Total Pageviews

Friday, May 4, 2012

கண்டவர் விண்டிலர்!; விண்டவர் கண்டிலரே!!!

கடவுளோடு இடைபடவும்; அவரின் சித்தத்தை உணரவும்; அவரின் குரலை கேட்கவும் பழகி கொண்டவர்களே இறைதூதர்கள்!ஆனால் அவர்கள் கண்டதாக ஒரு உருவத்தையோ பெயரையோ சித்தரிக்க முயலவே இல்லை !அப்படி சித்தரித்தவர்கள் அனைவரும் கொஞ்சம்கூட இறை அனுபவம் இல்லாதவர்களே என்பது மேற்கண்ட சித்தர் வரிகள் !!!
வள்ளலார்; முருகன், சைவம் என படிபடியே கடந்து உண்மையான இறைஅனுபூதி பெற்றபோது அருட்பெரும்ஜோதி என முடிந்தார்!! முன்பு என் அறிவு குறைவாக இருந்தது எனவும் ஒத்துகொண்டார்!
அவர் கடவுளை உண்மையில் உணராதபோது உருவத்தை பெயரை விண்டார்!வழிபட்டார்! ஆனால் உண்மையை உணர்ந்தவுடன் விண்டதை விட்டுவிட்டார்!உருவ வழிபாட்டையும் விட்டுவிட்டார்!முழு உண்மையை உணாராதபோதும் அவருக்கு உள்ளிருந்த தேடுதல் மற்றும் இறைவனின் வழிகாட்டல் அவரை 5 திருமுறை பாடவைத்தது! அவர் கடவுளை வெளியே தேடிய பக்தி யோகி!தனக்குள்ளாக தேடிகொண்டே இருப்பதாக பசப்பு காட்டியவரல்ல!அவரின் பக்தி பேரன்பே ஞானத்தையும் அவருக்கு அருளவைத்தது! ஆனால் ஆழமாக உள்ளார்ந்த கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் ஞானமார்க்கிகள் என்கிற போர்வையை தற்போது போர்த்து கொண்டனர்! இது ஞானமல்ல மாயாவாதம்!!

ஞானம் போல தோன்றும் மாயாவாதம் அல்லது சூனியவாதம் என ஒன்று உள்ளது!அது கடவுளால் உருவாக்க பட்டுள்ள எல்லா இயக்கங்களையும் அதற்கான மின் காந்த புல மண்டலங்களின் செயல்பாடுகளை ஆய்ந்து அறிந்து விஞ்ஞான விளக்கமளிக்கிறது!இது தொழில் நுட்பத்தை குறித்த ஆய்வு!பிரபஞ்சம் இயங்கும் தொழில் நுட்பத்தை குறித்த ஆய்வு!மனதின் நுட்பத்தை குறித்த ஆய்வு!ஆனால் இது இதனை யார் இப்படி ஒழுங்கமைத்தார்கள் என்பதை --கடவுளின் திறமையை மறைத்து இதுவெல்லாம் இயற்கை என குறிப்பிடும்!இந்த அறிவை கொண்டு மனித வாழ்வை நாமே ஒழுங்கமைத்து சிறப்பாய் வழலாம்!கடவுள் என்றொருவர் தனியாய் தேவையில்லை என சொல்லி விடும்!
எவ்வளவு திறமை இருந்தாலும் அதனை நம்பாமல் கடவுள் மீது நம்பிக்கை வைக்க பழகுவதே உண்மையான ஞானம்!தன்னை வெறுமையாக்கி கடவுளிடம் ஒப்படைதவர்களே செயற்கரிய காரியங்களையும் மகத்தான ஞானத்தையும் பூமிக்கு கொணந்தவர்கள்!கடவுளின் சித்தம் எதுவென சரியாக கேட்டறிந்து அதனை சாதாரன பொதுமக்களும் கடைபிடிக்க எளிய வாழ்க்கை நெறியை உண்டாக்கி பலரை கடவுளோடு ஒப்புரவாக்கியவர்கள் இறைதூதர்கள்!ஆனால் கடவுளின் ஆளுமையை ஒதுக்கி மனித அறிவை கொண்டே வாழ்ந்துவிடலாம் என்பது மாயாவாதம்!உலகில் நடந்தவைகள் எப்படி நடந்தது என ஆழமாக தர்க்கித்து ``தர்க்கம்`` என்கிற தொழில் நுட்பத்தை ஞானம் போல சித்தரிக்கிறவை!சிறந்த தர்க்கம் பொய்யயும் உண்மை போல காட்டி விட கூடியது!அல்லது சில சார்பு உண்மைகளை வெளிச்சம் போட்டு காட்ட கூடியது!இந்த சார்பு உண்மைகள் அகண்ட உண்மையாகாது!
சார்பு உண்மை ;அகண்ட உண்மை என இரண்டு உண்மைகள் உள்ளன! அதில் சார்பு உண்மைகள் ஒன்றைவிட ஒன்று முன்னேறியதாக தெறியும்! அப்படி நட்ட கல்லை கடவுள் என சுற்றி வருவதை விட நமக்குள்ளிருக்கும் கடவுளின் ஆவியாகிய நமது உயிர் கடவுளை நெருங்கிய ஒன்று என்பது உண்மை !அந்த உயிரில் நிலைத்து நிற்க பழகும் தியானம், யோகம்; சிலை வழிபாட்டை விட நிச்சயம் மேலாதானது !ஆனால் அதுவே முழுமையானதல்ல!நமது உயிர்தான் சகலத்தையும் படைத்ததா?சகலத்தையும் நிர்வகிக்கிறதா?
கடவுள் எங்கும் நிறைந்தவரானாலும் அவர் தனித்த ஒரு நபர் அவரின் மையம் நமது உடலிலோ பூமியிலோ கூட இல்லை அவரது மையம் நமது பூமியை போல ஏழு பூமி வானங்களை நிர்வகிக்கும் சொர்க்கம் அல்லது பரமண்டலத்தில் உள்ளது! அங்கு அவர் மையம் கொண்டிருந்தாலும் எங்கும் வியாபித்துள்ளவர்!அவரை நமது உயிரில் நிலைத்து நின்று வழிபட வேண்டும் !ஜீவாத்துமாவிலிருந்து பரமாத்துமாவை நோக்கி வழிபட வேண்டும் !உயிரில் நிலைத்து நிற்க பயிற்சி கொடுப்பது மட்டுமே தியானம் !அதன் பிறகு கடவுளை நோக்கி தொழவேண்டும் !ஞான மார்க்கிகள் தியானம் செய்வதோடு நின்று விடுவது அல்லது எனக்குள்ளே கடவுள் இருக்கிறார் என பகுதி உண்மையை மட்டும் நம்பிக்கொண்டு அடுத்த வளர்சிக்கு வராமல் தேங்கி நிற்கும் போக்கு தமிழகத்தில் நிறைந்துள்ளது !இதை கடரவேண்டிய கட்டம் வந்து விட்டது !இதை கடந்தால் மட்டுமே கடவுளை நோக்கி முன்னேற முடியும் !
வித விதமான தியானத்தை போதிக்கிறவர்கள் புதுபுது முறையை கொண்டு வரும் தொழில் நுட்ப வாதிகளே !ஆனால் தமிழகத்திற்கு இப்போதைய தேவை அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவது !
இயேசு கடவுளை பற்றியும் அவரை வழிபடும் முறை பற்றியும் சொன்னதை சற்று கவனியுங்கள்!

யோவான் 4:24 தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.!
கடவுள் சர்வ வியாபியாய்--அகண்ட ஆவியாய் --அகண்ட உயிராய் இருக்கிறார் !எல்லா படைபினங்களிலும் அவரது ஆவி உயிராய் சிற்றுயிராய் உள்ளது !எனவே அந்த ஆவியில் நிலைத்து அது வந்த அகண்ட ஆவியாகிய கடவுளை நோக்கி உள்ளார்ந்த ஈடுபாடோடு தொழவேண்டும் !
நமது சிறு உயிரில் நிலைத்து அகண்ட உயிரை நோக்கி தொழவேண்டும்!

அல்லது
மனித உயிர் + மனிதஆத்துமா = ஜீவாத்துமா!
கடவுளின் உயிர் +கடவுளின்ஆத்துமா =பரமாத்துமா !
ஜீவாத்துமாவிலிருந்து பரமாத்துமாவை தொழவேண்டும் !!

இந்த ஆத்துமா உணர்வு தனக்குள்ளாக தேடுகிற தியானத்தின் மூலமாக மட்டுமே சித்திக்கும் !மற்றவர்கள் தன்னை உடலாக மட்டுமே கருதி உடலுக்கும் அதன் புலன்களை மயக்கி ஈர்க்கும் உலக மாயைகளுக்கு அடிமையாய் உள்ளனர் !தன்னை உடல் என கருதுபவர்ககே தன்னை போல ஒரு சிலையை கடவுளாக கண்டால் மட்டுமே கடவுள் பயம் வருகிறது!தன்னை போலவே அந்த உருவத்திற்கும் ஆசாபாசம்;குடும்பம் குழந்தைகள் சண்டைசச்சருவுகளை மேலேற்றி கற்பனைகளை புணையமுடிகிறது!இது இச்சாவாதம்!தன் உடல் மற்றும் புலணிச்சைகளின் மூலமாகவே பூமியையும் கடவுளையும் பார்க்கிறது! ஆனால் யார் `நான் உடலல்ல ஆத்துமா` என்பதை உணர்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே பரமாத்துமாவை -உன்மையான கடவுளை பற்றிய உணர்வு உண்டாகும் !அதற்கு இச்சாவாதம் ,மாயாவாதம் என்ற இரண்டு வழி விலகல்களில் செல்லாமல் நடு பாதையில் கடவுளை தேடி பயணிக்க வேண்டும்! அந்த காலம் இப்போது வந்திருக்கிறது என்பதே இயேசுவின் வெளிப்பாடு !
யோவான் 4:23 உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்.!!!

No comments:

Post a Comment