகளை உருவமகாக - குருவாக தியானிப்பதும் சரியானதே !

இந்த தியானத்தால் நமது ஜீவாத்மா பரமாத்வாவில் நிலைத்து பழகும் ! அன்பும் ஐக்கியமும் பரமாத்வுடன் உண்டாகும் !

நமது சிற்றுயிராகிய ஆவி அகண்ட பேரானந்த முற்றுயிராகிய கடவுளில் நிலைத்து அதன் ஆற்றலை வல்லமையை பெருக்கி கொள்ளும் !

சிற்றுயிர் முற்றுயிரிலும் ; ஜீவாத்மா பரமாத்மாவிலும் நிலைக்க நிலைக்க சரீரத்தின் ஆளுமை குறைந்து அதிலுள்ள இச்சைகள் அனைத்தும் அடங்கும் !

ஜீவாத்மா சரீரத்தின் பிடியிலிருந்து விடுபட்டு ; அதை அடக்கி ஆளத்தொடங்கும் !

மனிதன் தன்னை சரீரமாக நினைத்துக்கொண்டிருப்பதில் இருந்து விடுபட்டு தான் ஆத்மா என்பதை உணருவான் !

அப்போதுமட்டுமே தற்காலிகமான இப்பிறவியின் அந்தஸ்துகள் மற்றும் துன்ப துயரங்களிலிருந்து விடுதலை கிடைக்கும் !

வாரம் ஒருமுறை ஏதாவது ஒரு வழிபாட்டுக்கு செல்லுங்கள் தியானிக்க கற்றுக்கொள்ளுங்கள்

நம்மைவிட பக்குவப்பட்ட ஒரு ஆத்மாவுடன் அவ்வப்போது உரையாடுங்கள் அவர்களின் ஞானம் - உபகுருத்துவம் உங்களுக்கு கடவுளின் சார்பாக வழிகாட்டும்

நாள் பட்ட ஆதமாக்களை புதிய ஆத்மாக்கள் நோவு செய்யும் ! அதன் மூலமாக பாவங்கள் அவர்களுக்கு மாறி செல்வதோடு பழைய ஆத்மாக்கள் கடவுளோடு நாடி உறவாட- ஞானத்தை பெற்றுக்கொள்ள அது உபாயம் !

உங்களுக்கு யாராலோ நோவு உண்டாகும்போது எரிச்சல் கோபம் உணர்வு வயப்படாமல் ; நாமும் இதுபோல இருந்திருக்கிறோம் என எண்ணுங்கள் ; இப்படி செய்வதால் பாவம் உண்டாகிரது என்பதை உணருங்கள் ; கடவுளிடம் அந்த நபருக்கு நல்ல புத்தி உணடாக வேண்டுதல் செய்வதோடு நான் இப்படி நடந்துகொண்ட பாவத்தை மன்னியுங்கள் என்று வேண்டினால் ; அந்த ஞானம் கிடைத்தவுடன் அதுபோல துன்பம் அடுத்து நமக்கு நேராது

நாராயணன் நாமத்தினால் கடவுளே உமது சக்தியால் என்னை நிரப்புவீராக ! எனக்கும் என் குடும்பத்தாருக்கும் சாந்தியை உண்டாக்குவீராக ! எனக்கு இடறல் உண்டாக்குவோருக்கும் சாந்தியை உண்டாக்குவீராக ! என அணுதினமும் பிரார்திக்கவேண்டும் !!



ஓரிறைவனையே துதிக்கிறோம்
நாராயணன் நாமத்தினாலே
ஓம் நமோ நாராயணா !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

No comments:

Post a Comment