Total Pageviews

Saturday, December 22, 2018

தனித்தலைமைப்பதி










சாத்திரங்கள் எல்லாம் தடுமாற்றம் சொல்வதன்றி
நேத்திரங்கள் போற் காட்டநேராவே - நேத்திரங்கள்
சிற்றம்பலவன் திருவருட் சீர் வண்ணமென்றே
உற்றிங் கறிந்தேன் உவந்து.

வள்ளல்பெருமான்

=============================================

குரான் 5:13. (இறை)வசனங்களை அதற்குரிய (சரியான) இடங்களிலிருந்து அவர்கள் மாற்றுகிறார்கள். அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த போதனையின் (பெரும்) பகுதியை மறந்து விட்டார்கள்;

5:15. வேதமுடையவர்களே ! மெய்யாகவே உஙகளிடம் நம்முடைய தூதர்கள் வந்துக்கொண்டே இருக்கின்றார்கள் வேதத்திலிருந்து நீங்கள் மறந்து கொண்டிருப்பவற்றில் பல விஷயங்களை அவர் உங்களுக்கு விளக்கிக் காட்டுவார். இன்னும், தேவையில்லாத அநேகத்தை விட்டுவிடுவார்.

5:16. அல்லாஹ் இவ்வாறு அவனது திருப்பொருத்தத்தைப் பின்பற்றக் கூடிய அனைவரையும் பாதுகாப்புள்ள நேர் வழிகளில் செலுத்துகிறான்; இன்னும் அவர்களை இருள்களிலிருந்து வெளியேற்றி, தன் நாட்டப்படி ஒளியின் பக்கம் செலுத்துகிறான்; மேலும் அவர்களை நேரான வழியில் செலுத்துகிறான்.

=================================================

இறைவனிடமிருந்து வந்த
சாஸ்த்திரங்களில் காலப்போக்கில் மனிதர்கள் பல தவறுகளை கலந்துவிடுகிறார்கள்

உபதேசங்கள் பலவற்றை மறந்து அவைகளில் பொய்களை கலந்துவிடுகிறார்கள்

சாத்திரங்கள் எல்லாம் தடுமாற்றம் சொல்வதன்றி
நேத்திரங்கள் போற் காட்டநேராவே என வள்ளல்பெருமானும் இதைத்தான் சொல்கிறார்

இறை தூதர் ஒருவர் பூமியில் இருக்கும்போது உயிர்ப்புடன் இருக்கும் சாஸ்திரங்கள் அவர் சென்றுபோன பிறகு தடுமாற்றங்கள் அடைகின்றன

ஆகவே இறைத்தூதர் சென்றுபோன பிறகு நடைமுறையில் உள்ள போதனைகள் எதுவும் நேர்த்தியானது அல்ல

அவைகளை மீண்டும் நேர்த்தியாக்க வேண்டுமானால் சின்ன அம்பலமான சிவனின் அம்சமாக பூமிக்கு வருகிற சிவகுமாரர் அதாவது இறைத்தூதர் ஒருவர் வந்தால்தான் முடியும்

வள்ளலாரால் முன்குறிக்கப்பட்ட தனித்தலைமைப்பதி வந்தால் மட்டுமே சன்மார்க்கம் மேன்மை அடையும்

================================================

மேலும், சிலர் ‘இது ஆண்டவர் வருகின்ற தருணமாக இருக்கின்றதே!
இத்தருணத்தில் முயற்சி செய்வானேன் ? ஆண்டவர் வந்தவுடனே பெற வேண்டியதை
நாம் பெற்றுக்கொள்ளப்படாதோ ? ‘ என்று வினவலாம். ஆம், ஆண்டவர் வரப்போகின்றதும் சத்தியந்தான். நம்மவர்களின் திரை
நீங்கப் போகின்றதும் சத்தியந்தான். நீங்களெல்லவரும் பெற வேண்டியதைப்
பெற்றக்கொள்ளுகின்றதும் சத்தியந்தான்.

வள்ளல் பெருமானின் பேருபதேசம்

===============================================

பெருமானாரே எதிர்பார்த்து காத்திருக்கிற தனித்தலைமைப்பதி விரைவில் வரட்டும் என பிரார்த்தியுங்கள் சன்மார்க்கிகளே

அதைவிட்டுவிட்டு வள்ளலார் கடவுளாகிவிட்டார் ; அப்படி பாடிடாறு இப்படி படிடாறு என்று பெருமை பீத்திகொண்டிருப்பதை நிறுத்துங்கள்

===============================================

மனிதனாக வந்த யாரையும் இறைவனுக்கு இணை வைப்பது மாபெரும் திருத்தல் வாதமாகும்

இப்படித்தாம் இயேசுவை கடவுளாக்கி மதவாதமாக மாற்றினார்கள்

சன்மார்க்கத்தை மதவாதமாக மாற்றுவதை நிறுத்தி விட்டு வரப்போகிறவர் வந்து செத்தாரை உயிரோடு எழுப்பி எழுவார் மேடையில் சாட்சியாக நிறுத்தி சன்மார்க்க சங்கத்திற்கு தலைமை ஏற்கட்டும் என வேண்டுங்கள்