Total Pageviews

Tuesday, April 16, 2013

பாவமன்னிப்பு கிரிஸ்ணராலும் அருளப்படுகிறதா ?




பிரச்சினைகள் மற்றும் நமது பலகீனங்களை வெல்லமுடியாமல் வழுக்கிவழுக்கி விழுவது மனித இயல்பு ! மனித அறிவினால்மட்டுமே பலகீனங்களை விட்டு வெளிவரவே முடியாது !

உள்ளார்ந்த அச்சத்துடன் அதனுடன் எவ்வளவு போராடுகிறோம் என்பதும் மீண்டும் மீண்டும் தன்னை பொறுத்துக்கொண்டு பக்குவம் கொடுக்கும்படியாக வேண்டி வந்தால் போதுமானது : கடவுளால் மட்டுமே பக்குவம் கொடுக்கமுடியும் !!

பலமுறை சிராய்த்துக்கொண்டு வழுக்கிவிழுந்த விசயங்களில் பல நாள் கழித்து நான் வெளிவந்திருக்கிறேன் என்னை பாடாய்படுத்தியவை இன்று ஒன்றுமேயில்லாதது போலப்போய் விட்டது மனித தெளிவால் இது முடியவே முடியாதது !!

நல்லதோகெட்டதோ செய்தாலும் உம்மிடம் பேசிக்கொண்டும் மண்ணிப்பு கேட்டுக்கொண்டும் உம்மிடம் வந்துகொண்டும்தான் இருப்பேன் என தாழ்மையுடன் அவரை பற்றிக்கொள்ள வேண்டும் பாவசுரணை அற்றுப்போனால் மட்டுமே அது அகம்பாவம் அக்கிரமம்!!

தாழ்மை சற்குருவாகிய நாராயணனோடு எப்போதும் உறவு பக்தி இவை நம்மை மீடேற்றிவிடும்

நான் மீண்டும் சொல்கிறேன் மனிதன் செய்யும் தவறுகளுக்கு அவன் மட்டுமே காரணமில்லை அவனை அதில் தூண்டி அமிழ்த்திய அசுர சக்திகளும் என்பதை கடவுள் அறிவார் பாவசுரணை அற்று துனிந்து பாவம் செய்பவர்கள் மட்டுமே கடவுளின் வெறுப்புக்காளாவார்கள்

அசுரர்கள் மனிதனை பாவத்தில் இழுத்து விடுவதுடன் அவனை குத்திக்காட்டி நீ பாவத்தில் விழுந்து விட்டாய் நீ கடவுளிடம் செல்லவே முடியாது ஆகவே துனிந்து விடு என உபதேசிக்கிறார்கள் !!

ஆனால் கடவுளின் சார்பானவர்களோ `` முழுக்க நனைந்தாலும் பரவாயில்லை ; முக்காடு போட்டுக்கொண்டு நனைக என்கிறார்கள் ! பாவ சுரணை என்ற முக்காடு ! நாராயணன் மீது குருபக்தி என்ற முக்காடு !!

நாரயணனின் அவதாரங்களான ராமர் , கிரிஸ்ணர் மற்றும் இயேசுவின் மீது குருபக்தி !  
கீதை 9:30 இத்தகு பக்திதொண்டில் நிலைத்திருப்போர் ஒருவேளை தன்னை அறியாமல் கொடுமையான காரியத்தை செய்ய நேரிட்டாலும் அவர் புண்ணியராகவே கருதப்படுவர் !!

கீதை 9:31 அவர் இந்த தூய மார்க்கத்தில் நிலைத்திருப்பதால் விரைவில் நேர்வழி பெற்று தூய்மையடைந்து மங்காத சமாதானத்தை அடைவார் !! ஆகவே அர்ச்சுணா ! எனது சீடன் ஒருபோதும் அழிவதில்லை என்பதை உரத்து சொல்வாயாக !!

மாற்கு 2:10 பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் !


மனிதர்களில் மனிதனாக அவதரிக்கிர நாரயணனுக்கு மட்டுமே அந்த அதிகாரம் இருந்திருக்கிறது !

அந்த அதிகாரத்துடன் பூமியில் வந்தவர்கள் ராமர் , கிரிஸ்ணர் மற்றும் இயேசு மட்டுமே !

இயேசுவின் நாமம் மட்டுமல்ல அவரது முந்திய அவதாரங்களான ராம நாமமும் , கிரிஸ்ண நாமமும் பாவங்களை தீர்த்தது ; தீர்க்கும் என்பதை கிரிஸ்தவர்கள் உணரவேண்டும் !

ஐரோப்பியர்களுக்கு இயேசுவைத்தவிற யாரையும் தெரியாது ! அவர்களுக்கு தெரிந்த ஒரே அவதாரம் இயேசு ! ஆனால் இந்திய கிரிஸ்தவர்கள் இயேசுவே முந்தய அவதாரமாக ராமராகவும் கிரிஸ்ணராகவும் வந்ததை உணராமல் ஐரோப்பாவில் பிறந்தவர்களைப்போலவும் ; பக்கத்திலும் கூட அண்ட விடாத யூதர்களை பாட்டனும் பூட்டனும் போல நம்பிக்கொண்டு அலைவதை விட்டுவிட வேண்டும் ! 

கும்ப முணிவரான நோவாவின் மூன்று பிள்ளைகளில் மூத்த மகனான யாப்பே அதாவது அப்பவின் வாரீசுகளான இந்திய திராவிடர்கள் நாம் என்பதை உணரவேண்டும் !

கடவுள் ஒவ்வொரு இனத்திற்கென்றும் இறைதூதர்களையும் உபதேசங்களான வேதங்களையும் அருளியுள்ளார் !

மாற்று இனத்தாரின் வேதம் என்பது அவர்களுக்கு மட்டுமே அருளப்பட்டது ! அதிலிருந்து படிப்பினைகளை -- சாரத்தை மட்டுமே சுவீகரித்துக்கொள்ளவேண்டும் !

நோவாவின் இரண்டாவது பிள்ளையான சாமின் வாரீசுகளே ஆரியர்கள் ! அவர்களில் ஆப்ரஹாம் மூலம் வந்த வேதங்களான தவ்ராத் , புதிய ஏற்பாடு உள்ளிட்ட பைபிள் , குரானிலிருந்து அதன் சாரத்தை மட்டுமே சுவீகரித்துக்கொள்ளவேண்டும் !

அவர்களின் வாழ்னிலை பண்பாடு தொடர்பில் அவர்களுக்கென்று மட்டுமே பிரத்யேகமாக அருளப்பட்ட வேதங்களை அடுத்த இனத்தின் மீது தினிப்பது வெற்றி பெறாது !

ஒரு இனத்தையே அழித்து இன்னொரு இனமாக மாற்றுவது வாண்கோழியைப்போன்றது ! அது ஒருபோதும் மயிலாகாது !

நோவாவின் மூன்றாவது பிள்ளையான காமின் சந்ததியாரான ஐரோப்பியர்களில் இன்றளவும் இறைதூதர்கள் வந்ததில்லை ! இனிமேலும் வரப்போவதில்லை ! அதனால் ஆரியரான இயேசுவை வெள்ளைக்காரர் போல உருவமாற்றி ஐரோப்பிய இயேசுவாக அவர்கள் சித்தரித்துக்கொண்டு பாவமன்னிப்பு என்பதை தங்களது வசதிக்காக பயன்படுத்திக்கொண்டு உள்ளனர் !

காம் நோவாவால் சபிக்கப்பட்டவர் என்பதை பைபிளில் வாசித்திருப்பீர்களானால் எதற்காக கிரிஸ்துவை அவர்கள் வைத்துக்கொண்டுள்ளனர் என்பது புரியும் !

சீர் கேட்டின் உச்சத்தில் வழியும் அவர்களது கலாச்சாரத்தின் பின்னனியில் நோவாவின் சாபமும் அசுர ஆவிகளின் வழிநடத்துதலுமே உள்ளது !

ஆகவே ஐரோப்பிய மயமாதல் ஐரோப்பிய மோகத்தை விட்டு இந்திய கிரிஸ்தவர்கள் வெளியே வரவேண்டும் !

புனிதம் என்று அவர்கள் சொல்லுகிற பிரசங்க மேடையில் பாதரட்சையை அவர்கள் அவிழ்ப்பார்களா என்று பாருங்கள் !

தொடை வெளியே தெரியுமாறு பிரசங்கியின் மனைவி உடை போட்டுக்கொண்டு எதிரே உட்கார்ந்து கையை தட்டிக்கொண்டிருக்க குளிரிலிருந்து பாதத்தை காப்பாற்ற பிரசங்கி பூடீசு அணிந்திருக்கிறார் என சாக்கு சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும் ?

பைபிள் மோசே மூலமாகவே முதலில் வந்தது என்பதையாவது அறிவீர்களா ? அந்த மோசேயை கடவுள் முதன்முதலில் சந்தித்தபோது கடவுள் சொன்ன முதல் வார்த்தை ``செருப்பை அவிழ்த்துப்போடு `` என்பதுவே !

அந்த முதல் வார்த்தையையே இன்றளவு கடைபிடிக்காத வெள்ளைக்கார பிரசங்கிகளுக்கும் கடவுளுக்கும் என்ன உறவு இருக்கும் ?


யாத்திராகமம் : 3

4. அவன் பார்க்கும்படி கிட்ட வருகிறதைக் கர்த்தர் கண்டார். முட்செடியின் நடுவிலிருந்து தேவன் அவனை நோக்கி: மோசே, மோசே என்று கூப்பிட்டார். அவன்: இதோ, அடியேன் என்றான்.

5. அப்பொழுது அவர்: இங்கே கிட்டிச் சேராயாக; உன் கால்களில் இருக்கிற பாதரட்சையைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி என்றார்.


அவர்கள் மோசேயிடம் கடவுள் பேசிய முதலாவது வார்த்தையையே கடைபிடிக்க முடியாதவர்கள் ! அப்படியானால் அவர்கள் விதவிதமாக பைபிளைப்பற்றி பேசுவதெல்லாம் வெற்று வார்த்தைகள் என்பதை புரிந்துகொள்ளமுடியாதா ?

கலிகாலத்தின் கோலங்களில் இதுவும் ஒன்று !

அவர்கள் கல்கியாக இயேசு மீண்டும் வந்து செருப்பை அவிழ்க்கும்படியாக சொல்லும்வரை அவிழ்க்கமாட்டார்கள் ! அது அவர்களின் தரத்திற்கு சரி !

ஆன்மீகத்தில் பலமடங்கு முன்னேறிய இந்தியாவில் அதே இயேசு ராமராகவும் கிரிஸ்ணராகவும் வந்து உபதேசித்தவைகள் ஏராளம் ! அதை கடைபிடிப்பதே நன்று !!


இயேசுவின் நாமமும் ராம நாமமும் கிரிஸ்ண நாமமும் ஒன்று என்பதை உணர வேண்டும் !    


Thursday, April 11, 2013

மகா மந்திரம் !!


கீதை 10 : 20 அர்ச்சுணா ! தனித்த பரமாத்துமாவாக நான் இருப்பினும் ஒவ்வொரு மனிதனிலும் ஜீவாத்துமாவாகவும் நானே குடிகொண்டிருக்கிறேன் ! படைப்பினங்கள் அனைத்திற்கும் துவக்கமும் நடுவும் முடிவுமாக நானே இருக்கிறேன் !

கீதை 8:4 வானவர்களான தேவர்கள் அசுரர்கள் அதிதேவதைகள் அல்லது தேவதூதர்கள் என அறியப்படுகின்றனர் !சூரியசந்திர நட்சத்திரங்கள் உள்ளிட்ட வானமண்டலசேனைகள் மற்றும் பூமியிலுறையும் படைப்பினங்கள் அனைத்தும் எதிலிருந்து உருவாக்கபட்டதோ அந்த பரமாத்வான நானே ``ஆதியஜ்னா `` அல்லது வேள்விகளின் புருஷனாவேன் !

பூமியிலுறையும் படைப்புகளும் , வாணமண்டல படைப்புகளான தேவதூதர்கள் மற்றும் அசுரர்களும் நாராயணனிலிருந்தே படைக்கப்பட்டுள்ளனர் ! இந்த தேவதூதர்களில் பல வகையினர் உள்ளனர் !உதாரணமாக அஸ்வினிகள் ருத்திரர்கள் கந்தர்வர்கள் வசுக்கள் அசுரர்கள் மற்றும் மஹரிஷிகளும் தேவர்களாக உள்ளதாக குறிப்புகள் உள்ளன ! அப்படி ருத்திரர்கள் வகைப்பட்ட தேவதூதர்களில் ஒருவராக சிவன் உள்ளார் ! அஸ்வினிகளில் ஒருவராக விஷ்ணு உள்ளார் !  தேவர்கள் மற்றும் அசுரர்களும் நாராயணனுக்குள் படைக்கப்பட்ட படைப்புகளே ! இவர்களுக்கு ஒவ்வொரு பொறுப்புகளும் நிர்வாகமும் கடவுளாலும் நாராயணனாலும் வழங்கப்பட்டுள்ளன ! அவைகள் நாராயணனுக்கு கீழான சக்திகள் !! ஆனாலும் மனிதர்களை விட அவைகள் மேலான சக்திகள் !

மனிதர்களுக்கு தன்னை விட மேலான சக்திகளுக்கு பயப்படுதல் என்பது இயல்பாகவே வந்துவிடுகிறது ! செல்வந்தர்களை கண்டால்கூட கூழைக்கும்பிடு போடும்   மனிதர்கள் அவர்களை விட பெரிய வாணமண்டல சக்திகளை பிரியப்படுத்துவது என்பது இயல்பாக வந்த ஒன்று !

ஆனால் எல்லாபுகழும் கடவுளுக்கே என்பதுதான் ஆதியிலேயே மனிதர்களுக்கு உபதேசிக்கப்பட்டது ! கடவுளை யார் மூலமாக நாம் படைக்கப்பட்டுள்ளோமோ அந்த நாராயணன் மூலமாக வழிபடுவது சரியானது ! ஓரிறைவனை நாராயணன் மூலமாக துதிக்கிறோம் என்பதையே மகா மந்திரமாக `` ஓம் நமோ நாராயணாய  `` என்பதாக முதல் மகாமந்திரமாக மனித இனத்திற்கு வழங்கப்பட்டது !

ஆனாலும் மனிதனை விட மேலான சக்திகளான தேவதூதர்கள் மற்றும் மனிதர்களில் தூய்மயடைந்த மஹரிஷிகள் - குருனாதர்கள் மூலமாகவும் கடவுளை வழிபடுவதும் ஆத்ம கல்விக்கு ஏற்புடையது என்பதால் அவர்கள் மூலமாகவும் கடவுளை வழிபடுவது வழக்கத்தில் வந்தது !

மகா மந்திரத்தில் இரண்டு முக்கியமான பகுதிகள் உள்ளன !

முதலாவது பகுதி ஓரிறைவனையே துதிக்கிறோம் -- ஓம்
                 
                +

இரண்டாவது பகுதி யார் மூலமாக துதிக்கிறோம் என்பது -- நாமத்தினாலே


ஓம் நமோ நாராயணாய
ஓம் நம சிவாயா
ஓம் சிவாய நம
ஓம் பிரம்மாய நம  
ஓம் வருணாய நம
ஓம் அகத்தியாய நம
ஓம் வசிஸ்ட்டாய நம
ஓம் விஸ்வாமித்ராய நம

ஓம் நம சிவாய. சிவாய என்றுதானே உள்ளது சிவனாக ஆனவனை நமஸ்கரிக்கிறேன் ஓம் நம சிவ என மந்திரம் இல்லை சிவனை வழிபடுகிறேன் என மந்திரமே இல்லை ஓம் நமோ நாராயணாய நாராயணனாக ஆனவனை வழிபடுகிறேன் பஞ்சாக்கரமும் அஸ்ட்டாங்கமுமே ஆதி மூலமந்திரங்கள்

ஆனவனை வழிபடுகிறேன் அறியப்பட்டவன் மூலமாக அறியப்படாதவனை வழிபடுகிறேன்

இப்படி குருமூலமாக கடவுளை துதிப்பது என்ற சரியான வழக்கம் அசுரர்களின் துர் உபதேசத்தால் கலப்படம் அடைந்து ஓமை அர்த்தமற்றதாக்கி விட்டார்கள் ! கடவுளை விட்டுவிட்டு குருவையே கடவுளாக மாற்றிவிட்டனர் ! ஏக இறைவனை ஓரம்கட்டி குருக்களை பல கடவுள்களாக சித்தரித்துவிட்டனர் !

ஓரிறைவனையே துதிக்கிறோம் என்ற எளிதான பொருள் உள்ள ஓமை ஏதோ மூடுமந்திரம் என்றும் ரகசியம் என்றும் சிவனுக்கே தெரியாததை முருகன் ரகசியமாக காதில் ஓதினார் என்றும் இட்டுகட்டி விட்டனர் ! அதிலே ஓமை ரெம்ப பெரிய விசயம் என்பதுபோல காட்டி ஓரம் கட்டிய சாதனையை அசுர சக்திகள் செய்து விட்டன !

ஆனாலும் கதை சரியாகத்தான் உள்ளது ! பிரணவ மந்திரத்தை சிவனும் பிரமனும் மறந்துவிட்டனர் என்று ! வைணவம் மட்டும் மறக்கவில்லை ! இதுதான் குரான் சொல்லும் ஆதி இசுலாம் என்பது ! ஆதி இசுலாம் வைணவமே !!

நாராயணன் பூமியில் அதர்மம் அதிகரிக்கும்போதெல்லாம் அவதாரமாக வருவார் என்பதுவே முருகன் -- ராமன் -- குமாரன் !

அந்த இறைதூதர்கள் சிவனுக்கும் பிரமனுக்கும் ஓமை மீண்டும் உபதேசிப்பார்கள் என்பது வைணவம் !


நீங்கள் யாரை வழிபட்டாலும் அது என்னையே வழிபடுகிறீர்கள் என கீதையில் உள்ளதாக உள்ளது ! அது திரிபு !

நீங்கள் யார் மூலமாக கடவுளை வழிபட்டாலும் அது என் மூலமாக கடவுளை வழிபட்டதற்கு சமாணம் என்பதுவே சரியானது !

நீங்கள் யார் மீது பக்தியாக இருக்கிறீர்களோ அவர்கள் மூலமாக ஓரிறைவனையே துதியுங்கள் !!

கடவுள் என்பதற்கும் கடவுளின் தூதுவர் என்பதற்கும் மரியாதைக்குறைச்சல் ஏதுமில்லை !

ஒருவர் கடவுள் என்றே வைத்துக்கொள்ளுவோம் ! அவர் மூலமாக கடவுளை வழிபட்டால் அது அவருக்கு அவ மரியாதையில்லை !

ஆனால் மகான்கள் , மனிதனாக இருந்து கடவுளை அடைந்தவர்கள் , தவயோகிகள் , தேவதூதர்கள் ஆகியோரை அல்லது கடவுளால் படைக்கப்பட்டவர்களை அவர்களது தெய்வீகத்தண்மை கண்டவர்கள் அவர்கள் மீதுள்ள குருபக்தியை கொஞ்சம் அதிகமாக்கி கடவுளாகவே சித்தரித்து வழிபட்டால் அது கடவுளுக்கு செய்த அவ மரியாதை ஆகிவிடும் !

எட்டாத காரியத்தில் தலையிடாதே என்றொரு பழமொழி உண்டு !

கடவுள் யாரென்று அறிந்துகொள்ளுவது உண்மையில் எந்த நன்மையும் செய்யாது ! அவர் யாரென்று அறிந்துகொள்ளுவதை விட அவருக்கு ஒப்புறவாக நடந்து ஆத்ம தூய்மையடைந்து அவரை சேர்வதுவே முக்கியம் ! அங்கு சென்ற பிறகு அவர் யாரென்று அறிந்துகொள்ளலாம் ! அதுவரை கடவுளை கடவுள் என்று மட்டுமே அழைத்து வழிபடுவது மிகவும் பாதுகாப்பனாது !

நாம் மதிக்கும் யார் மூலமாகவும் கடவுளை வழிபடுவது ஏற்புடையதே !

எந்தக்கோவிலுக்கும் சென்று அங்கிருப்போர் மூலமாக கடவுளை வழிபடுவது மிகவும் நன்மையானது ! வேதங்களால் அங்கீகரிக்கப்பட்டதே !


யார் மூலமாகவும் கடவுளை வழிபடலாம் ! ஏனென்றால் சகலரும் கடவுளால் படைக்கப்பட்டவரே ! ஆனால் எவ்வளவு ஆற்றல் உள்ளவராக இருந்தாலும் ; கடவுளை நெருங்கியவராக இருந்தாலும் கடவுளை விட்டுவிட்டு அவரின் அடியவர்களை வழிபடுவது நல்லதல்ல !

நாளை இறுதி நியாயத்தீர்ப்பு நாளில் கடவுள் அத்தகையோரிடம் `` பூமியில் உங்களுக்கென்று ஒரு கூட்டத்தை ஏற்படுத்திக்கொண்டீர்களா ? என கேட்கும் போது இதற்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை ; அவர்களாக எங்களை கடவுளுக்கு இணை வைத்துக்கொண்டார்கள் என்று கைவிரித்து விடுவார்கள் என்று குரான் எச்சரிக்கிறது !

5:116. இன்னும், "மர்யமுடைய மகன் ஈஸாவே, "அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்" என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா?" என்று அல்லாஹ் கேட்கும் போது அவர், "நீ மிகவும் தூய்மையானவன்; எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை; அவ்வாறு நான் கூறியிருந்தால், நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய்; என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய்; உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன்; நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன்" என்று அவர் கூறுவார்.
5:117. "நீ எனக்குக் கட்டளையிட்டபடி (மனிதர்களை நோக்கி), "என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்" என்பதைத் தவிர வேறு எதையும் அவர்களுக்கு நான் கூறவில்லை; மேலும், நான் அவர்களுடன் (உலகில்) இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன்; அப்பால் நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீயே அவர்கள் மீது கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கிறாய்"


16:86. இன்னும், இணை வைத்தவர்கள் தாங்கள் இணைவைத்தவர்களை (மறுமை நாளில்) பார்த்தார்களாயின் "எங்கள் இறைவனே! நாங்கள் இணைவைத்துக் கொண்டிருந்தவர்கள் இவர்கள்தான். உன்னையன்றி நாங்கள் இவர்களைத் தான் அழைத்துக் கொண்டிருந்தோம்" என்று அவர்கள் கூறுவார்கள்; அதற்கு அவர்கள் , "நாங்கள் தெய்வங்களல்ல நாங்களே சதா இறைவனையே வழிபட்டவர்கள்  நிச்சயமாக, நீங்கள் பொய்யர்களே" என்னும் சொல்லை அவர்கள் மீது வீசுவார்கள் !
ஆகவே ஞானமானது ` யார் மூலமாகவேனும் கடவுளை மட்டும் வழிபடுவதே சிறந்தது என்பதை வெளியாக்குகிறது !

நான் அழைக்கிற பலரை நம்மால் சந்திக்கமுடியவில்லை ! ஒருவேளை சந்தித்தால் அவர்கள் நிச்சயமாக நமக்கு கடவுளை வணங்கும்படியாகவே வழிகாட்டுவார்கள் !

வள்ளலாரின் வாழ்விலும் இதுவே நடந்தது !

அவர் சைவசமயத்தில் ஈடுபாட்டோடு ஆரம்பத்தில் இருந்தவர் ! தருமசாலை ஆரம்பித்து அதை நடத்திவரும் வேளையில் ஒருனாள் தருமசாலைக்கு பழுத்த சவனடியார் ஒருவர் வந்து வள்ளாலாரிடம் உரையாடிக்கொண்டிருந்தார் ! வள்ளலார் மதிய ஓய்வுக்கு அறைக்கு சென்ற போது அவரும் கூட சென்று அறையில் படுத்துக்கொண்டார் ! உறங்கும்போது வள்ளலார் தன்தலையில் சிவனடியார் பாதம் வைத்ததை உணர்ந்து எழுந்து என்ன காரியம் செய்கிறீர் என கேட்ட போது உனக்கு நான் திருவடி தீட்சையளித்தோம் என கூறி மறைந்துவிட்டார் !

அவ்வாறு சிவனே திருவடி தீசை அளித்தபிறகு வள்ளலார் `` சிவனிலிருந்து அருட்பெரும்ஜோதியாக இறைவனை வழிபடுபவராக மாறினார் `` ஆரம்பத்திலே நான் சைவ சமயத்திலே லட்சியம் வைத்துக்கொண்டிருந்தேன் என்பதை அறிவீர்கள் ஆனால் இப்போதோ ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேல் ஏற்றிவிட்டார் ! `` என்று இந்த அனுபவத்தை வள்ளலார் குறிப்பிட்டுள்ளார் ! அப்படியானால் சிவனே வள்ளலாரை தன்னை வழிபடுவதற்கு பதிலாக ஏக அரூப இறைவனை வழிபட வழிகாட்டினார் என்றுதான் இதை எடுத்துக்கொள்ளவேண்டும் !


அதுவே உண்மையும் மனிதர்கள் கடைபிடிக்க வேண்டுவதும் ஆகும் !

நாம் அவ்வறு நமக்கு பக்திக்குரியவர்கள் மூலமாக கடவுளை வழிபட்டால் அது நமது பக்திக்குரியவர்களாலும் ஆசிர்வதிக்கப்படும் ! .  
 

நாராயணனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணனாய

சிவனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ சிவாய

சேஷனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ சேஷாய

நாராயணியாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணியாய

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி 


  




Sunday, March 3, 2013

இளமை !!


-- யுகபுருஷன் இறைதூதர் ராமரின் உபதேசங்கள் --

அறியாமையே மிகுந்திருக்கும் இளமையிலே மனம் சஞ்சலப்பட்டு அலைகிறது ! அலைபாயும் மனதின் பலவகையான விளையாட்டுப்போக்குகளுக்கு இளைஞர்கள் பலியாகிறார்கள் ! ஆகவே ஒரு மாயைக்கு பிறகு இன்னொரு மாயை ; ஒரு சிக்கலுக்கு பின்பு இன்னொரு சிக்கல் ; ஒரு துன்பத்திற்கு பின்பு இன்னொரு துன்பம் ; ஒரு தீய பழக்கத்துக்கு பின்பு இன்னொரு தீய பழக்கம் என்று எதிலாவது மாட்டிக்கொண்டு தவியோதவியென்று தவிக்கிறார்கள் ; அல்லாடுகிறார்கள் ! தங்களையும் தங்கள் நேரத்தையும் சிந்தனையையும் வீணாக்கி பிறரையும் பெற்றோரையும் துன்பத்தில் ஆழ்த்துகிறார்கள் !!

சுயகட்டுப்பாடு இல்லாத இளைஞர்களை இதயத்தில் இருக்கும் இச்சைப்பேய் -- காமப்பேய் -- மோகப்பேய் -- போதைப்பேய் தன் வசப்படுத்திக்கொள்ளுகிறது !!

இளமை என்ற பயங்கரமான காடு பலவிதமான விசித்திர ஆபத்துகள் நிறைந்தது ! அனுபவமிண்மை ; எதையும் அனுபவித்துப்பார்க்க துடிக்கும் ஆவல் ; விவேகமில்லா வீரம் ; வெளிகாட்டத்துடிக்கும் மாயப்பெருமை ; காமத்தை திரித்து புகழாக சித்தரிக்கப்பட்ட காதல் ; புத்திமயக்கம் ; குருட்டுத்துணிச்சல் என பல கண்ணிகள் அற்ப விசயங்களுக்காகவும் இளைஞனை காலைக்கட்டி விடுகின்றன !!

சுற்றிச்சுழன்று கொந்தளிக்கும் காட்டாற்று வெள்ளத்தைக்கூட கடந்து விடலாம் ; இளமைப்பருவத்தின் ஆசைகளைத்தவிர்ப்பது சுலபமானதல்ல ! விவேகம் இல்லாத விவகாரங்களில் துணிச்சலாக இறங்குகிறவனின் கதி அதோகதியாக முடிகிறது !!
சங்கடங்கள் நிறைந்த இளமைப்பருவத்தை தாண்டி பத்திரமாக மறுகரையை அடைந்தவர்களே வாழும் வழி தெரிந்தவர்கள் ! அவர்களே மனிதர்கள் என அழைப்பதற்கு தகுதி உள்ள வாழ்வு வாழ்வார்கள் !!

பெற்றோர்க்கும் மூத்தோர்க்கும் பணிவை அணிகலனாகக்கொண்டு , அன்பு முதலிய நல்லியல்புகளால் பிரகாசிக்கும் இளமையும் ; தன் பெற்றோர்கள் மூத்தோர்களால் வரும் வாழ்வை கடவுள் தனக்கு கொடுக்கும் வாழ்வாக முழுமனதுடன் ஏற்று அதனை சிறப்புற வாழ பக்குவப்பட்ட மனமுடைய இளமையும் போற்றுதலுக்குரிய இளமையாகும் ! அத்தகைய குணநலங்களுடன் கூடிய இளமை வாழ்வாங்கு வாழத்தகுதியும் கடவுளுடன் ஒப்புறவாவதிலும் முடியும் !!

உறைபனி பெய்தால் தாமரை அழிகிறது ! ஆற்றுவெள்ளத்தால் ஆற்றங்கரை மரங்கள் வீழ்கிறது ! அதுபோல முதுமையால் இளமை அழிகிறது !! மூப்பு வந்ததும் உடல் எல்லா அழகும் வணப்பும் குன்றி அவலட்சனமடைகிறது !! முதுமையால் ஏற்படும் தளர்ச்சியால் அங்கங்கள் ஆற்றல் குறைந்து சோர்ந்து போய் விடுகிறது !!

இளமை அமைதியில்லாதது ! அது யாரிடமும் நிலைத்து தங்குவதில்லை ! அதன் வணப்பும் கர்வமும் சின்னாளிலேயே கடந்துபோய் விடும் ! அதை பக்தியிலும் சத்சங்கத்திலும் கடறுகிற இளைஞன் பாக்கியம் பெற்றோன் !! 

ஓரிறைவனையே துதிக்கிறோம்
நாராயணன் நாமத்தினாலே     
ஓம் நமோ நாராயணா !!அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

Tuesday, February 19, 2013

அச்சம் தவிர்க்கும் அரு மருந்து !!

நாராயணன் நாமத்தினாலே விலகிப்போ என நாய் முதல் பேய் வரை துறத்தலாம்!!
ஏனென்றால் சகலமும் அவருக்குள் உற்பவித்து அவருக்குள்ளேயே அழிகின்றன ! ஆகவே அந்த நாமத்தை உச்சரித்தால் அவரைத்தவிற அனைத்தையும் ஆளுமை செய்யலாம் !!

கீதை 9:4 எனது யுகபுருஷன் என்ற அரூபத்தண்மையில் இந்த முழு பிரபஞ்சமும் பொதிந்திருக்கிறது ! எல்லாம் எனக்குள் இருக்கிறது ; ஆனால் நானோ அவைகளை கடந்தும் இருக்கிறேன் என்பது எனது இயல்பாகும் !! :

கீதை 9:5 நானே படைக்கபட்ட எல்லாவற்றையும் நிர்வகித்தாலும் ; நானே எங்கும் விரவி இருந்தாலும்  அசுரர்களின் மாயையால் படைப்பினங்கள் என்னில் நிலைபெறாமால் சுயம் - தன்முணைப்படைகின்றன !! அனைத்தும் என் மூலமாக கடவுளால் படைக்கப்படவையே ஆயினும் என்னில் ஒன்றாமல் கலகம் செய்கின்றன !!

கீதை 9:6 பலத்த காற்று எங்கும் சுற்றிசுழன்று வீசினாலும் அது வானத்தில் நிலைபெற்றிருப்பதைப்போல எல்லா உயிரினங்களும் சுயமாய் வினையாற்றினாலும் என்னிலேயே நிலைத்திருக்கின்றன என்பதை புரிந்துகொள்ள முயற்சி செய்வாயாக !!

கீதை 9:7 குந்தியின் மகனே ! யுக முடிவில் எல்லா ஜட வெளிப்பாடுகளும் எனது அரூபத்தில் மறைகின்றன ! அதே போல அடுத்த யுகத்தில் நானே என்னிலிருந்து அவற்றை வெளிப்படுத்துகிறேன் !!

கீதை 9:8 இந்த முழு பிரபஞ்ச இயக்கமும் எனது ஆளுகையிலேயே உள்ளது ! எனது சித்தத்தால் அவைகள் மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தப்படுகின்றன ! அதே போல முடிவில் அவைகள் மீண்டும் மீண்டும் அழிக்கவும் படுகின்றன !!


நாம் பயணம் தொடங்கும்போது வண்டியின்மீது கையை வைத்து நாராயணன் நாமத்தினாலே விபத்தின் ஆவிகளே விலகிப்போ கோளாறுகளே விலக்கிப்போ என சொல்லிவிட்டு பயணம் செய்யுங்கள் எந்த பிரச்சினையும் வராது !!

எதன்மீதும் நாரயணன் நாமத்தை பிரயோகிக்கலாம் !

முஸ்லீம்கள் கடவுளிடம் வேண்டுதல் செய்வதாக இருந்தால் உளுவு அதாவது சுத்தம் செய்துவிட்டு பிறகு பிரார்திக்க வேண்டும் ! கடவுளை அணுக மனிதனால் நேரடியாக முடியாத அளவு அவர் ஆற்றலும் புனிதமும் அதிகம் ! அதனால் அல்லாவின் திருப்பெயரால் துவங்குகிறேன் என சொல்லிவிட்டுத்தான் அவர்கள் பிரார்திக்கவேண்டும் !!

கிரிஸ்தவர்கள் இயேசுவின் நாமத்தினால் பிரார்திக்க கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளனர் !

வேதாத்திரி மஹரிஷி கூட அருட்காப்பு சொல்லிவிட்டு யோகப்பயிற்சி செய்யகூறியுள்ளார் !!

ஆதி இந்து மதத்திலும் சற்குருவின் மூலமாக மட்டுமே கடவுளிடம் பிரார்திக்கவேண்டும் என்று இருந்தது ! ஆனால் காலப்போக்கில் அதை மறந்துவிட்டார்கள் !!


அந்த சற்குரு யார் மூலமாக கடவுள் சகலத்தையும் படைத்தாரோ ; அல்லது யாருக்குள் சகலமும் உற்பவித்து யாருக்குள் சகலமும் அழிகிறதோ அந்த நாராயணனே சற்குரு ! அவரே அதர்மம் பெருகும்போது யுகங்கள் தோறும் பூமியில் அவதரித்து தர்மத்தை நிலைநாட்ட வேதமும் கொடுக்கிறவர் !

ராமராகவும் கிருஷ்ணராகவும் இயேசுவாகவும் வந்தவர் அவரே ! ஆதிதமிழர்கள் கொண்டாடிய முருகன் அவரே ! சிவனால் குரு என சுட்டப்பட்டவர் அவரே !

பரமாத்மா அவரே ! காப்ரீயேலாக முஹமதுவை ஆட்கொண்டு வேதம் இறக்கியவரும் அவரே !

அந்த நாரயணன் நாமத்தினாலே கடவுளை வேண்டினால் உளுவும் அருட்காப்பும் செய்யவேண்டியதில்லை ! சுத்தமற்ற நமது குறைகள் யாவும் நிவர்த்தி செய்யப்படும் !

நாரயணன் நாமத்தினாலே படைக்கப்பட்ட அனைத்தின்மீதும் ஆளுமையும் செலுத்தலாம்!

நாராயணன் நாமத்தினாலே நீங்கள் சந்திக்கப்போகும் நபரை மனதிற்குள் வாழ்த்துங்கள் !!

உங்கள் குழந்தைகளை தினந்தோறும் கைவைத்து நாரயணன் நாமத்தினாலே கடவுள் உன்னை ஆசிரவதிப்பாராக என்று கூறுங்கள் !!

உங்களுக்கு இடைஞ்சல் கொடுக்கிற நபரை மனதில் நாராயணன் நாமத்தினாலே கடவுள் உன்னை கடிந்துகொள்ளுவாராக என கூறுங்கள் !!

நாராயணன் நாமம் நிச்சயம் அவரை அழிக்காது ! அவரை திறுத்தும் அல்லது உங்களை விட்டு விலகியாவது அந்த நபர் சென்றுவிடுவார் ! உலகில் நடக்கும் எல்லா தீமைகளுக்கும் மனிதர்கள் மட்டும் காரணமில்லை ; அவர்களை பயன்படுத்தி அசுர சக்திகளும் அவர் கூட சேர்ந்து அவர் ஒரு அடி அடிக்க நினைத்தால் அவரைத்தூண்டி பத்து அடி அடிக்க வைக்கும் ! மனிதர்கள் அமைப்பு அவர்களை அவர்கள் அறியாமலேயே அவர்கள் நல்லது செய்ய முயலும்போது தேவதூதர்களும் சேர்ந்து அதிக நண்மை செய்வதாகவும் அவர்கள் தீயது செய்ய முயலும்போது அசுரர்களும் சேர்ந்து அதிக தீமை செய்வதாகவும் இருக்கிறது ! மனிதனைச்சுற்றிலும் எப்போதும் ஆவிமண்டல இயக்கம் நடந்துகொண்டே இருக்கும் ! நாமும்கூட இரண்டு சக்திகளுக்கும் மாறிமாறி இடம் கொடுப்பவராகவே இருப்போம் ! இது நிதர்சணம் !!

எனவே நாராயணன் நாமத்தினாலே கடவுள் கடிந்துகொள்ளூம்படியாக வேண்டினால் அசுர ஆவிகளின் பலம் -- தூண்டுதல் நமக்கு விரோதமான மணிதர்களின் மீது செயல்படுவது எதிர்க்கபடும் ! அதனால் தீமையின் வேகம் குறையும் ! நாம் எவ்வளவுக்கெவ்வளவு பிரார்திக்கிறோமோ அவ்வளவு பலமிழக்கும்போது அந்த மனிதர்கள் திருந்தவோ அல்லது அந்த அசுர ஆவிகளே தங்களை தற்காத்துக்கொள்ள அந்த நபரை விலக்கி கொண்டுபோய் விடும் !

மனிதனுடைய செயல்பாடுகள் அனைத்தையும் ஆவிமண்டல பின்னனியுடன்தான் நிதானிக்கவேண்டும் ! `` நோய்க்கும் பாரு பேய்க்கும் பாரு `` என்று முன்னோர்கள் சொன்ன சாரம் இதுவே !!
எல்லாப்பாவங்களையும் ; மனிதர்கள் திருந்த முயன்றால் கடவுள் எளிதாக மண்ணீப்பதன் பின்னனி அந்த பாவங்கள் அனைத்திற்கும் மனிதன் மட்டும் காரணமில்லை அவனைப்பயன்படுத்திய அசுர சக்திகளும் காரணம் என்பதுவே !

கீதை 9:22 ஆனால் யார் எனது யுகபுருஷன் என்ற அரூபத்தை உணர்ந்து தியானித்து உள்ளர்ந்த பக்திதொண்டுடன் என்னை பின்பற்றி கடவுளை வழிபடுகிறார்களோ அவர்களின் குறைவை நான் சுமந்து நிறைவை காத்து பெருக்குகிறேன் !!

கீதை 9:26 ஒருவர் என் மூலமாக உள்ளார்ந்த பக்தியுடன் இலையையோ , பூவையோ , கணியையோ அல்லது தண்ணீரையோ சமர்ப்பித்தாலும் அதனை கடவுள் அங்கீகரிப்பார் !!

கீதை 9:27 நீ எதை செய்தாலும் ; எதை உண்டாலும் ; எதை கொடுத்தாலும் ; எதை சமர்பித்தாலும் எந்த புண்ணிய சடங்குகளை செய்தாலும் அதை கடவுளுக்கு பக்திதொண்டாகவே என் மூலமாக அர்ப்பணிப்பாயாக !!

கீதை 9:28 இவ்வாறு செயல்பட்டால் நீ பாவபுண்ணிய விளைவுகள் என்ற கர்மத்தளையிளிருந்து விடுபட்டவனாவாய் ! மனதை என்னிலே நிலைபெற செய்து பலன் விளைவுகளில் பற்றற்றவனாய் செயல்பட்டால் நீ விடுதலை பெறுவாய் ! என்னிடமும் வந்து சேருவாய் !!

கீதை 9:29 யாரையும் நான் பட்சாபாதம் செய்வதுமில்லை ; யாரையும் எதிரியாகவும் கருதுவதுமில்லை ! எல்லோரையும் சமமாகவே பாவிக்கிறேன் ! ஆனால் யார் கடவுளுக்கு பக்திதொண்டாக என்னை பின்பற்றுகிறார்களோ அவர்கள் எனக்கு நண்பனும் என்னில் நிலைத்தவருமாவார் ! நானும் அவர்களுக்கு நண்பனுமாவேன் !!

கீதை 9:30 இத்தகு பக்திதொண்டில் நிலைத்திருப்போர் ஒருவேளை தன்னை அறியாமல் கொடுமையான காரியத்தை செய்ய நேரிட்டாலும் அவர் புண்ணியராகவே கருதப்படுவர் !!

கீதை 9:31  அவர் இந்த தூய மார்க்கத்தில் நிலைத்திருப்பதால் விரைவில் நேர்வழி பெற்று தூய்மையடைந்து மங்காத சமாதானத்தை அடைவார் !! ஆகவே அர்ச்சுணா ! எனது சீடன் ஒருபோதும் அழிவதில்லை என்பதை உரத்து சொல்வாயாக !!

கீதை 9:32 யார் என்னிடம் அடைக்கலம் பெற்றார்களோ அவர்கள் பிறப்பால் எத்தனை தாழ்ந்தவர்கள் ஆயினும் ; பெண்ணானாலும் வணிகர்களானாலும் கடைனிலை ஊழியர்களானாலும் உண்ணதமான எனது இருப்பிடத்தை அடைவது திண்ணம் !!

கீதை 9:33 தன்னை உணர்ந்து தெளிந்த ஆண்மீகவாதிகள் ; சிறந்த பக்தர்கள் ; புனிதமான ஆட்சியாளர்கள் போலவே எனது சீடர்கள் உண்ணதமடைவர் !! ஆகவே துன்பமும்துயறமும்  நிறைந்த தர்காலிகமான இப்பூவுலகில் வந்ததின் நோக்கம் ஈடேறும் வகையில் என் மூலமாக பக்திதொண்டாற்றுவாயாக !!

கீதை 9:34 மனதை எப்போதும் என்னில் நிலைபெற செய்து ; எனது சீடனாகி ; எனது வழிகாட்டுதல்களை கைக்கொண்டு கடவுளை வழிபடுவாயாக ! அப்போது முற்றிலுமாக என்னுள் நீ உள்வாங்கப்பட்டு எனது உண்ணத நிலையை நிச்சயம் அடைவாய் !!


பயன்படுத்தி பலனைக்காண்க !!


ஓரிறைவனையே துதிக்கிறோம்
நாராயணன் நாமத்தினாலே    
ஓம் நமோ நாராயணா !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி 

Sunday, February 17, 2013

பக்தி பேராயுதம் !!



--- இறைதூதர் ராமரின் உபதேசங்கள் ---

பக்தி சாதனத்தை சுருக்கமாக விளக்குகிறேன் பக்தி நெறியில் முதலாவது பின்பற்ற வேண்டியது இறைபயம் உள்ளோரின் கூட்டுறவை -- சத்சங்கத்தை நாடுவதுதான் !

இந்த உலகிலே என்னைப்புகழிடமாகக்கொண்டும் , என்னைத்தியானித்துக்கொண்டும் என்னுடைய புனித நாமத்தின் மூலமாக கடவுளை துதித்துக்கொண்டும் இருப்பவர்கள் என் காட்சியைப்பெறுவார்கள் . அவர்கள் கேளாமலேயே அவர்களுக்கு அந்த காட்சி கிட்டும் !

என்னிடம் ஆழ்ந்த பக்தி கொண்டும் ; சுத்த ஞானத்தை உடையவர்களாயும் பரம ஆனந்தத்தை அனுபவிப்பவர்களாயும் உள்ள யோகிகளைக்கண்டறிந்து அவர்களை குருவாக பின்பற்றுவோருக்கு மரணமில்லா பெருவாழ்வு கைக்கு எட்டி விட்டது என்றே நம்பலாம் !!

நீ ஆணாக இருந்தாலும் அல்லது பெண்ணாக இருந்தாலும் ஒரு பொருட்டே இல்லை ; ஜாதியும் பெயரும் பதவியும் பட்டமும் ஒன்றுக்கும் ஆகாது ! நீ வாழ்க்கையில் எந்த நிலையிலும் இருந்தாலும் கடவுளை வழிபட அவசியமான ஒரே ஒரு விசயம் பக்தி மட்டுமே ! யோகம் , தவம் ,தானம் ஆகியவற்றின் புன்னியபலமிருந்தும் ; வேதங்களை விசாரம் செய்வதனாலும் ,சாஸ்திரத்தில் விதிக்கபட்ட கர்மங்களை - சடங்காச்சாரமாக கடைபிடிப்பதாலும் ; வேதங்களில் உள்ள சட்டதிட்டங்களை நூல் பிசகாமல் கடைபிடிப்பதாலும் மட்டுமே ஒருவன் முழுமை அடைய முடியாது . அவன் யுகபுருஷன் என என்னை உணர்ந்து என் சற்குருத்துவத்திற்கு ஒப்புக்கொடுக்கும் போது மட்டுமே என் தரிசனம் அவனுக்கு வாய்க்கும் ; கடவுளைப்பற்றிய அனுபவம் சித்திக்கும் !!

கண் இருந்தும் இரவு நேரத்தில் தெளிவாக காணமுடியாதவை விளக்கு ஒன்று கிடைக்குமானால் தெளிவாக காணமுடிவதுபோல என்னிடம் பக்தி கொண்டுள்ளவர்களின் ஆத்துமாவானது சுயம் பிரகாசமடைந்து எதையும் தெளிவாக உணரத்தொடங்குகிறது - ஞானத்திற்குள் மூழ்குகிறது !!

பக்தியை வளர்த்துக்கொள்ளும் வழி இதோ உள்ளது :

என்னுடைய பக்தர்களுடன் சவகாசம் கொள்ளுவது , எனக்கு சேவை செய்வதாக கர்மங்களை ; கடமைகளை செய்துகொண்டிருப்பது , என்னுடைய மகிமைகளை கேட்பது ; படிப்பது , உள்ளார்ந்த பக்தியால் என்னை நேசிப்பது ; உணருவது , என் பெருமைகளைப்பாடுவது என்னுடைய எல்லா அவதாரங்களையும் நினைத்து நினைத்து நெகிழ்வது , ஒவ்வோர் அவதாரத்தின் உபதேசங்களையும் வாழ்வு வழிகாட்டல்களையும் கேட்டறிந்து கடைபிடிக்க முயலுவது ; ஒரு அவதாரத்தை போற்றி மற்ற அவதாரத்தை வெறுக்காமல் இருப்பது -- இந்த நல்வழிகளையெல்லாம் ஒருவன் தினந்தோறும் பின்பற்றி வந்தால் என் குருத்துவத்தால் அவன் சித்த சுத்தியையும் ஆத்தும சுத்தியையும் பெறுவான் !!

இவ்வாறாக என்னிடம் பக்தி கொண்டிருப்பவர்களுக்கு பாவசுத்திகரிப்பு உண்டாகி ஞானம் வந்து சேரும் ! தியாகமும் அஹிம்சையும் வாய்க்கும் ! பொறுமையும் அன்பும் மிளிரும் ; சாத்வீகத்தால் தெய்வீகம் பெருகி சகல மனுக்குலமும் ஈர்க்கப்பட்டு நல்லுபதேசம் நாடும் !! உபகுருத்துவமும் உண்டாகும் !!

முடிவாக பிறப்பு இறப்பு சக்கரத்திலிருந்து விடுபட்டு மரணமில்லா பெருவாழ்வு சித்திக்கும் !!  


ஓரிறைவனையே துதிக்கிறோம்
நாராயணன் நாமத்தினாலே   
ஓம் நமோ நாராயணா !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி   

ஆரியர்கள் என்பவர்கள் யார் ??


ஆரியர்கள் என்பவர்கள் யூதர்களே ! அங்குதான் முதன்முதலில்  பூசைப்பணிக்கு என்று ஒரு தனிக்குலத்தை உருவாக்கினார்கள் . யூதர்களுக்கு வேதத்தை இறக்கிய மோசேயின் குலத்தினர் மட்டுமே பூசை செய்யவேண்டும் என்ற வழக்கத்தை முதன்முதலில் கொண்டுவந்தார்கள் ! மொத்தம் 12 குலம் அங்கு இருக்கிறது ! அதில் லேவி கோத்திரத்தார் மட்டுமே இன்றளவும் பூசை செய்வார்கள் !!
அதுவரையும் அதன்பின்னரும்  உலகில் எங்கும் பூசைக்கென்று தனி குலம் இருக்கவில்லை !

இஸ்ரேல் தேசத்திலே இன்றளவும் ஒரே கோவில் மட்டுமே ! அதனால் லேவி கோத்திரத்தார் எண்ணிக்கை பெருத்த போது பிழைப்பு போதவில்லை !வேறு தொழிலும் செய்ய அறியாது ‘ எனவே மற்ற நாடுகளுக்கு புலம் பெயர்ந்து அங்கிருப்போர் கோவிலில் அவர்களின் வேதங்களை கற்று கொண்டு பூசைத்தொழில் செய்தார்கள் ! 

அவர்கள் எங்கு சென்றார்களோ அவர்களின் வேதங்களை மொழிகளை கற்று சுவீகரித்து கொண்டார்கள் !!
அவ்வாறு இந்தியாவில் கைபர்போலன் கணவாய் வழியாக உள் நிழைந்த யூதர்களே - ஆரியர்கள் !

இந்தியாவில் வந்து இங்கிருந்த ரிக் யஜூர் சாம அதர்வண வேதங்களை கற்றுக்கொண்டார்கள் ! சமஸ்கிரதம் என்பது திராவிட ஞானிகளால் வேதங்களுக்கென்று உருவாக்கபட்ட ஒரு மொழி ! இந்தியா முழுவதும் தமிழ் முதலாக பலவாறாக மறுவியிருந்த கிரதங்களை சமப்படுத்தி திராவிடர்களால் உருவாக்கபட்ட கிரதம் சம கிரதம் ! இதில் வேதங்கள் வேதவியாசரால் ஒழுங்கு படுத்தப்பட்டன ! சிவன் . நாராயணன் (இந்திரன் தவிர) அனைத்து இந்து தேவர்களும் திராவிட கண்டுபிடிப்புகளே ! அதை அப்படியே ஏற்றுக்கொண்டு அதற்கு பூசை செய்கிறவர்களாக ஆரியர்கள் மாறிக்கொண்டனர் . அதில் ஆரம்பத்தில் தங்களின் சரக்காகிய இந்திரனையும் இந்திரனுக்கு வேள்வியையும் கலந்து அதை பிரபலப்படுத்த ஆரியர்கள் முயற்சித்தும் அது இந்தியாவில் எடுபடவில்லை . ஆகவே அதை பிரமர்களும் மறந்து விட்டனர்

வேதங்களுக்கென்று உருவக்கபட்ட சமஸ்கிரதத்தை - அது யாராலும் பேச்சு வழக்கில் இல்லாததால் திராவிடர்கள் மறந்து விட ஆரியர்கள் மட்டும் மணனம் செய்து கொண்டுள்ளனர் ! அது அவர்களின் வீடுகளில் பேசப்படுவதில்லை என்பதிலிருந்தே அது அவர்களின் மொழி அல்ல என்பதை உணரலாம் ! பிராமணர்கள் இந்தியாவின் ஏதாவது ஒரு மொழியைத்தான் வீடுகளில் பேசுகிறார்களே தவிற சமஸ்கிரதத்தை அவர்கள் பேசுவதில்லை !
சமஸ்கிரதம் திராவிடர்களால் மறக்கபட்ட மொழி !!

சமஸ்கிரதமே வட இந்திய மொழிகளுக்கு - இந்திக்கு மூலமான திராவிட மொழி !! இந்தி திராவிட மொழி என்பதை தவறாக வியாக்கியாணம் செய்ததால் இன்று தமிழ் மோசமான கலப்படத்தை சந்திக்கிறது !
ஐரோப்பிய மொழியான ஆங்கிலம் கலந்து தமிழின் ஜீவனே கெடுவதைக்காட்டிலும் இந்தி கலந்திருந்தாலும் இவ்வளவு கேடு நிச்சயம் வராது !!

யூதர்களான ஆரியர்களின் சிறப்பு என்னவென்றால் எங்கு போனாலும் தங்களின் அடிப்படையை அப்படியே விட்டுவிட்டு அங்குள்ளதை அப்படியே சூவீகரித்து அதை ஆழ்கிறவர்களாக மாறிவிடுவதுதான் !!

வந்த இடத்தில் திராவிட தெய்வங்களை பிடித்துக்கொண்டு திராவிடர்களான ராமரையும் கிருஷ்ணரையும் உயிராக பாவிக்கிற அவர்கள் பிறப்பால் அவர்களுக்கு சொந்தக்காரரான இயேசுவின் பெயரைக்கேட்டதும் வாந்தி எடுப்பதை பார்த்தால் எனக்கு சிரிப்புதான் வரும் !
இயேசு சிலுவைக்கு பின்பும் ; பரமேறிய பின்பும் இயேசுவின் நேரடி சீடரல்லாத பவுல் அவர்களால் கிருஸ்தவம் ஒரு புதிய பரிமாணத்தை எட்டியது ! அது ஐரோப்பியர்களால் சுவீகரிக்கப்பட்டு ஐரோப்பிய மதமாக்கபட்டது !!

ஆனால் இயேசு பூமியில் நடமாடியபோது தனது பணி என்பதாக `` காணாமல் போன இஸ்ரவேலர்களை மீட்டு கொண்டுவருவதே தனது பணி என்றார் ! அந்த காணாமல் போன இஸ்ரவேலர்கள் உலகம் முழுவதும் பரவிய யூதர்கள் - அதாவது நமது இந்திய பிராணர்களைப் போன்றவர்களே !!

அந்தப்பணி நிச்சயமாக உலக முடிவில் நிறைவடையும் !

திராவிடர்களாக பூமிக்கு வந்த ராமரும் கிருஷ்ணரும் யாரோ அந்த நாராயணன்தான் இயேசுவாகவும் பூமிக்கு வந்தார் ! அவர் கல்கியாக பூமிக்கு வந்து இந்த உண்மையை சொல்லும்போது நம்மூர் பிராமணர்கள் உடனே போய் ஒட்டிக்கொள்வார்கள் !!
ராமர்தான் கிருஷ்ணராக பூமிக்கு வந்தார் என்பதை யார் சொல்லி இந்தியா ஏற்றுக்கொண்டது ?
தமிழக ஆழ்வார்கள் சொல்லித்தான் உலகம் ஏற்றுக்கொண்டது !!

முன்னோர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து,அரக்கன்

மன்னூர் தன்னை வாளியினால் மாள முனிந்து அவனே


பின்னோர் தூத னாதிமன்னர்க் காகிப் பெருநிலத்தார்,


இன்னார் தூத னெனநின்றா னெவ்வுள் கிடந்தானே 

                -- மங்கையாழ்வாரின் திருவாய் மொழி பாசுரம் 1060.
ஆழ்வார்கள் சொன்னபோது உலகம் ஏற்றுக்கொண்டது ! 

அதுபோலவே அவரே இயேசுவாக வந்ததும் உண்மை ! கல்கியாகவும் வந்து சத்திய யுகத்தை நிறுவப்போகிறவரும் அவரே !!

அதை எதிர்பார்த்தே உலகமே காத்துக்கிடக்கிறது !!

அப்போது எல்லா மதபேதங்களும் நீங்கி சமரச சுத்த சண்மார்க்கம் தளைக்கும் !! நீதி செழிக்கும் !! கலியுகமும் கலிபுருஷர்களான அசுர ஆவிகளின் மாய்மாலங்களும் முடிவுக்கு வரும் !!

அதுவரை இறைவனுக்கு பூசை செய்ய ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டுமே தகுதி இருப்பதாக பொய்யாக புணைந்துரைக்கபட்டதை திராவிட சமுதாயத்தில் குருனாதர்கள் ராமாணுஜரும் வள்ளலரும் ஏற்கனவே மாற்றியமைத்து விட்டனர் !

யார் பக்தி தொண்டால் இறைவனை நெருங்கியவர்களோ அவர்களே ஆசாரியார்கள் அல்லது பாகவதர்கள் , அவர்களே பாசுரங்களை பாடி பூசை செய்யலாம் என்பதை 1000 வருடங்களுக்கு முன்பே ராமானுஜர் வழி திறந்ததால் இந்தியாவின் பட்டிதொட்டியெங்கும் பெருமாள் கோவில்களும் வைஸ்ணவமும் பல்கி பெருகிற்று ! இந்தியரின் இதயத்தில் ராமரும் கிருஷ்ணரும் நீங்காத இடத்தை பெற்றனர் !

சைவமரபில் அதை நிலைநாட்ட வள்ளலாராக அவதரித்து மரணமில்லா பெருவாழ்வு மற்றும் ஏக இறைவனை அருட்பெருஞ்சோதியாக ஏத்தும் சமரச சுத்த சண்மார்க்க நெறி பற்றவைக்கபட்டுள்ளது !

ஆண்டவர் வருவார் எனவும் அப்போது மரித்தவர் எழுந்திரிப்பார்கள் எனவும் வைணவ நெறிக்கு சைவர்களை வள்ளலார் கொண்டுவந்து சேர்த்திருப்பது அதன் ரகசியமாகும் !! ஆதி மனிதனான சிவனால் உபதேசிக்கபட்ட ``சற்குருவைப்பற்றிய உபதேசம்`` பின்னாளில் மறைந்து திரிந்து போனாலும் வள்ளல் பெருமானால் சைவம் மீண்டும் வைணவத்தில் கொண்டுவந்து சேர்க்கபட்டுவிட்டது ! 

சமரச சுத்த சண்மார்க்கமே உலகம் உய்யும் வழி !!

ஓரிறைவனையே துதிக்கிறோம்
நாராயணன் நாமத்தினாலே   
ஓம் நமோ நாராயணா !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
ஓரிறைவனையே துதிக்கிறோம்
சிவனின் நாமத்தினாலே    
ஓம் நமோ சிவாய !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
நாராயணனாய் வெளிப்பட்ட அந்த
ஓரிறைவனையே துதிக்கிறோம்
ஓம் நமோ நாராயணாய !
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி  

வடலூர் வட திசைக்கே வருவார் அழைத்து வாடி !!


 


27 , 28 /1/ 2013 வடலூர் தைப்பூச திருவிழாவிற்கு சென்று வந்தேன் !


வள்ளலாரின் ஆசியை நாடி நான் பயணமனதும் . சித்தி வளகத்தில் அவரால் எனக்கு ஏதேனும் அநுக்கிரகம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் வீண் போகவில்லை !

மரணமில்லா பெருவாழ்வு என்பதும் பிறவாப்பெரு நிலை என்பதும் ஒன்று என்பது போல ஒரு தெளிவில்லாத நிலையில்தான் நானும் இதுவரை இருந்தேன் !

ஆன்மீக வட்டாரத்திலும் பலர் இரண்டையும் ஒன்று என்பதுபோலவே பாவித்துக்கொண்டுள்ளனர் !
பிறவாப்பெரு நிலை என்பது சூனியவாதம் அல்லது நவீன நாத்திகவாத வார்த்தைகளில் ஒன்று என்பதை சித்தி வாளகத்தில் உணர்த்தப்பட்டேன் ! 

ஆன்மீக வாழ்வில் சாதகனை சாதுரியமாக ஏமாற்றும் அசுர சரக்கு சூனிய வாதம் என்பது ! அது முன்னேற விடாமல் திசையை மாற்றி விடும் !
அடைய வேண்டிய இலக்கு கடவுள் ! ஆனால் அவரைப்பற்றிய சந்தேகத்தில் இருப்பவர்கள் எதை நோக்கி முன்னேற முடியும் ? அவரை இருட்டடிப்பு செய்து விட்டு அடையவேண்டிய மேன்மைகள் பல உள்ளதாக சூனியவாதம் பல வார்த்தைகளை பிரபலமடைய செய்துள்ளது !

அவற்றில் ஒன்றே `` பிறவாப்பெரு நிலை `` என்பது !

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவ னடி சேராதார்                      - என்றொரு குறள் பலருக்கு வழிகாட்டி !

பிறவிப்பெருங்கடல் நீந்தி கடப்பது என அவர் சொன்னதை பிறவாப்பெரு நிலை என அர்த்தப்படுத்துவது தவறு !
மரணமில்லாத பெரு வாழ்வு என்பதே சரியானது !

ஆத்துமா அழிவற்றது என்பது அனைத்து வேதங்களாலும் நிரூபணமான ஒன்று ! அந்த ஆத்துமா பூமியை கடராதவரை பிறந்து பிறந்திளைப்பது அதன் விதியாய் உள்ளது ! யார் பூமியை கடருவார்களோ அவர்களே மரணமில்லாத பெரு வாழ்வு அல்லது நித்திய ஜீவன் உள்ளவர்களாக மாறுவார்கள் !

வள்ளலார் எங்கும் மரணமில்லாத பெரு வாழ்வு பற்றி மட்டுமே பேசியுள்ளாரே தவிற பிறவாப்பெரு நிலை பற்றி குறிப்பிடவே இல்லை ! வைணவம் , யூதம் , கிரிஸ்தவம் , இசுலாம் அனைத்தும் ஒரே குரலில் பரலோகம் சேர்வது பற்றியே வாக்களிக்கின்றன !

மரணமில்லாத பெரு வாழ்வில் அவர்கள் தேவதூதர்களைப்போல இருப்பார்கள் ; ஆண்பெண் பேதத்தை கடந்து அண்ணகர்களைப்போல இருப்பார்கள் என்பது இயேசுவின் வெளிப்பாடு !

மாற்கு 10 :35.
மறுமையையும் மரித்தோரிலிருந்தெழுந்திருக்குதலையும் அடையப் பாத்திரராக எண்ணப்படுகிறவர்களோ பெண் கொள்வதுமில்லை பெண் கொடுப்பதுமில்லை.

36. அவர்கள் இனி மரிக்கவுமாட்டார்கள்; அவர்கள் உயிர்த்தெழுதலின் பிள்ளைகளானபடியால் தேவதூதருக்கு ஒப்பானவர்களுமாய், தேவனுக்குப் பிள்ளைகளுமாயிருப்பார்கள்.

மரணமில்லாத நிலையை அடைந்து அவர்கள் பரலோகத்தில் ஒரு புதுமாதிரியான வாழ்வுக்குள் பிரவேசிக்கிறார்கள் ! அங்கு ஒரு வாழ்வு உள்ளது ! இல்லாமல் போவதல்ல ; அல்லது கடவுளுடன் இரண்டற கலந்து விடுவது ; முக்தி என்பது போல தெளிவற்றவர்களின் அலங்கார வார்த்தைகளை போல அல்ல ! 

மனிதனாக பிறந்த யாரும் கடவுளுடன் நேரடியாக கலந்து விட முடியாது ! இடையில் ஒரு நிலை - உலகம் உள்ளது ! அதை அடைவதற்கே தகுதியடையாத நிலையில் அங்கு சென்ற பிறகு மட்டுமே உணர முடியக்கூடிய விசயங்களை பேசுவதால் என்ன பயன் ?

கீதை 8:15 பக்தியில் யோகம் விளைந்த மகத்துவமான ஆத்துமாக்கள் யுகபுருஷனின் வாசஸ்தலத்தை அடைந்தபிறகு துயறங்கள் நிறைந்த தற்காலிகமான இப்பூவுலகுக்கு எப்போதும் திரும்ப வரவே மாட்டார்கள் ; ஏனென்றால் அதிஉண்ணத வெளிச்சத்தை அவர்கள் அடைந்து கொண்டார்கள் !

கீதை 8:16 பிறப்பும் இறப்பும் திரும்பதிரும்ப சம்பவிக்கும் இப்பூவுலகில் வளமிக்க இடங்கள் முதல் வளம்குறைந்த இடங்கள் வரை எங்கும் துயறங்களே நிறைந்துள்ளன ; ஆனால் யுகபுருஷனாகிய எனது வாசஸ்தலத்தை  வந்தடைந்தவனோ                                ``மரணமில்லாத பெரு வாழ்வு` அடைகிறான் !

கீதை 8:20 பிறப்பு இறப்பை கடந்த நித்தியஜீவன் அருளப்பெற்ற ஆத்துமாக்கள் மரணமில்லாத பெரு வாழ்வு என்றொரு உண்ணதமான நிலையை அடைகின்றன ! அவைகள் ஒருபோதும் மரிப்பதில்லை ! இவ்வுலகம் முழுமையும் அழிவுக்குள்ளான பிறகும் அவைகள் மாத்திரம் மரணமில்லா பெருவாழ்வில் நிலைக்கின்றன !

கீதை 8:21 மரணமில்லாவாழ்வு என்று தத்துவஞானிகளால் வர்ணிக்கப்படும் அந்த உண்ணத இலக்கை அடைந்த பிறகு ஒருவன் ஒருபோதும் திரும்ப பூமிக்கு வருவதில்லை ! அந்த இடமே எனது பரலோக வாசஸ்தலமாகும் - யுகபுருஷனின் இருப்பிடமாகும் !

கீதை 8:22 சகல ஆத்துமாக்களையும் விட பெரியவரான பெருமாள் - யுகபுருஷன் கலப்படையாத பக்தியால் எளிதில் அடையப்படக்கூடியவரே ! பரலோக வாசஸ்தலத்தில் அவர் இருந்தாலும் அவர் மூலமாக படைக்கபட்ட இந்த பூலோகத்தில் எங்கும் விரவியிருக்கிறவராகவும் ; உண்டான சகலமும் அவருக்குள்ளேயே நிலைபெற்றிருக்கிறவராகவும் உள்ளார் ! 

கீதை 8:23 பரதவர்களுள் சிறந்தோனே ! இப்பூவுலைகை விட்டு கடறும் யோகிகள் பலர் மீண்டும் இப்பூமிக்கு திரும்ப வருவார்களா அல்லது வரமட்டார்களா என்பதை அவர்கள் கடறும் காலத்தை பொருத்து நிர்னயைக்கலாம் என்பதை உணக்கு அறிவிக்கிறேன் !

கீதை 8:24 யார் உண்ணதமான கடவுளை உணர்ந்து அறிந்தவர்களோ அவர்கள்   ஒளிமயமானவரான கடவுளின் ஆதிக்கத்திற்குள்ளாகி ஒளிமயமாகி பரலோகத்தை அடைவர் ! வளர்பிறையிலோ அல்லது உத்திராயணத்திலோ ஒரு நாளின் பரிசுத்தமான பகல்நேரத்தில் அவர்கள் பூமியை கடறுவார்கள் ! அவர்கள் திரும்ப வருவதில்லை !

கீதை 9:25 யார் ஞானிகளையும் மஹான்களையும் வழிபடுகிறார்களோ அவர்கள் அவர்கள் பிறவியெடுத்துள்ள இடத்தில் பிறப்பர் ! யார் முன்னோர்களை வழிபடுகிறாற்களோ அவர்களும் அவர்கள் பிறவியெடுத்துள்ள இடத்தில் பிறப்பர் ! யார் அசுரர்களை வழிபடுகிறாற்களோ அவர்களும் அவர்களின் ஆதிக்கம் உள்ளோரிடத்தில் பிறப்பர் ! ஆனால் யார் என் மூலமாக கடவுளை வழிபடுகிறார்களோ அவர்கள் எனது நித்திய இடத்தை அடைந்து மரணமில்லா பெரு வாழ்வு  பெறுவர் !!

வைகுண்டம் ; சிவலோகம் அல்லது பரலோகத்தில் பிரவேசித்த பிறகு அங்கிருந்தே கடவுளை பற்றிய நேரடி அணுபவத்தை பெற முடியும்

இதுவே நம்மைப்போன்ற சாதாரண மனிதர்களுக்கு உள்ள பாதை ! இந்த பாதையே ராமராலும் கிருஷ்ணராலும் வலியுறுத்தப்பட்டு வைணவமாக உபதேசிக்க பட்ட்து ! 

இயேசுவால் பரலோக ராஜ்ஜியத்தை தேடுங்கள் என உபதேசிக்க பட்டதும் இதுவே ! 

ஆனால் தங்கள் மூலமாக அவர்கள் வழிபட சொன்ன கடவுளை விட்டுவிட்டு அவர்களையே வழிபடுகிறவர்களாக மனிதர்கள் மாறிக்கொண்டனர் !
தங்களுக்குள் என் கடவுள் பெருசு உன் கடவுள் பெருசு என சண்டையும் போடுவதில் உலகத்தின் கவணத்தை ஈர்த்து யாரும் கடவுளின் பக்கமே போகாதபடி தடை செய்வது அசுர மாயை !

இந்த மாயையை உடைக்கவே பரலோக பாக்கியம் ஏற்கனவே பெற்றவரான வள்ளலார் கடவுளின் திருப்பணியாக மீண்டும் பூமிக்கு வருவிக்க உற்றார் !
நம்மை போன்ற சில ஆத்துமாக்கள் பூமியிலேயே அடுத்தடுத்த பிறவியெடுத்து ஞானவளர்ச்சி அடைந்து மரனமில்லா பெருவாழ்வை அடையும்போது வருவிக்க உற்றேன் என சொல்லமுடியாது

யார் பூமியை கடந்தவரோ அவர் மீண்டும் பூமிக்கு வந்தால் அது வருவிக்க உற்றது !

 
அப்படிப்பட்டவர்கள் ஏற்கனவே அண்ணகரானதால் பூமிக்கு வரும்போது ஆண்பெண் பேதம் அற்றவராகவே இருப்பார்கள் !
வள்ளலார் இப்படிப்பட்ட தேகம் உள்ளவராக பிறவியிலேயே அவதரித்தார் ! அவர் அருட்பெருஞ்சோதியான ஏக இறைவனை மட்டுமே வழிபடுங்கள் என்றார் !

அன்பு கருணை தயவு இம்மூன்றும் இறைவனை தரிசிக்க உபயமாகும் ! ஜீவ காருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் !
வள்ளலாரால் உபதேசிக்க பட்ட்து `` சமரச சுத்த சண்மார்க்கம் ``

அது யுகபுருஷன் இறைதூதர் இயேசுவால் அங்கீகரிக்கபட்டதுவுமாகும் !

மத்தேயு  5
9. சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள் ---- சமரசம் !!
8. இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.-------- சுத்தம் !!
7. இரக்கமுடையவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.-------                         ஜீவகாருண்யம்  -  சண்மார்க்கம் !!

சமரச சுத்த சண்மார்க்கம் !!

வள்ளலாரின் முதல் ஐந்து திருமுறைகளை அவர் பரமேறும் முன்னரே பதிப்பித்து அதைக்குறித்து அவர் பல உபதேசங்களை செய்ததால் சுத்த சண்மார்க்கம் பலரால் புரிந்து கடைபிடிக்க பட்டு ஆழமாக வியாக்கியானமும் செய்யப்பட்டு வருகிறது !

ஆனால் ஆறாம் திருமுறை அதற்கேற்ற காலம் கணியாததாலும் அதை வியாக்கியாணம் செய்ய நியமிக்கப்பட்டு வள்ளலாரால் அனுக்கிரகம் செய்யப்பட்டவருமான ஒரு அடியவர் வரவேண்டி உள்ளதாலும் அதை பதிப்பிக்க வள்ளலார் நாட்டம் காட்டவில்லை ! அதை எழுதி நிறைவு செய்தாலும் வள்ளலார் பதிப்பிக்க அனுமதிக்கவில்லை !

அந்த வேதமே சமரச வேதம் என அதில் மறைபொருளாக்க பட்டுள்ளது !

அந்த வேதம் வெளிப்படையாகும் போது `` சமரச சுத்த சண்மார்க்கம் `` முழுமையும் உச்சத்தையும் அடையும் !

இப்பூவுலகம் முழுமையும் சமாதானத்தை உண்டாக்கும் ; பகை வெறுப்பு மறைந்து அனேகர் அருட்பெருஞ்சோதியாகிய ஏக இறைவனை மார்க்க பேதங்களை கடந்து தேடுவார்கள் !!

அந்த நபரும் வள்ளலாரால் முன்குறிக்கபட்டுள்ளார் ! வருவார் அழைத்து வாடி என்ற பாடலின் மறைபொருள் அதுவே !

இப்பாடலில் வள்ளலார் இருவரை குறிப்பிடுகிறார் !!

ஒருவர் வடலூருக்கு தென் திசையிலிருந்து வடலூருக்கு வரவேண்டியவர் ! அவர் வரும்போது அனேக மேன்மைகளை ஞான அனுக்கிரகங்களை பெற்றுக்கொள்ளுவார் ! அதை உலகிற்கும் பெற செய்வார் ! வள்ளலாரின் சமரச சுத்த சண்மார்க்கம் அவர் மூலமாக உச்சத்தை அடைவது கடவுளின் மற்றும் குருனாதர் வள்ளலாரின் திருவுள்ளமாய் உள்ளது !

அடுத்தவர் பாக்கியம் செய்த ஒரு ஆத்துமா ! பெண்ணாகவும் இருப்பார் - அவரே முன்னவரை வடலூர் கொண்டுவந்த சேர்க்க  தூண்டுகோலாய் இருப்பார் !!

அந்த நபர் - இறைதூதரை விரைவில் தமிழகத்தில் வெளியாக்கும்படி ஏக இறைவனை வேண்டிக்கொள்ளுவோம் !!


நாராயணனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணனாய

சிவனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ சிவாய

சேஷனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ சேஷாய

நாராயணியாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணியாய

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி 



பல்லவி
 வருவார ழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே 
வந்தாற் பெறலாம் நல்ல வரமே. 

திருவார்பொன் னம்பலத்ே­த செழிக்குங்குஞ் சிதபாதர் 
வருவார் சிவசிதம் பரபோதர் தெய்வச் சபாநாதர். 

கண்ணிகள் 

சிந்தை களிக்கக்கண்டு சிவானந்த மதுவுண்டு 
தெளிந்தோர்எல் லாரும்தொண்டு செய்யப் பவுரிகொண்டு 
இந்த வெளியில்நட மிடத்துணிந் தீரேஅங்கே இதைவிடப் பெருவெளி இருக்குதென் றால்இங்கே வருவார் 

இடுக்கி லாமல்இருக்க இடமுண்டு நடஞ்செய்ய 
இங்கம் பலம்ஒன்றங்கே எட்டம் பலம்உண்டைய 
ஒடுக்கில் இருப்பதென்ன உளவுகண்டு கொள்வீர்
என்னால் உண்மைஇது வஞ்சமல்ல 
உம்மேல்ஆணை என்றுசொன்னால் வருவார் 

மெல்லியல் சிவகாம வல்லி யுடன்களித்து விளையா டவும்
எங்கள் வினைஓ டவும்ஒளித்து 
எல்லையில் இன்பந்தரவும் நல்லசம யந்தானிது 
இங்குமங்கும் நடமாடி இருக்கலாம் என்றபோது வருவார ழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே வந்தாற் பெறலாம்நல்ல வரமே.




Wednesday, January 23, 2013

நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே !



பொல்லார் நல்லாருக்கு தீங்கு செய்யும் போது கடவுள் நடுவே நிற்பார்! ஆனால் குறுக்கே நின்று தடுப்பதில்லை !
தீங்கு செய்தவருக்கு விளைவை திருப்பி அனுப்புவார் ! சில நாள் கழித்து அவருக்கோ அவர் வாரீசுகளுக்கோ விளைவு திரும்பிவரும் !

நமக்கு துன்பம் வரும்பொழுது என்ன பாவம் செய்தோமோ எனப்புலம்புகிறோம் அல்லவா? 

முற்றாத பாவம் உள்ளவர்கள் முற்றிய பாவம் உள்ளவர்களுக்கு தீங்கு செய்வார்கள் ! சின்ன குற்றவாளியால் மட்டுமே பெரிய குற்றவாளிக்கு தீங்கு செய்ய முடியும் ! 

நமக்கு பாவம் இல்லாத விசயத்தில் ஒருவர் தீங்கு செய்ய முயற்சித்தால் நம் அறிவு வெளிச்சமடைந்து நம் உள்ளுனர்வு நமக்கு எச்சரிக்கை செய்து அவர் தீங்கு செய்யாதபடி தடுத்து விடுவோம் ! நமக்கு பாவம் உள்ள விசயத்தில் நம் அறிவு விளிப்படையாதபடி பாவப்பதிவுகள் தடுப்பதால் அதே பாவத்தை ஒருவர் நமக்கு செய்யும் பொழுது அதனை தடுக்காமல் உடன் பட்ட செயல் நம்மிடம் இருக்கும்!

நாம் இடம் கொடுக்காமல் யாரும் நமக்கு தீங்கு செய்ய முடியாது !

உண்மை யாதெனில் சிறிய பாவிகள் பெரிய பாவிகளுக்கு தீங்கு செய்து தமது பாவத்தை பெருக்குவதும் ,துன்பப்பட்டவர்களுக்கு பாவம் குறைவதுமான தொடர் இயக்கம் நடந்து கொண்டே இருக்கிறது .இத் தொடர் இயக்கதின் கண்கானிப்பாளராய் கடவுள் இருக்கிறார்!

நமக்கு யார் தீங்கு செய்கிறார்களோ அவர்கள் நம் ஆத்துமாவில் இருக்கிற பாவம் இன்னது என்று நமக்கு உனர்த்துகிற ஆசான்கள் ! இது போல தீங்கு பிறருக்கு செய்யக்கூடாது என உணரும் போது:இது போன்ற தீங்கை நமது முன்னோர்கள் செய்துள்ளார்கள்  என உணரும்போது நாம் தாழ்மையடைந்து கடவுளிடம் மண்ணிப்பு கேட்க வேண்டும் நாம் சாத்வீகமடைந்து கடவுளிடம் புகலிடம் தேடவேண்டும்!

நமக்கு தீங்கு செய்தவர் இன்னும் தீங்கு செய்யாதபடி தடுத்துக்கொள்ள நமக்கு உரிமை உள்ளதே தவிர அவருக்கு உடன் பட்ட பாவத்தால் அவரை தண்டிக்க நமக்கு உரிமை இல்லை

இந்த உண்மையை உணரத்தொடங்குவோனால் அவரை மன்னிக்கிற மன நிலை ---மனச்சமன்பாடு உண்டாகும்---பாவ மன்னிப்பு அடைந்து நமது ஆத்துமா பரிசுத்தமடையும் !

தன்னை உணர்வதால் மட்டுமே சாத்வீகம் உண்டாகும் ! சாத்வீகம் உண்டானால் மட்டுமே கடவுளிடம் புகலிடம் அடைவோம் ! இந்த பயிற்சியே முழு சரனாகதியை நோக்கி நம்மை நகர்த்தும் ! இதன் அடையாளம் நம் மனம் சமனிலை அடையும்! எவ்வளவு பிரச்சினையிலும் மனம் சமனிலையடைந்தால் கடவுள் செயல்பட தொடங்குவதையும் நம் அறிவுக்கு எட்டாத தீர்வுகள்  ,விடுதலை, வெற்றி உண்டாவதை காணலாம்!
நமக்கு வருகிற  பிரச்சினைகளில் நாம் உணர்வு வயப்பட்டு ஒலட்டிக்கொண்டு இருக்கிறவரை கடவுளே கடவுளே என அலுத்துக்கொண்டே இருந்தாலும் கடவுள் செயல்படுவது இல்லை ! எப்போது நாம் சாத்வீகமடைந்து மன சமனிலையை எட்டுகிறோமோ அப்போது கடவுள் செயல்படுவார்!

தன்னை உணர்வதும், தன்னை போல பிறரையும் எண்ணுவதும் பாவபுண்ணிய கணக்கை சீர் செய்யும் வல்லமை உள்ள கடவுளை மட்டும் சரனடைவதும்:நன்மையோ தீமையோ அவராக கொடுப்பதை எற்றுக்கொள்ளுகிற  பயிற்சியே நிறை பக்தியாகும் ! இதற்கு நமக்கு தீங்கு செய்தாரை மன்னிக்கிற  இயல்பு வேண்டும்!

நமது ஆத்துமா பாவபதிவுகள்  நீங்கி தூய்மை பெறுவதற்கு ---பாவமன்னிப்பு பெறுவதற்கு
1)நமது பாவத்தை உணர வேண்டும்
2)பிரயசித்தம் செய்ய வேண்டும்!
1)நமக்கு தீங்கு செய்தவரை பார்த்து நமது பாவத்தை உணர வேண்டும்
2)நாம் தீங்கு செய்தவருக்கு பிரயசித்தம் செய்வதும் நமக்கு தீங்கு செய்தவரை மன்னிப்பதும் ஒன்றே!

இறை தூதர இயேசு சொன்ன ஒரு குட்டிக்கதை :

23. எப்படியெனில், பரலோகராஜ்யம் தன் ஊழியக்காரரிடத்தில் கணக்குப்பார்க்க வேண்டுமென்றிருந்த ஒரு ராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது. அவன் கணக்குப்பார்க்கத் தொடங்கினபோது, பதினாயிரம் தாலந்து கடன் பட்டவன் ஒருவனை அவனுக்கு முன்பாக கொண்டுவந்தார்கள்.
25. கடனைத்தீர்க்க அவனுக்கு நிர்வாகம் இல்லாதபடியால், அவனுடைய ஆண்டவன் அவனையும் அவன் பெண்ஜாதி பிள்ளைகளையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, கடனைத் தீர்க்கும்படிக் கட்டளையிட்டான்.
26. அப்பொழுது, அந்த ஊழியக்காரன் தாழ விழுந்து, வணங்கி: ஆண்டவனே! என்னிடத்தில் பொறுமையாயிரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்றான்.
27. அந்த ஊழியக்காரனுடைய ஆண்டவன் மனதிரங்கி, அவனை விடுதலைப்பண்ணி, கடனையும் அவனுக்கு மன்னித்துவிட்டான்.
28. அப்படியிருக்க, அந்த ஊழியக்காரன் புறப்பட்டுப்போகையில், தன்னிடத்தில் நூறு வெள்ளிப்பணம் கடன்பட்டிருந்தவனாகிய தன் உடன் வேலைக்காரரில் ஒருவனைக்கண்டு, அவனைப்பிடித்து, தொண்டையை நெரித்து: நீ பட்ட கடனை எனக்கு கொடுத்துத் தீர்க்கவேண்டும் என்றான்.
29. அப்பொழுது அவனுடைய உடன் வேலைக்காரன் அவன் காலிலே விழுந்து: என்னிடத்தில் பொறுமையாயிரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்று, அவனை வேண்டிக்கொண்டான்.
30. அவனோ சம்மதியாமல், போய், அவன் பட்ட கடனைக் கொடுத்துத் தீர்க்குமளவும் அவனைக் காவலில் போடுவித்தான்.
31. நடந்ததை அவன் உடன்வேலைக்காரர் கண்டு, மிகவும் துக்கப்பட்டு, ஆண்டவனிடத்தில் வந்து, நடந்ததையெல்லாம் அறிவித்தார்கள்.
32. அப்பொழுது, அவனுடைய ஆண்டவன் அவனை அழைப்பித்து: பொல்லாத ஊழியக்காரனே, நீ என்னை வேண்டிக்கொண்டபடியினால், அந்தக் கடன் முழுவதையும் உனக்கு மன்னித்துவிட்டேன்.
33. நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன் வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று சொல்லி,
34. அவனுடைய ஆண்டவன் கோபமடைந்து, அவன் பட்ட கடனையெல்லாம் தனக்குக் கொடுத்துத் தீர்க்குமளவும் உபாதிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தான்.
35. நீங்களும் அவனவன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரமபிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார்.

நமக்கு நூறு வெள்ளிக்காசு அளவு தீங்கு செய்தவரை மன்னித்தால் கடவுளிடம் பதினாயிரம் தங்ககாசு அளவு மன்னிப்பு பெற்றுக்கொள்ள முடியும்!


கடவுள் நமக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் பிதா----பரமபிதாவானவர்!`ஒருவனும் கெட்டுப்போவது உங்கள் பரமபிதாவின் சித்தமல்ல` என்றார் இயேசு!சகல மனிதர்களும் எப்படியாவது தேர வேண்டும் திருந்தி பரலோகத்திற்கு தகுதி உடையவர்களாக வேண்டும் என்பதற்கு பரமபிதா முயற்சித்துக்கொண்டே இருப்பார் ! 

மற்ற மனிதர்களை தண்டிப்பதற்கோ அழிப்பதற்கோ கடவுள் , அரசாங்கம் தவிர மனிதர்களுக்கு உரிமையில்லை ! மதவாதிகளுக்கும் மதக்குழுக்களுக்கும் கடவுள் பெயரை சொல்லிக்கொண்டு கொல்வதற்கு துளியளவு கூட உரிமையில்லை !
அவர்கள் கடவுள் பெயரை சொல்லிக்கொண்டே நேராக நரகத்திற்கு சென்ற பிறகுதான் தங்கள் தவறை உணர்வார்கள் ! மனிதர்களுக்கு செய்யப்படும் ஒரு சிறு தீங்குக்கும் நிச்சயமாக கடவுள் வழக்காடுவார் !
இந்த இறை அச்சமே உண்மையான மனித நேயத்தின் அடிப்படையாகும்!

ஒரு இறைதூதருக்கு ஒரு குறிப்பிட்ட சூழ்னிலையில் சொல்லப்பட்ட ஒரு வாசகத்தை அப்படியே இன்றைக்கு வாசித்து அதை தங்களுக்கு சொல்வதாக எடுத்துக்கொள்ளுவதும் ; கடவுள் சொன்னதால் கடவுளுக்காக செய்வதாகவும் நேராக சொர்க்கத்திற்கு சென்று விடுவதாக நம்பிக்கொள்ளும் இளம் பிள்ளைக்கோளாறு இன்று சிலரை பிடித்து வாட்டிக்கொண்டுள்ளது ! அப்படிப்பட்டவர்கள் நேராக நரகத்திற்கு சென்ற பிறகு மட்டுமே தங்களின் தவறை உணரவேண்டிய அவல நிலை உள்ளது ! இதுவும் ஒரு அசுர ஆவி துர் உபதேசமே !

இறை தூதருடன் கடவுள் நேரடியாக பேசினார் ; அல்லது வெளிப்படுத்தினார் ; கட்டளையிட்டார் ! அதனால் அவர் செய்தது நியாயம் ! ஜீகாத் என்பது குறிப்பிட்ட இன மக்களுக்கு ( அரபியர்களுக்கு ) அவர்களில் ஒருவரை கொண்டு  அவர்களது மூதாதையர்களுக்கு கடவுளிடம் ஏற்பட்ட உடன்படிக்கையை நினைவூட்டியும் ; கால அவகாசம் அழித்தும் அதன் பிறகே போரின் மூலமாக அவர்களை அடக்கும் படியாக கடவுள் முகமது நபிக்கு கட்டளையிட்டார் ! அதுமட்டுமே ஜீகாத் ! அதை எல்லா சூழ் நிலைக்கும் பொருத்துவது தவறானது ! அதுவும் முன்னறிவிப்பு செய்யப்படாத அடுத்த இன மக்கள் மீது அவ்வசணத்தை வாசித்து விட்டு தாக்குவது என்பது எள்ளளவும் நியாயமில்லாதது ! 

கசாப் தற்போது நரகத்திற்கு கடவுளால் அனுப்பப்பட்டுள்ளார் என்பதை கசாப்பே வந்து சொன்னாலொழிய அவர்கள் திருந்தப்போவதில்லை !

இறை அடியவருக்கு சொல்லப்பட்ட வசணத்தை அப்படியே ஓதி தவறாக வியாக்கியாணம் செய்ய முடியும் என்பதையே சாத்தானும் வேதம் ஓதும் என்றார்கள் !!

அது இறை வசணமே ஆனாலும் இடம் சூழ் நிலை மாறி  ஓதினால் அதன் பொருளே -- அர்த்தமே மாறி தவறாகி விடும் என்பதை அசுர ஆவிகள் நன்றாகவே பயன்படுத்துகின்றன !

இந்த கேடுகள் கலி முற்றிவிட்டது என்பதன் அடையாளம் ! அவ்வாறு சீர்கேடுகள் அதிகரிக்கும் போதெல்லாம் ஒரு புதிய இரைதூதரை அணுப்பி உலகை சீர் செய்வது கடவுளின் இயல்பாகும் !

நல்லோர்களின் பெருமூச்சு விண்ணை அதிகமாக எட்டும்போதும் ; உண்மை உணர்ந்த மெய் அடியார்களின் பிரார்த்தனை ஏறெடுக்கப்படும் போதும் கடவுள் இரைதூதர்களை அணுப்பிய நிகழ்வுகள் நடந்துள்ளன !!

கடவுள் எதை செய்யும் முன்னும் அதற்காக பிரார்திக்கிற ஆத்துமாக்களை எழுப்புவார் ! 

அதற்கான குரலே இவ்வழைப்பு !! 

Saturday, January 19, 2013

வேதாத்திரி மகரிஷியின் நிறை உணர்வு !!

உருவெடுத்த காரணமும் காரியமும் முடிவும்

உலகினிலே எழுபத்து ஐந்தாண்டு வாழ்ந்து
திருவருளே அவ்வப்போ உணர்த்த உணர்ந்திட்டேன்
செய்த வினைப் பதிவுகளைத் தூய்மை செய்துகொண்டேன்
கருத்தொடராய்ப் பின் பிறவி இல்லை இனியில்லை
கர்மவினை மிச்சமில்லை இச்சையில்லை எதிலும்
அருள் நிறைந்த பெருஞ்சோதி அரவணைத்துக் கொள்ளும்
அந்தப் பெரு நன்னாளை எதிர்பார்த்து உள்ளேன்.

---------வேதாத்திரி மகரிஷி. !!

``அருள் நிறைந்த பெருஞ்சோதி அரவணைத்துக் கொள்ளும்``

கடவுள் என்ற உள்ளொளி அவருக்குள் இருந்திருக்கிறது ! ஏனென்றால் அவரது ஞானகுரு வள்ளலாரின் தொடர்பே அவரது ஞானத்திற்கு காரணம் ! விசாரம் செய்வதை முக்கியப்படுத்த அவர் அறிவே கடவுள் என்று சொன்னாலும் அதை கடவுள் என்றொருவர் தனித்து இல்லை என்பதாக புரிந்து கொள்ளக்கூடாது ! தன் வாழ்வின் முடிவாக அருட்பெரும் ஜோதி அணைத்துக்கொள்ளும் என்ற அவரது நம்பிக்கையே அவரது கடவுள் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது !

Monday, January 14, 2013

திருக்கோஷ்ட்டியூர்


12/01/2013  ல் திருக்கோஷ்ட்டியூர் தலம் சென்று வந்தேன் !
இங்கு சென்று பிரார்திக்க வேண்டும் என நீண்ட நாளாக ஒரு எண்ணம் !
இதன் தல வரலாறை நீங்கள் அறிந்து கொண்டீர்களானால் நான் ஏன் இங்கு சென்றிருப்பேன் என்பதை ஊகித்துக்கொள்வீர்கள் !

நான் பேருந்தில் சென்று கொண்டிருக்கும்போது தற்செயலாக இந்த நாள் வீரத்துறவி விவேகானந்தரின் பிறந்த நாள் என்பதை அறிந்துகொண்டேன் ! நான் அங்கு செல்வதன் நோக்கம் இரட்டிப்பாய் ஆக்கிகொடுத்ததற்காய் கடவுளுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டேன் !!

இந்த கோவிலின் உடையவர் என சொல்லப்படுபவர் நம்பியாண்டார் நம்பி என்னும் ஆழ்வாராவார் ! வைணவம் பிரபலமடைந்து அதன் உச்சத்தை அடைந்து கொண்டிருந்த காலகட்டம் அது ! அவர் 1025 வருடங்களுக்கு முன்பு இங்கு பிறந்து இக்கோவிலை நிர்வகித்தவர் !!

வைணவத்தின் முத்தாக அத்வைத நெறியை உலகிற்கு முதல்முதலில் எடுத்தியம்பியவரும் மாபெரும் சமூக சீர்திருத்தவாதியுமான ஸ்ரீராமணுஜர் - வைணவத்தை பட்டிதொட்டியெல்லாம் பரவ கடவுளால் பயன்படுத்தப்பட்ட பாத்திரம் -- ஸ்ரீரெங்க கோவில் உடையவர் !  

அவர் 996 வருடங்களுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூரிலே பிறந்தவர் ! ஆன்மீக நாட்டமுள்ளவராகி ஸ்ரீரெங்கம் கோவில் வந்து தங்கி தொண்டு செய்து வந்தார் ! ஆனால் அவருக்கு தீட்சை மற்றும் மந்திர உபதேசம் கிடைக்கவில்லை !!
வைணவ நெறி ஓரளவு ஸ்தாபிக்க பட்டு ஆழ்வார்களால் பல கோவில்கள் பிரபலமடைந்திருதாலும் அதில் பிறப்பால் பிராமணர்கள் மட்டுமே பட்டர்களாகவும் ரகசியமாக மந்திரம் உபதேசிக்கபட்டவர்களாகவும் இருந்தனர் ! சாதாரன பொதுமக்கள் கோவிலில் வந்து வழிபடலாம் ; பிரசாதம் வாங்கலாம் அவ்வளவுதான் ஆன்மீக உபதேசம் எள்ளளவும் அவர்களுக்கு கிடையாது !

உனக்கு உபதேசிக்கும் மந்திரத்தை நீ வெளியில் சொன்னால் கேட்டவரெல்லாம் பரலோகம் - சொர்க்கம் போவார்கள் ஆனால் நீ நரகம் போய்விடுவாய் என சத்தியம் வாங்கிக்கொண்டு அவரவர் பரம்பரைக்கு மட்டும் மந்திரம் சொல்லித்தருவார்கள் ! 

இப்படிப்பட்ட காலகட்டத்தில் மந்திர உபதேசம் மற்றும் தீட்சையை அவ்வளவு எளிதில் பிராமணகுலத்தில் பிறந்தவர்களுக்கும் கூட சொல்லித்தரமாட்டார்கள் ! வெளியூரிலிருந்து வந்து தங்கி சேவை செய்யும் ராமாணுஜருக்கு யாரும் உபதேசிக்கவில்லை ! அப்படிப்பட்ட நிலையில் அவருக்கு கனவில் திருக்கோஷ்ட்டியூர் சென்று நம்பிகளிடம் தீட்சை பெறுமாறு உணர்த்தப்பட்டது !

அதனால் ராமாணுஜர் ஸ்ரீரெங்கத்திலிருந்து திருக்கோஷ்ட்டியூர் நடந்து சென்று நம்பியின் வீட்டு கதவை தட்டுவாராம் ! நம்பி அவர்கள் யாரது எனக்கேட்டால் `` நான் ராமாணுஜன் வந்திருக்கிறேன் `` என்பாராம் ! நம்பி `` நான் செத்து நீ வா `` என்பாராம் ! திரும்பி விடுவாராம் ! இப்படி 18 முறை தீட்சை பெற அவர் வரவேண்டியிருந்தது ! இந்த 18 தடவைகளில் நான் யார் ;                 நான் எப்படி சாகும் என்ற விசாரம் ராமாணுஜரின் மனக்கண்ணை திறந்திருக்கிறது ! 

``நான் அதுவாக இருக்கிறேன் `` என்ற அத்வைத தத்துவத்தின் உட்பொருளை அவர் சிந்தித்து உணர்ந்து தாழ்மையடைந்த போது அகம்பாவம் மறைந்து `` அடியேன் ராமாணுஜன் வந்திருக்கிறேன் `` என சொன்னாராம் !
அப்போது நம்பி அவர்கள் அவரை ஏற்றுக்கொண்டாராம் !
அவருக்கு மந்திர உபதேசம் செய்ய சம்மதித்து இக்கோவிலின் தரைதளத்தில் வைத்து இம்மந்திரத்தை யாருக்கும் சொல்லமாட்டேன் என சத்தியம் வாங்கிக்கொண்டு `` ஓம் நமோ நாராயணா `` என்ற அஸ்ட்டாங்க மந்திரத்தை உபதேசித்தாராம் !!

இன்று சர்வசாதாரணமாக வைணவ கோவில்களில் எழுதிப்போட்டிருக்கும் `` ஓம் நமோ நாராயணா ` என்ற மந்திரம் கூட அன்றைக்கு யாருக்கும் சொல்லாமால் சிலர் மட்டுமே ஜெபிக்கிற அட்சரமாக இருந்திருக்கிறது ! 

இப்படித்தான் உண்மைகள் பல மாயைகளால் எப்போதுமே மூடப்பட்டு மறைக்க படுகின்றன ! யாரோ அடுத்தவர் மறைப்பது என்று மட்டும் அதை புரிந்து கொள்ளாதீர்கள் ! நாமே நமக்கு தெரிந்த பல விசயங்களை ஆழத்தை - அதன் மேன்மையை புரிந்து கொள்ளாமல் இருப்போம் ! அதற்கு வேறொரு அர்த்தம் சொல்லி அப்பியாசிப்போம் ! சரியான புரிதலை யாராவது சொன்னாலும் அவருடன் சண்டைக்கு போவோமே தவிர அதனை உள்வாங்கி விசாரம் செய்யாமலே இருப்போம் ! ரெம்ப நாள் கழித்து பட்டறிவால் - கடவுள் பட்டைதீட்டி கொடுக்கும்போது நமக்கு புரியும் ! இப்படி புரியாமலும் இருந்துகொண்டு புரிந்து சொன்னவரையும் இகழ்ந்துகொண்டும் இருந்திருக்கிறோம் என்பது எவ்வளவு விசயங்கள் நம் வாழ்வில் நடந்திருக்கிறது ! ஆனாலும் எங்கிருந்து ஒரு விசயம் வந்தாலும் அதனை கேட்டு வாங்கி வைத்துக்கொள்கிற - அதை கடைபிடிக்க வேண்டிய அவசியமே இல்லை - ஆனால் கேட்பது - இப்படியும் இருக்கிறதா என்ற அறிதல்  `` கேள்விஞானம்`` நமக்கு வருவதே இல்லை ! ஞானத்திற்கு முன்னோடியே கேட்பதுவே ! அதனால்தான் கேள்விஞானம் என்றார்கள் !

கேள் என்பதிலும் ஒரு மாயை இருக்கிறது ! இப்போது எதை நாம் பெரும்பாலும் கேட்டுக்கொண்டிருக்கிறோம் ? எது ஏற்கனவே நமக்கு தெரியுமோ அதை அடுத்தவர் சொன்னால் கேட்டுக்கொள்கிறோம் ! தெரிந்ததையே மீண்டும் மீண்டும் கேட்டு புழகாங்கிதம் அடைவது ஒரு மனித இயல்பு ! தெரியாத ஒன்று வருமானால் உடனே அதனுடன் கத்தியை எடுத்து வீசுவீசென வீசிக்கொண்டிருப்போமே தவிற - நமக்கு எது தெரியுமோ அதை துருத்திக்கொண்டே இருப்பது - நம்மை துருத்திக்கொண்டே இருப்பது - அடுத்தவரை தெரிந்து கொள்வதே இல்லை ! கிணற்று தவளை மனப்பாண்மை ! கூட்டமாக கூடி கத்திக்கொண்டிருப்பது ! அடுத்த சத்தம் காதில் ஏறாது !
தெரிந்ததையே  திரும்ப திரும்ப ஓராயிரம் முறை கேட்டாலும் அறிவு விருத்தி ஆகப்போகிறதா ? ஒரு தம்படி கூட நகராது ! எது நமக்கு தெரியாததோ அது நமக்கு தெரிந்தால் அது அறிவு விருத்தி ! ஞானவிருத்தி என்பது நமக்கு புரியாத ஒன்று புதிதாய் புரியும்போது மட்டுமே உண்டாகிறது ! அப்படியானால் தெரியாத ஒன்றை தெரிந்து கொள்ளும்போது மட்டுமே நமது பட்டறிவு மற்றும் காலத்தின் போதனையால் அது உண்மை என நம்மால் ஏற்றுக்கொள்ளப்படும் சூழ்னிலையில் நமக்குள் புதிய புரிதல் - ஞானவிருத்தி உண்டாகிறது !
ஞானவிருத்திக்கு அடிப்படையே தெரியாததை கேட்டு வைத்துக்கொள்ளுவதுதான் ! இந்த உண்மை புரியாமல் -- நிதானமில்லாமல் தெரியாத விசயங்களை காதே கொடுக்காமல் கத்தியை வீசிக்கொண்டிருப்பது மனித இயல்பு - மாயையின் பிடி !! 

மாயைகள் மனிதனை கட்டிகட்டி ஒவ்வொரு அடி எடுத்து வைக்கவும் தடை செய்கின்றன ! சுயம் அழிந்து எதையும் உள்வாங்கி உள்ளே ஏற்கனவே விளைந்த ஞானத்தின் துனையோடு நல்லதற்கும் கெட்டதற்கும் இடையில் போராடி கடவுளின் கிருபையால் மட்டுமே பூரணஞானம் பெற முடியும் ! நிறை ஞானம் ; இன்னும் இன்னும் என்று போய்க்கொண்டே இருக்கும் ! இன்னும் இன்னும் கற்பதால் தாழ்மையடைந்து கடவுளை சார்ந்து கொள்ளும் ! முழு சரணாகதி - நிறைஞானம் - மெய்பக்தி ஒரு புள்ளியில் சந்திக்கும் ! ஓயாத மாயையை சகஜமாக நிதானிக்கும் தன்மை உண்டாகும் !!

எந்த விசயத்தை எடுத்துக்கொண்டாலும் அதன் ஆழத்தில் ஒரு உண்மை இருக்கும் ! ஆனால் அதன் மீது அளவிடமுடியாத பொய்யை மனிதனும் அசுர ஆவிகளும் மாடமாளிகையாக கட்டிவைத்துவிடும் ! காலப்போக்கில் எல்லா உண்மைகளின் மீதும் பொய்கள் ஏறிக்கொள்ளும் ! வைணவம் வளர்ந்தபோது ஆழ்வார்கள் தங்கள் பக்தியின் திறத்தால் ஞானத்தால் சாதித்தவற்றை அவர்களின் பிறப்பு வாரீசுகள் பலனை அறுக்கிற கூட்டமாக வளர்ந்தார்கள் ! எந்த ஒரு கொள்கையும் அதன் சீடர்களால் சீரழிக்கபாடும் !

`` ஓம் நமோ நாராயணாய `` என்ற மந்திரத்தைக்கூட வெளியே யாருக்கும் சொல்லக்கூடாது என சத்தியம் வாங்கிக்கொண்டு தங்கள் குழந்தைகளுக்கு மட்டும் உபநயணம் செய்வதாக அது மாறிவிட்டது ! மெல்ல வளர்ந்த விசத்தை யாராலும் அவ்வளவு எளிதாக கண்டு பிடிக்கமுடியாது ! ராமாணுஜருக்கு மந்திரம் அறிவிக்க தகுதியுடையவரான நம்பியவர்களாலும் கூட - நான் செத்து நீ வா என்று ஞானமொழி பேசியவரால்கூட பராம்பரியத்தால் வந்த இந்த மாயையை கண்டறியமுடியவில்லை ! சத்தியம் வாங்கிக்கொண்டுதான் ராமாணுஜருக்கு அறிவித்தார் !

மந்திரத்தை தெரிந்துகொள்ளவே இவ்வளவு தடை உண்டாக்கிய மாயை - அசுர சக்திகள் அந்த மந்திரத்தின் உட்பொருளை அவ்வளவு எளிதாகவா புரிந்துகொள்ள விடும் ? இதுதான் இன்றைய நிலைமை !!




ராமாணுஜர் அடுத்து செய்தது என்ன என அறிந்து கொள்ளும் முன் கோவிலைப்பற்றி சிலவற்றை அறிந்துகொள்ள வேண்டும் !

இந்த கோவில் கதம்பமுணிவர் என்பவரின் ஆசிரமம் இருந்த இடம் ! இரண்யகசிபு பூமியில் நானே கடவுள் ( நான் அதுவாக இருக்கிறேன் என்பதற்கும் அது நானாக இருக்கிறேன் என்பதற்கும் அழுத்தம் வித்தியாசம் வருகிறது ; முன்னது சுயத்தை விடுவது பின்னது சுயத்தை துருத்துவது ) என அத்வைத நெறியை தவறாக வியாக்கியாணம் செய்து அரக்கணாக - அசுரர்களின் கைப்பாவையாக மாறி விட்ட பிறகு அவனை அழிப்பது எப்படி என தேவர்கள் ஆலோசனை செய்த இடம் ! அதனால் திருக்கோஷ்ட்டியூர்  என பெயர் வந்த இடம் !

இக்கோவிலின் உள் நுழைபவர் முதலாவது பார்ப்பது சிவன் அதாவது மனிதன் ! அடுத்து கிருஷ்ணன் அதாவது இறைதூதன் - மனிதனாய் வந்த சற்குரு ! மேலே செளமிய நாராயணன் அதாவது சகலமுமாய் ஜட இயற்கையாய் - அசையும் அசையாதபொருட்களாய் வெளிப்படுகிறவர் ! எல்லா ஜட இயற்கையும் இவருக்குள்ளிருந்து இவரால் வெளிப்படுத்தப்பட்டு செயலற்றவராக அனந்தசயன கோலத்தில் உள்ளார் ! 

கீதை 9:7 குந்தியின் மகனே ! யுக முடிவில் எல்லா ஜட வெளிப்பாடுகளும் எனது அரூபத்தில் மறைகின்றன ! அதே போல அடுத்த யுகத்தில் நானே என்னிலிருந்து அவற்றை வெளிப்படுத்துகிறேன் !!  

கீதை 9:8 இந்த முழு பிரபஞ்ச இயக்கமும் எனது ஆளுகையிலேயே உள்ளது ! எனது சித்தத்தால் அவைகள் மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தப்படுகின்றன ! அதே போல முடிவில் அவைகள் மீண்டும் மீண்டும் அழிக்கவும் படுகின்றன !!
கீதை 9:9 தனஞ்ஜயா ! இருப்பினும் இவ்விவகாரங்கள் எதுவும் என்னை பாதிப்பதேயில்லை ! ஜட இயற்கை செயல்பாடுகளில் பந்தப்படாமல் தனித்தும் சலணமற்றும் ஓய்ந்தும் இருக்கிறேன் !!

கீதை 9:10 ஜட இயற்கையானது எனது சக்திகளில் ஒரு பகுதி மட்டுமே ! எனது வழிகாட்டுதலின் படி அது உயிரற்ற உயிருள்ள அனைத்தையும் உருவாக்குகின்றது ! அந்த இயற்கை விதிகளின் படி திரும்பதிரும்ப பிரபஞ்சமானது உருவாக்க பட்டும் அழிக்க பட்டும் வருகிறது !!

இன்னும் மேலே சென்றால் உஜ்ஜயபெருமாள் ! இவர் நின்ற நிலையில் அதாவது செயல்படுகிறவராக - அதாவது முன்னேற உத்வேகம் அளிக்கிறவராக - உந்து சக்தியாக - தெய்வீக சக்தியாக உள்ளார் ! அதாவது அரூபத்தண்மையாக பரலோகத்தில் இருக்கிற விஷ்ணு !!

அதாவது விஷ்ணுவுக்குள் இரண்டு பகுதி இருக்கிறது ! ஒன்று அரூபமான தெய்வீக சக்தி மற்றது ஜட இயற்கையாக ரூபமான வெளிப்பாடு ! நாராயணன் என்றாலேயே நரணாய் வெளிப்பட்டவன் !

இந்த பூமி மற்றும் நட்சத்திர மண்டலம் ; பொருட்கள் மற்றும் உயிரிணங்கள் அனைத்தும் இவருக்குள்ளாக இருந்து வெளிப்படுத்தப்பட்டு ; இவரிலேயே தங்கி முடிவில் இவருக்குள்ளாகவே மறைந்தும் போகின்றன !சகலமும் இவரே !
பரிபாடல் 3:63-68 - சகலமும் அவரே என்பதை சொல்லுகிறது !

தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ
கல்லினுள் மணியும் நீ ; சொல்லினுள் வாய்மை நீ;
அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ;
வேதத்து மறை நீ; பூதத்து முதலும் நீ;
வெஞ்சுடர் ஒளியும் நீ; திங்களுள் அளியும் நீ;
அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ






எனப் போற்றுகின்றார் புலவர் கடுவன் இளவெயினனார்.
(தெறல் = வெம்மை, நாற்றம் = மணம், மணி = நீலமணி, மறம் = வீரம், வாய்மை = உண்மை, மைந்து = வலிமை, பூதம் = நிலம், ஆகாயம், காற்று, தீ, நீர் ஆகிய ஐம்பூதங்கள், வெஞ்சுடர் = சூரியன், திங்கள் = நிலவு, அளி - குளிர்ச்சி)

நின், வெம்மையும் விளக்கமும் ஞாயிற்று உள;
நின், தண்மையும் சாயலும் திங்கள் உள;
நின், சுரத்தலும் வண்மையும் மாரி உள
நின், புரத்தலும் நோன்மையும் ஞாலத்து உள;
நின், நாற்றமும் ஒண்மையும் பூவை உள;
நின், தோற்றமும் அகலமும் நீரின் உள;
நின், உருவமும் ஒளியும் ஆகாயத்து உள;
நின், வருதலும் ஒடுக்கமும் மருத்தின் உள:




(பரி. 4:25-32)
(வெம்மை = பகைவரை அழிக்கும் ஆற்றல், தண்மை = அளித்தல், அருளல், சுரத்தல் = விருப்பம் நிகழ்தல், வண்மை = கொடை, புரத்தல் = தாங்குதல், நாற்றம் = மணம், வண்மை = ஒளி, பூவை = காயாமலர், ஒலி = சொல், வருதல் = அவதரித்தல், ஒடுக்கம் = மறைதல், மருத்து = காற்று)
இப்படி உருவப் பொருளிலும் அருவப் பொருளிலும் நீக்கமற நிறைந்திருக்கும் புருஷனாகத் திருமாலைக் காட்டுகின்றது பரிபாடல். 

காக்கை சிறகினிலே நந்தலாலா உந்தன் கரிய நிறம் தோன்றுதையா நந்தலாலா என்னும் பாடலில் பாரதியும் இக்கருத்தையே துதிக்கிறார் !

கீதை 7:4 நீர் , நிலம் , நெருப்பு , காற்று , ஆகாயம் . மனம் , மதிநுட்பம் , மற்றும் கேடான அஹம்பாவம் ஆகிய எட்டு அடிப்படைகளும் யுகபுருஷனிளிருந்தே தோன்றிய ஜட சக்திகளாகும் !!

கீதை 7:5 இந்த ஜட சக்திகளையும் ; இவற்றை சுரண்டியே வாழும் தாழ்ந்த தன்மையுள்ள உயிரிணங்கள் அனைத்தையும் தன்னகத்தே உறையவைத்தும் தாங்கியும் வருகிற இவற்றையும் விட மேலான சக்தியும் ஒன்று உள்ளது அர்ச்சுனா ! அதுவே யுகபுருஷனின் தெய்வீக சக்தி என்பதை அறிவாய் !!


கீதை 7:6 படைப்பினங்கள் அனைத்தும் இந்த இரண்டு சக்திகளிளிருந்தே தங்களின் ஆற்றலை பெறுகின்றன ! லவ்கீகமானவைகள் ஜட சக்திகளிலிருதும் ஆன்மீகத்தில் விளைந்தவைகள் தெய்வீக சக்தியிலிருந்தும் ஆற்றலை பெறுகின்றன ! இரண்டு வகை உயிரினங்களுக்கும் ஆதியும் அந்தமும் யுகபுருஷனே என்பதை அறிவாய் !!

 
யுகபுருஷன் இரண்டு நிலைகளில் உள்ளார் ! பரலோகத்தில் அவர் பெருமாள் அல்லது விஷ்ணு ! பூமியிலோ அவர் அசையும் அசையா பொருட்களான நாராயணன் !

இன்னும் மேல் தளத்திற்கு சென்றால் அங்கு பரமபத நாதர் ! இந்த பரமபத நாதர் என்பவர் விஷ்ணுவுக்கும் மேற்பட்டவர் என்பது வைணவ மரபு ! இவரே அரூபமான கடவுள் - ஏக இறைவன் ! அல்லது ஆதிமூலம் !!

கீதை 8:3 உண்ணதமான கடவுளின் தூதர் கூறினார் : எது அழிவற்றதோ ' எல்லாவற்றிர்க்குள்ளூம் உயிரோட்டமாய் இயங்கிக்கொண்டிருப்பது எதுவோ அதுவே பிரம்மம் -- கடவுள் ! அவரின் உள்ளார்ந்த இயல்பே ஆதிமூலம் அல்லது அகம் ! அதுவே புறத்தில் பொருட்களாகவும் ; இயங்கும் படைப்பினங்களாகவும் வெளிப்பட்டு அவைகளின் இடைபடுதலால் உருவாகும் செயல்கள் `` கர்மம் `` அல்லது லோகாயாத செயல்பாடுகளாக அறியப்படுகின்றன !
கீதை 8:4 உடலுள்ளவைகளில் சிறந்தவனே ! பவ்தீகப்பொருட்கள் ஒன்று மற்றொன்றாய் வளர்சிதை மாற்றம் அடைந்துகொண்டே உள்ளன ! இது ஆற்றல் சுளர்ச்சி அல்லது ``ஆதிபுத்தா`` எனப்படும் ! இந்த வளர்சிதை மாற்றமே பொருட்களின் உருவாக்கமாக வெளிப்படுகின்றன ! சூரியசந்திர நட்சத்திரங்கள் உள்ளிட்ட வானமண்டலசேனைகள் மற்றும் பூமியிலுறையும் படைப்பினங்கள் அனைத்தும் எதிலிருந்து உருவாக்கபட்டதோ அந்த பரமாத்வான நானே ``ஆதியஜ்னா `` அல்லது வேள்விகளின் புருஷனாவேன் ! கடவுளின் சர்வவியாபகமோ சகலத்தையும் உள்ளடக்கியது ! வானவர்களான தேவர்கள் அசுரர்கள் அதிதேவதைகள் அல்லது தேவதூதர்கள் என அறியப்படுகின்றனர் ! அவர்களையும் உள்ளடக்கியது !!

ஆதிபுத்தா  -- நாரயணன்
ஆதியஜ்னா - பெருமாள்
இரண்டையும் உள்ளடக்கியவர் யுகபுருஷன் அல்லது திருமால் ; விஷ்ணு !
இவர் அல்லாத வானவர்கள் தேவதூதர்கள் , அசுரர்கள் எல்லாவற்றையும் உள்ளடக்கியவர் ஏக இறைவன் - கடவுள் ! 

கீதை 9:4 எனது யுகபுருஷன் என்ற அரூபத்தண்மையில் இந்த முழு பிரபஞ்சமும் பொதிந்திருக்கிறது ! எல்லாம் எனக்குள் இருக்கிறது ; ஆனால் நானோ அவைகளை கடந்தும் இருக்கிறேன் என்பது எனது இயல்பாகும் !! :
கீதை 9:5 நானே படைக்கபட்ட எல்லாவற்றையும் நிர்வகித்தாலும் ; நானே எங்கும் விரவி இருந்தாலும்  அசுரர்களின் மாயையால் படைப்பினங்கள் என்னில் நிலைபெறாமால் சுயம் - தன்முணைப்படைகின்றன !! அனைத்தும் என் மூலமாக கடவுளால் படைக்கப்படவையே ஆயினும் என்னில் ஒன்றாமல் கலக்கமடைகின்றன !!

கீதை 9:6 பலத்த காற்று எங்கும் சுற்றிசுழன்று வீசினாலும் அது வானத்தில் நிலைபெற்றிருப்பதைப்போல எல்லா உயிரினங்களும் சுயமாய் வினையாற்றினாலும் என்னிலேயே நிலைத்திருக்கின்றன என்பதை புரிந்துகொள்ள முயற்சி செய்வாயாக !!

வைணவத்தின் முழுமை இந்த இறங்குவரிசையை உணர்ந்து கொள்வதில் உள்ளது !
1)       ஏக இறைவன் - ஆதிமூலம் !
2)       யுகபுருஷன் - விஷ்ணு . பெருமாள் - திருமால் !
3)       நாராயணன் - படைக்கப்ட்டவைகளின் ஆதாரம் !
4)       அவதாரம் - இறைதூதனாய் பூமிக்கு வந்து தர்மத்தை நிலை நாட்டுகிறவர் !
5)       சிவன் --    மனித இறைதூதர்கள் - மகான்கள் !

இந்த வரிசையே திருக்கோஷ்ட்டியூர் கோவிலில் விளங்கப்பட்டுள்ளது ! அந்த பட்டர் திரும்பதிரும்ப சொல்லிக்கொண்டிருந்தார் ! உலகின் முதல் வைணவ கோவில் இதுதான் என்று ! இரண்யகசிபுக்கு முன்பே இந்த கோவில் இருந்துள்ளது ! இந்திய கோவில்கள் என்பவை ஒரு தத்துவத்தை எடுத்தியம்ப உருவாக்கபட்டவையாகத்தான் இருக்கும் ! காலப்போக்கில் தத்துவம் மறைந்து சும்மா கும்பிடுவதாய் மாறிவிட்டிருக்கும் !

அடுத்து பிரச்சினை வேண்டுதல் உள்ளோர் இங்கிருந்து விளக்கு (கார்த்திகை சிட்டி )ஒன்றை வாங்கிக்கொண்டு சென்று வீட்டிலே விளக்கு ஏற்றி வழிபட்டால் பிரச்சினை தீரும் ! அப்போது விளக்கையும் கொடையையும் கோவிலுக்கு கொண்டுவர வேண்டும் என்று !

இந்த கோவிலின் தத்துவம் மனிதன் கிருஷ்ணனாகிய இறைதூதன் வழிகாட்டிய வேத நெறியை கடைபிடித்து சர்வமும் நாரயணன் என்பதை உணரவேண்டும் ! அவரின் அருபத்தண்மையாகிய யுகபுருஷன் என்பதை உணர்ந்து அவர் நாமத்தாலே அவர் மூலமாக கடவுளை - ஏக இறைவனை வழிபடவேண்டும் என்பதுதான் !

இந்த கோவிலிலிருந்து இந்த விளக்கத்தை ஒவ்வொரு மனிதனும் வீட்டிற்கு எடுத்து சென்று கடைபிடித்தால் மோட்சம் அடையலாம் என்பதுவே விளக்கை எடுத்து செல்வதாக மறுவியுள்ளது !

கீதை 9:22 ஆனால் யார் எனது யுகபுருஷன் என்ற அரூபத்தை உணர்ந்து தியானித்து உள்ளர்ந்த பக்திதொண்டுடன் என்னை பின்பற்றி கடவுளை வழிபடுகிறார்களோ அவர்களின் குறைவை நான் சுமந்து நிறைவை காத்து பெருக்குகிறேன் !!

கீதை 9:23 யார் பலரை கடவுளுக்கு இணைவைத்து உள்ளார்ந்த பக்தி செலுத்துகிறார்களோ அவர்களின் பக்திதொண்டை நான் மதிக்கிறேன் ! ஆனாலும் அவர்கள் தவறான வழியில் பக்திதொண்டு செய்கிறார்கள் !!
கீதை 9:27 நீ எதை செய்தாலும் ; எதை உண்டாலும் ; எதை கொடுத்தாலும் ; எதை சமர்பித்தாலும் எந்த புண்ணிய சடங்குகளை செய்தாலும் அதை கடவுளுக்கு பக்திதொண்டாகவே என் மூலமாக அர்ப்பணிப்பாயாக !!

``ஓம் நமோ நாராயணாய `` என்ற அஷ்ட்டாங்க மந்திரத்தின் உட்பொருளும் இதுவே !
நாராயணாய - நாராயணனாக வெளிப்பட்ட
ஓம் நமோ - ஓரிறைவனையே  நமஸ்கரிக்கிறோம்

``ஓரிறைவனையே துதிக்கிறோம் நாராயணனின் நாமத்தினாலே `` என்பதுவே அதன் உட்பொருள் ! நாரயணன் நாமத்தினாலே - அவர் மூலமாக கடவுளை துதிக்கவேண்டும் !!

நாரயணன் அவதாரமாக பூமிக்கு வந்த இறைதூதர்கள் நாமத்தாலும் கடவுளை துதிக்கலாம் !
அது திரேதா யுக ராமன் , துவாபர யுக கிருஷ்ணன் & கலியுக இயேசு மட்டுமே ! இவர்களுக்கு மட்டுமே நாமம் தரிக்கபட்டுள்ளது !

மனிதர்களில் இறைதுதராக உயர்த்தப்பட்டோர் , மாகான்கள் , ஞானிகள் ஆகியோர் மூலமாக பிரார்திக்கலாகாது !

வைணவத்தில் ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் என்று ஆழ்வார்களையும் வழிபடும் தவறான பழக்கம் வந்துவிட்டது ! ஆழ்வார்களை முன்னோடிகளாக எடுத்துக்கொண்டு வாழவேண்டுமே தவிற அவர்களை வழிபடுவது தவறு ! அது இணைவைப்பு என கடைசியாக வந்த வேதமான திருக்குரான் மூலமாக வந்த அறிவுரையாகும் !   
ஆனால் ராமர் ,கிருஷ்ணர் , இயேசு நாமத்தினால் கடவுளிடம் பிரார்திக்கலாம் !




சரி ! மேற்கொண்டு ராமாணுஜரிடம் வருவோம் ! மந்திர உபதேசம் பெற்றுக்கொண்ட அவர் என்ன செய்தார் ?

இந்த மந்திரத்தை அறிய அவர் 18 முறை ஸ்ரீரெங்கத்திற்கும் திருக்கோஷ்ட்டியூருக்கும் நடந்தார் ! ஆனால் குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு சத்தியம் வாங்கிக்கொண்டு சொல்லித்தந்தார்கள் ! ஸ்ரீபெரும்புதூரில் பிறந்து ஸ்ரீரெங்கம் வந்து கோவில் பணி செய்தாலும் பிறப்பால் பிராமணர் என்றாலும்கூட அவருக்கு மந்திரம் சொல்லித்தரவில்லை !

இந்த மகத்துவமான மந்திரத்தை ஜபித்து சகலமேன்மையையும் பெற்றுக்கொள்ள முடியும் என்றால் இதை உலகத்தாருக்கு மறைத்து பல ஆத்துமாக்கள் முன்னேற கதியை மறைப்பது எவ்வளவு மாயையானது !

கடவுளை மெய்யாகவே ஓரளவெனும் உணர்ந்த ஆத்மாக்கள் மாயைகளை உடைத்தெறிவர் ! கடவுளை உணர்ந்தால் சகல மனிதர்களும் கடவுளின் சொரூபம் என்பதால் கடவுளின் மீதுள்ள பக்தி - அன்பு மனிதர்களின் மீதும் அன்பாக மலறும் ! மனிதாபிமானம் பக்தியிலிருந்து விளையும் ஒன்று ! அவர்களையே கடவுள் எப்போதும் பயன்படுத்துவார் ! அது பல பிறவி ஞானமுதிர்ச்சியால் வருவது !

அவர்கள் காலாவதியான சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் உடைத்தெறிவர் ! ராமாணுஜரால் மட்டுமே பிறப்பு ஜாதியை கடந்து சகல மனுக்குலத்திற்கும் வைணவத்தை பரப்ப முடிந்தது !  இந்தியாவில் பட்டிதொட்டி எங்கும் அநேக ஆத்மாக்கள் அந்த உண்ணத நெறியால் மேன்மை அடைந்தார்கள் ! 

அந்த பக்தி - அன்புப்பெருக்கால் அவர்  நான்காவது தளத்திலுள்ள பரமபத நாதர் விமாணத்தில் ; நான் நின்று கொண்டிருக்கும் இடத்திலிருந்து சகலரையும் கூவி அழைத்தார் ! மனிதர்கள் உய்வடைய உச்சரிக்க வேண்டிய மந்திரத்தை இதோ கேளுங்கள் :
``ஓம் நமோ நாராயணாய ! ஓம் நமோ நாராயணாய ! `` மந்திரம் ரகசியம் என்பது உடைக்கபட்டது !

அந்த துவக்கம் இந்தியாவில் ஒரு பெரும் மாற்றத்தை உண்டாக்கியது ! ராமானுஜர் சாதித்தவை ஏராளம் ! அவர் பின்னாளில் ஸ்ரீபெரும்புதூரிலும் சகல ஜாதியாரையும் வைணவராக - வைணவ பாகவதம் செய்ய தகுதியுள்ளவர்களாக முத்திரி தரிப்பித்து பூசைக்கு தகுதியுள்ளவராக்கினார் !
பூசை குலத்தொழில் என்பதை மாற்றி பக்குவம் அடைந்த பக்தர்கள் அனைவரும் பூசை செய்யலாம் என்ற புரட்சியை உருவாக்கி சாதித்தும் காட்டினார் ! பட்டிதொட்டியெல்லாம் பெருமாள் கோவில்கள் உருவாக்கி அதில் அவரவர்களே திருப்பாவை திருவெம்பாவை நாலாயிரத்திவ்ய பிரபந்தம் பாடினார்கள் !

நான் பிறந்த குக்கிராமத்தில்கூட என் சிறு வயதில் முத்திரி வாங்கிய பெரியவர்கள் நிறைய இருந்தார்கள் ! எனது தாய்மாமன் ஊரிலும் நிறைய இருந்தார்கள் ! எனது தாயார் ; கவிஞர் காமாராசன் அவர்களது தாயார் இருவரும் ஒரே ஊரிலே பிறந்து ஒரே ஊரிலே வாழ்க்கைபட்டவர்கள் ! இருவரும் முத்திரி வாங்கியவர்களே !

எனது தாயார் ராமயணத்தை தாலாட்டாக பாடியே எங்களை தூங்க வைப்பார்கள் ! வயது முதிர்ந்த காலத்திலும் கூட புத்தகங்களை வாசித்துக்கொண்டே இருப்பார்கள் ! அவர்களுக்காகவே நான் பெரிய எழுத்து புத்தகங்களை மதுரையில் பழைய புத்தக கடைகளில் தேடிதேடி வாங்குவேன் ! அப்படித்தான் ஆன்மீகப்புத்தகங்கள் பல நானும் வாசித்தேன் ! அவர்கள் இறந்தபோது கண் வழியாகத்தான் ஆவி பிரிந்துவிட்டிருக்கும் என நம்புகிறேன் ! குளிப்பாட்டும்போது கண் திறந்து அவ்வளவு உயிர்ப்பாக - ஒளியோடு இருந்தது ! நல்ல ஆத்துமா ! பிறவாப்பெரு நிலைக்கு பக்குவப்பட்டவரே !

இப்படி அனேகர் உய்வடைய வைணவமார்க்கத்தை பரப்ப ராமாணுஜர் முன்னோடியாக இருந்தவர் ! எனக்கும் அவரது அனுக்கிரகம் உண்டெனவே கருதுகிறேன் ! தியானம் ; அத்வைதம் என அறிந்துகொள்ள தொடங்கிய காலகட்டத்தில் 24 வது வயதில் நானாக ஸ்ரீரெங்கம் சென்றேன் ! அங்கு ஒவ்வொன்றாக பார்த்துக்கொண்டே உடையவர் ராமாணுஜர் சன்னதிக்கு வந்தேன் ! அவர் பூமியின்மீதே ஜீவசமாதியில் இருப்பவர் என்பது எனக்கு தெரியும் ! உண்மையில் அவரை பார்க்கவே ஸ்ரீரெங்கம் சென்றது ! அப்போது அங்கு யாரும் இல்லை மதிய உணவுக்காக கோவில் நடைசாத்திக்கொண்டிருந்தார்கள் ! உடையவர் மூலஸ்தானத்தை சுற்றி குறுகலான நடை ஒன்று இருந்தது ! யாரும் இல்லாததால் அதில் நுழைந்து அவருக்கு பின்னால் அமர்ந்து தியானித்தேன் ! ஒரு பெரிய வெப்பம் என்னை அழுத்தி ஆழ்ந்த தியானத்திற்கு சென்று விட்டேன் ! கொஞ்ச நேரம் போனது போல தெரிந்தது ஆனால் மூன்று மணி நேரத்திற்கு மேலாகிவிட்டது திரும்ப ஆட்கள் வரவும் மெதுவாக எழுந்து வந்துவிட்டேன் ! ஆனால் என் உடலில் ஏறிய வெப்பம் நான்கு ஆண்டுகள் வரை என்னால் தாங்கமுடியாமல் இருந்தது ! வெயிலில் நிற்கவே முடியாது ! மார்கழி மாதத்தில் கூட அணலாய் என் உடல் தகிக்கும் ! ஆழமான தியானம் சித்திக்கும் ! லிட்டர் கணக்கில் தண்ணீர் குடித்து ஒரு வழியாக சமாளித்தேன் !!

அவரது அனுக்கிரகம் ; கடவுளின் அருள் நமக்கு வேண்டும் ! ஞானம் நிறைவு பெற வேண்டும் ! 

இன்றைய காலகட்டம் உலகம் முழுவதிலும் மார்க்க பேதங்கள் வளர்ந்து உண்மைகள் பல பொய்களால் மூடப்பட்டு விட்டன ! கலியின் மாயை உச்சத்தை அடைந்து விட்டது !

கல்கி வருவதற்கு காலம் கணிந்து விட்டது ! ஆனால் அவர் வருமுன் உலகில் சகல மதங்களையும் ஒருங்கினைத்து மக்கள் பலரை நல் வழிப்படுத்தும் வழிகட்டி - இமாம் - மனித இறைதூதர் ஒருவர் வருவார் என்பது அனைத்து மத வெளிப்பாடு ! அப்படிப்பட்ட நபராக மாற காந்தியடிகளுக்கு தகுதி இருந்தது ! அனால் காலம் கணியாததால் அவருக்கு அந்த வாய்ப்பு இல்லை !

அவரவர்கள் எங்கள் மதத்தில்தான் அவர் வருவார் என சொல்லிக்கொண்டுள்ளனர் ! ஆனால் அவர் இந்தியாவிலிருந்து மட்டுமே வரமுடியும் என்ற விவேகானந்தரின் முன்னறிவிப்பு நிறைவேறட்டும் என்ற வேண்டுதல் எனக்கு உண்டு ! இன்னும் மறைக்கபட்ட அநேக ஞான ரகசியங்களை கடவுள் வெளிப்படுத்த வேண்டும் ! அப்படிப்பட்ட பலர் உருவாக வேண்டும் என்ற வேண்டுதலுக்கே நான் திருக்கோஷ்ட்டியூர் விமாணத்திற்கு சென்றது !!     

கீதை 9:34 மனதை எப்போதும் என்னில் நிலைபெற செய்து ; எனது சீடனாகி ; எனது வழிகாட்டுதல்களை கைக்கொண்டு கடவுளை வழிபடுவாயாக ! அப்போது முற்றிலுமாக என்னுள் நீ உள்வாங்கப்பட்டு எனது உண்ணத நிலையை நிச்சயம் அடைவாய் !!

ஏக இறைவனின் அன்பும் அருளும் சாந்தியும் நம் அனைவரையும் நிரப்புவதாக ! இந்தியாவில் ஆன்ம உள்ளொளி பெருகுவதாக !!