Total Pageviews

Sunday, December 29, 2019

திருப்பாவை 18






உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்
நந்தகோபன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடை திறவாய் 

வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல் கால் குயிலினங்கள் கூவின காண் 

வந்தார் விரலி உன் மைத்துனன் பேர் பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப 

வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய். 


எதிரிகளை கண்டு ஓடாமல் 
மதயானை போல துரத்துகிற வலிமையான தோளை உடைய நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய்


கோதை அக்காவிடம் வார்த்தை விநயங்களை கற்றுக்கொள்ள வேண்டும்

கூட்டத்தோடு கூட்டமாக கிறிஸ்ணனின் முதல் மனைவியை எழுப்பலாம் அல்லவா

நக்கவிநயம் பிடிச்சுட்டாள்னா

ஆகவே தனி ஆவர்த்தனமாக கட்டம் கட்டி கவணமாக எழுப்புகிறாள்

முதலில் சுபத்ரையை கைக்குள் போட்டுக்கொள்ள ஐந்தாறு பாட்டு பாடினாள்

அவ விட்டுக்கொடுக்க மாட்டாள் அல்லவா

அதே போல நப்பின்னையை புகழ்கிறாள்

கந்தம் தூபத்தால் நறுமணம் கமழும் குழல்களை உடையவளே

கோழி விடாமல் கூவுகிறதே கேட்டாயோ

உன் வீட்டில் நீ அமைத்துள்ள மாதவிப்பந்தலில் பல வகையான விசேஸ மலர்கொடிகளில் வாசம் செய்யும் குயிலிணங்கள் கூவி இன்னிசை பரவுகிறதே

கந்தரலங்காரத்தில் இதழி என்றொரு வார்த்தை வரும் அது ஏதென்றால் நாக்கை மையமாக வைத்து வாழும் பாம்பை குறிக்கும்

அதுபோல எதுகை மோனையாக விரலி என்ற வார்த்தையை பெண்களை குறிக்க பயன்படுத்துகிறாள் அக்கா

சொற்சுவை என்பது இதுதான்

வந்தார் விரலி உன் மைத்துனன் பேர்பாட

உன் வீட்டுக்காரரைபுகழ்ந்துபாடி பரிசில்கள் பெற பெண்கள் வந்திருக்கிறார்கள்

செந்தாமரை போன்ற உன் கைகளில் வளையல்கள் சிறப்பாக ஒலிக்க வந்து உள் வாசலை திறந்து அவனை தரிசிக்க விடு





திருப்பாவை 17




                       

அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே 

எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்
அம்பரம் ஊட அறுத்து ஓங்கி உளகு அளந்த 

உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
செம் பொற் கழலடிச் செல்வா பலதேவா 

உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய். 


பூமிக்கு வானம் ஒரு பாதுகாப்பு வளையம்

பூமியில் வசிக்கும் பறக்கும் எல்லா உயிரிணங்கள் மீதும் காற்றழுத்தத்தால் நிலைத்து இயங்க செய்கிறது ; பிராணவாயுவை தருகிறது

ஒசோன் படலம் என்ற அடுக்கால் பிரபஞ்சத்திலிருந்து வரும் கதிர்வீச்சுகளை தடுத்துக்கொள்கிறது

சூரிய வெப்பத்தை கூட வடிகட்டித்தான் அணுப்புகிறது

பந்துபோல பூமியை சுற்றிய பாதுகாப்பு அடுக்காக வானம் இருப்பதால் அதை அம்பரம் என்கிறது தமிழ்

தமிழ் இலக்கியங்களில் அருளாளர்கள் அருளில் நிறைந்து பாடியவைகளில் பல விபரங்கள் விஞ்ஞானத்தை மெய்பிப்பதாக இருக்கும்

ஆனால் மனித மூளையால் நிதானித்து பூமி தட்டை ; அது பாய் போன்றது என பைபிளில் வசனத்தை சேர்த்துவிட்டு இதுவும் இறைவார்த்தை என கிறிஸ்தவர்கள் நம்பித்திரிந்தார்கள்


பைபிளில் இறைவார்த்தையோடு மனித கலப்புகளும் உள்ளன என பரந்தமனதோடு அவர்கள் ஒத்துக்கொள்ளவேண்டும்

அப்படி இல்லாமல் பூமி உருண்டை என கண்டுபிடித்த விஞ்ஞாணி கலிலியோவின் கண்ணை கெடுத்தார்கள்

தங்களை அன்பின் மதம் என்றும் சொல்லிக்கொண்டார்கள்

மற்ற மதங்களெல்லாம் கடவுளிடத்திலிருந்து வராதவை என்று அவைகளை ஒழிப்பது கடவுளுக்கு செய்யும் தொண்டு என கிறிஸ்தவர்களும் இசுலாமியரும் நினைப்பதை விட்டுவிட்டால் பூமியில் குழப்பங்கள் வராது

கோதை அக்கா கதவை திறந்து அரண்மனைக்குள் வந்துவிட்டாள்

இப்போது மாமனை மாமியாரை கண்ணனை பலராமனை எழுப்புகிறாள்

அவள் உள்ளத்திலிருந்து வரும் மரியாதை ஒவ்வோரு மருமகளுக்கும் முன்னுதாரணம்

பெரியோர்களை மதிப்பது மருமகளின் கடமை

மாமனை பார்த்து சொல்கிறாள்

குடும்பத்தின் அம்பரமே ; தண்ணீரே ; சோறே ; எம்பெருமானே ; அறம் செய்கிறவரே

இல்லறம் அல்லாது நல்லறம் இல்லை


என் மாமன் தர்மவான் ; நீதிதவறாதவன் ; அறம் செய்து குடும்பத்தையும் சமூகத்தையும் காக்கிறவன்

குடிப்பெருமை பெண்களுக்கு தகுதியானதே


ஆயர்கள் கொம்பு ஒன்று வைத்திருப்பார்கள்

கிடையை ஓட்டுவது ; கிளைகளை ஒடித்துவிடுவது ; எதிரிகளை தாக்குவது என பலனளிக்கும்

ஆகவே குலத்தை கொம்பனார் என்கிறாள்

ஆயர்குலத்திற்கே நீ குத்துவிளக்கு ; கொழுந்து என்கிறாள் மாமியாரைப்பார்த்து

மாமனை கூட எழுந்திரு என்பவள் மாமியிடம் ஞாபகப்படுத்துகிறேன் என பவ்வியம் காட்டுகிறாள்

அதே அம்பரத்தை தனது ஒரே காலால் ஊடறுத்தவனே

மேய்ப்பர்களின் தலைவனே

மேய்தல் என்றால் விலங்குகள் உணவு எடுப்பது

ஆகவே அவர்கள் மேய்ப்பர்

அழகுதமிழால் உம்பர் ; ஊட்டுகிறவன் என்கிறாள்

கிறிஸ்ணா படியளக்கும் நேரம் வந்துவிட்டது ; எழுந்திரு


அடுத்து பலராமன் ;அண்ணி என்கிற உரிமையோடு கொஞ்சவும் செய்கிறாள்

செம்பு போன்ற பாதங்களை உடைய செல்லமே பலதேவா

படியளக்கிறவனோடு நீயும் உறங்காதே ; அவனையும் எழுப்பிவிடு

குடும்ப அக்கறை ; பாராம்பர்யம் ; பெருமை எதையும் கோதை அக்கா விட்டுக்கொடுக்கவில்லை

குடும்ப குத்துவிளக்கு அவள்







Saturday, December 28, 2019

திருப்பாவை 16








நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய
கோயில் காப்பானே. கொடி தோன்றும் தோரண
வாயில் காப்பானே. மணிக் கதவம் தாள் திறவாய் ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான் தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா. நீ நேய நிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய் 


கோதை அக்கா ரெம்ப அட்வான்ஸ் திங்கிங்க் உள்ளவள்


சுபத்ரை தயாராகி வரும்போதே வாயில் காப்போனையும் எழுப்புகிறாள்


பெரிய பெரிய தலைவர்கள் மேடையில் உட்கார்ந்திருக்கும் போதும் பேசும் போதும் அவர்கள் பின்னால் AK 47 BK 47  உடன் நின்று சுற்றும் முற்றும் கண்ணாலேயே அளவெடுத்துக்கொண்டிருக்கும் பூனைப்படை யானைப்படையை பார்த்திருப்பீர்களே

அவர்தான் நாயகனாக நிற்கும் நபர்

மெய்க்காப்பாளர்கள் மிக மிக முக்கியத்துவம் உள்ளவர்கள் ; அவர்கள் அனுமதியில்லாமல் தலைவர்களால் ஒன்றும் செய்ய முடியாது

அக்கா விவரமானவள் என்பதால் நாயகனாய் நிற்கும் நந்தகோபருடைய வாயில் காப்போனே என புகழ்கிறாள்

விதவிதமாக கொடிகளையும் தோரணங்களையும் வைத்து அழகுபடுத்தியவன் நீயல்லவா

ஆயர் சிறுமியர்களான நாங்கள் உமது பாதுகாப்பில் அல்லவோ மகிழ்ச்சியாக உள்ளோம்

மணிக்கதவம் திறப்பாயாக

உன் எஜமாணி சுபத்ரை எங்களை அழைக்க வந்துகொண்டிருக்கிறாள் பார்த்தாயா

மாயன் மணிவண்ணனை நாங்கள் துயில் எழுப்புமபடியாக ; பாடும்படியாக எங்களுக்கு உள்ளுணர்வு கொடுத்துள்ளான் .

மார்கழி நோன்பு என்ற புது சம்பிரதாயத்தை நான் அவனது உத்தரவு இல்லாமல் ஆரம்பிக்கவில்லை

எப்ப பேசுன கேட்ட என்று ஏதாவது குறுக்கு மறுக்க பேசிராத தாயீ .

திருப்பாவை 15




எல்லே. இளம் கிளியே இன்னம் உறங்குதியோ
சில் என்று அழையேன் மின் நங்கையீர் போதருகின்றேன்
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும் வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்


ஆயிரம் இருந்தாலும் சுபத்ரை கோதை அக்காவின் மைத்துனி அல்லவா ; கதவுக்கு வெளியே இருந்துகொண்டே அவளை பாராட்டியும் கண்டித்தும் ஏலே வாலே என்று அவளோடு பேசிக்கொண்டேதான் இருக்கிறாள்


குளித்து தயாராகிவிட்டாள் சுபத்ரை ; ஆனால் கொஞ்சம் லேட்டு அவ்வளவுதான்


பலர் போய் விட்டனர் ; ஆனாலும் நான் உனக்காகத்தான் காத்திருக்கிறேன் ; உன்னை சொட்டி பேச மாட்டேன்


உன் அண்ணனை சேவிக்க உனக்கும் எனக்கும் தானே முன்னுரிமை

வலிய அரக்கர்களை கொன்றவன் அல்லவா

அவனுக்கு மாறுபாடு உடையவர்களை அடக்கவும் வல்லவ்ன் அல்லவா

ஆனாலும் உனக்கும் எனக்கும் அவனிடத்து தயவு உண்டு என்கிறாள் கோதை அக்கா

திருப்பாவை 14





         உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்

செங்கழுனீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண் செங்கற் பொடி சூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார் எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய் சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.


அதிகாலையில் சமையல்காரர்கள் தங்கள் வேலையை ஆரம்பிக்கும் அளவு பெருங்கூட்டம் நந்தகோபருடைய அரண்மனை .


சமயல்கட்டிலிருந்து கழுநீர் வழிந்தோடி உனது அரண்மனையின் புழக்கடை குளத்தில் போய் கலக்கிறது


அந்த  சத்தான நீரை குடித்து (டார்ச் தயாரிக்க வேண்டிய சூழ்நிலை இல்லாததால்) சூரிய ஒளி அவசியமில்லை என்ற நிலைமைக்கு ஆம்பல் செடிகள் போய் விடுகின்றன


அதனால் இலைகளை குவித்து அவைகள் ஓய்வுக்கு போய்விடுகின்றன என்கிறாள் கோதை அக்கா


அருளில் நிரம்பி பாடப்படுகிற பாடல்களில் தானாக உண்மைகள் - அறிவியல் வந்து குவியும்


செடி ; கொடி ; மரங்களுக்கு வாய் எதுவென்றால் அவைகளின் இலைகளே ஆகும்


அந்த இலைகளில் உள்ள பச்சயம்  என்ற வேதிப்பொருள் சூரிய சக்தியை ஈர்த்து வேர்கள் மூலமாக உறிஞ்சிய தண்ணீர் மற்றும் பூமியின் சத்துக்களை டார்ச் என்ற சாத்தாக மாற்றிக்கொள்கிறது

காற்றிலுள்ள கரியமில வாய்வுவை பிராண வாயுவாக மாற்றி வெளி விடுகிறது 


மரங்கள் மேகங்களை ஈர்த்து மழை பெய்யவைக்கும் ; எனவே மரங்களை வெட்டாதீர்கள் ; மரங்களை நாடுங்கள் ; மரம் வளர்ப்போம் என்றெல்லாம் விளிப்புணர்வு உண்டாக்குகிறார்களே


மழை மட்டுமல்ல ; உயிரிணங்கள் சுவாசிக்க அவசியமான பிராண வாயுவை பூமியில் அதிகரிக்கிற வேலையையும் மரங்கள் ; செடி ; கொடிகள் செய்கின்றன


பிராணவாயுவை எப்போது வெளியிடும் என்றால் உணவு தாயாரிக்காமல் ஓய்வு எடுக்கும் நேரத்தில் பிராணவாயுவை வெளியிடும்


சுபத்ரையின்  சமயல்கட்டிலிருந்து சத்தான நீர் வெளியேறுவதால் வாவியின் ஆம்பல்கள் ஓய்வுக்கு போய் பிராண வாய்வை வெளியேற்றி குடும்பத்தாருக்கு தெம்பை கொடுக்கின்றனவாம்


அதிகாலையில் வாக்கிங் போக சொல்லும் காரணம் பூமியில் பிராணவாய்வு அதிகமாக இருக்கும் என்பதால் ஆகும்


மார்கழி நீராடுதலுக்கும் இக்காரணம் உண்டு


விரதம் ; தூய்மையான பிராணவாய்வு ; இறை பேரருள் நிரம்பி மனிதர்கள் தெம்பாகி விடுவார்கள்

அதுமட்டுமல்ல செங்கல் பொடியை பஸ்பமாக்கி அக்காலத்தில் எல்லோரும் பல் துலக்க மாட்டார்கள் .

வசதி ; வாய்ப்பு நிரம்பியவர்களே அப்படிபட்ட பொடிகளை பயன்படுத்தி பல்துலக்கி பளிச்சென்று வைத்திருப்பார்கள்

இந்த பாடல் ஏதென்றால் சுபத்ரை படுக்கையை விட்டு இறங்கி குளியல் அறைக்கு போய் விட்டாள் ; வெண்மையான பல்லை உடையவளாக இருக்க செங்கல் பொடி பஸ்பத்தை பயன்படுத்து என ஆலோசனை சொல்கிறாள்.

மைத்துனி ஆயிற்றே முத்துப்பல் அழகி என புகழ்கிறாள்

அடுத்து வாயழகை பற்றி பாட வந்து கொஞ்சம் உணச்சி வசப்பட்டு வாயாடி என கண்டித்து விட்டாள்

மார்கழி நீராட எங்களை எழுப்புகிறேன் ; கோவிலுக்கு போய் மங்களம் பாடுவோம் என வாய்கூசாது சொன்னீயே தாயி

உன்னைய உடுக்கடிச்சு அல்லவா எழுப்பிக்கொண்டிருக்கிறேன்

சரி சரி விரைந்து வா

சங்கோடு சக்கரம் தாங்கும் தடக்கையன் ; தாமரைக்கண்ணன் உன் அண்ணனை பாடுவோம் வா

Saturday, December 21, 2019

திருப்பாவை 4





மழைக்கு என்று ஒரு தேவர் இருக்கிறார் ; அவர் பெயர் வருணன்

அப்படியிருக்க மழையை கண்ணன் என்றே உருவகப்படுத்துகிறாளே கோதை அக்கா ?

இந்த கலிக்காலத்தில் ஒழுங்காக மழை பெய்யாது என்பதால் ஆழி மழையாகிய கண்ணா ; கரவேல் ; ஏமாத்தாதே என்று சொல்கிறாள்

விஞ்ஞானம் கடல் நீர் ஆவியாகி மேகமாக மாறுகிறது என்கிறது

அப்படியானால் கடந்த வருடங்களில் வெயில் கொளுத்தோ கொளுத்தோ என கொளுத்தியும் மேகம் உருவாகவில்லை

கோதை அக்கா சொல்கிறாள் : கிறிஷ்ணரின் கரம் கடல் தண்ணீரை முகர்ந்து வானத்தில் ஏற்றி விடுகிறதாம்

யுகங்களை மாற்றும் அதிகாரம் பெற்றவர்கள் நர நாரணர்கள் ; அதில் முதல்வன் நாராயணன் ; ஊழி முதல்வன்

அவன் நிறம் போல மேகம் கருத்து அவன் கையில் உள்ள சக்ராயுதம் போல மின்னி சங்கு போல அதிர்ந்து இடி இடித்து ; அவனது வில்லாகிய சாரங்கத்திலிருந்து புறப்படும் அம்புகள் போல மழை பெய்கிறதாம்

வருணன் என்றொரு மழைத்தேவர் இருப்பதையே மறைத்து ; எல்லாமே நாராயணன் என்கிறாளே அக்கா

இதன் செய்தி என்னவென்றால் ; அது வைணவத்தில் உள்ள ஏக வழிபாட்டு கொள்கை

ஏக இறைவழிபாடு ; ஏக இறைவழிபாடு என்று இசுலாமியர் ; சன்மார்க்கிக்களும் சொல்கிறார்களே ; வைணவமும் ஏக வழிபாட்டு கொள்கையில் உள்ளதுதான்


சகல தேவர்களும் நாராயணனிலிருந்தே வியாகப்பட்டுள்ளனர்

அவர்கள் தனித்த பிரகிரதிகளாக இருந்தாலும் நாராயணனுக்குள் அடக்கம்

ஆகவே நாராயணனை வழிபட்டாலே எல்லா தேவர்களையும் வழிபட்டதாகி விடுகிறது

தேவர்களுக்கென்று தனி வழிபாடு அவசியமில்லை

ஆதி காலங்களில் இந்திரவழிபாடும் வருண வழிபாடும் தனியாக செய்யப்பட்டும் வந்தன

வருணனும் தேவர்களின் தலைவரான இந்திரனும் இரட்டையர்கள்

ஆகவேதான் மழைக்கு என்று வருண ஜெபமும் ; இந்திர வழிபாடும் நடத்தப்பட்டதை சிலப்பதிகாரத்தில் காணலாம்

இந்திர வழிபாடு ஸ்ரீகிறிஷ்ணரின் காலத்தில்தான் முதல் முதலில் நிறுத்தப்பட்டது

பாகவதத்தில் இந்நிகழ்வு சொல்லப்ப
ட்டுள்ளது

நாராயணனே முழுமையாக அவதாரமாக வந்தது கிறிஷ்ணாவாதாரம்

ஆனால் அந்த விபரம் இந்திரன் அறியவில்லை

ஆகவே கிறிஷ்ணரை சோதிக்க விரும்பி அவர் மாடு மேய்த்தபோது பெருமழை பெய்வித்தனர் இந்திரனும் வருணனும்

கிறிஸ்ணரோ அங்கிருந்த மலையையே பெயர்த்து ஒரு விரலில் குடை பிடித்தார்

அதில் ஒதுங்கி பசுக்களும் மாடுகளும் ஆயர்களும் கழித்தனர்

தங்கள் பலம் செயலற்றுபோன பிறகே தாங்கள் யார் என வேண்டி நின்று நாராயணன் என அறிந்தனர்

அன்றுமுதல் இந்திரவிழா நிறுத்தப்படுவதாக கிறிஸ்ணர் அறிவித்தார்

தேவர்களின் தலைவரான இந்திரனுக்கோ ; படைப்பு தொழிலை செய்யும் பிரம்மனுக்கோ தனி கோவில் ; மரியாதைகள் வைணவத்தில் கிடையாது

ஏனென்றால் அதிதேவரான நாராயணனுக்குள் தேவர்கள் அனைவரும் அடக்கம்

பசுக்களை காத்ததால் மட்டுமே அல்ல ; இந்திரனுக்கும் வருணனுக்கும் வழிபாட்டை நிறுத்தியவர் கோவர்த்தன் என்பதை உணரவேண்டும்

கோ என்றால் பசு என்பது மட்டுமல்ல கோ என்றால் அரசனையும் குறிக்கும்

தேவர்களின் அதிபதி ; அதிதேவர் நாராயணன் ஒருவரே

தேவர்கள் மட்டுமல்ல ; அசுரர்களின் அதிபதி கருப்பசாமியும் அவரது அம்ஸமே

கருப்பசாமியை சைவர்கள் ; சக்தி வழிபாட்டுக்காரர்கள் கொண்டாடுவதால் அவரை சிவ அம்சம் என தவறாக கருதிக்கொள்கிறார்கள்

உண்மையில் கருப்பசாமி நாராயண அம்சம்

நல்ல அண்ணன் ; கெட்ட அண்ணன் என நாராயணிக்கு இரண்டு அண்ணன்மார்

சிவனை அங்கீகரித்த அண்ணன் திருமால் என்றால் சிவனை அங்கீகரிக்காத அண்ணன் கருப்பசாமி

திருமணத்திற்கு முந்திய நிலையில் அண்ணையை காக்கிறவர் என்ற போர்வையில் கண்ணை திரட்டிக்கொண்டு கத்தியை தூக்கிக்கொண்டு நிற்பார் கருப்பசாமி

கண்ணிமார் கருப்பசாமி கோவிலாகத்தான் கிராம கோவில்கள் இருக்கும்

அது ஏதென்றால் தேவர்களும் அசுரர்களும் நாராயணனிலிருந்தே வந்துள்ளனர்

தேவர்கள் அசுரர்களை அடையாளம் காண வேண்டும் என்றால் நான் சொல்லும் எளிய சூத்திரம் சிவனை அங்கீகரித்தால் தேவர்கள் ; எதிர்த்தால் அசுரர்கள்

ஆக்வேதான் நீதிமான்களும் ; பக்திமான்களும் ஆன வைணவர்கள் ; சன்மார்க்கிக்கள் ; இசுலாமியர் பலரும் சிவனை அங்கீகரிக்க தெரியாததால் இன்னும் அசுரர்கள் கணக்கிலேயே இருக்கிறீர்கள் என நான் சொல்வதுண்டு

இந்த ரெண்டும்கெட்டான் நபர்களுக்கு வேதம் தைத்ரியர்கள் என்ற பெயரே வைத்திருக்கிறது

பிரகலாதனை வேதம் தைத்ரியன் என்று சொல்லும்

சிவனை அங்கீகரிக்க தெரியாத பிரகலாதனை காக்க நரசிம்ஹ அவதாரம் வந்தது ; ஆனால் சாரபேஸ்வரராக சிவன் வந்து அவரை வாதித்தார் என்பார்கள்

ராமரையோ ; கிறிஷ்னரையோ ; இயேசுவையோ வாதிக்கும்படியாக சிவன் வரவில்லை

காரணம் அவர்கள் மனித குமாரர்களாக பூமியில் வந்தார்கள்

மனிதர்கள் அனைவரும் சிவனின் அம்ஸமானவர்கள்

தசரத குமாரன் ; நந்த குமாரன் என்றே அடையாளப்படுத்தப்பட்டனர்

இயேசுவை மற்றவர்கள் தேவகுமாரன் என்றால் அவர் பைபிள் முழுக்க தன்னைப்பற்றி சொல்லும்போது மனுஷகுமாரான் என்றே சொல்லியிருப்பார்

சகல நாமங்களை காட்டிலும் ராமநாமமே சிறந்தது என சிவனாரே சொல்லக்காரணம் நாராயணன் மனிதனாக அவதரித்து வரும்போது அங்கே சிவ நாராயண கலப்பு வந்துவிடுகிறது

மோஹினி அவதாரம் எடுத்த நாராயணனுக்கும் சிவனுக்கும் அய்யப்பன் பிறந்தார் என்ற கதையின் சாரம் இதுவே

நாராயணனும் சிவனும் இணைந்தால் அங்கு முழு வெற்றி ; அருவமான இறைவனின் அதாவ்து அல்லாஹ்வின் முழுமை அங்கு வந்துவிடும்


குரானில் காப்ரியேல் என்ற நாராயணனும் ; மீகாயேல் என்ற சிவனும் எப்போதும் இரட்டையர்களாகவே செயல்படுவது குறிக்கப்பட்டுள்ளது

இந்துமதம் ஏன் இறைவனின் மதம் என நான் இசுலாமியர்க்கும் கிறிஸ்தவர்களுக்கும் சொல்லக்காரணம் அல்லாஹ் வின் அதிதேவர்களான காப்ரியேல் என்ற நாராயணனையும் ; மீகாயேல் என்ற சிவனையும் வழிபடும் மதம் என்பதாலேயே

சைவம் சிவனை மட்டுமே வழிபடுகிறது ; வைணவம் நாராயணனை மட்டுமே வழிபடுகிறது ; இசுலாம் கிறிஸ்தவம் அல்லாஹ்வை மட்டுமே வழிபடுகிறது ; இவை அனைத்தும் எப்படி இறை மார்க்கமாகும் என்பதற்கு விளக்கம் குரானில் உள்ளது

2:285. இறை தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; அவ்வாறே முஃமின்களும் நம்புகின்றனர்; இவர்கள் யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள்: “நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை

4:136. முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும், அவன் தூதர் மீது அவன் இறக்கிய இவ் வேதத்தின் மீதும், இதற்கு முன்னர் இறக்கிய வேதங்களின் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; எவர் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும், இறுதி நாளையும் நம்பாமல் நிராகரிக்கிறாரோ அவர் வழிகேட்டில் வெகு தூரம் சென்றுவிட்டார்.

முகமதுநபி மூலமாக வந்த குரானை மட்டுமல்ல ; அதற்கு முன்பு மலக்குகள் (தேவர்கள்) மூலமாக வந்த வேதங்களையும் நம்பவேண்டும் என்பதே குரானின் கட்டளை

இறைதூதர்கள் யாருமே வராத காட்டுமிராண்டிகளான அரபியர்களையும் ரட்சிக்கும்படியாக குரான் வந்ததால் ; அரபியர்களுக்கு மலக்குகள் - தேவர்கள் யார் என்றே தெரியாததால் அல்லாஹ்வைத்தவிர யாரையும் வழிபடாதே என தவறுதலாக புரிந்துகொண்டனர்

ஆனால் குரான் சொல்லுகிறது அல்லாஹ்வை மட்டுமல்ல அவரது மலக்குகளையும் வழிபடவேண்டும்

ஆனால் வழிபாடு இறைவனுக்கு மட்டும்தானே என இசுலாத் மட்டுமல்ல ; சன்மார்க்கிக்கள் கூட சொல்கிறார்களே என்றால் :

இறைவனையும் தேவர்களையும் ஒருவரை ஒருவர் விட்டுவிடாமல் வழிபட வேண்டும் என்று வரப்போகிற சமரச வேதம் வழிகாட்டுகிறது

யாரையெல்லாம் நீங்கள் வழிபடவேண்டும் என்று விரும்புகிறீர்களோ அவர்கள் நாமத்தால் இறைவா - அல்லாஹ் - அருட்பெருஞ்சோதி என்று வழிபட்டால் அது முழுமையானது

எந்த வேதங்களுக்கும் விரோதமானதல்ல


காலம் கலிகாலம் ஆனதால் இந்த உண்மையை இதுகாறும் இறைவன் வெளிப்படுத்தாது நீங்கள் மண்டைகளை உடைத்துக்கொள்ள இறைவன் விட்டிருந்தார்

சத்திய யுகம் நெருங்கியதால் ; வரப்போகிற சமரச வேதத்தின் முன் அறிவிப்பாளன் என்ற முறையில் அடியேன் அறிவிக்கிறேன்

நாராயணன் நாமத்தாலும் சிவனின் நாமத்தாலும் அல்லாஹ் உங்கள் அறிவுக்கண்களை திறந்தருளட்டும்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி







Monday, December 16, 2019

திருப்பாவை 1






சீதாபிராட்டியாரே கோதை அக்காவாக பூமாதேவியாரால் வெளிப்படுத்தப்பட்டார்

ஏனெனில் சீதை நோவுகள் தாளாமலேயே தன்னை ஏற்றுக்கொள்ளும்படியாக மன்றாடி பூமி பிளந்து அவரை ஏற்றுக்கொண்டது

மனிதகுலம் பூமியில் செய்துவரும் அக்கிரம்ங்களுக்கு படைப்புகள் அனைத்தையும் தனக்குள்ளிருந்து வெளிப்படுத்தும் பரமாத்மாவும் பொறுப்பேற்றாக வேண்டும்

சகலமும் அவருக்குள்ளிருந்து வெளிப்பட்டு அவருக்குள்ளேயே கிரியை செய்தும் வருகின்றன

1. ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.

2. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.

3. சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.--யோவான் 1

2:117. அல்லாஹ் வானங்களையும், பூமியையும் இல்லாமையிலிருந்தே உண்டாக்கினான்; அதனிடம் “குன்” - ஆகுக- என்று கூறினால், உடனே அது ஆகிவிடுகிறது

36:82. எப்பொருளையேனும் அவன் படைக்க நாடினால், அதற்கு அவன் கட்டளையிடுவதெல்லாம்; “குன்” (ஆய்விடுக) என்று கூறுவதுதான்; உடனே அது ஆகிவிடுகிறது

ஒன்றுமே இல்லாத வெட்ட வெளியே சகல பிரபஞ்சத்திற்கும் வெளியே இருக்கிறது என விஞ்ஞானத்தால் அறிகிறோம்

உலகில் வந்த சகல வேதங்களும் வெட்டவெளியே ஆதி இறைவன் என அறிவிக்கின்றன

சிவவாக்கியர் 534:

கட்டையால் செய் தேவரும் கல்லினால் செய் தேவரும்
மட்டையால்செய் தேவரும் மஞ்சளால்செய் தேவரும்
சட்டையால்செய் தேவரும் சாணியால்செய் தேவரும்
வெட்ட வெளிய தன்றிமற்று வேறுதெய்வம் இல்லையே.

சிவபோகசாரம் ; உபநிஷத்துககள் இன்னபிறவைகளிலும் உள்ளன

சிவாலயங்களில் லிங்கம் என்பதே அருவமும் உருவமும் இணைந்த ஒன்றாகும்

அருஉருவம் என்பார்கள்

சிவலிங்கம் என்றால் சிவனின் நாமத்தால் அருவத்தை வழிபடுகிறேன் என்பதே அர்த்தம்

அருவமான இறைவன் உருவமான படைப்புகளை படைத்த போது அவர் செய்ததெல்லாம் உண்டாகட்டும் என்று பேசினார்

அருவத்தில் இருந்து முதலில் வந்தது சத்தம் ; பிரணவம்

அதாவது வார்த்தை ; அந்த வார்த்தையே நாராயணன் ; படைப்புகளாக விரிந்தவன் ; பரமாத்மா ; பிரபஞ்சம்

இந்த பிரபஞ்சத்தில் ஜடமும் இயங்கும் பொருட்களும் கலந்தே இருக்கின்றன என்பதால் நாராயணனை அறிதுயில் கொள்ளுகிறவனாக ; பள்ளிகொண்டவனாக உருவம் சமைத்தார்கள்

ஆகவேதான் சகல பாவங்களுக்கும் தானும் பொறுப்பேற்று ஒவ்வொரு அவதாரத்திலும் துன்பத்தை சுமந்தே தீர்த்தும் வருகிறார்

ராமாவதாரத்தில் ஆயிரம் ஆண்டுகள் பூமியில் அவர் தர்மத்தை நிலைநிறுத்தினார்

அவரது சொந்த வாழ்க்கையோ இன்பம் என்பது அறவே இல்லை

மனைவியை மக்களை பிரிந்தே வாழ்ந்தார்

சீதை துன்பத்தை தவிர எதையுமே அனுபவித்ததில்லை

ஆனாலும் அவள் மனித பிறவி எடுத்த நிலையிலிருந்து மீண்டும் தேவராக மாற ஸ்ரீவில்லி யில்  கோதையாக தன்னை வெளிப்படுத்தி தமிழால் பாடி மகிழ்ந்து ஸ்ரீரெங்கத்தில் ஒளிசரீரம் பெற்றாள்

கோதை அக்கா தமிழுக்கு கிடைத்த வரம்

வைணவத்தில் மனிதனாக பிறந்த யாருக்கும் கருவறையில் இடம் இல்லை

ஆனால் வைணவம் கோதையே சீதை என்றறிந்து கோவிலில் வைத்தார்கள்

அந்த முதல் கோவில் மதுரை கூடல் அழகிய பெருமாள் கோவிலில் உள்ளது

ஸ்ரீவில்லியில் இருந்து ஸ்ரீரெங்கம் செல்ல பல்லக்கு பரிவாரம் தந்தவன் பாண்டிய மன்னன்

அழகர் மலையில் ஒரு மண்டலம் தங்கி தன் கைப்பட அழகனுக்கு சேவை செய்தாள் கோதை அக்கா

மதுரைக்கு அருகிலுள்ள சோழவந்தான் என்ற ஊர் வைகை என்ற வேகவதி கரையில் உள்ளது . அங்கு உள்ள தெய்வங்களுக்கு ஜனகை ஜனகை என முன் இணைப்பு இருக்கும்

ஜனகை பெருமாள் ; ஜனகை மாரியம்மன்  என இருக்கும்

இரண்டாம் யுகத்தில் மிதிலை என்பது வேகவதி கரையில் இருந்த சோழவந்தனாகத்தான் இருந்தது ; சீதையை மனம் முடிக்க சோழ வம்ஸத்து ராமன் வந்ததால் இவ்வூரின் பெயர் சோழவந்தான் என ஆனது

இலங்கையில் படகில் வைத்து கடலில் விடப்பட்ட பேழை கங்கைக்கு செல்ல வாய்ப்பே இல்லை

ஆனால் அருகில் கடலில் கலக்கும் வைகை வழியாக சோழவந்தானில் கரையேறவே வாய்ப்பு உள்ளது

ஆகவேதான் அவள் தமிழச்சியாகவே வந்தாள்

தமிழ் வார்த்தைகள் அவளிடம் கொஞ்சி விளையாடுவதை திருப்பாவை முழுவதும் காணலாம்

துன்பம் தீர நெய்யுண்ணோம் பாலுண்ணோம் மையிட்டு எழுதோம் என்ற விரதத்தை மார்கழியில் கடைபிடிக்க பெண்களுக்கு வழிகாட்டினாள்

அவளுக்கு தெரிந்த இன்னொரு ரகசியத்தை இப்பாடலில் வெளிப்படுத்தியுமுள்ளாள்

ராமரை காட்டுக்கு அனுப்பியதால் கைகேயியை பலரும் அறுவறுத்தார்கள் ; ஆனால் அன்பால் வளர்த்தவளை ராமன் மதிக்காமலில்லை

ஆகவேதான் கிறிஷ்ணாவதாரத்தில் தேவகியின் வயிற்றில் பிறந்தாலும் வளர்ப்பு தாயான யசோதைக்குத்தான் மரியாதை

என்ன தவம் செய்தனை யசோதா ; எங்கும் நிறைந்த பர பிரம்மம் அம்மா என்றழைக்க

ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் என்கிறாள் கோதை அக்கா

ஓம் நமோ நாராயணாய

நாராயணனாக வெளிப்பட்ட அந்த ஓர் இறைவனையே நமஸ்கரிக்கிறோம்