Total Pageviews

Friday, May 4, 2012

யார் பரம பிதா ?

மனுஷர் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; செய்தால் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை.
ஆகையால் நீ தர்மஞ்செய்யும்போது மனுஷரால் புகழப்படுவதற்கு, மாயக்காரர் ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வதுபோல, உனக்கு முன்பாக தாரை ஊதுவியாதே; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலது கை செய்கிறதை உன் இடது கை அறியாதிருக்கக்கடவது;
அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா தாமே உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்.---இறைதூதர் இயேசு!!!(மத்தேயு:6)


கடவுளை இயேசு உங்கள் பிதா என சொல்லியுள்ளதை நன்கு கவணிக்க வேண்டுகிறேன்!!!

மனிதன் உள்ளத்தூய்மை, உள்ளார்ந்த ஞானம் பெற நுட்பமான, எளிய உபதேசங்கள் இயேசு வழிகாட்டியுள்ளார்! எல்லா மதத்தினரும் கற்றுகொள்ள வேண்டியவை!எளிதாய் கடைபிடித்து கடவுளின் பிரியத்திற்கு பாத்திரமாகலாம்!

யார் கடவுள் என குழப்பம் செய்வதில் மனிதன் காட்டுகிற அக்கறை;அதில் தனது கொள்கை தான் பெரிசு மற்றதெல்லாம் சிரிசு என மதப்பெருமை பாராட்டுவதில் மனிதனுக்கு உள்ள பிரியம்; கடவுளோடு ஒப்புறவு ஆவது என்பதில் அக்கறை இருப்பதில்லை!!!அதனால் கடவுள் யார் என்கிற குழப்பங்களுக்கு முற்றுபுள்ளி வைக்க இயேசு ஒரு எளிய வழியை காட்டினார்! அவர் கடவுள் எனக்கும் உங்களுக்கும் சகலருக்கும் பிதாவானவர்--பரமபிதா என்றார்!

அவரது உபதேசங்களை படிக்கிற ஒருவர் ``என் பிதாவானவர் என குறிப்பிட்டதை விட உங்கள் பிதாவானவர் என அதிகம் குறிப்பிட்டுள்ளார்`` என்பதை எண்ணிகூட பார்க்கலாம்!அந்தோ பரிதாபம்! கிறிஸ்தவர்கள் என்று சொல்லிகொள்பவர்கள் என்பிதா என்பதை மட்டும் பிடித்து அவர் ``இறைமகன்``--சொந்த மகன் --ஒரேபிள்ளை--அதனால் இவர் கடவுளோடு கூட்டணி வைத்து குழு ஆட்சி செய்வதாக ஒரு மாய்மாலத்திற்குள் விழுந்து விட்டார்கள்!தாங்கள் செய்கிற பிரார்த்தணையில் இயேசுவிடமே பிரார்திப்பதும் பாடல் பாடி ஆட்டம் போட்டுவிட்டு எப்போதாவது ஒரு வார்த்தை பிதாவே-கடவுளே என சொல்லிகொள்வதுமாக உள்ளனர்!

பிறப்பினாலோ அல்லது சடங்காச்சாரங்களாலோ அல்லது காணிக்கை செலுத்துவதாலோ கடவுளோடு ஒப்புறவு ஆகமுடியாது! உள்ளார்ந்த இறைஅச்சம், அன்பு, பக்தியின் மூலம் மட்டுமே கடவுளின் ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க முடியும் என்பது இயேசுவின் உபதேசம்! ஆனால் இவைகளைப்பற்றிய பிரஞ்ஞை அக்கறை இல்லாத வறட்டு மதவாதிகள் இயேசுவை கடவுளாக சித்தரித்து அய்ரோப்பிய கலாச்சாரத்தை திணிப்பதால் உயர்ந்த இந்திய பாராம்பரியத்தில் கலாச்சார சீர்கேடுகள் தினிக்கபடுகின்றன!``வந்துட்டார் வந்துட்டார்!! தொட்டுட்டார் தொட்டுட்டார்!! பாவத்தையெல்லாம் இப்பவே போக்கிட்டார்!! இப்பவே சுகம் கொடுத்துட்டார்!!! கைகால் இடுப்புவலி சுளுக்கு`` என திறமையாக லேகியம் விற்கிற வியாபாரத்தை ஆண்மீகம் என்றும் கடவுளின் ராஜ்ஜியம் என்றும் சித்தரிக்கின்றனர்! எனவே பைபிள் என்றாலே வெறுக்கபடுகிற சூழ்நிலை காணப்படுகிறது

கிருஸ்தவர்களின் தவறான வியாக்கியானங்கள் இயேசுவின் அற்புதமான உபதேசங்களை ஓரங்கட்டி மறைக்கிறது! அவர் கடவுளை அடைய ஒரு நல்லபாலம்--சிறந்த குரு என்கிற உண்மையோடு அவரது உபதேசங்களை அணுக வேண்டும்!!!அஞ்ஞானிகளான கிறிஸ்தவர்களின் வறட்டு கூச்சலை கண்டு இயேசுவின் மீது வெறுப்படையாமல் அவரது உபதேசங்களில் அக்கறை காட்டவேண்டும்!!!

No comments:

Post a Comment