Total Pageviews

Monday, December 19, 2011

தவ்ராத்--யூதர்களின் வேதம் எழுதப்பட்ட விதம்!!!

ஆதியாகமம், யாத்திராகமம்,எண்ணாகமம்,லேவியராகமம்,உபாகமம் --அய்ந்தும் இறைதூதர் மூசாவால் கைப்பட எழுதப்பட்டது!அவர் கடவுளிடம் பேசி கேட்டதை எழுதினார்!
4:164.  இன்னும் மூஸாவுடன் அல்லாஹ் பேசியும் இருக்கின்றான்

இதன் ஒரு பிரதி ஜெருசலோம் கோவிலில் உடன்படிக்கை பெட்டியில் வைத்து பாதுகாக்கபட்டது! இதன் பல பிரதிகள் ஒவ்வொரு `சினகாக்` ஜெபகூடங்களிலும் தோல்சுருளாக வைக்க பட்டு யூதர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையிலும் அதன் ஒரு பக்கத்தை வாசித்தே பிரார்த்தனை செய்வர்!--இது கோவில் தொடர்பான பணியை பரம்பரையாய் செய்யும் லேவி கோத்திரத்தாரின் பிரதான பணி ஆகும்!
ராஜாக்களால் வரலாறு பதிவு செய்யப்பட்டது!யோசுவா,நியாயாதிபதிகள்,ரூத் ,    1 சாமுவேல், 2 சாமுவேல் ,   1 இராஜாக்கள் ,  2 இராஜாக்கள் ,    1 நாளாகமம் ,2 நாளாகமம் எஸ்றா , நெகேமியா, எஸ்தர் , யோபு ---இவைகளும் எழுதப்பட்டு பாதுகாக்க பட்டன இவைகளில் யூதர்களின் வரலாறு பிரதானமாய் உள்ளது---பக்தி தொடர்பான சில விசயங்கள் உள்ளன!

சங்கீதம்          //தாவிது(அ)தாவூது  ராஜாவின் ஜபூர்வேதம் இதை எழுத்தாகவும் இசையாகவும் மாற்றி கோவிலில் பாடும் படி வைத்திருந்தார்! 

நீதிமொழிகள்  ,உன்னதப்பாட்டு ,  பிரசங்கி                      //இறைதூதர் சல்மோன்  எழுதியவை

ஏசாயா எரேமியா  ,புலம்பல்,  எசேக்கியேல் , தானியேல் ,ஓசியா, யோவேல் ,ஆமோஸ் , ஒபதியா, யோனா,மீகா,                        நாகூம் ,ஆபகூக்,செப்பனியா,ஆகாய் ,சகரியா, மல்கியா --இவர்களெல்லாம் இறைதூதர்கள்!முஹமது நபிக்கு வேதம் இறங்கியதைப்போன்றே இவர்களுக்கும் இறங்கும் போது சீடர்கள் எழுதிய வேதங்கள்! இந்த வேதங்களில் கூறப்பட்ட           
தீர்க்கதரிசணங்கள் அணைத்தும்   பின்னாளில்அப்படியே  நடந்தது முக்கியமாகஇயேசுவின் வருகையை பற்றி முன்னறிவித்தன யூதர்களின் பலவகையான தவறுகள் கண்டிக்க பட்டு திருத்தப்பட்டன!---இவையனைத்தும் தோல் சுருள் ஏடுகளாக ஒவ்வொரு ஜெப கூடங்களிலும் இன்றளவும் பாதுகாக்க படுகின்றன!வரலாறு தவிற அணைத்தும் கடவுளின் வார்த்தை என்பதில் சந்தேகமில்லை!இவைகளை படித்தால் இது குரானில் மிக அழகிய முறையில் செழுமை படுத்தப்பட்டு கடவுளால் பொழிப்புரை செய்யப்பட்டுள்ளது என்பதை யாரும் மறுக்கவே முடியது! 


2:136. (முஃமின்களே!)“நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம்; அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்” என்று கூறுவீர்களாக