Total Pageviews

Friday, May 4, 2012

பிதா!!

    படைப்பவன்
அல்லாவின் 99 நாமங்களும் அவரின் குணாதிசயங்கள் --அதாவது வினையெச்சம்! அல்லது காரண பெயர் !
அதில் 11 வது பெயர் படைப்பவன்---காலிக்!

 உற்பத்தி செய்பவன்
58 வது பெயர் உற்பத்தி செய்பவன்---முப்டி !அல் -முப்டி என்றால் அனைத்தையும் உற்பத்தி செய்பவன்!

அல் என்பதற்கு அனைத்தும் என்ற பொருளும் உண்டு !அல்லா என்றால் அனைத்துமானவன் !--கடவுள் !எங்கும் நிறைந்த ஏகாந்த பரம்பொருள் !

பிதா என்றால் உற்பத்தி செய்பவன்! ஒரு பொருளை உருபாக்குபவனை அப்பொருளின் பிதா என சொல்லுவது தமிழில் வழக்கம் !

முப்டி என்பதும் பிதா என்பதும் ஒன்று ! காலிக் என்பதும் படைப்பவன் என்பதும் பிதா என்பதும் ஒன்று !

அனைத்தும் என்றால் பரம என்பது அர்த்தம் !

அல் முப்டி என்பதும் அல் காலிக் என்பதும் பரம பிதா என்பதும் ஒன்று !

அல் எனும் அரபு வார்த்தையின் பொருள் உயிரற்ற பொருட்களை குறிக்கும் "The" என்ற ஆங்கில வார்த்தையைக் குறிக்கும் பதத்தைக் கொண்டது என நண்பர் ஒருவர் வாதிட்டார் ! The என்பது உயிரற்ற பொருள் மட்டுமல்ல உயிருள்ள நபர்களை உயர்வு படுத்தும் மரியாதை சொல் !

அல்லா என்ற வார்த்தைக்கும் அல் என்பதற்கும் தொடர்பு உள்ளது !அல்லாவை அல் -அல்லா என்று அழைப்பது இல்லை ! யூத பாஷையில் எல் என்பதும் அரபியில் அல் என்பதும் கடவுளை குறிக்கிறது யூதர்கள் தானியேல் மைக்கேல் ஜோயேல் என பெயர் வைப்பதில் எல் என்பது அல்லாவை குறிக்கிறது

அல்லாவும் முதல் மனிதனான மண்ணு/மணு/ஆதாமும் அதாவது சிவனும் பேசிய மொழி தேவநகரி அதில் இருந்து தோன்றியவை தமிழும் சமஸ்கிரதமும்!ஆதி மொழிகள் ! மற்ற மொழிகள் கலப்படைந்தவை--பின்னால் வந்தவை ! கலப்பில்லாத மொழியாகிய தமிழில் எந்த சொல்லும் சிறந்த அர்த்தம் வரும்

எல் என்றால் எல்லாமுமாணவன்
 
அல்லாவின் திருநாமங்களில் இரண்டு திருநாமங்கள் ஒரே குணத்தை குறிக்கும் காரண பெயர் !அதன் தமிழ் அர்த்தம் பரம பிதா என்பது !
பரம பிதா என்ற நாமம் அல்லாவின் திருநாமமே !!!அது இணைவைப்பு அல்ல !

நான் இனைவைக்கிரவநல்ல !கடவுள் அல்லது உங்கள் பாஷையில் அல்லாவை மட்டுமே வழிபடுகிறவன் !

அல்லா படைக்க பட்ட அனைத்திற்கும் பிதா அதாவது பரமபிதா என்பது இயேசுவின் உபதேசம் ! இயேசு இனைவைப்பாலறல்ல ! இறைதூதர் --நபி !உயிரோடு கடவுளிடம் எடுத்து கொள்ள பட்ட ஒரு  நபி !பூமியில் இருந்த காலத்தில் இறந்தவர்களை எழுப்பவும் நோயாளிகளை சுகமாக்கவும் அல்லாவால் அதிகாரம் கொடுக்க பட்ட ஒரு நபி !மீண்டும் பூமிக்கு வந்து தஜ்ஜாலை(கலியனை ) அழித்து பூமி முழுமையும் அல்லாவின் ராஜ்ஜியத்தை நிறுவ போகிறவர் !அவர் வந்து ஜிசியா வரியை ஒழிப்பார் என்றால் என்ன பொருள் ? மார்க்க வேறுபாடுகள்  இல்லாது போகும்  என்பது அர்த்தம் ! அதாவது  சகல  மதங்களின்  மூலமாக  அருளப்பட்ட  இறைவார்த்தைகள்  அனைத்தும் சமரசப்படுத்தப்படும்  . அதுவரை மாற்று மார்க்கத்தினர் இருப்பார்கள் என்பதால் ஜிசியா வரி இருக்கும் !

முகமது மறித்து பூமியில் நித்திரையில் உள்ளார்! அல்லாவிடம் சென்றவர் இயேசு !இயேசுவை வழிபட கூடாது என்பதில் மாற்று கருத்து இல்லை !கடவுள்  எல்லோருக்கும் பிதாவாக இருக்க அவர் இயேசுவுக்கு மட்டும் பிதா என புரட்டும் கிறிஸ்தவ புரட்டு தவறானது !ஆனால் அதற்காக இயேசுவை ஓரங்கட்டி அவரை காபீர் போல பாவிக்கும் முஸ்லீம்களின் அணுகுமுறையும் தவறு !அவரை நபி என்கிற மரியாதையுடன் அவரின் உபதேசங்களை கற்று கொள்ள வேண்டும் !ரூஹுள் குதுஸ் என்னும் பரிசுத்த ஆன்மாவினால் கன்னி மேரியின் வயிற்றில் ஜனித்தவர் !அதனால் பிறவியிலேயே பரிசுத்த ஆன்மா அவர் !

 அல் குரான் 2:253. அத்தூதர்கள் - அவர்களில் சிலரைச் சிலரைவிட நாம் மேன்மையாக்கி இருக்கின்றோம்; அவர்களில் சிலருடன் அல்லாஹ் பேசியிருக்கின்றான்; அவர்களில் சிலரைப் பதவிகளில் உயர்த்தியும் இருக்கின்றான்; தவிர மர்யமுடைய மகன் ஈஸாவுக்கு நாம் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்தோம்; இன்னும், ரூஹுல் குதுஸி (எனும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு உதவி செய்தோம்; அல்லாஹ் நாடியிருந்தால், தங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்த பின்னரும், அத்தூதுவர்களுக்குப்பின் வந்த மக்கள் (தங்களுக்குள்) சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்; ஆனால் அவர்கள் வேறுபாடுகள் கொண்டனர்; அவர்களில் ஈமான் கொண்டோரும் உள்ளனர்; அவர்களில் நிராகரித்தோரும் (காஃபிரானோரும்) உள்ளனர்; அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் (இவ்வாறு) சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்; ஆனால் அல்லாஹ் தான் நாடியவற்றைச் செய்கின்றான்.


எனவே தனிமனிதன் பரிசுத்தம் அடைய ;அல்லாவுக்கு பிரியமான மனிதனாக மாற இயேசுவின்  உபதேசங்களை புரிந்து கொள்வது நல்லது !அப்போது மட்டுமே பரிசுத்தமான முஸ்லீமாக மாற முடியும் !வெறும் சடங்காலும் வழிபாட்டாலும் குரானை ஒதுவதாலும் மட்டும் பரிசுத்தம் அடைய முடியாது !அதற்கு அடையாளம் முகமது நபி பூமியில் நித்திரையில் உள்ளார் !ஆனால் பிறவியிலேயே பரிசுத்த ஆன்மாவான இயேசு உயிரோடு அல்லாவிடம் எடுத்து கொள்ள பட்டர் !
பைபிள் ,குரானின் வசனங்களின் படி கடவுளிடம் சென்றவர்கள் ஏனோக்கு , ஆப்ரஹாம் ,மோசே ,எலியா , இயேசு  மட்டுமே ! அல்லாவிற்கு  எப்படி அலை  பட்டமோ  அதே அலை பட்டம் ஈசா (அலை) க்கு உள்ளது  . யாரெல்லாம் பரலோகம் சென்றார்களோ  அவர்களுக்கு மட்டுமே  அலை  பட்டம் குர்ஆனில் உள்ளது மற்ற மனிதர்கள் எல்லாம் மறித்து நியாயத்தீர்ப்பு நாளுக்காக பூமியில் நித்திரையில் உள்ளனர் !

ஏனோக்கு என பைபிளில் குறிப்பிட படுபவர் ஜலப்பிரளயத்தால் பூமி அழிவதற்கு முன்பு வாழ்ந்தவர் என்பதால் பைபிளில் அவரைப்பற்றிய விரிவான விபரங்கள் இல்லை !ஜலப்பிரளயத்திற்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்தது இந்தியாவின் லெமூரியா கண்டம் !
பைபிளும் குரானும்  ஆபிரஹாமின் வாரிசுகளுக்காக சொல்லப்பட்ட வேதங்கள் ஆனதால் ஜலப்பிரளயத்திற்கு முந்தய வரலாறுகள் அதிகம் விளக்க படவில்லை !அதனால் இந்தியர்களாகிய நாம் தான் நமது பாரம்பரிய உண்மைகளை உலகிற்கு சொல்லியாக வேண்டும் !}
ஏனோக்கு என்றால் ஒரே பார்வை -  நோக்கம் - சிந்தை உள்ளவர்  --அவரே ஆதாமாகிய சிவனுக்கு அடுத்து வந்த முதல் இறைதூதர்- ஸ்ரீராமர்  என்கிற இந்தியாவின் இறைதூதர் !

அவர் கடவுளுக்கு மனிதர்களை  இணை வைத்த நடைமுறையை தலைமை ஏற்று நடத்திய ராவணனை ; வேதங்களை  தேடிய  முனிவர்களுக்கு தொந்திரவு கொடுத்த ராவணனை அழித்து வேதங்களுக்கு புத்துயிர் கொடுத்தார் 

ஸ்ரீராமர் ஏக இறை வழிபாட்டுக்காரர் . அவர் ஒரே ஒரு பாணம் (அம்பு) மட்டுமே வைத்திருந்தார் . அது இறைவனால் சர்வ வல்லமை உள்ளதாக அவருக்கு அருளப்ப்ட்டிருந்தது . பல மனைவிகள் என்ற நடைமுறையை மாற்றி ஒரே ஒரு மனைவி என்ற ஏகதார கொள்கைக்கு முதல் உதாரணமாக இருந்தார் 


அவரைப்பற்றி பழைய ஏற்பாட்டு தவ்ராத்தில் சொல்லப்பட்டுள்ள விபரமாவது :


ஆதியாகமம் 5:23 ஏனோக்குடைய நாளெல்லாம் முந்நூற்று அறுபத்தைந்து வருஷம்.ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருக்கையில், காணப்படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டார்.
எபிரெயர் 11:5 விசுவாசத்தினாலே ஏனோக்கு மரணத்தைக் காணாதபடிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டபடியினாலே, அவன் காணப்படாமற்போனான்; அவன் தேவனுக்குப் பிரியமானவனென்று அவன் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்னமே சாட்சிபெற்றான்.








யார் பரம பிதா ?

மனுஷர் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; செய்தால் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை.
ஆகையால் நீ தர்மஞ்செய்யும்போது மனுஷரால் புகழப்படுவதற்கு, மாயக்காரர் ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வதுபோல, உனக்கு முன்பாக தாரை ஊதுவியாதே; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலது கை செய்கிறதை உன் இடது கை அறியாதிருக்கக்கடவது;
அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா தாமே உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்.---இறைதூதர் இயேசு!!!(மத்தேயு:6)


கடவுளை இயேசு உங்கள் பிதா என சொல்லியுள்ளதை நன்கு கவணிக்க வேண்டுகிறேன்!!!

மனிதன் உள்ளத்தூய்மை, உள்ளார்ந்த ஞானம் பெற நுட்பமான, எளிய உபதேசங்கள் இயேசு வழிகாட்டியுள்ளார்! எல்லா மதத்தினரும் கற்றுகொள்ள வேண்டியவை!எளிதாய் கடைபிடித்து கடவுளின் பிரியத்திற்கு பாத்திரமாகலாம்!

யார் கடவுள் என குழப்பம் செய்வதில் மனிதன் காட்டுகிற அக்கறை;அதில் தனது கொள்கை தான் பெரிசு மற்றதெல்லாம் சிரிசு என மதப்பெருமை பாராட்டுவதில் மனிதனுக்கு உள்ள பிரியம்; கடவுளோடு ஒப்புறவு ஆவது என்பதில் அக்கறை இருப்பதில்லை!!!அதனால் கடவுள் யார் என்கிற குழப்பங்களுக்கு முற்றுபுள்ளி வைக்க இயேசு ஒரு எளிய வழியை காட்டினார்! அவர் கடவுள் எனக்கும் உங்களுக்கும் சகலருக்கும் பிதாவானவர்--பரமபிதா என்றார்!

அவரது உபதேசங்களை படிக்கிற ஒருவர் ``என் பிதாவானவர் என குறிப்பிட்டதை விட உங்கள் பிதாவானவர் என அதிகம் குறிப்பிட்டுள்ளார்`` என்பதை எண்ணிகூட பார்க்கலாம்!அந்தோ பரிதாபம்! கிறிஸ்தவர்கள் என்று சொல்லிகொள்பவர்கள் என்பிதா என்பதை மட்டும் பிடித்து அவர் ``இறைமகன்``--சொந்த மகன் --ஒரேபிள்ளை--அதனால் இவர் கடவுளோடு கூட்டணி வைத்து குழு ஆட்சி செய்வதாக ஒரு மாய்மாலத்திற்குள் விழுந்து விட்டார்கள்!தாங்கள் செய்கிற பிரார்த்தணையில் இயேசுவிடமே பிரார்திப்பதும் பாடல் பாடி ஆட்டம் போட்டுவிட்டு எப்போதாவது ஒரு வார்த்தை பிதாவே-கடவுளே என சொல்லிகொள்வதுமாக உள்ளனர்!

பிறப்பினாலோ அல்லது சடங்காச்சாரங்களாலோ அல்லது காணிக்கை செலுத்துவதாலோ கடவுளோடு ஒப்புறவு ஆகமுடியாது! உள்ளார்ந்த இறைஅச்சம், அன்பு, பக்தியின் மூலம் மட்டுமே கடவுளின் ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க முடியும் என்பது இயேசுவின் உபதேசம்! ஆனால் இவைகளைப்பற்றிய பிரஞ்ஞை அக்கறை இல்லாத வறட்டு மதவாதிகள் இயேசுவை கடவுளாக சித்தரித்து அய்ரோப்பிய கலாச்சாரத்தை திணிப்பதால் உயர்ந்த இந்திய பாராம்பரியத்தில் கலாச்சார சீர்கேடுகள் தினிக்கபடுகின்றன!``வந்துட்டார் வந்துட்டார்!! தொட்டுட்டார் தொட்டுட்டார்!! பாவத்தையெல்லாம் இப்பவே போக்கிட்டார்!! இப்பவே சுகம் கொடுத்துட்டார்!!! கைகால் இடுப்புவலி சுளுக்கு`` என திறமையாக லேகியம் விற்கிற வியாபாரத்தை ஆண்மீகம் என்றும் கடவுளின் ராஜ்ஜியம் என்றும் சித்தரிக்கின்றனர்! எனவே பைபிள் என்றாலே வெறுக்கபடுகிற சூழ்நிலை காணப்படுகிறது

கிருஸ்தவர்களின் தவறான வியாக்கியானங்கள் இயேசுவின் அற்புதமான உபதேசங்களை ஓரங்கட்டி மறைக்கிறது! அவர் கடவுளை அடைய ஒரு நல்லபாலம்--சிறந்த குரு என்கிற உண்மையோடு அவரது உபதேசங்களை அணுக வேண்டும்!!!அஞ்ஞானிகளான கிறிஸ்தவர்களின் வறட்டு கூச்சலை கண்டு இயேசுவின் மீது வெறுப்படையாமல் அவரது உபதேசங்களில் அக்கறை காட்டவேண்டும்!!!

புத்தம்! சமணம் !!

சனாதனமதத்தின் வீழ்ச்சியும் புத்த மதத்தின் வளர்ச்சியும்!
புத்தமதத்தின் வீழ்ச்சியும் சமண மதத்தின் வளர்ச்சியும்!
சமணமதத்தின் வீழ்ச்சியும் சைவ சமயத்தின் வளர்சியும்!



புத்தருக்கு முன்பு உருவ வழிபாடும் பலகடவுள் கொள்கையும் அந்தணர்கள் உயந்த வகுப்பாக கடவுளுக்கு குத்தகைதாரர்களாக வலம் வந்து கொண்டிருந்தனர் !அதனை மாற்றி அரச மதமாக ஆனது புத்த மதம்!
புத்தர் கடவுள் மறுப்பாளாரல்ல! தடியெடுத்தோர் தண்டல்காரன் என கடவுள்கள் பல இட்டுகட்ட படுவது ஒரு புறம் ; பிரபலமானைவகளில் பூசாரிகள் என கடவுளை குத்தகை எடுத்துகொண்டவர்கள் ஒருபுறம் என கடவுளின் பெயரால் பிழைப்புவாதங்கள் பெருகி அடிமைத்தனத்தில் பொதுமக்களை ஆட்டிபடைத்த அறியாமை இருளை களைய வந்தவர் புத்தர்!

பலகடவுள் கொள்கையை உடைத்து இந்தியா முழுமையும் ஏக இறை கொள்கையை ஸ்தாபித்தவர்! எல்லா மனிதனுக்குள்ளும்  (தனக்குள் மட்டும் அல்ல) துலங்கும் இறைவனை தன்னை தூய்மையாக்கி இச்சைகளை அடக்கிய புத்தனாக மாறிய மணிதனே கண்டுணரமுடியும்! அப்படிப்பட்ட துறவிகள் மட்டுமே ஆண்மீகம் தொடர்பாக மக்களுக்கு வழிகாட்ட முடியுமே தவிற பிறப்பாலும் மந்திரம் கற்று ஓதுவதால் மட்டும் அந்தணர் --பூசாரி ஆகிவிட முடியாது என்பதை பலத்த எதிர்ப்புக்கு இடையில் ஸ்தாபித்தவர்!

ஆலயங்கள் பிழைப்புவாதிகளின் கொள்ளைகூடாரமாக மாறி பிறப்பாலும் மந்திரம் கற்றதாலேயும் கடவுளை குத்தகை எடுத்துக்கொண்டவர்கள் பொதுமக்களின் ஆண்மீகதலைமை ஆக மாறிய இருண்ட இந்தியாவில் தன்னை உணர்ந்து தனது அய்ம்புலன்களை அடக்கியாள கற்றுகொண்டவனே ஆண்மீக தலைமை ஏற்க வேண்டும் என்றது புத்த நெறி !
மணிதர்களின் புலண்கள் இச்சையை தூண்டி ``ஆசையை`` கொடுக்கிண்றன! அந்த ``ஆசையே துண்பத்திற்கு காரணம்`` அது பாவபதிவுகளை உண்டாக்கி கடவுளிடமிருந்து மணிதனை அன்னியப்படுத்துகிறது!

கடவுள் +பாவபதிவுகள்= மனிதன்! கடவுளுக்கு அன்னியமானவன்!
மனிதன் -பாவபதிவுகள்= புத்தன்! கடவுளோடு இணைந்த நிலை!
அந்த புத்த நிலை என்பது அடிப்படையில் எங்கும் எல்லா உயிர்களிலும் துலங்கும் எக இறைவனை உள்ளத்தால் வழிபடுவது!
புத்தர் இந்தியாவில் ஏக இறைகொள்கையை உயர்த்திபிடித்த ``குரு``


இக்கொள்கை அசோகர் மூலம் இந்தியாவின் அரச மதமாக மாறி இலங்கை மங்கோலிய இணம் முழுமையும் பரவி நிலைபெற்றது!அதன் பிறகு இச்சைகளை அடக்கு என்ற கொள்கையை பயிற்சிக்கிற புத்தவிகாரங்களில் பொன்னும் பொருளும் புகழும் வந்து குவிந்தன !

இப்போது பிழைப்புவாதிகளின் கவணம் புத்தவிகாரங்களின் மீது விழுந்தது! அந்த பொன்னையும் பொருளையும் புகழையும் நாடி பிழைப்புவாதிகள் புத்ததுறவிகளாய் மாறினார்கள்! புத்த விகாரங்கள் கொள்ளைக்காரர்களின் கூடாரங்களாக மாறத்தொடங்கின!

ஒரு நடைமுறையை உங்களுக்கு சொல்கிறேன்! ஏழ்மையான நிலையில் ஒரு குடும்பம் இருந்தால் ஒரு எளிய வழி! ராணுவத்தில் சென்று சேர்வார்கள்! அது குடும்பத்திற்காக ஒரு தியாகம் போல! அங்கு குடும்பத்தை கொண்டு வைத்திருப்பது அவ்வளவு ஒத்துவராது !பணமும் செலவாகும்! ஆனால் குடும்பத்தை பிறிந்து அங்கிருக்கும் ஒருவருக்கு உணவு உடை இருப்பிடம் ராணுவ செலவு! மாதாமாதம் சம்பளம் மிச்சம் ! அந்த சம்பளத்தால் குடும்பத்தை மூண்று படி முன்னேற்றி விடலாம் !அது ஒரு மணிதன் தன்னை தியாகமாக்கி வீட்டுக்கும் நாட்டுக்கும் அர்ப்பணிப்பது!

இது போன்ற ஒரு தியாகம் --ஒரு எளிய வழி--கத்ததோலிக்கர்களுக்கு உண்டு! குடும்பத்தில் ஒருவர் பாதிரியாராக --அல்லது சகோதரியாக மடத்தில் சேர்ந்து விட்டால் போதும் !பதவியில் இருக்கும் போது மடத்தின் சொத்துகளை நிர்வாகிக்கிற வகையில் தனது உடன்பிறந்தவர்களை பல மடங்கு உயர்த்திவிடுகிறார்கள்! இந்த வசதியை கொள்கைக்கும் அப்பாற்பட்ட பிழைப்புவாதிகள் தெறிந்து கொண்டு பிழைப்பதற்காக கொள்கை பேசும் ஆண்மீக வாதிகளாய் ஆவது இயற்கை! இந்தியாவில் இப்படி பல குடும்பங்கள் பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளனர்! எப்போதும் உண்மையை விட பொய்மை தன்னை அதிகம் பிரபலபடித்திக்கொள்ளும்! நடிக்கும்! சாய்பாபா மீது உண்மையான பக்தி கொண்ட சீடர்கள் வெளியே இருந்தார்கள்! ஆனால் அவரிடமிருந்த செல்வத்தின் மீது கண் வைத்த பொய் சீடர்கள் அதிகம் நடித்து அவரிடம் ஒட்டி கொண்டு பலனடந்தார்கள்! அவர் இறந்தவுடன் எவ்வளவு செல்வத்தை கடத்த முடியுமோ கடத்திவிட வில்லையா?

இதுபோல செல்வம் ஓரிடத்தில் குவியும் போது கொள்கையில் ஈடுபாடு இல்லாத பிழைப்புவாதிகள் பிழைப்புக்காக கொள்கையை ரெம்பவே பசப்பி புத்தமடாலயங்களில் புகுந்து கைப்பற்றிகொண்டு திறைமறைவில் பல ஆட்டூளியங்களை செய்யதொடங்கினார்கள்!

அவர்கள் தங்களை புத்தரின் மீது ரெம்ப அபிமாணம் கொண்டவர்கள் போல காட்டிகொள்ளும் பசப்பு வாதத்தின் ஒரு பகுதியாக ஒரு பெரிய சீரழிவு திருத்தல் வாதத்தை புத்தரின் கொள்கையில் சேர்த்தார்கள்! அது புத்தருக்கு ஆயிரம் ஆண்டுக்கு பிறகு ஒரு புத்தமஹாநாட்டில் காணாத ஒன்றை கண்டுவிட்டதாக அறிவித்தார்கள்! ``கடவுள் தான் புத்தராக பூமிக்கு வந்தார் !எனவே இன்று முதல் புத்தரையே கடவுளாக வைத்து வழிபட போகிறோம்`` என்பதே! அதுவரை அரூப ஏக இறைவனை உள்ளத்தை தூய்மையாக்கி வேள்வியாக வழிபட்ட புத்தமதம் ``ஹீணயானம்`` என முத்திரை இடப்பட்டு புத்தரையே கடவுளாக்கி ``மஹாயானம்`` என்ற முத்திரையில் நின்றனிலையில் புத்தர் உட்கார்ந்த நிலையில் புத்தர் படுத்தனிலையில் புத்தர் ஆயிரம் படுத்த புத்தர் என தெருத்தெருவாக உருவ வழிபாடாக மாற்றினார்கள்! புத்தரை கடவுளாக மற்றி தாங்கள் தான் உத்தம சீடர்கள் என்பதுபோல காட்டிகொள்கிற சாக்கில் போலிசீடர்கள் புத்தரின் கொள்கையை குழிதோண்டி புதைத்து விட்டணர்!புத்த விஹாரங்கள் கொள்ளைக்காரர்களின் கூடாரமாக மாறி வீழ்ச்சியை நோக்கியது!


அப்போது அரூப ஏக இறைக்கொள்கையின் தொடர்ச்சியாக மஹாவீரரால் முன்னெடுக்க பட்டது ``சமண மதம்``! பிழைப்பு வாதிகள் உள்ளே நுழையாமல் தடுத்தாக வேண்டும் என்பது அவசியம் என்பதாலேயே ``சமண முனிகள் சகலத்தையும் துறந்த பக்குவம் எட்டியிருக்க வேண்டும் என்பதன் அடையாளமாக மஹா நிர்வாணம் வலியுருத்தபட்டது !மலை குகைகளில் கல்படுக்கைகளில் தான் வாழவேண்டும் ! பொதுமக்கள் கட்டிய கட்டடங்களில் வாழகூடாது! ஊருக்குள் சென்று முதல் வீட்டில் பிச்சை கிடைத்தால் உண்ணலாம்; கிடைக்கவிட்டால் அடுத்த வீடு செல்லாமல் பட்டிணி இருக்கவேண்டும்! காசை கையாலும் தொடக்கூடாது என்ற கடும் சட்டங்கள் அமலுக்கு வந்தன! இந்த சாதகன் எதையும் துறந்து தன் உணவுக்கு கூட கடவுளை மட்டுமே நம்பி வேண்டி முதல் வீட்டை தேர்ந்தெடுத்தாக வேண்டும்! இத்தகைய பயிற்சி உள்ளர்ந்த இறைதேடல் இல்லாத பிழைப்புவாதிகளால் ஒரு நிமிடம் கூட நிற்க முடியாதது! இந்த சமண மதம் தனது பற்றுருதியால் தர்ம நெறியால் இந்தியா முழுவதும் 1800 ஆண்டுகள் வரை அரசமதமாக மாறிற்று! கலப்பிரர் என்று இல்லை தமிழக சேர சோழ பாண்டியர் வரை சமணமதத்தை தழுவியவர்களாகவே இந்தியா இருந்தது!

சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி, சிலப்பதிகாரம், மணிமேகலை,திருக்குறள்--இவையெல்லாம் சமணர்களின் இலக்கியங்களே! இங்கு இறைவன் ``ஆதிபகவன்`` இருள்சேர் இரு விணையும் சேரா இறைவன் என குறிக்க படுவதை காணலாம்! அரூப ஏக இறைவனே உள்ளத்தால் வழிபடப்பட்டவர்! சித்தன்னவாசல் குடைவரை கோவில் என்பது சமணர்களின் தியாண மண்டபமாகும்! அந்த கோவிலின் பெயர் ``அறிவர் கோவில்`` கடவுள் முற்றறிவாளன்--அறிவர் என இங்கு குறிக்க படுகிறது! செயல்விளைவு தத்துவம் --கர்மா தத்துவம் என்ற இந்துமத்தத்தின் ஜீவ நாடியான தத்துவம் புத்த,சமண மதங்களின் உபதேசமாகும்! எங்கும் எல்லா உயிர்களிலும் நிறைந்த இறைவனை உள்ளத்தால் வழிபடுவது என்பதாலேயே ஒரு எறும்பை கூட அறியாமல் மிதித்து விடக்கூடாது என்ற ஜீவகாருண்ய ஒழுக்கம் கடைபிடிக்க பட்டது! ஆயிரம் ஆயிரம் துறவிகள் கூடி உண்ணாமல் உறங்காமல் தியாணித்து அதன் பலனாய் இந்தியா செழிப்பானா நாடாய் இருந்தது! மக்கள் மண்ணர்கள் இறைஅச்சம் உள்ளவர்களாய் நீதிதவறாமல் வாழ்ந்தனர்! மண்ணர்களுக்கிடையில் சண்டைசச்சரவுகளும் யுத்தங்களும் கூட அதிகம் இல்லை! உண்மையில் அது ஒரு ``பொற்காலமே`` ஆனால் உருவ வழிபாடு கோவில்கள் யாவும் அடைக்க பட்டு புல்மண்டி போய் இருந்தது! அந்தணர்கள் விவசாயம் பல தொழில் செய்து பிழைக்கும் நிலையில் இருந்தனர்!

மதுரை கூண்பாண்டியனை திருனாவுக்கரசர் சைவத்திற்கு மாற்றும் வரை சமண மதமே அரச மதமாக இருந்தது! திருனாவுக்கரசர் சைவசமயத்தை மீண்டும் உயிரூட்டி கோவில்கோவிலாக திறந்து புல் வெட்டும் வேலையைதான் செய்தார்! ``உழவாரப்படை `` அமைக்க வேண்டிய அளவு உருவவழிபாட்டு கோவில்கள் யாவும் அடைக்க பட்டு இருந்தன! அடுத்து மாணிக்கவாசகர் பாண்டிய மண்ணனின் அமைச்சராக இருந்து சைவசமயத்தை உயிரூட்டினார்!

அதுவரை வேறு தொழில் செய்த அந்தணர்கள் மீண்டும் கோவில் நிர்வாகத்திற்கு வந்து சேர்ந்தனர் !அது நாள் வரை அடக்கி வாசித்தவர்கள் தங்கள் பழியை தீர்த்து கொண்டனர்! சமண முனிவர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டது உண்மையே! சமண மதம் சுவடே இல்லாமல் அழிக்கபட்டது! ஸவ்ராஸ்ட்ராவில் மட்டுமே நிலை கொண்டு உள்ளது!

சமண மதத்தின் வீழ்ச்சிக்கு வழக்கம் போல கலப்பு ஒரு காரணமாகும்! எந்த ஒரு தத்துவமும் நாளடைவில் மனித கற்பனைகள் கலப்புள்ளதாகி சீர்கெட்டு போவது இயற்கை! சமண மதத்தில் ஏக அரூப வழிபாட்டில் சிறுகசிறுக ஆவிமண்டல சக்திகள் மீது நம்பிக்கை வளந்தது! பல வாணவர்கள் நன்மை செய்ய உள்ளனர் என்கிற நம்பிக்கையும் அவர்களை துணைக்கு அழைப்பதும் ஏவல்செய்வதும் வளர்ந்தது! மணிமேகலையில் இப்படி வாணவர் ஒருவர் ``மணிமேகலையை ஆசை கொண்ட சோழ இளவரசணை கொண்றதாக ஒரு கதை உள்ளது!`` அது ஏவல்! இந்த ஏவல் கலை சமண மதத்தை தழுவியவர்கள் செய்ய தொடங்கி பொதுமக்களுக்கு இடரல்கள் கொடுக்க தொடங்கினர்! வாணவர்களை சிலையாக செதுக்குவது கிராம தெய்வ வழிபாட்டுக்காரர்களை கொல்லுவது கலுவேற்றி கொல்லுவது என ஆதிக்கம் செய்கிறவர்களாய் மாறத்தொடங்கினர்!அதுவுமல்லாமல் மாஹாவீரரை அரச மரத்தடியில் உபதேசிக்கிற குருவாக சிலை வடிக்க தொடங்கினர் ! உருவ வழிபாட்டை முற்றிலும் துடைத்து அந்தணர்களை செல்லாக்காசாக மாற்றி வேறு தொழில் செய்யவைத்த சமணர்கள் காலப்போக்கில் உருவ வழிபாடு போல வாணவர்களை பற்றிய கதைகளை பரப்பியதால் மீண்டும் உருவ வழிபாட்டிற்கு அவர்களே பாதையை திறந்து கொடுத்தது போல ஆயிற்று! ஆதியில் வாதில் சமணர்களை வெல்ல முடியாமல் மாற்று சமயத்தினர் பல முறை தோல்வியடைந்தனர்! அவர்களை சமணர்கள் கலுவேற்றினர் ! எறும்பை கூட மிதிக்க கூடாது என்ற ஆதி உபதேசம் மறைந்து தங்கள் ஆதிக்கத்தை நிலைனிறுத்த மணிதர்களை கலுவேற்றுகிறவர்களாக சமணர்கள் மாறியது அவர்களின் சீரழிவுக்கு காரணமாயிற்று! அவர்களின் பல தவறுகள் கடவுளின் பலத்தை அவர்கள் இழந்து போவதற்கு காரணமாயிற்று!

முதலில் ``தர்மசேனர்`` என பெயரை மற்றிகொண்டு சமண துறவியாக மாறியவர் திருனாவுக்கரசர்! அங்கு சமண மத குருமார்கள் செய்கிற அக்கிரமங்களை கண்டு வெறுப்படைந்தும் அக்காள் திலகவதியின் முயற்சியாலும் அவர் மீண்டும் சைவரானர்!
காலசக்கரம் மீண்டுவரும்; இக்கரைக்கு அக்கரை பச்சையாக அடிக்கடி மாறும்! மக்கள் மாறிமாறி ஓட்டுபோடுவது போல!அதனை பலகடவுள் கொள்கையை உபதேசிக்கும் ஆவிமண்டல சக்திகள் பயன்படுத்தி கொண்டன! ஏக இறைகொள்கை பேசிணாலும் கடவுளுக்கு பிரியமில்லாத அக்கிரமங்களை கடவுள் ஆதரிக்கமாட்டார்! அதனால் வாதில் திருனாவுக்கரசர் வென்றார்! வைகையில் திருனாவுக்கரசர் விட்ட சுவடி எதிர்னீச்சலடித்து திருவேடகத்தில் கரை ஏறிற்று! கூண்பாண்டியர் சைவமதத்தை ஏற்று அரச மதமாக்கிணார்! அப்போது சமணர்கள் முன்பு பிறரை கலுவேற்றியது போல சமணரையும் கலுவேற்றினார்கள்! இருப்பினும் சமண மதத்தின் ஆதிகால நண்மைகளை மறக்கமுடியாததாலும் மஹாவீரரின் சாதனையை மதித்தும் மஹாவீரர் குருவாக தட்சிணாமூர்த்தியாக அரசமரத்தடியிலிருந்து உபதேசிப்பவராக சைவ கோவில்களில் சேர்த்து கொள்ளப்பட்டார்!``குரு``என்ற சொல்லுக்கு நீங்காத மரியாதையை சைவர்கள்  மகாவீரருக்கே கொடுத்துள்ளனர் !!

கடவுளும் காப்பியடித்திருப்பாரா??????

இறைதூதர் பூமியில் இருக்கும்போது அவரை மனிதர்களை தூண்டி விட்டு எதிர்ப்பதும் கொடுமைப்படுத்துவதும் கொல்லுவதும் சாத்தானின் இயல்பு!இறைதூதர்கள் சென்றுபோனவுடன் அவர்களை கடவுளுக்கு இணைவைத்து கும்பிட்டால் போதும் என சீடர்களின் அபிமாணத்தை மிகைப்படுத்தி தூண்டி விடுவதும் சாத்தானின் இயல்பு!
                       இயேசு சதா கடவுளை துதிப்பவராக உயர்த்துபவராக வாழ்ந்து காட்டியும்``என் பிதாவின் சித்தத்தை செய்கிறவனேயல்லாமல் என்னை நோக்கி கர்த்தாவேகர்த்தாவே என அழைக்கிறவன் பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பதில்லை``என எச்சரித்தும் இன்றைக்கு கிரிஸ்தவர்கள் ஜெபம் என்ற பெயரில் 99% இயேசுவிடம் பேசிவிட்டு முடிக்கும் போது மட்டும் பிதாவே-கடவுளே என முடிக்கும் பழக்கம் வந்துவிட்டது!திரித்துவம்,திரியேகத்துவம் என குழப்பத்தில் மூழ்கி கடவுளை விட்டுவிட்டார்கள்!
                       கடவுளுக்கும் கடவுளின் வார்த்தைக்கும்(இயேசு) வித்தியாசம் உள்ளது!வழிபாடு கடவுளுக்கு மட்டும் உரியது!நான் `வழி` என்பதை ` நான்தான்` என சொன்னதாக கிறிஸ்தவர்கள் திரித்து விட்டனர் !
                        இது போலவே முந்தய இறைதூதர்களான ராமனும் கிரிஸ்ணரும் கடவுளாக்கப்பட்டனர்!நான் உடைத்தால் மண்சட்டி நீ உடைத்தால் பொண்சட்டி! வெளி நாட்டில் மரித்தவர்களை  கடவுளுக்கு இணை ஆக்கு ஆனால் உள்நாட்டில் மரித்தவர்களை ஓரங்கட்டு!என்றால் மதச்சண்டை வராமல் என்ன வரும்?!
              `லார்ட்` என்பது அதிகாரிகளை குறிக்கும் மரியாதை சொல்!லார்ட் ஜீசஸ், லார்ட் காட் என்று மரியாதை சொல்லை கர்த்தர் என்று தமிழ் தெறியாத ஒருவர் மொழிபெயர்க்க கர்த்தரை ஒரு கடவுளாக்கிய கொடுமை கிரிஸ்தவர்கள் மீது சத்தானின் நுட்பமான
ஆளுகைக்கு சான்று!லார்ட் ஜட்ஜ்,லார்ட் மினிஸ்டர்,லார்ட் கவர்னர்,லார்ட் சீ,எம்,லார்ட் பி.எம்,லார்ட் பிரசிடெண்ட் என்று அழைப்பது அரசு மரபு!இந்த லார்ட்-ய் கர்த்தர் என மொழிபெயர்த்து ``கர்த்தாவேகர்த்தாவே``என பிரார்த்திக்கும் கிரிஸ்தவர்கள் எந்த கர்த்தரை அழைக்கிறார்கள்?
                       உலகம் முழுவதிலும் மரித்த மனிதர்களின் மேலுள்ள அபிமானத்தை அவர்களின் பெயரை சொல்லி சில அற்புதங்களை செய்து அவர்களும் கடவுளாகி விட்டனர் என மாயையை பரப்புவது அசுரர்கள் ! கணக்கடங்காத கடவுளை உண்டாக்கி வழிபட செய்து கடவுளை காணாமல் போக செய்யும் வேலையை அசுரர்கள் வெற்றிகரமாக ஆதாம் முதல் செய்து வருகிறார்கள்!
                       அதே வேலையை தான் கடவுளும் இயேசு மூலம் செய்திருப்பாரா?ஆதாம் தான் அர்த்தனாரீஸ்வர்--ஆண் பாதி பெண் பாதி என்பது அவர்தான்!மரித்த மனிதர்கள் பலர் சாத்தானின் கைங்கரியத்தால் கடவுளாக்கபட்டனர்!அதை கடவுளும் காப்பியடித்திருப்பாரா?

ஆதி மனிதர்கள் வரலாறு!

முதல் மனிதனான ஆதாம் பாவம் செய்து சொர்க்கத்திலிருந்து பூமியில் இறக்க பட்டது நமது இந்தியாவும் தெற்க்கே இருந்த ஜலப்பிரளயம் வந்து அழிந்த லெமூரியாக்கண்டமாகும்!இங்கு பேசப்பட்ட மொழி `தேவனகரி`என்பதாகும்!இது தமிழுக்கும் சமஸ்கிரதத்திர்க்கும் மூலமான மூத்த மொழி! எனவே தான் தமிழை முன் தோன்றிய மூத்த மொழி எண்கிறார்கள்!

 ஆதாம் கடவுளை கடவுள் என்று மட்டும் வழிபட்டார்! உருவமற்ற ஏக இறைவனே அவரது தெய்வமாகும்! இதுவே உலகத்தின் ஆதி இந்து மதமாகும் !இந்து என்றால் கடவுளுக்கு பயந்த பக்தி என்று பொருள்! இம்மனிதர்கள் ஒவ்வொருவறும் ஆயிரம் ஆண்டு வரை வாழ்ந்துள்ளனர்!


அக்காலத்தில் முனிவர்கள் தபோவனம் அமைத்து கடவுளை தேடுவதும் இறைபக்தி,போர்க்கலை,கல்வி,தர்மனியாயங்கள் பற்றி கற்பித்து வந்தார்கள்! வசிஷ்டர் விசுவாமித்திரர் சமகாலத்தவர்கள் ராமரின் குருமார்கள் ராமஅவதாரத்தைப்பற்றி முன்கூட்டியே தெரிந்தவர்கள் -முனிவர்கள்!


வசிஷ்டரின் மனைவி அகல்யை வானமண்டலத்து தேவதூதன் ஒருவரால் மோகிக்கப்பட்டு நயவஞ்சகமாக ஏமாற்றப்பட்டு சாபத்துககுள்ளானார்கள் அதுபோல அருந்ததி வான்வெளியில் சென்ற தேவதூதர்களை குளத்து தண்ணீரில் கண்டு அழகு என சிந்தித்ததற்கே கற்பு இழந்தவளாகி சாபம் பெற்றாள் என்கிற கதை உண்டு!


இதை ஏன் சொல்லுகிறேன் என்றால் ஆதாம் முதல் நோவாவின் காலத்தில் பிரளயம் உண்டாகி பூமி அழியும்வரை பல ஆயிரம் ஆண்டுகள் இந்தியாவில் இரண்டு யுகங்கள் கடந்திருக்க வேண்டும் பைபிளில் தேவபுத்திரர்கள் மனிதபுத்திரிகள் அழகுள்ளவர்கள் என்று கண்டு தங்களுக்கு பெண்கொண்டதால் பூமியில் அரக்கர்கள் பிறந்து பலத்தார்கள் என்று ஒரு வசனம் உள்ளது சாகுந்தலை என்கிற புகழ் பெற்ற காதல் காவியத்தில் சகுந்தலை தன்னை திருமணம் செய்த கந்தர்வன் --தேவபுத்திரனான துஷ்யந்தனை- பிரிந்து சென்றவனை   தேடிகண்டுபிடித்த வரலாறு உள்ளது!


இப்படி மனிதர்களுக்கும் தேவதூதர்களுக்கும் பிறந்த  அரக்கர்கள் பலமும் ஆணவமும் கொண்டு மனித இனத்தை துண்பம் செய்தபோது ராமரும் கிருஷ்ணரும் அவதரித்து தர்மத்தை நிலைநாட்டினார்கள் அசுரர்களை அழித்தார்கள் அதன்பிறகு தேவபுத்திரர்கள் பூமியில் நேரடி தலையீடு செய்வது தடைசெய்யப்பட்டுவிட்டது! தேவபுத்திரர்கள்--கந்தவர்கள்-- தேவதூதர்கள் பூமியில் பெண் கொள்ளுவது தடைசெய்யப்பட்டுவிட்டது கிருஸ்ணர் தாம் பரலோகம் செல்லும்முன்னர் கலியுகம் பிறக்கபோவதைப்பற்றி தர்மருக்கு எச்சரிக்கை செய்துள்ளார்! கலிபுருசன் என்பவனது ஆட்சி என்பது அமானுஷ்யமானது! கடவுளுக்கு கீல்படிதலற்ற தேவதூதர்களுக்கு --அதாவது அசுரர்களுக்கு--சாத்தானின் கூட்டத்திர்க்கு அதிகாரம் வழங்கப்பட்டுவிட்டது!


             அசுரர்கள் யாருக்கும் கண்முன்னால் தோன்றி உபதேசிப்பதில்லை! மனிதர்களின் உணர்வுகளை தூண்டி இச்சைகளை அழகாக்கி காட்டி ஆணவத்தை சுயபெருமையை குழு உணர்வுகளை தூண்டி ஒருவருக்கு ஒருவர் தீங்கு செய்ய தைரியம் கொடுப்பது அதை நியாயப்படுத்துவது அசுரர்களின் அமானுஷ்ய வேலை!காமம்,மோஹம்,குரோதம்,மதம்&மாச்சரியம் எங்கிர அய்ந்து வகை தீய குணங்களின் வழி அசுரன் ஆட்சி செய்கிரான்!இது மனிதர்களின் தீய குணங்கள் என்று மட்டும் வாதிடாதீர்கள் எதிரிகளை சரியாக கணிக்காவிட்டால் யுத்த களத்தில் முன்னேறவே முடியாது இக்குணங்கள் அஹிரினை அன்று உயர்தினை (personallity caused by Evil Spirits)பேய்,பிசாசு இருப்பதெல்லாம் உண்மையே!(இறந்தவர்கள் எப்படி பேயாய் வருகின்றனர் என்பதை விரிவாய் பிற்பாடு எழுதுகிறேன்)---மனிதருக்கு தீய குணங்களை ஆவியாய் இருந்து அசுரர்கள் தூண்டுகிறார்கள் என்றால் இதை இல்லை என்று மறுப்பதால் என்ன சாதித்துவிடப்போகிறீர்கள் ஏற்றுக்கொண்டால் என்ன குறைந்துவிடும்?ஆனால் நமது நற்குணங்களில் கடவுளின் அருள் வெளிப்படுவதைப்போல நமது தீய குணங்களில் அசுரர்களின் மருள் வெளிப்படுகிறது கடவுளின் அருள் வெளிப்படுகிற என்னிடத்திலேயே அசுரர்களின் மருளும் வெளிப்படுகிறது என்கிற எதார்த்ததை புரிந்துகொள்ளவேண்டும் மனித சரீரம் இரண்டு சக்திகளும் செயல்படுகிற ஒரு ஆடுகளம்!உயிராகிய ஆவியின் மூலமாக கடவுளும் சரீரத்தின் மூலமாக அசுரர்களூம் மனித ஆத்துமாவை ஆதிக்கம் செய்யமுடியும்! ஒரு மனிதனின் ஆத்துமா தன் உயிரை சார்ந்து அதிகம் உள்ளதா அல்லது உடலை சார்ந்து உள்ளதா என்பதைப்பொறுத்து அவன் ஆண்மீக மனிதனாகவோ லவ்கீக மனிதனாகவோ உள்ளான்!இரண்டு சக்திகளுக்கிடையிலும் பந்து போல பந்தாடப்படுகிறான்!கடவுளை அதிகம் சார்ந்துள்ள நிறை பக்தனிடம் கூட அசுரன் சில சமயங்களில் செயல்படுவான் எங்கிர நிதர்சனத்தை தாழ்மையோடு ஒத்துக்கொள்ளுகிற பக்குவம் வேண்டும்!தன்னிடமும் தவறுகள் அடிக்கடி அசுரர்களின் தூன்டுதலால் வருகிரது என்பதை ஒத்துக்கொள்ளாதவர்களே நானும் கடவுளும் மட்டுமே உள்ளோம் என கூப்பாடு போடுகிரார்கள்!
இப்படி கலி பெருத்து அக்கிரமம் பெறுகியபோது நோவாவின் காலத்தில் பூமி ஜலப்பிரளயத்தால் அழிக்கப்பட்டது!அப்போது நோவா குடும்பத்தினர் மட்டுமே மனித இனத்தில்  கப்பல் மூலமாக பாதுகாக்கப்பட்டனர்! இந்த கப்பல் தரை இறங்கிய இடம் அராராத் மலை--ஈராகில்  உள்ளது!


ஜலப்பிரளயத்திர்க்கு முந்தைய மனித சமூகம் இந்தியாவை மையமாக கொண்ட லெமூரியாக்கண்டத்திலும் ஜலப்பிரளயத்திர்க்கு பின்னால் யுப்ரட்டீஸ்,டைக்க்ரீஸ்,நைல் சமவெளியிலும் மனித சமூகம் வளரத்தொடங்கியது!
நோவாவிர்க்கு மூன்று மகன்கள் 1 )யாப்பே 2 )சாம் 3) காம்

காம் இளவயது முதலே நிர்வாணம்--காமவிகாரங்களில் போதிய அக்கறை இல்லாத போக்கு காரணமாக நோவாவால் சபிக்கப்பட்டு துரத்திவிடப்பட்டு அய்ரோப்பா கண்டத்தில் செண்று வாழ்ந்தனர்!இன்றளவும் காமவிகாரங்கலே அய்ரோப்பியர்க்கு பெறும் இடரலாகவும் தடுக்கலாகவும் உள்ளது. இது நாள் வரை அங்கு இறைதூதரும் இல்லை இணிமேலும் வரப்போவதில்லை!ஆசியாக்கண்டத்து கிரிஸ்தவம் பாவவிசயங்களில் மென்மையானது போல தெறிவதாலேயே வெள்ளைக்காராத்தணமான ஒரு இயேசுவை அவர்களாக உருவகப்படுத்திக்கொண்டு அய்ரோப்பிய மயமான கிருஸ்தவ மதத்தை-பாவமன்னிப்பு, இயேசு என்பதையே திரும்ப திரும்ப ஒப்பித்துக்கொண்டே காலம் ஒட்டுகிரார்கள்!பைபிளை பேறுக்கு கய்யில் வைத்துக்கொண்டு தானும் படிக்காமல் இவர்களைக்கண்டு வெறுத்து பிறரும் படிக்காதபடி தடுத்துக்கொண்டும் உள்ளனர்!


முதல் மகனான யாப்பே தாங்கள் வாழ்ந்த பூர்வீகபூமியான இந்தியாவுக்கு வந்து சிந்துசமவெளியில் வாழ்ந்தனர்!இவர்கள் இந்தியா வந்ததால் தாங்கள் அறிந்திருந்த ராமர் கிரிஷ்ணர் வரலாறுகளை செவிவழி செய்தியாக கிராமிய நாடகமாக நிணைவு கூர்ந்து பேணிக்காத்தனர்!


சாம்மின் சந்ததியிலேயே ஆப்ராம் பிறந்தார்! இவறை கடவுள் வேறு பிறித்து உருவமற்ற ஏக இறைவனை வழிபடுபவராக மாற்றி தன் இணத்தாரை விட்டு பிறிந்து கடவுளை மட்டும் நம்பி வாழும் மனிதனாக `அன்னியனும் பரதேசியுமாக` வாழ்கிற ஒரு வாழ்க்கைக்குள் இஸ்ரேலுக்கு வந்து வாழ்ந்தார்!இவரின் வாரிசுகலே சுன்னத் எங்கிர விருத்தசேதணம் செய்கிரவர்கள்---யூதர்கள்&அரபியர்கள்! யூதர்களுக்கு மோசே என்பவரை கடவுள் இறைதூதராக மாற்றி அவர் மூலமாகவே `தவ்ராத்` வேதம் கொடுக்கபட்டது!அரபியர்களில் முஹமது மூலமாக அதே வேதமே `குரான்` ஆக கொடுக்கபட்டது!இவ் வேதங்களை தங்களது அறிவினால் அவர்கள் கொண்டு வரவில்லை !மாறாக தேவதூதர்கள் மோசேக்கும் முஹமதுவுக்கும் பிரத்தியட்சமாக தோன்றி முகமுகமாய் பேசி அவர்கள் சொன்னதையே எழுதினார்கள்!ஆதனால் தான் மனிதன் தோன்றிய வரலாறு ஆதாம் முதல் நோவா -வரை சுருக்கமாகவும் ஆபிராம் காலமுதல் விரிவாகவும் எழுதப்பட்டுள்ளது! இந்தவேதங்களில் கலி யுகத்தில் அசுரர்களின் செயல்பாடுகளும் அவர்களின் ஏவுதலுக்கு இணங்குகிர மனிதர்களுக்கும் அசுரர்களுக்கும் கலி யுக முடிவிலே நியாயத்தீர்ப்பும் நரகமும் உண்டு என்பதும் கடவுளின் வழி-கடவுளால் அவ்வப்போது எச்சரிக்கையின் குரலாக அணுப்பபடுகிற இறைதூதர்களின் வழியில் நடந்தால் நித்தியஜீவன்-பரலோக ராஜ்ஜியத்திர்க்குள் பிரவேசிக்கமுடியும் என்பது வாக்களிக்கப்பட்டுள்ளது!

எனது தியான அணுபவங்கள்!!!

கடவுள், மனிதன் ,தேவர்கள் அசுரர்கள் என்ற கடவுளுக்கும் மனிதனுக்கும் இடைப்பட்ட சக்திகள் இவற்றின் செயல்பாட்டு களம் பூமி!மனிதன் கடவுளை நோக்கி முன்னேறும்போது அசுரர்களை இனம் காண பழகாமல் மாயைகளை வெல்ல இயலாது!இனம் காணும் போது தனக்குள் தேடுவது மட்டும் போதுமானதல்ல கடவுளை சரண் அடைந்தே ஆகவேண்டும் என்பது விளங்கும்!குண்டலினி மணி பூரகத்தை எட்டியவுடன் கடுமையான ஆவிமண்டல தாக்குதலை சந்தித்தே ஆகவேண்டும்!அப்போதே ஆவியுலகை பகுத்தறிய அறிவை கடவுள் கொடுப்பார்!மூலாதாரத்தை விட்டு கிளம்பிவிட்டாலே மதி நுட்பம் நுண்ணிய அறிவு விசாரம் உண்டாகும்! இந்த நிலையிலேயே குருடன் குருடனுக்கு வழி காட்டமுடியும்!இதை நம்பி ஏமாறுவது நிறைய உண்டு !அசுரர்களை பற்றிய பிரக்ஞை வராதவர்கள் மணி பூரகத்தை எட்டாதவர்களே!மணி பூரகத்தை எட்டாத நிலையிலேயே சமாதியை போன்ற நிலை கிடைத்தது எனது அனுபவமும் கூட!

ஆழ்ந்த தியானம் ,தன்னை மறப்பது , ஒருமணி இரண்டு மணி தியானம் ஒரு சில நிமிடம் போல தெரிவது!உடல் மென்மையாவது மெருகேறுவது ,நம்மிடம் பழகும் போதே நல்லது நடக்கிறது என்பதை அனுபவத்தில் கண்டு நமக்கு அணுக்க நண்பர்கள் உண்டாவது 1988 ல் எனக்கும் இருந்தது!இதில் கொஞ்சம் கர்வம் இருந்தது போலவும் தெரிகிறது!ஆனால் அதன் பிறகு கடுமையான சூடு என் சரீரத்தை தாக்கியது!ஒரு தியானத்தில் என்னை சுற்றி சூறாவளி போல சுழன்று என்னை எதோ தாக்க முயற்சித்து விளித்து கொண்டேன்!திருப்பதி சென்று மலை இறங்கும் போது பஸ்சில் வளைவில் மயக்கம் உண்டாகி எனக்குள் ஒரு பெண் பேசிக்கொண்டே இருந்தது!அதன் பிறகு கொஞ்சம் தூக்கம் போல நினைவு தப்பி அதே குரல் பேசுவது அனுபவமாகி சொல்லொன்னாத மன குழப்பங்கள் ஆட்கொண்டு அதிலிருந்து விடுபட போராடிபோராடி நான் சரியதொடங்கினேன்!இந்த நிலையில் முழு மனித ஆவி ஒன்றை இரவில் பார்த்து நான் ஒதுங்கி போனேன் !சிந்திக்காமல் இருக்க முடிந்த பயிற்சி கைகொடுத்திருக்கலாம் !அடுத்து ஒரு முறையும் பார்த்தேன் !அடுத்து பகலிலேயே நல்ல பாம்பு ஆவி சீறி மறைந்தது !தெருவில் போகையில் வருகையில் காணும் அருவெருப்புகள் பிரேத அழுகல் உணர்வுகள் அப்படியே என் சரீரத்திற்குள் நிறைந்து விரக்தியடைவேன்!வேதாத்திரி மகரிஷி அவர்களிடம் இரண்டு முறை நேரடியாக தொட்டு ஆசி பெற்றும் விடுதலை இல்லை! அவரவர் பாவத்தை அவரவர்கள் அனுபவிக்க வேண்டும் உதவி நான் தூக்கி சுமக்க முடியாது என்பதுபோல அவரிடம் பயம் இருப்பது போல தெரிந்தது!வேணுகோபால சுவாமி நான் வழிகாட்டுகிறேன் என்றார்!ஆனால் அது போதவில்லை!!


ஜீவசமாதிகளை தேடி தியானித்தும் விடுதலை இல்லை!கோவிலாக சுற்றியும் தீரவில்லை!ராமானுஜர் சமாதிக்கு அருகில் கூட தியாணம் செய்தும் பலனில்லை! உடம்பில் கொப்புளங்கள் உண்டாகி அடுத்தவர் முன் அருவெருப்பாகி கூனி குறுகி மன ஊக்கம் தன்னம்பிக்கை சுயம் எல்லாம் அடியோடு போயிற்று !நடை பிணமாய் அதல பாதாளத்தில் ஜாதகம் பார்த்து அதனால் ஜாதகமும் கற்று சித்த வைத்தியர்களின் பின்னால் அலைந்து கொஞ்சம் மூலிகையும் தெரிந்து பல மருத்துவர்களை பார்த்து பலனற்று ஒரு மூன்று மாதம் படுக்கை நிலைக்கு செல்லும்படி ஆயிற்று!அப்போது ``வருத்தப்பட்டு பாரம் சுமக்கிரவர்களே என்னண்டை வாருங்கள் உங்களுக்கு இளைபாறுதல் தருவேன்`` என்ற வாசகம் இயேசுவை பற்றிய ஆர்வத்தை கொடுத்தது!அவர் 10 பெரியாராய் தெரிந்தார்!சித்தர்களில் 10 சித்தருக்கான ஆற்றல், கடவுளது ராஜ்ஜியத்தை தேடுவதற்கு அழைப்பு, கடவுள் மீது பக்தி, அன்பு, சக மனிதர்களை நேசிப்பது, மன்னிப்பது, கடவுளால் பூமிக்கு அனுப்ப படுகிற குருவை -இறைதூதர்களை அடையாளம் கண்டு ஏற்றுகொள்வது ,மனிதர்களின் தீய செயல்களுக்கு பின்னணியில் அசுர சக்திகள் இருப்பது ,இந்த சக்திகளை அவர் தேவனது விரலினாலே துரத்துவது ,அசுர ஆவிகள் வெளியேறும் போது வியாதிகள் சுகமாவது ,அசுத்த ஆவிகள் அவரிடம் பேசுவது இதையெல்லாம் அவர் பிறவியிலேயே பெற்றிருந்தது சிந்திக்க வைத்தது!மனித முயற்சியால் குருவாவனவர்கள் தவிர கடவுளால் அனுப்பபடுகிரவர்களை பற்றி சிந்திக்க வைத்தது!அவர் ஆதியிலிருந்து ஆபிராமுக்கு முன்னமே இருக்கிறேன் மேரியின் மகனாக மட்டும் என்னை பார்க்காதீர்கள் என்றது ராமராகவும் அடுத்து கிரிஷ்ணராகவும் அவதரித்த அனுப்ப பட்டவரை ஞாபக படுத்தியது !அவர்களும் அசுர ஆவிகளை துரத்தும் பணியை செய்தவர்கள் !மறுபடி மறுபடி அவதரிக்கிற கீதையின் வாசகம் நெருடியது!மறுபடி மறுபடி பிறக்கிற கிரிஷ்னரை 5000 வருடமாக தூக்கி வைத்து ஆடுகிற நாம் 2000 வருடத்திற்கு முன் அவர் பூமிக்கு வந்ததை ஏன் உணரமுடியவில்லை?கல்கியாக அடுத்த யுகத்தில் வருவேன் என்று கிருஷ்ணர் சொன்னதை இயேசுவும் மீண்டும் வந்து உலகை ஆளப்போகிரவன் நானே என்றார்!இருவரும் வேறு வேறு என மத சண்டை போடும் நாம் இருவரும் ஒருவர் என்பதை ஏன் புரிந்து கொள்ள கூடாது!


ஆனால் அந்த இயேசு தன்னை கடவுளின் பிரதிநிதி என்றாரே தவிர அவர் இடைவிடாது பிரார்த்திப்பது வாடிக்கை!நாம் ராமரையும் கிரிஷ்ணரையும் கடவுளுக்கு இணை வைத்து ஒரு கும்பிடு போட்டு அவரது கொள்கைகளை காற்றில் விட்டது போல இயேசுவையும் கிறிஸ்தவர்கள் செய்துள்ளார்கள்!இயேசுவும் இறைதூதரே! வழிபாடு கடவுளுக்கு மட்டுமே என்பது குரானின் வெளிப்பாடு!முகமதுவுக்கு குர்ஆனில் உனக்கு சொல்லாத இறைதூதர்கள் உண்டு என சொல்லபட்டது !ராமர் முதல் முகமது வரை 3000 இறைதூதர்கள் பூமிக்கு வந்திருப்பதாக குரான் சொல்லுகிறது!படுக்கையில் பைபிளையும் குரானையும் புரிந்து கொண்டேன்!கீதையை படித்திருந்த எனக்கு என முதல் குருவான ராமரே பைபிளையும் குரானையும் புதிய கோணத்தில் புரிய வைத்தது!வியாதியிலிருந்து விடுபட 7 ஆண்டுகள் வரை கற்றுகொண்டேன்!தியானித்து விட்டு ஏக இறைவனை பிரார்த்திப்பது, எதற்க்கெடுத்தாலும் கடவுளை கெஞ்சுகிற பயிற்சிகள் எனக்கு உண்டாகிறது!அன்றாட வாழ்வில் ஆவிமண்டல செயல்பாடுகளில் அனுபவமேற்படுகிறது!மனதளவில் திருவோடு ஏந்தியவனை போல ஒரு நிலை உள்ளது!இருப்பினும் செல்ல வேண்டிய தூரம் அதிகம்!இந்த அனுபவத்தாலேயே அசுரர்களை பற்றிய எச்சரிக்கையை ஆன்மீக அன்பர்கள் பெற திரும்ப திரும்ப பேசிவருகிறேன் !இந்தியாவை உய்விக்க இறைதூதர் ஒருவரை கடவுள் அனுப்பினால் இத்தனை ஞானத்தேடல் உள்ள இந்தியா மீண்டும் உச்சத்திற்கு வருமே என்பதால் அதற்காக பிரார்திக்கிற மன நிலையை உருவாக்க முயற்சிக்கிறேன்!

தன்னை உணர்வது ;தனக்குள்ளாக தேடுவது என்பது முழுமையை நோக்கி அழைத்து செல்லாது!அது ஆவி மண்டல சக்திகளுடன் இடைபட பக்குவபடுத்தும் அவ்வளவே !கடவுளை நோக்கிய பிரார்த்தனை ;அவரோடு நேரடியாக உறவாட முயற்சிக்க வேண்டும் கடவுளால் அனுப்ப பட்ட சற்குரு நாதர்களான ராமர் கிருஷ்ணர் இயேசு முகமது ஆகியோர் மூலம் கடவுளே வெளிபடுத்தியுள்ள இறைவார்த்தையை விசாரிக்க பழக வேண்டும் !தியானம் யோகம் என்பது ஒரு கருவி அதனை அறிந்து கொண்டதை பற்றி மட்டுமே பெருமை பாராட்டி கொண்டிராமல் கடவுளை முக்கியப்படுத்தி பிரார்த்திக்கவும் தொடர்பு கொள்ளவும் முயலவேண்டும் !எல்லா புகழும் இறைவனுக்கே!!!

வெறுமை ஆக்கல்

இருக்கிறேன் என்ற இருப்பை தவிர வேறுதுவும் இல்லாது இருங்கள் !
                         --- Rrs Sundaram 
நான் நித்தியமானவல்ல பூமியும் வாணமும் ஓர் நாள் அழிக்கபடும் ஆனால் நித்தியமானவர் கடவுள் ஒருவரே அவர் நாடினால் நித்தியமானவனாக வாக்களிக்கபட்ட பரலோகத்திற்குள் நுழைவேன் இது கடவுள் தமது இறைதூதர்கள் மூலமாக உறுதிபடுத்தியது இதனை மறுக்கிற தத்துவ ஞானம் எவ்வளவு புலமை வாய்ந்தது ஆனாலும் சூனியவாதம் அசுரனின் கடைசி மாய்மாலம்

மனிதனின் குழப்பம் பிரச்சினைகளுக்கு காரணம் அவன் கடவுளின் கரத்தில் நல்ல கருவியாய் -அவரின் சித்தம் மட்டும் செய்து விட்டு நிம்மதியாய் இருப்பதற்கு பதில் சுய சித்தம் செய்வதை தேர்ந்தெடுத்து கொண்டது !சுய சித்தம் சிறப்பாய் செய்து கடவுளை போலவே உன்னால் ஆகிவிட முடியும் என அசுரன் ஏமாற்றியதை கேட்டு கடவுளாகும் ஆசையில் இந்த குழப்பங்களுக்குள் மாட்டி கொண்டான் !


மனிதனுக்கு முந்தய படைப்பு --வானவர்கள் --இவர்களுள் எவ்வளவு ஆற்றல் இருந்தாலும் கடவுளின் சித்தம் மட்டுமே செய்கிறவர்கள் தேவர்கள் !எங்களுக்கும் ஆற்றல் இருக்கிறது ஆகவே நாங்களும் எங்கள் இஷ்டப்படி செயல்படுவோம் என கலகம் செய்கிறவர்களே அசுரர்கள் ! இந்த அசுரர்களே மனிதனுக்கு துர்போதனை செய்து அவனை தீமையில் வழிநடத்துபவர்கள் !தேவ -அசுர ஆவிமண்டல யுத்தம் மனிதர்கள் மூலமாக நடை பெற்றுகொண்டே இருக்கிறது !இது கற்பனையா உண்மையா மனித வாழ்வுக்கு ஒரு இலக்கு இருக்கிறதா இவை எல்லாவற்றையும் நான் நம்புகிறேன் !


தங்கள் கடிய உழைப்பு ஒரே ஒரு நூலிலையில் கடவுளை விட்டு விலகிநிர்க்கிறதோ விலகிநிர்ப்பதால் ஒரு இழப்பு இந்தியாவிற்கு உண்டாகிறதோ என கவலை உண்டாகிறது !


போகர் தேவ -அசுர யுத்தத்தில் அசுரர்களை அழிக்க மனிதானாக  மாறிவரும் முருகு இறைதூதன் என உருவகம் கொடுத்தார் !அந்த முருகன் எவ்வளவு ஆற்றல் உள்ளவனாக இருந்தாலும் கடவுளிடம் பிச்சை பாத்திரம் ஏந்தி எதிர்பார்த்திருக்கிற ஆண்டியாய்தான் இருப்பான் !அவன் சுயத்தை நம்பாமல் கடவுளுக்காக காத்திருக்கிற ஆண்டி மனப்பான்மையிலேயே இருப்பான் !இந்த மன நிலையில் நீங்கள் மேலே பதிவிட்டதை செய்து பாருங்கள் அது பெரும் வெற்றி !

விவேகானந்தரின் பிரார்த்தனை :


நான் பூஜ்யம் ,,இந்த உலகம் பூஜ்யம்,,நீர் மட்டுமே செயல் புரிபவர்! .

நான் உமது கரத்தில் வெறும் கருவி மட்டுமே!...... அன்பே வடிவான இறைவா !பலர் உனக்கு பலவற்றை அளிக்கின்றனர்.நான் ஏழை ,ஆனால் எனக்கு உடலும்,மனமும்,ஆன்மாவும்,உள்ள
ன.நான் இவற்றை உனக்கு அளிக்கிறேன்!

கண்டவர் விண்டிலர்!; விண்டவர் கண்டிலரே!!!

கடவுளோடு இடைபடவும்; அவரின் சித்தத்தை உணரவும்; அவரின் குரலை கேட்கவும் பழகி கொண்டவர்களே இறைதூதர்கள்!ஆனால் அவர்கள் கண்டதாக ஒரு உருவத்தையோ பெயரையோ சித்தரிக்க முயலவே இல்லை !அப்படி சித்தரித்தவர்கள் அனைவரும் கொஞ்சம்கூட இறை அனுபவம் இல்லாதவர்களே என்பது மேற்கண்ட சித்தர் வரிகள் !!!
வள்ளலார்; முருகன், சைவம் என படிபடியே கடந்து உண்மையான இறைஅனுபூதி பெற்றபோது அருட்பெரும்ஜோதி என முடிந்தார்!! முன்பு என் அறிவு குறைவாக இருந்தது எனவும் ஒத்துகொண்டார்!
அவர் கடவுளை உண்மையில் உணராதபோது உருவத்தை பெயரை விண்டார்!வழிபட்டார்! ஆனால் உண்மையை உணர்ந்தவுடன் விண்டதை விட்டுவிட்டார்!உருவ வழிபாட்டையும் விட்டுவிட்டார்!முழு உண்மையை உணாராதபோதும் அவருக்கு உள்ளிருந்த தேடுதல் மற்றும் இறைவனின் வழிகாட்டல் அவரை 5 திருமுறை பாடவைத்தது! அவர் கடவுளை வெளியே தேடிய பக்தி யோகி!தனக்குள்ளாக தேடிகொண்டே இருப்பதாக பசப்பு காட்டியவரல்ல!அவரின் பக்தி பேரன்பே ஞானத்தையும் அவருக்கு அருளவைத்தது! ஆனால் ஆழமாக உள்ளார்ந்த கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் ஞானமார்க்கிகள் என்கிற போர்வையை தற்போது போர்த்து கொண்டனர்! இது ஞானமல்ல மாயாவாதம்!!

ஞானம் போல தோன்றும் மாயாவாதம் அல்லது சூனியவாதம் என ஒன்று உள்ளது!அது கடவுளால் உருவாக்க பட்டுள்ள எல்லா இயக்கங்களையும் அதற்கான மின் காந்த புல மண்டலங்களின் செயல்பாடுகளை ஆய்ந்து அறிந்து விஞ்ஞான விளக்கமளிக்கிறது!இது தொழில் நுட்பத்தை குறித்த ஆய்வு!பிரபஞ்சம் இயங்கும் தொழில் நுட்பத்தை குறித்த ஆய்வு!மனதின் நுட்பத்தை குறித்த ஆய்வு!ஆனால் இது இதனை யார் இப்படி ஒழுங்கமைத்தார்கள் என்பதை --கடவுளின் திறமையை மறைத்து இதுவெல்லாம் இயற்கை என குறிப்பிடும்!இந்த அறிவை கொண்டு மனித வாழ்வை நாமே ஒழுங்கமைத்து சிறப்பாய் வழலாம்!கடவுள் என்றொருவர் தனியாய் தேவையில்லை என சொல்லி விடும்!
எவ்வளவு திறமை இருந்தாலும் அதனை நம்பாமல் கடவுள் மீது நம்பிக்கை வைக்க பழகுவதே உண்மையான ஞானம்!தன்னை வெறுமையாக்கி கடவுளிடம் ஒப்படைதவர்களே செயற்கரிய காரியங்களையும் மகத்தான ஞானத்தையும் பூமிக்கு கொணந்தவர்கள்!கடவுளின் சித்தம் எதுவென சரியாக கேட்டறிந்து அதனை சாதாரன பொதுமக்களும் கடைபிடிக்க எளிய வாழ்க்கை நெறியை உண்டாக்கி பலரை கடவுளோடு ஒப்புரவாக்கியவர்கள் இறைதூதர்கள்!ஆனால் கடவுளின் ஆளுமையை ஒதுக்கி மனித அறிவை கொண்டே வாழ்ந்துவிடலாம் என்பது மாயாவாதம்!உலகில் நடந்தவைகள் எப்படி நடந்தது என ஆழமாக தர்க்கித்து ``தர்க்கம்`` என்கிற தொழில் நுட்பத்தை ஞானம் போல சித்தரிக்கிறவை!சிறந்த தர்க்கம் பொய்யயும் உண்மை போல காட்டி விட கூடியது!அல்லது சில சார்பு உண்மைகளை வெளிச்சம் போட்டு காட்ட கூடியது!இந்த சார்பு உண்மைகள் அகண்ட உண்மையாகாது!
சார்பு உண்மை ;அகண்ட உண்மை என இரண்டு உண்மைகள் உள்ளன! அதில் சார்பு உண்மைகள் ஒன்றைவிட ஒன்று முன்னேறியதாக தெறியும்! அப்படி நட்ட கல்லை கடவுள் என சுற்றி வருவதை விட நமக்குள்ளிருக்கும் கடவுளின் ஆவியாகிய நமது உயிர் கடவுளை நெருங்கிய ஒன்று என்பது உண்மை !அந்த உயிரில் நிலைத்து நிற்க பழகும் தியானம், யோகம்; சிலை வழிபாட்டை விட நிச்சயம் மேலாதானது !ஆனால் அதுவே முழுமையானதல்ல!நமது உயிர்தான் சகலத்தையும் படைத்ததா?சகலத்தையும் நிர்வகிக்கிறதா?
கடவுள் எங்கும் நிறைந்தவரானாலும் அவர் தனித்த ஒரு நபர் அவரின் மையம் நமது உடலிலோ பூமியிலோ கூட இல்லை அவரது மையம் நமது பூமியை போல ஏழு பூமி வானங்களை நிர்வகிக்கும் சொர்க்கம் அல்லது பரமண்டலத்தில் உள்ளது! அங்கு அவர் மையம் கொண்டிருந்தாலும் எங்கும் வியாபித்துள்ளவர்!அவரை நமது உயிரில் நிலைத்து நின்று வழிபட வேண்டும் !ஜீவாத்துமாவிலிருந்து பரமாத்துமாவை நோக்கி வழிபட வேண்டும் !உயிரில் நிலைத்து நிற்க பயிற்சி கொடுப்பது மட்டுமே தியானம் !அதன் பிறகு கடவுளை நோக்கி தொழவேண்டும் !ஞான மார்க்கிகள் தியானம் செய்வதோடு நின்று விடுவது அல்லது எனக்குள்ளே கடவுள் இருக்கிறார் என பகுதி உண்மையை மட்டும் நம்பிக்கொண்டு அடுத்த வளர்சிக்கு வராமல் தேங்கி நிற்கும் போக்கு தமிழகத்தில் நிறைந்துள்ளது !இதை கடரவேண்டிய கட்டம் வந்து விட்டது !இதை கடந்தால் மட்டுமே கடவுளை நோக்கி முன்னேற முடியும் !
வித விதமான தியானத்தை போதிக்கிறவர்கள் புதுபுது முறையை கொண்டு வரும் தொழில் நுட்ப வாதிகளே !ஆனால் தமிழகத்திற்கு இப்போதைய தேவை அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவது !
இயேசு கடவுளை பற்றியும் அவரை வழிபடும் முறை பற்றியும் சொன்னதை சற்று கவனியுங்கள்!

யோவான் 4:24 தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.!
கடவுள் சர்வ வியாபியாய்--அகண்ட ஆவியாய் --அகண்ட உயிராய் இருக்கிறார் !எல்லா படைபினங்களிலும் அவரது ஆவி உயிராய் சிற்றுயிராய் உள்ளது !எனவே அந்த ஆவியில் நிலைத்து அது வந்த அகண்ட ஆவியாகிய கடவுளை நோக்கி உள்ளார்ந்த ஈடுபாடோடு தொழவேண்டும் !
நமது சிறு உயிரில் நிலைத்து அகண்ட உயிரை நோக்கி தொழவேண்டும்!

அல்லது
மனித உயிர் + மனிதஆத்துமா = ஜீவாத்துமா!
கடவுளின் உயிர் +கடவுளின்ஆத்துமா =பரமாத்துமா !
ஜீவாத்துமாவிலிருந்து பரமாத்துமாவை தொழவேண்டும் !!

இந்த ஆத்துமா உணர்வு தனக்குள்ளாக தேடுகிற தியானத்தின் மூலமாக மட்டுமே சித்திக்கும் !மற்றவர்கள் தன்னை உடலாக மட்டுமே கருதி உடலுக்கும் அதன் புலன்களை மயக்கி ஈர்க்கும் உலக மாயைகளுக்கு அடிமையாய் உள்ளனர் !தன்னை உடல் என கருதுபவர்ககே தன்னை போல ஒரு சிலையை கடவுளாக கண்டால் மட்டுமே கடவுள் பயம் வருகிறது!தன்னை போலவே அந்த உருவத்திற்கும் ஆசாபாசம்;குடும்பம் குழந்தைகள் சண்டைசச்சருவுகளை மேலேற்றி கற்பனைகளை புணையமுடிகிறது!இது இச்சாவாதம்!தன் உடல் மற்றும் புலணிச்சைகளின் மூலமாகவே பூமியையும் கடவுளையும் பார்க்கிறது! ஆனால் யார் `நான் உடலல்ல ஆத்துமா` என்பதை உணர்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே பரமாத்துமாவை -உன்மையான கடவுளை பற்றிய உணர்வு உண்டாகும் !அதற்கு இச்சாவாதம் ,மாயாவாதம் என்ற இரண்டு வழி விலகல்களில் செல்லாமல் நடு பாதையில் கடவுளை தேடி பயணிக்க வேண்டும்! அந்த காலம் இப்போது வந்திருக்கிறது என்பதே இயேசுவின் வெளிப்பாடு !
யோவான் 4:23 உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்.!!!

எனது பிரார்த்தனை!!!!

அன்றாடம் பிரார்த்தனையில் அனுகூலங்களை அதிகம் பெற வேண்டி கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி இறுதி வடிவம் பெற்ற எனது பிரார்த்தனை இப்பிரார்த்தனையோடு சொந்த தேவைகளையும் இணைத்துக்கொள்ளலாம் !!
தினமும் சொல்லி வருகையில் உலகியல் வாழ்விலும் அதிக முன்னேற்றமும் ஆன்ம வாழ்வில் அதிக மேன்மையும் ரகசியங்கள் வெளிப்படுவதும் தேவர்களின் அனுசரணையும் கிடைப்பதை அறியலாம் !!


ஓரிறைவனையே துதிக்கிறோம்
நாராயணன் நாமத்தினாலே    
ஓம் நமோ நாராயணா !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

ஓரிறைவனையே துதிக்கிறோம்
சிவனின் நாமத்தினாலே    
ஓம் நமோ சிவாய !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

நாராயணனாய் வெளிப்பட்ட அந்த
ஓரிறைவனையே துதிக்கிறோம்
ஓம் நமோ நாராயணாய !
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி  நாரயணன் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் 
கடவுளே உம்மைத்துதிக்கிறேன் உமது அருளால் என்னை நிரப்புவீராக சாந்தி உண்டாக்குவீராக 

எல்லா புகழும் அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து காத்து வளர்க்கும் இறைவனுக்கே ஆகும் !நீர் அளவற்ற அருளாளன் ;நிகரற்ற அன்புடையோன் !நீரே நியாயத்தீர்ப்பு நாளின் அதிபதி !உம்மையே நாங்கள் வணங்குகிறோம் உம்மிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம் எங்களை நேர் வழியில் நடத்துவீராக!எவர்களுக்கு அருள் புரிந்தீரோ அவ்வழி !உம் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல ;நெறி தவறியோர் வழியுமல்ல !

பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பரம பிதாவே !உம் நாமம் மகிமைப்படுவதாக !உம் ராஜ்ஜியம் வருவதாக !பரமண்டலங்களில் உம் சித்தம் செய்யப்படுவது போல பூமியிலும் செய்யப்படுவதாக!எங்களுக்கு அன்றாடம் தேவையான ஆகாரத்தை இன்றைக்கு தாரும் !எங்கள் பாவ தோஷங்களை நீர் எங்களுக்கு மன்னியும் !அது போல பிறரின் தீமைகளை மன்னிக்கிற நல்ல இதயத்தை எங்களுக்கு தாரும் !எங்களை சோதனைக்கு உட்பட பண்ணாமல் தீமையினின்று இரட்சித்துக்கொள்ளும்!ராஜ்ஜியுமும் வல்லமையும் மகிமையும் என்றென்றும் உம்முடையவைகளே!

நித்தியமான  இறைவா !! நீரும் உமது வாக்காகிய நாராயணன் மட்டுமே நித்திய ஜீவன் உள்ளவர்கள் உங்களால் அருளப்படுபவர்கள் மட்டுமே நித்திய ஜீவனை பெற்றுக்கொள்ள முடியும்  !!! .உமது சித்தம் ஒன்றே செய்யப்பட தகுதியுள்ளது !!நான் உமது கரத்தில் கருவியாக மட்டுமே இருக்கவிரும்புகிறேன் !ஆனாலும் அசுரர்கள் உமக்கு விரோதமாக என்னை பயன்படுத்த முயல்கிறார்கள் !!!...... இதில் தற்காத்துக்கொள்ள நான் போதிய தெளிவற்றவனாக இருக்கிறேன்  !!அன்பே வடிவான இறைவா !. எனக்கு உடலும்,ஆன்மாவும்,நீர் அருளிய உயிரும் உள்ளன.நான் இவற்றை உமக்கே அர்ப்பணிக்கிறேன் ! .என்னை ஆண்டு கொள்வீராக !!! நேர் வழிபடுத்துவீராக !!!

நாராயணன் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் கடவுளே !!உம் சக்தியால் எனது புலன்களில் சாந்தி உண்டாக்குவீராக ! உமது சக்தியால் எனது ஆத்மாவை துய்மையாக்குவீராக ! ஒளி சரீரம் பெரும் தகுதி உண்டாக்குவீராக ! 

நாராயணன் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் கடவுளே !!உம் சக்தியால் உலகம் முழுமையும் சாந்தி உண்டாக்குவீராக  !! சகல் மதங்களுக்கிடையிலும் சாந்தி உண்டாக்கும் சமரச வேதத்தை அருள்வீராக !!