Total Pageviews

Friday, May 4, 2012

எனது பிரார்த்தனை!!!!

அன்றாடம் பிரார்த்தனையில் அனுகூலங்களை அதிகம் பெற வேண்டி கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி இறுதி வடிவம் பெற்ற எனது பிரார்த்தனை இப்பிரார்த்தனையோடு சொந்த தேவைகளையும் இணைத்துக்கொள்ளலாம் !!
தினமும் சொல்லி வருகையில் உலகியல் வாழ்விலும் அதிக முன்னேற்றமும் ஆன்ம வாழ்வில் அதிக மேன்மையும் ரகசியங்கள் வெளிப்படுவதும் தேவர்களின் அனுசரணையும் கிடைப்பதை அறியலாம் !!


ஓரிறைவனையே துதிக்கிறோம்
நாராயணன் நாமத்தினாலே    
ஓம் நமோ நாராயணா !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

ஓரிறைவனையே துதிக்கிறோம்
சிவனின் நாமத்தினாலே    
ஓம் நமோ சிவாய !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

நாராயணனாய் வெளிப்பட்ட அந்த
ஓரிறைவனையே துதிக்கிறோம்
ஓம் நமோ நாராயணாய !
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி  நாரயணன் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் 
கடவுளே உம்மைத்துதிக்கிறேன் உமது அருளால் என்னை நிரப்புவீராக சாந்தி உண்டாக்குவீராக 

எல்லா புகழும் அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து காத்து வளர்க்கும் இறைவனுக்கே ஆகும் !நீர் அளவற்ற அருளாளன் ;நிகரற்ற அன்புடையோன் !நீரே நியாயத்தீர்ப்பு நாளின் அதிபதி !உம்மையே நாங்கள் வணங்குகிறோம் உம்மிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம் எங்களை நேர் வழியில் நடத்துவீராக!எவர்களுக்கு அருள் புரிந்தீரோ அவ்வழி !உம் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல ;நெறி தவறியோர் வழியுமல்ல !

பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பரம பிதாவே !உம் நாமம் மகிமைப்படுவதாக !உம் ராஜ்ஜியம் வருவதாக !பரமண்டலங்களில் உம் சித்தம் செய்யப்படுவது போல பூமியிலும் செய்யப்படுவதாக!எங்களுக்கு அன்றாடம் தேவையான ஆகாரத்தை இன்றைக்கு தாரும் !எங்கள் பாவ தோஷங்களை நீர் எங்களுக்கு மன்னியும் !அது போல பிறரின் தீமைகளை மன்னிக்கிற நல்ல இதயத்தை எங்களுக்கு தாரும் !எங்களை சோதனைக்கு உட்பட பண்ணாமல் தீமையினின்று இரட்சித்துக்கொள்ளும்!ராஜ்ஜியுமும் வல்லமையும் மகிமையும் என்றென்றும் உம்முடையவைகளே!

நித்தியமான  இறைவா !! நீரும் உமது வாக்காகிய நாராயணன் மட்டுமே நித்திய ஜீவன் உள்ளவர்கள் உங்களால் அருளப்படுபவர்கள் மட்டுமே நித்திய ஜீவனை பெற்றுக்கொள்ள முடியும்  !!! .உமது சித்தம் ஒன்றே செய்யப்பட தகுதியுள்ளது !!நான் உமது கரத்தில் கருவியாக மட்டுமே இருக்கவிரும்புகிறேன் !ஆனாலும் அசுரர்கள் உமக்கு விரோதமாக என்னை பயன்படுத்த முயல்கிறார்கள் !!!...... இதில் தற்காத்துக்கொள்ள நான் போதிய தெளிவற்றவனாக இருக்கிறேன்  !!அன்பே வடிவான இறைவா !. எனக்கு உடலும்,ஆன்மாவும்,நீர் அருளிய உயிரும் உள்ளன.நான் இவற்றை உமக்கே அர்ப்பணிக்கிறேன் ! .என்னை ஆண்டு கொள்வீராக !!! நேர் வழிபடுத்துவீராக !!!

நாராயணன் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் கடவுளே !!உம் சக்தியால் எனது புலன்களில் சாந்தி உண்டாக்குவீராக ! உமது சக்தியால் எனது ஆத்மாவை துய்மையாக்குவீராக ! ஒளி சரீரம் பெரும் தகுதி உண்டாக்குவீராக ! 

நாராயணன் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் கடவுளே !!உம் சக்தியால் உலகம் முழுமையும் சாந்தி உண்டாக்குவீராக  !! சகல் மதங்களுக்கிடையிலும் சாந்தி உண்டாக்கும் சமரச வேதத்தை அருள்வீராக !!