Total Pageviews

Sunday, January 29, 2012

யார் குரு?குருவிலும் பல படிகள் இருக்கிறதா ?சற்குரு யார் ?

யாரிடமிருந்தும் கற்றுகொள்கிர மன நிலை முதலாவது கடவுளை தேடுகிற சாதகனுக்கு வேண்டும்!ஏனென்றால் பூரண உண்மை,முற்றறிவு என்பது கடவுளின் தன்மை!முற்றறிவை நெருங்குவது என்பது குருடர்கள் யானையை தடவிய கதை என்பதை எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும்!குருடர்கள் உணர்ந்ததெல்லாம் தவறு என ஒதுக்க முடியுமா?மனிதர்களின் முன்னேறிய அறிவு இப்படிபட்டதே!தும்பிக்கை கயிறு போலுள்ளது என்பது `பகுதி உண்மை`!கால் உலக்கை போலுள்ளதும் `பகுதி உண்மை`!இப்படிப்பட்ட பல `பகுதி உண்மைகள்` ஆண்மீக உலகில் வலம் வருகின்றன!இவை தவறல்ல!நான் கண்டதுதான் உண்மை மற்றது தவறு என புறந்தள்ளூவதில் தவறு வருகிறது!யானை கயிறு என்பதிலும் எவ்வளவோ மனதை மயக்கும் விளக்கங்களும் நுனுக்கங்களும் இருக்கும்!இவைகளை அறிந்துகொள்வதும் கடவுளை தேடுகிற ஒரு பாதையே!ஒரு பாதையில் கொஞ்சம் முன்னேறியவுடன் மற்ற பாதைகளில் உள்ள `பகுதிஉண்மைகளை` உள்வாங்கினால் முழுமையை நோக்கி முன்னேற முடியும்!ஆனால் தான் கண்டதுமட்டுமே உண்மை என்கிற மாயை தடுக்கிறது!அப்படியில்லாமல் மாற்று கருத்துகளை `விசாரம் செய்வது` உள்வாங்குவது கடவுளை நெருங்குகிற `யோகம்` என்கிறது கீதை!

பரமாத்துமாவை சிலர் தனக்குள்ளாக மூழ்கி தியானிப்பதாலும்;சிலர் தத்துவ விசாரம் செய்து முற்றறிவை விளையவைப்பதாலும்;இன்னும் சிலர் பலனில் பற்றுவைக்காத கர்மயோக உழைப்பினாலும் கண்டடைகிறார்கள்!--கீதை13:25

மனிதாபிமானம்,அஹம்பாவமின்மை,அஹிம்சை,சகிப்புதன்மை,எளிமை உடயவனாய் இறைதண்மை உணர்ந்த குரு ஒருவரை அண்டி சுயகட்டுப்பாடு,நிலைத்தமனம்,பரிசுத்தம் கற்று புலனிண்பங்களை விட்டவனும் ;பிறப்பு இறப்பு முதுமை வியாதி என்கிற பயத்தை கடந்து நான் என்கிற சுயத்தை அழித்தவனும் வீடு மனைவி பிள்ளைகள் செல்வம் என்கிற பந்தங்களில் தவிக்காதவனும் விருப்பு வெறுப்பு இரண்டிலும் மனசம நிலையை அடைந்தவனும் உள்ளார்ந்த பக்தியில் நிலைத்தவனும் தன்னை உணர்வதிலும் எல்லா தத்துவங்களையும் விசாரம் செய்து முற்றறிவை பெறுவதிலும் சலிப்பில்லாதவனுமாகிய இவைஅணைத்தையும் செய்கிறவனே ஞானி --இதில் ஒன்று குறைந்தாலும் அவன் அஞ்ஞானத்தில் உழல்பவனே!---கீதை 13:8

மேற்கண்ட குணாதிசயங்கள் அடையப்பெற்றவர் இறைதண்மை உணர்ந்த குரு!முழுமையடையாத ஒன்றிரண்டு கைவரப்பெற்றவரும் குருவாகிவிட முடியும்!தன்னை விட பெரிய குருடனுக்கு சிறிய குருடன் சிறப்பாகவே வழிகாட்ட முடியும்!நாமும் கற்று கொள்ளவேண்டும்!ஆனால் அந்த குருவையே பெருமை பேசிக்கொண்டு தேங்கி நின்று விடாமல் அடுத்த அடுத்த படிகளில் உள்ள குருமார்களிடம் கற்றுகொண்டே வளறவேண்டும்!இதற்கு ஜன்னலை திறந்துவைத்து பழகவேண்டும்!மாற்று கருத்துகளை உள்வாங்கவேண்டும்!ஆனால் கிணற்று தவளை மனப்பாண்மை மனிதனை வஞ்சிக்கிறது!தெறிந்த விசயத்தையே திரும்ப திரும்ப பேசகேட்டு புளகாங்கிதம் அடையும் ஒருகூட்டத்தில் திருப்தியடைந்து விடுகிறோம்!நான் பெருசு நீ சிருசு என சண்டையும் போடுகிரோம்!மனித முயற்சியால் குருவாக உயர்ந்தவர்களிடம் கற்று கொள்ளவேண்டும்!ஆனால் அவர்களை கடந்து சற்குருவை நாடி செல்லவேண்டும்!``தேங்கிய தண்ணீர் சாக்கடை ``ஆகிவிடும் !நாம் தேங்காமல் தேடவேண்டும் !முற்றறிவாளன் கடவுள் ஒருவரே!அவர் தனது செய்தியை;வழிகாட்டுதலை;ஞானத்தை தனது வாயாக உலகிற்கு தானே அனுப்பிய இறைதூதர்கள் மூலமாக அவ்வப்போது வெளிபடுத்தியுள்ளார்!இந்த இறைதூதர்கள் மூலமாக அந்த காலகட்டத்திற்கு அருளபட்டவைகள் பின்னாளில் கலப்படமும் அடைந்து விடுகின்றன!இருந்தாலும் அவைகளை கவனத்துடன் ஆராய்ந்து வேதத்தை உள்வாங்க வேண்டும்!அவைகளில் கலப்படங்களை மட்டும் சுட்டிகாட்டி  ஒதுக்கிவிடாமல் சாரத்தை பிழிய கற்றுகொள்ள வேண்டும்!
உலகின் சற்குருநாதர்கள் 1)ஸ்ரீராமர் 2)கிரிஸ்ணர் 3)மோசே 4)இயேசு 5)முஹமது மட்டுமே!இவர்கள் அந்த காலகட்ட சமுதாயத்தில் உள்ள சாதாரண மக்களும் இறைவனோடு ஒப்புறவு ஆக்கியவர்கள்!வேதம் கொணர்ந்தவர்கள்!இவர்களளவு இறைவனை நெருங்கிய குருமார்கள்:புத்தர்,மஹாவீரர்,ஜொராஸ்டியர்,குருனானக்&வள்ளலார்!இவர்கள் எல்லொரும் ஏக இறைவனை வணங்க ஊக்கபடுத்தியவர்கள்!சித்தர்கள்,ஞானிகள் எல்லாம் கீழ் நிலையில் உள்ளவர்கள்!இவர்கள் எல்லோரையும் உள்வாங்கி கடவுளை நெருங்கி செல்ல வேண்டுவது நமது கடமை!கலப்படங்கள் அதிகரிக்கும் போது கடவுள் இன்னொரு இறைதூதரை அணுப்புவார்!அவரை அணுப்பும்படி நாமும் வேண்டவேண்டும்!

கீதையின் மஹத்துவம் என்னவென்றால் எல்லா மனிதர்களும் அவரவர் உள்ள படியிலிருந்து கடவுளை அடைய 17 பாதையை மிக ஆழமாக விஞ்ஞான பூர்வமாக எளிமைபடுத்தி உபதேசித்துள்ளது!நாம் அறைகுறையாக செய்துகொண்டிருப்பதை பட்டைதீட்டி கொடுத்துள்ளது!கீதையின் சாரத்தை பிழிந்துகொண்டவன் மாத்திரமே ஆண்மீக வாழ்வில் தான் கடைபிடிக்கும் மார்க்கத்தை ஜீவனுடன் புரிந்து கொள்ளமுடியும்!கீதையை புரிந்துகொண்டால் மட்டுமே பைபிளையும் குரானையும் புரிந்துகொள்ளமுடியும்!இல்லாவிட்டால் வெறுமையான வழிபாடாகவும் சடங்காகவும் சம்பிரதாயமாகவும் சண்டைபோடுகிறதாகவும் கலப்புள்ளதாகவும் முடியும்!

உண்மைகளை மறக்கடித்து மாயம் செய்கிறவைகள் மனிதனது குணங்கள் மட்டுமல்ல!உபதேசங்களில் கலப்பையும்;திரித்து உபதேசிப்பதும் மனிதனை விட மேலான சக்திகளான அசுரர்களின் மாய்மாலங்களாகும்!மனிதர்கள் தேராமல் நியாயத்தீர்ப்பு நாளன்று தங்களுடன் அழிக்க படவேண்டும் என்பது அசுரர்களின் திட்டமாகும்!கடவுளால் படைக்க படுகிற மனித ஆத்துமாவை அவனது சரீரத்தின் புலனிச்சைகளை தூண்டி அதற்கு சந்தர்ப்பமும் ஏற்படுத்தி உலக மாயைகளில் உலலும் படி அசுரர்கள் செய்கிறார்கள்!மனிதன் தவறுக்கு போகும் போது அதற்கு ஒத்துழைப்பு அதிகம் உண்டாக்குவதும் அதே மனிதன் கடவுளை நாடும்போது அதற்கு சொல்லொண்ணா முட்டுகட்டைகளை பிரச்சினைகளை உண்டாக்குவார்கள்!ஒவ்வொரு மனிதனின் மூலமும் இறைசக்தியும் அசுர சக்தியும் குருஸேத்திர யுத்தம் நடந்து கொண்டுதான் உள்ளது!மனிதனை தீங்குக்கு அழைக்க அசுரர்கள் படைதிறண்டு கவ்ரவர்களாய் தாக்குகிறார்கள்!மனித சரீரமாகிய தேரில் குடிகொண்டு உள்ள ஆத்துமாவாகிய அர்ச்சுணன் மீது அசுரர்கள் தாக்கும்போது அர்ச்சுணன் தனது சாரதியாக--வழிகாட்டியாக இறைதூதனாகிய கிரிஸ்ணரை வைத்து அவரின் உபதேசத்தை கேட்டு அசுரர்களுடன் அனுதினம் யுத்தம் செய்து ஜெயிக்க வேண்டும் என்பதே குருஸேத்திர யுத்தம்!இந்த யுத்த களத்தில் மனித ஆத்துமாக்கள் அசுரர்களுடன் போரிட்டே ஆகவேண்டும் என்பதை பலர் ஏற்றுகொள்வதில்லை!போர்க்களம் உணராத போர்வீரனாய் இருப்பது அறியாமையின் உச்சகட்டமாகும்!மனிதர்களிடம் உள்ள தீய குணங்கள் அவர்களை மயக்கும் மாயைகளை அவர்கள் அஹிரினை என கருதுகிறார்களே தவிர அவைகளின் பின்னணியில் அக்குணங்களை தூண்டி விடும் அசுரர்கள் என்கிற உயர்திணை -ஆவிமண்டல அசுரர்கள் ,தேவர்கள் என்கிற மனிதனை விட உயர்ந்த சக்திகள் உள்ளன!கடவுளை அடையும் பாதையில் தனகுள்ளும் புறத்திலும் அசுரர்களுடன் போராடியே ஆகவேண்டும் !எனவே கீதை போர்க்களத்தில் வைத்து உபதேசிக்க படுகிறது!!!

குருஷேத்திர யுத்தம் என்பது என்ன?

குருஷேத்திர யுத்தம் என்பது நடந்ததா ?நடக்கவில்லையா ?ஏன் நடந்தது என்பதை விட யுத்தம் தொடங்கும் முன் ஒரு மனிதனாகிய அர்ச்சுனனுக்கு உண்டான மன கலக்கம் என்பது அன்றாடம் மனிதர்களுக்கு --முக்கியமாக கடவுளை தேடி அவரை கண்டடைய முயலும் பக்தனுக்கு எதிர் வருகிற சவாலே ஆகும்! இத்தகைய சோதனைகள் --இடறல்கள் உண்டாகும் பொது அதனை எதிர்கொள்ள நமக்கு அறிவூட்டும் ஞான உபதேசமே கீதை!கீதை வாழ்க்கைக்கான உபதேசம் ;பக்தனுக்கு கடவுளை நோக்கிய பயணத்தில் அன்றாட வாழ்வை கடந்தோட அனுபவ பூர்வமான செயல்முறை பயிற்சி! உலக வாழ்க்கையில் பல படித்தரமான நிலைமையில் மனிதர்கள் படைக்க படுகிறோம்!ஒரு சக்கரத்தின் அச்சுகள் பல உருப்புகள் எப்படி ஒன்றாக இணைக்க பட்டு அது சுற்றுகிறதோ;அதுபோல உலகவாழ்க்கை செம்மையாக நடக்க பலவிதமான வேலைகள்,பொறுப்புகள்,கடமைகள் பலரால் செய்ய படவேன்ண்டியுள்ளது!ஏற்றதாழ்வுகள்,பதவிகள்,பட்டங்கள்,செம்மைகள்,வறுமைகள்,முரண்பாடுகள் என கணக்கிலடங்கா பேதங்கள் இருந்தாலும் எல்லோரும் கடவுளை பொருத்து முக்கியமாணவர்களே!ஒரு சிரு துரும்பும் அவரின் கண்கானிப்பிலும் பேணுதலிலும் உள்ளன!அதுஅதற்குரிய எல்லையும் சுதந்திரமும் கொடுக்க படாமலுமில்லை!

ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது.உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது.(இயேசு;மத்தேயு 10:29)

கடவுள் நம்மை ஜனிக்க செய்த நாள் முதல் நம்மோடே இருக்கிறார்;நம்மிடம் அவருக்கு ஒரு குறிப்பிட்ட பணி-திட்டமும் இருக்கிறது என்கிற உள்ளூணர்வு நமக்கு வேண்டும்!அவர் நம்மைப்பற்றிய நோக்கம் வைத்துள்ளார் என்கிற புரிதலே நமக்கு சந்தோசத்தையும் நம்பிக்கையையும் அவரிடம் உள்ளார்ந்த உறவையும் கொண்டுவந்து விடும்!உள்ளார்ந்த உறவை அணுபவிக்க தெறியாத--முடியாத நிலைமையிலேயே பக்தி செலுத்தியும் வழி விலகி போகிறார்கள் சிலர்!அது ஒரு அறியாமையே!

இப்பூமிக்குரிய வாழ்க்கை என்னும் குருஸேத்திர யுத்தத்தில் மனிதனாகிய அர்ச்சுணன் ஒரு போதும் தனித்துவிடப்படவில்லை!அவனுக்கு வழிகாட்டும் படியாக அவனருகில் இறைதூதனாகிய கிரிஸ்ணர் இருந்தார்!அன்றைய உலகில் இறைவனை நெருங்கிய நபராகிய கிரிஸ்ணர் என்பவரை அர்ச்சுணன் குருவாக ஏற்றுகொண்டிருந்தது அவனுக்கு கடவுளின் வழிகாட்டுதலை உறுதி செய்துவிட்டது!அவன் கடவுள் மீது பக்தியுள்ளவனாகவும் இறைதூதனால் நண்பன் என அழைக்கபடும் உறவுக்குள் உள்ளவனாகவும் இருக்க முடிந்தது!பக்தி உள்ளுக்குள் விளைந்து கடவுளோடு உறவாக பரிணமிக்க வேண்டும்!
எல்லா மனிதர்க்குள்ளும் கடவுளுடன் உறவை அணுபவிக்க முடியவில்லையே என்கிற இனம்காணாத துயரம் இருக்கிறது!எல்லா மனிதர்களுக்கும் ஆத்தும தாகம் ஆழ்மனதில் இருக்கும் அது தனது உயிர் பிரிந்து வந்த கடவுளை குறித்தது! இந்த பிரிவு துயர் அடையாளம் மாறி உடலை தானாக என்னி மண்ணாசை பெண்ணாசை பொண்ணாசை ஆக மாறி நிற்கிறது இதில் முழுமையும் திருப்தியுமடைய முடியாமல் முட்டி மோதி தவிக்கும்போது இனம்புரியா வேதனை வெளிப்படும் விரக்தியாகவோ வக்கிரமாகவோ மாறவும் வாய்ப்புண்டு! இந்த ஏக்கம் நமது பிதாவாகிய கடவுளைக்குறித்த தேடலாக பக்தியாக பரிணமித்தால் இறைவனோடு இடைபடுதல் உண்டாகும்!அந்த தேடலுக்கு கடவுள் தன்னை உணர்ந்த மனிதர்களை நமக்கு குருவாக அணுப்பி வைப்பார்! 

இயேசு குருவா? கடவுளா?

இதற்கு இயேசு சொன்ன பதிலே போதும்!!!

மத்தேயு 7:21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.

மத்தேயு 7:22 அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.

மத்தேயு 7:23 அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.


கடவுளை வழிபடுவது மட்டுமே இயேசுவால் முக்கியபடுத்த பட்டுள்ளது!இயேசுவை கடவுளின் தூதராக --மனிதர்களுக்கு குருவாக ஏற்றுக்கொள்ளும் படி அவர் அளைத்தாரே தவிர தன்னை வழிபடும்படி அவர் வழிகாட்டவில்லை!

இயேசுவிடம் வேதத்தின் சாரம் என்ன என கேட்ட போது அவரின் பதில் :
29. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கடவுள் ஒருவரே கடவுள் .

30. உன் தேவனாகிய கடவுளிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை.

31. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால்: உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே; இவைகளிலும் பெரிய கற்பனை வேறொன்றுமில்லை என்றார்.

எப்படி பிரார்திப்பது என்று இயேசுவிடம் கேட்ட போது:
9. நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது; பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக;

10. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.

11. எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்.

12. எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.

13. எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென், என்பதே!.

ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் கடவுளுடையவைகளே என்பது இயேசுவின் முடிவு !அவர் எப்போதும் கடவுளை பிரார்திக்கிறவராகவே வாழ்ந்து காட்டினார் !


பூமியின் முடிவு காலத்தில் இயேசு என்ன செய்வார் என பைபிள் சொல்லுகிறது :
I கொரிந்தியர் 15:24 அதன்பின்பு முடிவு உண்டாகும்; அப்பொழுது அவர் சகல துரைத்தனத்தையும் சகல அதிகாரத்தையும் வல்லமையையும் பரிகரித்து, தேவனும் பிதாவுமாயிருக்கிறவருக்கு ராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார்.


இயேசு பூமிக்கு வந்தது ;மீண்டும் வரப்போவது பூமியில் தாங்களும் கடவுளாகிவிட்டதாக சொல்லிக்கொண்டுள்ள அசுர ஆவிகளை பரிகரித்து கடவுளுக்கு ராஜ்ஜியத்தை உண்டாக்குவதற்கு!ஆனால் அவரின் வார்த்தைகளை திரித்து அவரும் கடவுளாகி விட்டதாக அசுர ஆவிகள் செய்கிற அதே வேலையை இயேசுவும் செய்வதாக கிறிஸ்தவர்கள் சொல்லுவது சரியா ?


இயேசு கடவுளின் ராஜ்ஜியத்தை பூமியில் ஸ்தாபிக்க வந்தவர் !தனது சுயராஜ்ஜியத்தை கட்டும் அசுரர்களை வெல்ல கடவுளால் அனுப்ப பட்ட இறைத்தூதர் !மனிதர்களுக்கு குரு !இயேசுவின் மூலமாக கடவுளிடம் பிரார்திப்பதே இயேசுவுக்கு பிரியமானது !


இயேசுவின் எச்சரிக்கையை கவனியுங்கள் :
மத்தேயு 7:23 அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.

வழிபாடு கடவுளுக்கு மட்டுமே !இயேசுவின் மூலம் வழிபடலாமே தவிர இயேசுவை வழிபட கூடாது !


0 Comments | Add Comment | Permalink RSS

ஞான மார்க்கத்தினருடன் ஒரு சம்பாஷனை!!!

நண்பரே !தங்களை வாழ்த்துகிறேன்!கீதையை கொஞ்சமாவது புரிந்திருந்த கண்ணோட்டத்தில் பைபிளையும் குரானையும் படித்த போது நான் புரிந்து கொண்டது வேறு ;அதனை சடங்காச்சாரமாக பின்பற்றும் கிறிஸ்தவர்கள் முஸ்லீம்கள் வியாக்கியானம் செய்வது வேறு என்பதை சொல்லி வருகிறேன் !பைபிளையும் குரானையும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டுமானால் கீதையை படிப்பது அவசியம் என்பதை அவர்களின் தளங்களில் சொல்லிவருகிறேன் !இந்தியர்களாகிய நாம் இன்னும் தெளிவு பெற பைபிளையும் குரானையும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன் !

உலகம் முழுவதும் ஒரே இறைவனே !தனது பிள்ளைகளாகிய மனிதர்களுக்கு உலகம் முழுவதும் கடவுள் தன்னை பற்றிய வெளிப்பாடுகளை கொடுத்திருக்க மாட்டாரா ??எங்களுக்கு மட்டுமே சொன்னார் என்பது போல மற்றவர்களை ஒதுக்குகிற கிணற்று தவளை மனப்பான்மையை விட்டு வெளி வருதலே இன்றைய தேவை !நான் இயேசுவை ஒரு இறைதூதராக மட்டுமே பார்க்கிறேன்!ஆனால் அவரை மனிதர்கள் தங்களின் தவறினால் கடவுளுக்கு இணை ஆக்கி பார்க்கிறார்கள் --இந்தியாவில் ராமரையும் கிரிஷ்ணரையும் இணை ஆக்கி விட்டதை போல !

இந்த பூமிக்கு என்று ஒரு யுக புருஷன் கடவுளிடம் உண்டு !அவர் கடவுளல்ல !அவரும் கடவுளின் தூதர் மட்டுமே !ஆனாலும் பூமியை பொறுத்தவரை கடவுளின் ஏக பிரதிநிதி --கணக்கு பிள்ளை என்பதை போல --இந்த நபரே ``குமாரன்`` என அழைக்கபடுகிரார்! ராம் என்றாலும் ஜெரோம் என்றாலும் ரஹீம் என்றாலும் ஒரே அர்த்தத்தில் இந்த குமாரன் என்ற பொருளில் வழங்கப்பட்டது !இவரையே போகர் தனது ஞானத்தால் உணர்ந்து தேவதூதன் என்கிற நிலையிலிருந்து மனித சரீரத்தில் அவதரிக்கிற முருகு -மாறி வருகிற முருகன் என்றார் !அது ஒரு உருவக உபதேசம் !இந்த முருகனாகிய யுக புருஷனாகிய இறைதூதன் யாரென்றால் திரேதா யுகத்தின் ராமன் ;துவாபர யுக கிருஷ்ணன் ;கலியுக இயேசு !இம்மூவரும் ஒருவரே !``அதர்மம் பெருகும் போது நான் மீண்டும் மீண்டும் அவதரிக்கிறேன் ``என்பது நிறைவேறியுள்ளது !இந்த நபரே கல்கி யுகத்தில் கல்கியாக வரபோகிறவர் !

கடவுள் எதையும் ஜோடுஜோடாகவே படைக்கிறவர்!அப்படி இந்த யுக புருஷனுக்கு நண்பனான ஒருவர் உள்ளார் !அவர் ராமருக்கு லக்ஷ்மணன் ;கிரிஷ்ணருக்கு அர்ச்சுனன் ;இயேசுவுக்கு முகமது நபி !இயேசு பரமேறுமுன் எனக்கு பின் வருகிற சத்திய ஆவியானவர் உங்களை சகல சத்தியத்திற்குள்ளும் நடத்துவார் என முன்னறிவித்தார் !அந்த சத்திய ஆவியானவராகிய ``ஜிப்ரீல் ``என்கிற தேவதூதன் முகமதுவை ஆட்கொண்டு இறக்கிய வேதம் தான் குரான் !முகமது ஒரு சாதாரண படிப்பறிவு இல்லாத இடையன் ! ஜிப்ரீல் என்ற ஆவியே முகமதுவை ஒரு கருவியாக பயன்படித்தி ஆப்ராமின் சந்ததியினருக்கு வாழ்க்கை நெறிமுறைகளும்  ஆட்சி நெறிமுறையும் குரானாக வழங்கப்பட்டது!லக்ஷ்மணன், அர்ச்சுனன், முகமது மூவரும் யுத்த வீரர்கள் --ஒருவரே!!! கீதையில் கிரிஷ்னர் அர்ச்சுனனிடம் இதற்கு முன்பும் நாம் இருவரும் இருந்திருக்கிறோம்;ஆனால் நான் முந்தய பிறவி ஞானத்துடன் இருக்கிறேன்;நீ அந்த ஞாபக சக்தி அருளப்படாதவனாக இருக்கிறாய் என்று சொன்னது இந்த யுகபுருஷ ஜோடி திரும்ப வரும் என்பதையே!ஒருவர் கடவுளை நெருங்கியவர்;உடன் அவருக்கு உதவியான சத்திரியன்!

உலகம் முழுவதிலும் கடவுளை மனித முயற்சியால் நெருங்கியவர்களும் கடவுளை பற்றிய வெளிப்பாட்டை கொடுத்துள்ளனர் !நம் இந்திய ஞானிகளை போல! ஆனால் கடவுளே தமது தூதர்களாக சிலரை தேர்ந்தெடுத்து தம்மை பற்றி வெளிப்படுத்தியுள்ளது எதுவோ அதுவே சிறந்தது!அப்படி வந்தது கீதையும் பைபிளில் பழைய ஏற்பாடும் குரானும் மட்டுமே!இவைகளில் அருள்நிலையில் கடவுளே பேசுவதாக வார்த்தைகள் இறங்கியுள்ளன !நான் என அதிகாரத்துடன் சொல்லப்படும் வார்த்தைகளை கடவுள் இறைத்தூதர்களான கிருஷ்ணர் ,இயேசு ,முகமது மூலமாக கடவுள் பேசியதாக எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர கிருஷ்ணர் இயேசு முகமது சொன்னதாக எடுத்துக்கொள்ள கூடாது !குர்ஆனில் இதைப்பற்றி தெளிவாக வசனம் இறங்கியுள்ளது !இறைதூதர்கள் கடவுளின் வாயே தவிர கடவுளல்ல !இவர்களையும் வணங்கக்கூடாது !வழிபாடு கடவுளுக்கு மட்டுமே!எல்லா புகழும் கடவுளுக்கே என்ற குரானின் முத்தாய்ப்பான வாசகத்தை மனதில் வைக்கவேண்டும்!!!

இயேசு ``நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன் ;என்னையன்றி ஒருவனும் கடவுளிடத்து வாரான் ``என்றார்!நான் கடவுளை அடைய பாதை --குரு என்றுதான் சொன்னார்!நான்தான் கடவுள் என்று சொன்னதாக கிறிஸ்தவர்கள் தவறாக திரித்து அப்பியாசிக்கின்றனர்!அதுபோலவே அவரது முந்தய அவதாரமான ராமரையும் கிரிஷ்ணரையும் குரு என்பதை மாற்றி கடவுளுக்கு இணையாக்கி நாம் அப்பியாசிக்கிறோம் !இது தவறு என குரான் சுட்டுகிறது!

இம்மூன்று வெளிப்பாடுகளையும் தொகுத்து பார்த்தால் ஒரே அடிப்படையில் செழுமையாக்க பட்டவை என்பது புரியும்!ஆனால் வேறுவேறானதாக அர்த்தப்படுத்தி சண்டை போடுகிறவையாக மனிதர்கள் மாற்றி கொண்டோம்! இறைதூதர்கள் சென்ற பிறகு அவர்களின் சீடர்கள் மூலமாக தங்களது விசத்தை சிறுகசிறுக கலந்து அவற்றை திரித்து தவறாக வியாக்கியானம் செய்வது அசுர ஆவிகளின் வாடிக்கை என குரான் சுட்டுகிறது! அதுதான் தற்போது நடந்து கொண்டுள்ளது!

எல்லா மதங்களும் இறைதூதர்களால் அடித்தளம் இடப்பட்டு வளர்க்கப்பட்டு பின்னாளில் அசுரர்களால் சீரழிக்க பட்டவையாய் இருக்கின்றன என்ற உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்!உண்மைகளை மட்டும் உள்வாங்கி முன்னேற கடவுள் அருள் வேண்டும்!பூமியில் மனிதர்கள் மூலமாக தேவ அசுர யுத்தம் நடந்து கொண்டேதான் இருக்கிறது!

இந்த யுத்த களத்தை புரிந்து கொள்ள பக்குவத்தை உண்டாக்கும் ஒரு சாதனம் தான் தியானம் யோகம் என்பது!அன்ன மயகோஷம் மனோமய கோஷம் இவற்றை விட்டு முன்னேறாமல் தியானம் யோகம் என்று கத்தியை மட்டும் தீட்டிக்கொண்டே இருப்பதால் பலன் என்ன ?கத்தியை தீட்டுவது விஞ்ஞான மய கோஷத்திர்க்குள் நுழைந்து தேவ அசுர யுத்த களத்தில் நுழைவதற்காக!அந்த நிலையில் ஒன்று கடவுள் சார்பாக கடவுளை உயர்த்தி பிடித்து அவரிடம் பிரார்திக்கிற பக்தனாக மாறி ஆகவேண்டும் !அல்லது கடவுளை மறைமுகமாக புறந்தள்ளி --அவரை ஒரு நபர் என்பதற்கு பதிலாக ஒரு பொருளாக்கி--இயற்கையாக சுட்டி மனித அறிவை கொண்டே சிறப்பான வாழ்க்கை வாழ்ந்துவிடலாம் என அசுர குருவின் அணியில் நிற்க வேண்டும்!

அசுரர்கள்  தேவதூதன் என்ற நிலையில் இருந்து அசுரனாக மாறியது நாங்களும்  கடவுளுக்கு இணையாகி விட்டோம் என்றதாலேயே!ஆதி மனிதனான ஆதாமை நீயும் கடவுளாகலாம் என உபதேசித்து கெடுத்தான்!இறந்து போன அனேக மனிதர்கள் பெயரை சொல்லி பல அற்புதங்களை தேவைகளை மனிதர்களுக்கு செய்து கொடுத்து மனிதர்களும் தெய்வமாகி விட்டதாக மாயம் செய்வதும் அசுர ஆவிகளே!

இயேசு அசுரனைப்ப்ற்றி ``அவன் ஒரு பொய்யன்;பொய்களுக்கு பிதாவாய் இருக்கிறவன்`` என்றார்!நான் அசுரன் கடவுளுக்கு விரோதி;கடவுளை போல ஆற்றல் உள்ளவன் என்னை வழிபட்டால் உங்களுக்கு எல்லாம் செய்வேன் என உண்மையை சொன்னால் மனிதர்கள் அவனை எற்றுகொள்ளமாட்டார்கள்!அதனால் அவன் எப்போதும் இறந்த மனிதர்கள் பெயரால்தான் பூமியில் செயல்பட்டு தன்னை வழிபடுகிற ஒரு கூட்டத்தை உண்டாக்குகிறான்!``ஆட்டின் தோலை போர்த்துக்கொண்டு ஓநாய்கள் உங்களிடத்து வரும்`` என இயேசு எச்சரித்ததும் இதுவே!சென்று பொன இறைதூதர்கள்,ஞானிகள்,மஹான்களின் பெயரை கடவுளுக்கு இணைவைத்து அவர்களை வழிபடுவது,அவர்களின் உபதேசத்தை திரித்து வியாக்கியாணம் செய்வது,மனிதர்களை கடவுளை வழிபடுவதிலிருந்து திசைதிருப்புவது,நான் பெரிசு நீ பெருசு என குழு உணர்வை தூண்டி சண்டை போட வைப்பது எல்லாமே அசுரர்களின் வேலையாகும்!

கடவுளை தேடு என்று சொல்லாமல் மனிதனும் தெய்வமாகிவிடலாம் என்கிற உபதேசம் அசப்பில் ஞானம் போல தெரிந்தாலும் ஞானமல்ல!அசுர குருவின் உபதேசம்!எல்லா ஞானத்தையும் பேசி முடிவில் கடவுள் என்ற நபரை புறந்தள்ளும்!தீயவர்களுக்கு துன்மார்க்கத்தை   உபதேசிக்கிற அசுரர்கள் நல்ல ஆத்துமாக்களை ஏமாற்ற வைத்திருக்கும் உபதேசம் ஞானம் போல தெரிகிற மாயாவாதம்-அல்லது சூனிய வாதம் !வள்ளலார் கடவுள் சார்பானவர்!அவர் ஏழு மாயத்திரைகளை நீக்கி அருட்பெரும் ஜோதியாய் விளங்கும் கடவுளை வழிபடு என்றார்!யுக முடிவில் கல்கி வருவார் என்றார்!ஆனால் வேதாத்திரி மாயாவாதி!அறிவுதான் கடவுள் என்று அசுர உபதேசம் செய்தவர் !!!கடவுளை வழிபடுவதிலிருந்து மனிதர்களை திசைதிருப்புகிறவர்!!!

`அருள்` x `மருள்`

ஆவி மண்டல சக்திகள் ஆட்கொள்ளும் போது எல்லா மனிதர்களிடமும் அருள் வழிவதும் அதை கடவுள் என மனிதர்கள் நம்புவதும் உண்டு! எல்லா ஆவிகளும் கடவுள் சார்பானவையல்ல! !ஆனால் மனிதனை விட உயர்ந்த சக்திகள்!இவைகளால் பூமிக்குரிய சில நன்மைகளை செய்து தறமுடியும்!நடந்த சம்பவங்களை சொல்ல முடியும்!சில நடக்க போவதை பற்றியும் சொல்ல முடியும்!அதனை உபாசிக்கிறவர்களுக்கு பணம் சம்பாதிக்க ``ஏவல்`` செய்து செய்விணை செய்து கெடுதல் செய்ய முடியும்!எதிர்தரப்பு நபர்கள் வந்து பணம் கொடுத்தால் வைத்த செய்விணையை எடுக்கவும் முடியும்!இவையெல்லாம் `அருள்` அல்ல `மருள்` என்றார் வள்ளலார்!

கடவுளிடமிருந்து வருவது `அருள்` என்றால் அசுர ஆவிகளிடமிருந்து வருவது `மருள்`!அசுர மாயங்களை இனம் காண தெளிவு உண்டானாலேயே கடவுளை நோக்கி முன்னேற முடியும்நம்மை சகலவற்றையும் படைத்த கடவுள் ஒருவர் இருக்கிறார் !இந்த ஒருவரை மறைக்கும் முயற்சியில் அசுர ஆவிகள் செயல்படுகின்றன !உடலின் இச்சைகளை தூண்டி உலக மாயைகளில் மனிதனை வீழ்த்துவது; அதனை அடைவதற்கு அக்கிரமத்தையும் துணிவையும் தன்முனைப்பையும் தூண்டி விடுவது!அதற்கு சாக்கு கற்பிப்பது!அந்த தவறுக்குள் மனிதன் ஊறியவுடன் அவனை குற்றவாளி என குற்றம் சொல்லி பாவ சுரணை அற்றவனாக முழுக்க நனைந்து விட்டாய் இனி உனக்கும் கடவுளுக்கும் சம்மந்தம் இல்லை எனவே கல் நெஞ்சக்காரனாய் ஆகிவிடு என கற்பிக்கும் அதே அசுர ஆவிகள் நல்லவர்களுக்கு வைத்திருக்கிற உபதேசம் உனக்குள்ளேயே கடவுள் இருக்கிறார் என்பது !மனிதனும் கடவுளாகலாம் என்பது மனிதனின் தன்முனைப்பை தூண்டுவது !நீயம் கடவுளாகலாம் நாங்களும் கடவுளாக ஆகிவிட்டோம் அதனால் கடவுள் என்று ஒருவர் அவசியமில்லை என்பது! இறைபேரரசை கலகம் செய்து சுயராஜ்ஜியம் செய்வது!கடவுளின் ஆளுமையை மறுக்கிற எல்லாமே அசுர பின்னணி !ஞானம் போல தோற்றமளிக்கிற மாயாவாதம் அசுர உபதேசம் !இந்த மாயையில் நிறைய நல்லவர்கள் மாட்டிக்கொண்டு உள்ளனர் !கடவுள் தான் வழிகாட்ட வேண்டும் !அசுரர்களின் மாய்மாலங்களை அழிக்கவே இறைதூதர்கள் பூமிக்கு வருவார்கள் என்பது கீதையில் கிரிஷ்ணரின் வெளிப்பாடாகும் !!!


I யோவான் 3:8 பாவஞ்செய்கிறவன் பிசாசின் ஆதிக்கத்தில் இருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான், பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே இயேசு  வெளிப்பட்டார்.

 ராமரோ கிரிஷ்ணரோ இயேசுவோ; அசுரர்களோடும் மாயைகளோடும்; மாயைகளை பின்பற்றுபவர்களோடும் ;மனிதர்கள் உருவாக்கி கொண்ட நிறுவனங்களில் பதவியில் போய் ஒட்டிக்கொண்டு தத்துவங்களை திரித்து உபதேசித்து தங்களை கடவுளுக்கு ஏஜென்ட்டுகளாக காட்டி கொள்கிரவர்களோடும் யுத்தம் செய்தார்கள் !பழைய சடங்காச்சாரங்களை பொய்களை உடைத்தெறிந்தார்கள்! அவர்கள் காலத்தில் சாதாரண மனிதர்களும் கடவுளோடு ஒப்புரவு ஆனார்கள் !ஆனால் அவையும் காலப்போக்கில் சீரழிந்து போய் விட்டது !இதனை சீர் செய்ய மறுபடி இறைதூதர்கள் வருவார்கள் என்றே இம்மூவரும் சொல்லியுள்ளனர்!