Total Pageviews

Monday, October 31, 2011

மறுமையில் ஆண்,பெண் பேதங்கள் இறுக்கிறதா?



இறைதூதர் முஹமது அவர்கள் மூலமாக கொடுக்கபட்ட வேதம் --குரானில் இந்த பூமிக்குரிய வழ்க்கையில் கடைபிடிக்க வேண்டியவை--அரசு குற்றவியல் நடைமுறைகள்,பாகப்பிறிவிணை சட்ட நெறிமுறைகள் பற்றி தெளிவாய் உள்ளது!---ஏணென்றால் இந்த பூமியிலேயே முஹமது மூலமாக ஒரு அரசை ஆபிரகாம் சந்ததியிணருக்கு உண்டாக்கியதால் இச்சட்டம் அவசியமாயிற்று!

ஆணால் மறுமைக்குறிய --நியாயத்தீர்ப்பு காலத்தில்,உயிர்த்தெழுதல் காலத்தில் நடப்பதைபற்றி இறைதூதர் இயேசு விரிவாய் கூறியுள்ளார்! `இஞ்சீல்` வேதம் இயேசு மூலம் கொடுக்கபட்டுள்ளது என குரான் குறிப்பிடுகிறது!அந்த `இஞ்சீல்` வேதம் என்ன என்பதைப்பற்றி 1400 ஆண்டு பராம்பரியம் உள்ள முஸ்லீம் மார்க்கத்திணர் ஒரு நிமிடம் கூட யோசித்ததில்லை!இது சாத்தாணின் வேலை எண்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்!குரானை அரபியில் தான் ஓதவேண்டும் என மாயம் செய்து `அதை ஓதினால் போதும் அப்படியே அருள் வந்து கொட்டிவிடும் `எங்கிற அளவில் அதில் ஒரு வசணத்திற்க்கு கூட அர்த்தம் தெறியாமலேயே ஓதியோதி குரானுக்கு விரோதமாண காரியங்களை செய்து கொண்டே நிறைய மனிதர்கள் சென்று போணார்கள்!கடவுள் இப்போதுதான் விழிப்புணர்வை உண்டாக்கி தாய்மொழியில் படிக்கவும் விவாதிக்கவும் தொடங்கியுள்ளனர்!இந்த விழிப்புணர்வை கொணர்ந்த கடவுளுக்கு நண்றி உரித்தாகட்டும்!அவர் குரானில் முந்தய வேதம் என குறிப்பிட்டுள்ள தவ்றாத்,ஸபூர்,இன்ஜீல் வேதங்களை இறைதேடல் உள்ள முஹமீண்களை எழுப்பி கற்றுக்கொடுப்பாறாக!100% முஸ்லீம் என்று ஒருவர் இருப்பாரானால் அவரிடமும் சாத்தானால் வேலை செய்யமுடியும் எங்கிர உண்மையை நடுனிலையோடு ஏற்றுக்கொள்ளுகிர உணர்வாளர்களை கடவுள் எழுப்பவேண்டும்!

மறுமையில் ஆண்,பெண் பேதங்கள் இறுக்கிறதா?ஹுருல்ஈன்களை துணையாக அளிப்போம் என்று கடவுள் சொல்லியுள்ளாறே--ஆணுக்கு பெண் துணை என்று எளிதாக சொல்லிவிடலாம்;பெண்ணுக்கு யார் துணை?
இதற்க்கு சரியான பதில் ஈசா நபி சொல்லியுள்ளார்!
மத்தேயு: 22
24. போதகரே, ஒருவன் சந்தானம் இல்லாமல் இறந்துபோனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை விவாகம் பண்ணி, தன் சகோதரனுக்குச் சந்தானம் உண்டாக்கவேண்டும் என்று மோசே சொன்னாரே.

25. எங்களுக்குள்ளே சகோதரர் ஏழு பேர் இருந்தார்கள்; மூத்தவன் விவாகம்பண்ணி, மரித்து, சந்தானமில்லாததினால் தன் மனைவியைத் தன் சகோதரனுக்கு விட்டுவிட்டுப்போனான்.


26. அப்படியே இரண்டாம் மூன்றாம் சகோதரன் முதல் ஏழாம் சகோதரன் வரைக்கும் செய்தார்கள்.


27. எல்லாருக்கும் பின்பு அந்த ஸ்திரீயும் இறந்துபோனாள்.


28. ஆகையால், உயிர்த்தெழுதலில், அவ்வேழுபேரில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள்? அவர்களெல்லாரும் அவளை விவாகம் பண்ணியிருந்தார்களே என்று கேட்டார்கள்.


29. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் வேதவாக்கியங்களையும் தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள்.


30. உயிர்த்தெழுதலில், கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை; அவர்கள் பரலோகத்திலே தேவதூதரைப்போல் இருப்பார்கள்;என்றார்!

---தேவதூதர்கள் திருமனம் செய்துகொள்ளுவதில்லை அங்கு குடும்பமுமில்லை பிள்ளை பெற்றுக்கொள்வதுமில்லை

மாற்கு:10
34. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் பெண்கொண்டும் பெண்கொடுத்தும் வருகிறார்கள்.

35. மறுமையையும் மரித்தோரிலிருந்தெழுந்திருக்குதலையும் அடையப் பாத்திரராக எண்ணப்படுகிறவர்களோ பெண் கொள்வதுமில்லை பெண் கொடுப்பதுமில்லை.


36. அவர்கள் இனி மரிக்கவுமாட்டார்கள்; அவர்கள் உயிர்த்தெழுதலின் பிள்ளைகளானபடியால் தேவதூதருக்கு ஒப்பானவர்களுமாய், தேவனுக்குப் பிள்ளைகளுமாயிருப்பார்கள்.

--இந்த பூமிக்குறிய சரீரத்தில் தான் நாம் ஆணாகவும் பெணாகவும் இருக்கிறோம்!

3. அப்பொழுது, பரிசேயர் அவரைச் சோதிக்கவேண்டுமென்று அவரிடத்தில் வந்து: புருஷனானவன் தன் மனைவியை எந்த முகாந்தரத்தினாலாகிலும் தள்ளிவிடுவது நியாயமா என்று கேட்டார்கள்.


4. அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும்,


5. இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று அவர் சொன்னதையும், நீங்கள் வாசிக்கவில்லையா?


6. இப்படி இருக்கிறபடியால், அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார்.


7. அதற்கு அவர்கள்: அப்படியானால், தள்ளுதற்சீட்டைக்கொடுத்து, அவளைத் தள்ளிவிடலாமென்று மோசே ஏன் கட்டளையிட்டார் என்றார்கள்.


8. அதற்கு அவர்: உங்கள் மனைவிகளைத் தள்ளிவிடலாமென்று உங்கள் இருதயக்கடினத்தினிமித்தம் மோசே உங்களுக்கு இடம் கொடுத்தார்; ஆதிமுதலாய் அப்படி இருக்கவில்லை.


9. ஆதலால், எவனாகிலும் தன் மனைவி வேசித்தனஞ்செய்ததினிமித்தமேயன்றி, அவளைத் தள்ளிவிட்டு வேறொருத்தியை விவாகம் பண்ணினால், அவன் விபசாரம் பண்ணுகிறவனாயிருப்பான்; தள்ளிவிடப்பட்டவளை விவாகம் பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.


10. அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: மனைவியைப்பற்றிப் புருஷனுடைய காரியம் இப்படியிருந்தால், விவாகம் பண்ணுகிறது நல்லதல்ல என்றார்கள்.


11. அதற்கு அவர்: வரம் பெற்றவர்களே தவிர மற்றவர்கள் இந்த வசனத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.


12. தாயின் வயிற்றிலிருந்து அண்ணகர்களாய்ப் பிறந்தவர்களும் உண்டு; மனுஷர்களால் அண்ணகர்களாக்கப்பட்டவர்களும் உண்டு; பரலோகராஜ்யத்தினிமித்தம் தங்களை அண்ணகர்களாக்கிக்கொண்டவர்களும் உண்டு; இதை ஏற்றுக்கொள்ள வல்லவன் ஏற்றுக்கொள்ளக்கடவன் என்றார்.

---இந்த பூமியில் மனித படைப்பு ஆதாமாகவும் அவன் சரீரத்திலிருந்தே உண்டாக்கப்பட்ட ஏவாளாகவும் தொடர்கிறது!ஆண்மீக எழுத்திண்படி ஒரே சரீரமாக உள்ளவர்களே திருமணம் என்கிற பந்தத்தில் இணையமுடியும்!அந்த உறவில் ஒரு சரீரத்தில் ஒரு சரீரத்தின் தண்மை ஒன்றோடுஒன்று கலந்துகொண்டே இருக்கும்!அது மாற மூன்று மாதம் தொடர்பில்லாமல் இருக்க வேண்டும் என்பது தான் `இத்தா` காலமாகும்!கணவனை இழந்த பெண்ணுக்கு மறுமண முடிக்க இத்தா காலம் கடறாவிட்டால் அதுவும் விபச்சாரத்தைப்போல சரீர தண்மை கலப்புள்ளதாகிவிடும்!(திருமண உறவுகள் தொடர்பாக ராமர் காலத்திலிருந்து சட்டங்களில் கடவுள் சில மாறுதல்களை தொடர்ந்து செய்துள்ளார்!அது மனிதர்களீன் பலகீணம்,இயலாமை,மனக்கடினம் காரணமாக கடவுளும் விட்டுகொடுத்துள்ளார் என்பதாகவே தெறிகிறது--பிறகு விவாதிப்போம்!)
பூமியில்தான் ஒத்த ஆண்பெண் சரீரங்கள் குடும்பமாக இணைந்து வாழ்கிறார்கள்!எழுத்தின்படி அந்த ரெண்டும் ஒரே சரீரம் தான்!ஆதாமேவாளைப்போல!சரீரம் தான் ஆணாகவும் பெண்ணாகவும் இருக்கிரதே தவிற அதில் உறையும் ஆத்துமா ஆணாகவோ பெண்ணாகவோ இல்லை!இந்த சரீரத்தில் பந்தப்பட்டு ஆத்துமா ஆணாகவும்பெண்ணாகவும் மதிமயங்கி உள்ளது!ஆண்பெண் என்பதே மாயையாகும்!சத்தானால் மனிதனுக்கு உண்டான முதல் மாயையே ஆண்பெண் மாயையாகும்!விலக்கப்பட்ட கணியை புசிக்கும் வறை ஆண்பெண் மாயை மனிதனை பிடித்து ஆட்டவில்லை!சாத்தானால் ஏமாற்றப்பட்டு அக்கணியை உண்டபோதுதான் வெட்கத்தளங்கள் வெளிப்பட்டு `காம இருள்`மனிதனை பிடித்துக்கொண்டது இண்று உலகில் 99%பாவங்கள்,பிறச்சணைகள் ஆண்பெண் மாயையால் விளைகிறது!இளைங்கர்களின் நேரம்,வாழ்க்கை சீரழிக்கப்பட்டு கொண்டே இறுக்கிறது!காதலிக்கிற மாயையிலிருந்து அவர்களையும் சிணீமாக்காரர்களையும் விடிவிக்கவே முடியாது!நேரம் வீணாகி நோயாளிகளாய் போகிறார்கள்!விலக்கப்பட்ட கணியை புசிக்கும் வரை ஆண்பெண் மாயையில்லாத ஆதாமுமேவாளும் இருந்தனர்!அதுபோல காம இருளற்ற மனித ஆத்துமாக்கள் மறுமையில் ஆவிக்குறிய சரீரத்தில் உயிர்த்தெளுந்திறுப்பார்கள்!அந்த சரீரம் ஆணாகவோ பெண்ணாகவோ இறுக்காது!அது தேவதூதர்களைப்போல இறுக்கும்!
11. அதற்கு அவர்: வரம் பெற்றவர்களே தவிர மற்றவர்கள் இந்த வசனத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

12. தாயின் வயிற்றிலிருந்து அண்ணகர்களாய்ப் பிறந்தவர்களும் உண்டு; மனுஷர்களால் அண்ணகர்களாக்கப்பட்டவர்களும் உண்டு; பரலோகராஜ்யத்தினிமித்தம் தங்களை அண்ணகர்களாக்கிக்கொண்டவர்களும் உண்டு; இதை ஏற்றுக்கொள்ள வல்லவன் ஏற்றுக்கொள்ளக்கடவன் என்றார்.

----ஈசா நபி பிரயோகிக்கிற வார்த்தை---அண்ணகர்கள்!
அண்ணகர்கள் என்றால் ஆண்சரீரத்திலே ஆண் காம உணர்வும்;பெண் சரீரத்திலே பெண்காம உணர்வும் கடந்தவர்கள்!இதனை `அலி`என தவறுதலாக புறிந்துகொள்ளக்கூடாது!ஆண்சரீரத்திலே பெண் காம உணர்வும்;பெண் சரீரத்திலே ஆண்காம உணர்வும் மாறி உள்ளவர்கள் அலிகள்!அண்ணகர்கள் என்றால் காம உணர்வு கடந்தவர்கள்!--இயேசு,வள்ளலார் தாயின் வயிற்றிலிருந்து அண்ணகர்களாய்ப் பிறந்தவர்கள்!தேவதூதர்களைப்போன்றவர்கள்!
ஆக மறுமையில் ஹுருல்ஈன்களை துணையாக அளிப்போம் என்று கடவுள் சொல்லியுள்ளது அவர்களுக்கு கொடுக்கப்படும் வேலைக்காரர்களைப்போன்றவர்கள் தான்!
குரான்18:50. அன்றியும், “ஆதமுக்கு ஸுஜூது செய்யுங்கள்” என்று நாம் மலக்குகளிடத்தில் கூறியதை (நபியே!) நினைவு கூர்வீராக; அப்போது இப்லீஸைத்தவிர, அவர்கள் ஸுஜூது செய்தார்கள்; அவன் (இப்லீஸ்) ஜின் இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; அவன் தன் இறைவனுடைய கட்டளையை மீறி விட்டான்; ஆகவே நீங்கள் என்னையன்றி அவனையும் அவன் சந்ததியாரையும் (உங்களைப்) பாதுகாப்பவர்களாக எடுத்துக் கொள்வீர்களா? அவர்களோ உங்களுக்குப் பகைவர்களாக இருக்கிறர்கள்; அக்கிரமக்காரர்கள் (இவ்வாறு) மாற்றிக் கொண்டது மிகவும் கெட்டதாகும்.
மனிதனைப்படைத்து அவனுக்கு வேலைக்காரர்களாக இருக்கும் படியாகத்தான் தேவதூதர்கள் கட்டளையிடப்பட்டார்கள்!இப்லீஷ் ஒருவனைத்தவிற மற்ற தேவதூதர்களும் பணிந்தனர்!மனிதனுக்கு கடவுள் கொடுத்த மகத்துவம் இது!
7:11. நிச்சயமாக நாமே உங்களைப் படைத்தோம்; பின்பு உங்களுக்கு உருக்கொடுத்தோம். அதன்பின், “ஆதமுக்கு ஸுஜுது செய்யுங்கள் (சிரம் பணியுங்கள்)” என்று மலக்குகளிடம் கூறினோம்; இப்லீஸைத் தவிர (மற்ற மலக்குகள்) யாவரும் (அவருக்குத்) தலைவணக்கம் செய்தார்கள்; அவன் (மட்டும்) தலைவணக்கம் செய்தவர்களில் ஒருவனாக இருக்கவில்லை.
7:12. “நான் உனக்குக் கட்டளையிட்ட போது, நீ ஸஜ்தா செய்யாதிருக்க உன்னைத் தடுத்தது யாது?” என்று அல்லாஹ் கேட்டான்; “நான் அவரை (ஆதமை)விட மேலானவன் - என்னை நீ நெருப்பினால் படைத்தாய், அவரை களிமண்ணால் படைத்தாய்” என்று (இப்லீஸ் பதில்) கூறினான்.
7:13. “இதிலிருந்து நீ இறங்கி விடு; நீ பெருமை கொள்வதற்கு இங்கு இடமில்லை; ஆதலால் (இங்கிருந்து) நீ வெளியேறு - நிச்சயமாக நீ சிறுமை அடைந்தோரில் ஒருவனாகி விட்டாய்” என்று அல்லாஹ் கூறினான்.
7:14. “(இறந்தவர்) எழுப்பப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக” என அவன் (இப்லீஸ்) வேண்டினான்.
7:15. (அதற்கு அல்லாஹ்) “நிச்சயமாக நீ அவகாசம் கொடுக்கப்பட்டவர்களில் ஒருவனாவாய்” என்று கூறினான்.
7:16. (அதற்கு இப்லீஸ்) “நீ என்னை வழி கெட்டவனாக (வெளியேற்றி) விட்டதன் காரணத்தால், (ஆதமுடைய சந்ததியரான) அவர்கள் உன்னுடைய நேரான பாதையில் (செல்லாது தடுப்பதற்காக அவ்வழியில்) உட்கார்ந்து கொள்வேன்” என்று கூறினான்.
7:17. “பின் நிச்சயமாக நான் அவர்கள் முன்னும், அவர்கள் பின்னும், அவர்கள் வலப்பக்கத்திலும், அவர்கள் இடப்பக்கத்திலும் வந்து (அவர்களை வழி கெடுத்துக்) கொண்டிருப்பேன்; ஆதலால் நீ அவர்களில் பெரும்பாலோரை (உனக்கு) நன்றி செலுத்துவோர்களாகக் காண மாட்டாய்” (என்றும் கூறினான்).
7:18. அதற்கு இறைவன், “நீ நிந்திக்கப்பட்டவனாகவும், வெருட்டப்பட்டவனாகவும் இங்கிருந்து வெளியேறி விடு - அவர்களில் உன்னைப் பின்பற்றுவோரையும், உங்கள் யாவரையும் கொண்டு நிச்சயமாக நரகத்தை நிரப்புவேன்” என்று கூறினான்.
7:19. (பின்பு இறைவன் ஆதமை நோக்கி:) “ஆதமே! நீரும், உம் மனைவியும் சுவர்க்கத்தில் குடியிருந்து, நீங்கள் இருவரும் உங்கள் விருப்பப்பிரகாரம் புசியுங்கள்; ஆனால் இந்த மரத்தை (மட்டும்) நெருங்காதீர்கள்; (அப்படிச் செய்தால்) நீங்கள் இருவரும் அநியாயம் செய்தவர்கள் ஆவீர்கள்” (என்று அல்லாஹ் கூறினான்).
7:20. எனினும் அவ்விருவருக்கும் மறைந்திருந்த அவர்களுடைய (உடலை) மானத்தை அவர்களுக்கு வெளிப்படுத்தும் பொருட்டு ஷைத்தான் அவ்விருவரின் உள்ளங்களில் (தவறான எண்ணங்களை) ஊசலாடச் செய்தான்; (அவர்களை நோக்கி, “அதன் கனியை நீங்கள் புசித்தால்) நீங்கள் இருவரும் மலக்குகளாய் விடுவீர்கள், அல்லது (இச்சுவனபதியில்) என்றென்னும் தங்கிவிடுவீர்கள் என்பதற்காகவேயன்றி (வேறெதற்கும்,) இந்த மரத்தை விட்டும் உங்களை உங்கள் இறைவன் தடுக்கவில்லை” என்று கூறினான்.
7:21. “நிச்சயமாக நான் உங்களிருவருக்கும் நற்போதனை செய்பவனாக இருக்கிறேன்” என்று சத்தியம் செய்து கூறினான்.
7:22. இவ்வாறு, அவன் அவ்விருவரையும் ஏமாற்றி, அவர்கள் (தங்கள் நிலையிலிருந்து) கீழே இறங்கும்படிச் செய்தான் - அவர்களிருவரும் அம்மரத்தினை (அம்மரத்தின் கனியை)ச் சுவைத்தபோது - அவர்களுடைய வெட்கத்தலங்கள் அவர்களுக்கு வெளியாயிற்று; அவர்கள் சுவனபதியின் இலைகளால் தங்களை மூடிக்கொள்ள முயன்றனர்; (அப்போது) அவர்களை அவர்கள் இறைவன் கூப்பிட்டு: “உங்களிருவரையும் அம்மரத்தை விட்டும் நான் தடுக்கவில்லையா? நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் என்று நான் உங்களுக்கு சொல்லவில்லையா?” என்று கேட்டான்.
7:23. அதற்கு அவர்கள்: “எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்” என்று கூறினார்கள்.
7:24. (அதற்கு இறைவன், “இதிலிருந்து) நீங்கள் இறங்குங்கள் - உங்களில் ஒருவர் மற்றவருக்குப் பகைவராயிருப்பீர்கள்; உங்களுக்கு பூமியில் தங்குமிடம் இருக்கிறது; அதில் ஒரு (குறிப்பிட்ட) காலம் வரை நீங்கள் சுகம் அனுபவித்தலும் உண்டு” என்று கூறினான்.
7:25. “அங்கேயே நீங்கள் வாழ்ந்திருப்பீர்கள்; அங்கேயே நீங்கள் மரணமடைவீர்கள்; (இறுதியாக) நீங்கள் அங்கிருந்தே எழுப்பப்படுவீர்கள்” என்றும் கூறினான்.
---மேற்கண்ட வசணங்களில் இருந்து பரலோக பாக்கியம் நாம் பெற்றால் அங்கு ஆண்பெண் காம உணர்வு கடந்தவர்களாக இருப்போம்!தேவதூதர்கள் நமக்கு பணிவிடை செய்வார்கள்!  எப்படியாவது பரலோக பாக்கியம் பெறாதபடி நம்மைதடுக்க இந்த பூமியில் அசுரன் வழி கெடுத்துக்கொண்டே இருப்பான்!

அதற்கு அனைத்து இறைதூதர்களின் உபதேசங்களை தியாணிப்பதும்,இடைவிடாது கடவுளை பிரார்திப்பதும் அவசியமாகும்!எதற்க்காகவும் பெறுமை கொள்ளாது எங்கிறுந்தும் உண்மையை கற்றுக்கொள்ள சித்தமான மனனிலை அவசியமாகும்!சென்று போன தூதர்களின் உபதேசங்களை மட்டும் கொண்டு தற்ப்போதும் ஜீவனோடிருந்து நம்மை வழிகெடுக்க இடையறாது முயற்ச்சி செய்யும் அசுரனை வெல்ல முடியாது! உயிறோடிருக்கும் ஒரு இறைதூதரால்தான் முடியும் என்பதாலும் ;உயிறோடிருக்கும் ஒரு இறைதூதர் எளிதாக உலகத்தையே கடவுளோடு ஒப்புரவு ஆக்கி விடுவார் என்பதால் வல்லமையுள்ள இறைதூதர் ஒருவரை இப்போது அணுப்பும்படியாக கடவுளை தொடர்ந்து வேண்டிக்கொள்ளுவோம்!






Sunday, October 30, 2011

அந்தரங்க சுத்தி என்றால் என்ன? அசுரனுக்கு இடம் கொடுத்தல் என்றால் என்ன?

இது யாரை எவ்வாறு வழிபடுகிறோம் என்கிற விசயம் மட்டும் அல்ல!
ஒவ்வொரு நிமிடமும் எவ்வாறு வாழ்கிறோம் --உண்மையில் இறைஅச்சம்,பழிபாவங்களுக்கு அஞ்சிக்கொள்ளுகிறோமா,நமது சரீரத்தின் இச்சைகளை அசுரன் அழகாக்கி காட்டும் போதும்,நம்மை நாமே நியாயப்படித்தி உலகமாயைகளில் ஈடுபாடு கொண்டு வாழ்ந்துகொண்டே சடங்காகவும் சம்பிரதாயமாகவும் வழிபாடு செய்கிறோமா?--அந்தரங்க சுத்தி என்பது தனி மனிதனின் வாழ்க்கை தொடர்பான விசயம்!எந்த மதம் --குழு,கூட்டம் சார்ந்த விசயம் அல்ல!
இறைதூதர்கள் மூலமாக வந்த இறைவேதங்களை,பிரார்த்தணையை வெளிச்சமாக கொண்டு மனிதர்கள் முயற்சி செய்யலாமே தவிற மனித முயற்சி என்பது அறைகுறையானது!
புதிய,செறிவூட்டபட்ட மாயைகளை எதிராளி-அசுரன் ஆவிமண்டலத்திளிருந்து விதைக்கும் போது ;அதர்க்கு பெட்ரோல்
நமது சரீரத்திலேயே இறுக்கும் போது சாதாரன அப்பாவிகளை வெளிச்சமாக்க இறைவனால் அபிசேகிக்கபட்ட ஞானிகள்,சூபிக்கள் வந்தாகவேண்டும்!கடவுளின் வல்லமையில்லாமல் நம்மைப்போன்ற இறையுணர்வு பெற்றவர்களாலும் முடியாதது!அதனால் தான் கடவுள் புதிய இறைதூதரை அணுப்பும் படி பிரார்த்தணை செய்வதும் அவசியமாக இருக்கிறது!
முஹமது நபி ஒரு கருவியே தவிற அவரின் மூலமாக செயல்பட்டது `ஜிப்ரீல்` என்ற தேவதூதரே!--ஆவிமண்டல தேவதூதர்களின் தலைவரான `ஜிப்ரீல்` கடவுளின் செய்தியை,வழிநடத்துதலை முஹமது நபியின் உடலை அபிசேகித்து அவரே செயல்பட்டார்!வேதம் இறக்கபட்டது என்பது நபியின் உள்ளிருந்து `ஜிப்ரீல்`தான் பேசினார்!
இறைதூதர்கள் என்பவர்கள் கடவுளும் தேவதூதர்களும் செயல்பட  ஒரு ஊடகமாக தமது சரீரத்தை ஒப்புகொடுத்தவர்களே!--சில வெளைகளில் சுயமாகவும் சில வேளைகளில் கடவுள் செயல்படுகிற இறட்டை தண்மை அவர்களிடம் காணப்படும்!

Wednesday, October 26, 2011

தீபாவளி ---தத்துவ விளக்கம் !




நரன் என்றால் மனித சரீரத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறவன் !

மனித சரீரத்திற்குள் கடவுள் தனது ஆவியில் ஒரு துளியை ஊதியதே அவனின் உயிராகும் ! அது உயிராக ஓடிக்கொண்டு இருக்கும் வரையில் நரன் என்
கிற ஆத்மன் சரீரத்தில் இயங்கி வாழ்ந்துகொண்டிருப்பான் !

தனது உயிர் கடவுளின் ஒரு துளி  என்பதை மறந்து சரீர உணர்வுகளுக்கு ஆட்பட்டு தன்னை மனிதனாகவே கற்பனை செய்துகொள்ளுகிறது ஆத்மன் ! அத்தோடு பிரபஞ்சம் முழுவதும் விரவியும் நிறைந்துள்ள பரமாத்மாவின் ஒரு நீட்சியே தனது ஆத்மா என்பதையும் மறந்துவிடுகிறது

அதுவே  நரனாய் ஆனவன் நாராயணன் என்பது !!


சரீரத்தோடு சம்மந்தமடைந்து எல்லா ஆத்மாக்களும் சுயேட்சை அடைந்து தனித்த பிரகிருதியாக  ஜீவாத்துமாவாக மாறுபாடடைகிறது!


பண்றி என்பது உணர்வுகளை முகர்ந்து அதனையே உண்டு வாழ்வது !காட்டுபண்றி தரையை முகர்ந்து உள்ளிருக்கும் கிழங்கு வகைகளை கண்டறிந்து பூமியை தோண்டி கிழங்கை உண்ணுகிறது எந்த பண்றியும் முகற்சி உள்ளது!


முகற்சி எண்பது மோஹவகைப்பட்டதாகும்!இந்த மோஹத்தை உலகமும் உலகத்தை மோஹமும் காதலித்து நரனை நரகாசுரனாக மாற்றிக்கொண்டு உள்ளன!


நரனான மனிதன் உலக மாயையில் மூழ்கி `எதை நினைக்கிறாயோ அதுவாகவே மாறி` மோஹ வகைப்பட்டவனாய் உலக பந்தத்தில் மாட்டிகொள்ளுகிறான்!

உலக பந்தத்தில் மாட்டிகொண்ட நரனை `1)ஆணவம்2)கண்மம்3)மோஹம்4)மதம்5)மாச்சரியம் என்கிற அய்ந்து மாயைகளை பறப்பி வானமண்டலத்து அசுரர்கள் அரக்கனாய் மாற்றுகின்றனர்!


உலகில் கொடுங்கோலர்கள் துன்மார்க்கர்கள் இருப்பார்கள் என்றால் அவர்களுக்கு அசுரர்களின் சிறப்பு அபிசேகம் இல்லாமல் கொடுமை செய்வதில்லை!

கடவுள் தனது தூதர்களை அனுப்புவது போல் அசுரர்களும் தனது தூதர்களை பூமியில் அவ்வப்போது அனுப்புகிறான்!கடவுள் பணமும் பதவியும் கொடுத்தால் அந்த மனிதனுக்கு ஆணவத்தையும் அக்கிரமத்தையும் அசுரர்கள் உபதேசித்து அரக்கர்களாய் மாற்றுகின்றனர்!


நரன் +அசுரன் =நரகாசுரன் !!

நரன் தன்னை நாராயணனின் அங்கம் என்பதையும் மறந்து உலகை மோஹித்து பணமும் பதவியும் அடைந்தவுடன் அசுரர்களுடன் கலந்து நரகாசுரனாக மாற்றம் அடைகிறான்!அதனால் தான் நரகாசுரனை நாராயணனாலும் கொல்ல முடியவில்லை என்பது!


நாராயணனின் மனைவி உயிர்த்தடமாகிய தொப்புளில் தாமரையில் வாசமாயிறுக்கிரவள்! தாமரை என்பது தான் இருக்கும் தண்ணீருடன் சம்மந்தம் கலவாதது ! இவ்வுலகத்திலேயே இருந்தாலும் சரீரத்திலேயே இருந்தாலும் அதில் பட்டும் படாமலேயே உயிரானது ஓடிக்கொண்டு உள்ளது ! ஏனென்றால் உயிரானது கடவுளின் ஆவியின் ஒரு துளி ஆகும்!

எனவே அவளிடம்--உயிரிடம் மனிதன் ஒன்றி தியாணிது தான் சரீரமல்ல ;அது நிலையற்றது! தன் சரீரம் தேர் மட்டுமே !அதில் பயணிக்கும் அர்ச்சுணன் ஆகிய ஆத்துமா; க்ரிஷ்ணனாகிய இறைதூதனுக்கு அடையாளமாகிய தனது உயிரின் பின்னால் செல்லக்கூடியவனாக மாற வேண்டும்!


ஒரு மனிதனின் சரீரம் என்பது அசுரர்களின் ஆளுகைக்குட்பட்ட பொருளாக--உணர்வு வயப்பட்ட பிரகிருதியாக உள்ளது! அந்த சரீரத்தின் பின்னால் செல்லுகிற மனிதன் அசுரர்களால் ஆளப்பட்டு நரகாசுரனாக மாற வாய்ப்புகள் அதிகம் உள்ளன !

அப்படியில்லாமல் உயிரோடு ஒன்றி தியாணிக்கிற மனிதன்;மேலும் இறைதூதர்களின் உபதேசங்களில் அடிக்கடி ஸ்ணானம் செய்கிற மனிதன் தேரினை அடக்கி க்ரிஷ்ணனின் நண்பனாய் வெற்றி பெறுகிறவனாய் மாறுகிறான்!


உயிருடன் ஒன்றி தியாணிக்கிற தன்மை பெறுக பெறுக இறைஉணர்வு மனிதனுக்கு விருத்தியாகிறது! இப்படிப்பட்ட மனிதன் தனது பணம்,பதவியை அசுரனின் பேச்சை கேட்டு துஸ்பிரயோகம் செய்வதில்லை! நரகாசுரனாக மாறி விட்ட மனிதனை இத்தகைய மனிதர்களே அடக்குகிண்றனர்! மனித நேயம்,முற்போக்கான காரியங்கள் இறைஅச்சம் உள்ள மனிதர்களாலேயே தலைத்தோங்குகின்றது!


இருப்பினும் இந்த தத்துவத்தை நிணைவு கூர்வதற்கு நரகாசுரனை கொன்ற நாளாக `தீபாவளி` உருவகப்படுத்தப்படுகிண்றது! இது ஒரு உருவகமே! உண்மை நிகழ்சி என எடுத்துக்கொள்ள வேண்டுவதில்லை!

கங்கா ஸ்ணானம் என்பது நம்மை தூய்மை செய்ய இறைதூதர்களின் உபதேசங்களில் மூழ்கவேண்டும் என்பதுதான்!

கடவுள் நம் ஆத்துமாவில் ஒளி ஏற்றுவாராக!






மனிதனுக்குள் என்ன இருக்கிறது?

ஆவி ,ஆத்துமா ,சரீரம் -----என மூன்றும் சேர்ந்தது மனிதன் ----யூத ,கிறிஸ்தவ ,முஸ்லிம் வேதங்களின்படி !
உயிர் ,உடல் என வகைபடுத்தினாலும் சரீரத்தை ஸ்தூல சரீரம் ,சூக்கும சரீரம் என உட்பிரிவாக முறையே உயிர் ,சூக்கும சரீரம்,ஸ்தூல சரீரம் என மூன்றாக மனிதனை வகைப்படுத்துவது இந்திய வேதம் !மனிதனின் மனம்  உயிரில் நிலை பெரும் போது மெய்அறிவு  விளித்துகொள்ளும் ஏனன்றால் உயிர் -கடவுளின் ஆவியில் ஒரு துளி மனிதனுக்கு உயிராக அருளப்படுகிறது!ஆத்துமா ,சரீரம் என்பது நமது தாய் தந்தையர் மூலமாக எல்லா பாவ புண்ணிய பதிவுகளுடன் வருவது !சரீரம் அழியக்கூடியது !ஆனால் ஆத்துமா அழிவில்லாதது (கீதை )--மனிதனை விட்டு அவனது உயிர் எடுத்துக்கொள்ளப்பட்டால் அவனது சரீரமும் ஆத்துமாவும் செயல்பட முடியாமல் நித்திரை அடைகிறது சரீரம் அழிந்தாலும் ஆத்துமா பூமிக்குள் நித்திரையிலிருக்கும்  நியாய தீர்ப்பு நாளன்று இதுவரை மனிதனாக வந்த எல்லா ஆத்துமாக்களும் ஆவி அருளப்படும்   சூக்கும சரீரத்தில் மீண்டும் உயிரோடு எழுப்பப்பட்டு அவரவர் செய்த செயலுக்கு நியாத்தீர்பு அடைவார்கள் !அதன் பிறகு தேரிய ஆத்மாக்களை கொண்டு கல்கியுகம் தொடங்கும் !இது தான் எல்லா மதங்களின் உள்ளார்ந்த அடிப்படை ! கடவுளின் நியாத்தீப்பு நாளை நம்புவது என்பதுதான் இறை அச்சத்திற்கு அடிப்படை !துன்மார்க்கர்களுக்கு இறை அச்சம் இல்லவேயில்லை !ஆத்துமா,சரீரத்தில் இச்சைகளை தூண்டி மனிதர்களை அசுரர்களால் ஆளுமை செய்ய முடியும் !அதனால்தான் கடவுளின் ஒரு பகுதியாகிய நமது உயிரில் நிலைத்து நின்று தியானம் ,யோகம் செய்யும் போது  ஆத்துமா; சரீர ஆளுகையிளிருந்தும் அசுரர்களின் மாயையிளிருந்தும் விடுபட தொடங்கி ஞானத்திர்க்குள் திரும்புகிறது !அத்தோடு  யூத ,முஸ்லிம் முறைமையின் படி கடவுளை நோக்கி இடைவிடாத பிரார்த்தனை அவசியம் !அதனால் தான் வல்ளலார் அருட்பெரும்ஜோதியை நோக்கிய பிரார்த்தனையை ஊக்குவித்தார் ! ஞான மார்க்கத்தில் திரும்புவோரை வளர விடாது தடுக்கிற அசுரர்கள் அப்படி வளர்ந்தால் அதையும் கெடுக்க  வைத்திருக்கிற மந்திரம் தான் உனக்குள்ளேயே கடவுள் இருக்கிறார் உன்னை நீ அறிந்து கடவுளாகிவிடு என்பது !தேவதூதர்களில் யார் நாங்களும் கடவுளுக்கு இனை ஆகி விட்டோம் என்றார்களோ அவர்கள் தான் அசுரர் ஆனவர்கள் !நியாய தீர்ப்பு நாளன்று தங்களுக்கு அழிவு நிச்சயம் என்பது அசுரர்களுக்கு நன்கு தெரியும் !கடவுளால் படைக்கபடுகிற மனிதர்கள் தங்களோடு அளிக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் இத்தனை மாயைகளை அசுரர்கள் செய்துகொண்டுள்ளனர் !அதில் கடைசி மாயை தான் ஞான மார்க்கதிர்க்கென்றே வைத்துள்ள உனக்குள்ளேயே தேடி நீயே கடவுளென்று உணர்ந்துவிடு என்பது !நாங்களும் கடவுளாகி விட்டோம் நீங்களும் கடவுளாகிவிடுங்கள் என்பது !சென்றுபோன தூதர்களை ,மகான்களை ,ஞானிகளை கடவுளாகி விட்டதாக சித்தரிப்பது !அவர்கள் பெயரால் பூமியில் அற்புதங்களை செய்து அவர்களை கும்பிட்டால் நல்லது நடக்கிறது ,அவர்களும் கடவுளாகிவிட்டனர் என நம்ப வைப்பது !இந்த மாயைக்குள் எல்லா மதங்களும் விழுந்து சீரழிந்து விட்டன !

சிவவாக்கியர்  எல்லா ஞானரகஸியங்களை சொல்லியபிறகு கடைசியாக சொன்னது :


ஓடி ஓடி   உட்கலந்த ஜோதியை
நாடி நாடி தேடியே நாட்களும் போயின !
கண்டவர் விண்டதில்லை
விண்டவர் கண்டதில்லையே !

மனிதனுக்குள்ளாக தேடுவதர்க்கு என்ன இருக்கிறது ?
கடவுளின் ஆவியில் ஒரு சிறு துளி மனிதனின் உயிராக இருக்கிறது !
அதற்க்கு மேலாக தேடிக்கொண்டே இருந்தால் நாட்கள் தான் விரையமாகுமே தவிர கடவுளை காணவே முடியாது !

பரப்பிரம்மம் ஆகிய கடவுள் முற்றுயிராக ---பரமாத்மாவாக ---அருட்பெரும்ஜோதியாக வெளியே இருக்கிறார் !எழு வானங்களுக்கு அப்பால் பரலோகத்தில்மையம் கொண்டு  உள்ளார் !நீக்கமற எல்லா இடங்களிலும் நிறைந்தும் உள்ளார் !  ஒரு மனிதனுக்கு கடவுளோடு மிகவும் தொடர்புள்ள பொருள் அவனது உயிரே !அந்த உயிரிலே நிலைத்துநின்றால் சரீரத்தின் பின் செல்லுகிற அவனது ஆத்மா உயிரின் பின் செல்லுகிற ஆத்மாவாக மாறும் !ஆனால் அது மட்டும் போதாது ;சரீர ஆத்மா ஜீவ ஆத்மாவாக தன்னை உணர்ந்து பரமாத்மாவோடு தொடர்பு கொள்ள பயிற்சிக்கு வரவேண்டும் !ஞான மார்க்கத்தில் வளர்ந்து மீண்டும் பக்தி மார்க்கத்தில் அருவ ,ஏக கடவுளை நோக்கி மனம் திரும்பிவிடவேண்டும் !அதுதான் விசிச்டாத்வைத நெறி !

புலால் உணவு உண்ணலாமா ?

உலகம் ஜலப்பிரளயதால் அழிந்ததாகவும் அப்போது ஒரு மனிதனின் குடும்பம் மட்டும் ஒரு பேழையில் தப்பித்ததாகவும் உலகம் முழுமையும் ஒரு கர்ணபரம்பரைக்கதை ஒன்று நிலவுகிறது .இக்கதையை யூதர்களின் வேதமான பைபிளும் .அரபியர்களின் வேதமான குரானும் ,இறைதூதர் நோவாவின் குடும்பம் மட்டுமே பிரளயத்தில் தப்பிய வரலாற்றை பொழிப்புரை செய்கின்றன !லெமூரிய கண்டம் என்ற ஒன்று கடல் கொண்டது என திராவிட வரலாறும் ஒப்புகொள்கிறது ! 5000 வருடத்திர்க்கு முன் மோசே என்கிற இறைதூதர் நோவா என்கிற இறைதூதரைப்பற்றி ஆதியாகமம் 4-9 அதிகாரத்தில் எளிதியுள்ளார் !பிரளயத்தில் தப்பிய நோவாவுடன் கடவுள் பேசியதாக கீல்கண்ட வசனங்கள் வருகின்றன :
ஆதியாகமம்  9 அதிகாரம்

    1. பின்பு தேவன் நோவாவையும், அவன் குமாரரையும் ஆசீர்வதித்து: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள்.

    2. உங்களைப்பற்றிய பயமும் அச்சமும் பூமியிலுள்ள சகல மிருகங்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும் உண்டாயிருக்கும்; பூமியிலே நடமாடுகிற யாவும், சமுத்திரத்தின் மச்சங்கள் யாவும், உங்களுக்குக் கையளிக்கப்பட்டன.

    3. நடமாடுகிற ஜீவஜந்துக்கள் யாவும், உங்களுக்கு ஆகாரமாய் இருப்பதாக; பசும் பூண்டுகளை உங்களுக்குத் தந்ததுபோல, அவைகள் எல்லாவற்றையும் உங்களுக்குத் தந்தேன்.

    4. மாம்சத்தை அதின் ஜீவனாகிய இரத்தத்தோடே புசிக்கவேண்டாம்.

    5. உங்களுக்கு ஜீவனாயிருக்கிற உங்கள் இரத்தத்திற்காகப் பழிவாங்குவேன்; சகல ஜீவஜந்துக்களிடத்திலும் மனுஷனிடத்திலும் பழிவாங்குவேன்; மனுஷனுடைய ஜீவனுக்காக அவனவன் சகோதரனிடத்தில் பழிவாங்குவேன்.

    6. மனுஷன் தேவசாயலில் உண்டாக்கப்பட்டபடியால், மனுஷனுடைய இரத்தத்தை எவன் சிந்துகிறானோ, அவனுடைய இரத்தம் மனுஷனாலே சிந்தப்படக்கடவது.

    7. நீங்கள் பலுகிப் பெருகி, பூமியிலே திரளாய் வர்த்தித்து விருத்தியாகுங்கள் என்றார்.


--------------------------------------------------------------------------------------------------
தாவரங்கள் அனைத்திற்கும் உயிர் இருக்கிறது .அவற்றை கொன்றுதான் உண்டுவருகிறோம் !உயிர்க்கொளையிலாத உணவு என்று எதுவுமே இல்லை !ஒரு பயிரை அறுக்கும் போது அது வேதனைப்படுகிறது ! தாவரங்கள் உறங்குகிறது; விழிக்கிறது; உணவு தயாரிக்கிறது:நல்ல இசைக்கு மங்குகிறது என்று கூட விஞ்ஞானம் கண்டுபிடித்திருக்கிறது !ஒவ்வொரு தாவரத்திர்க்கும் ஒரு குறிப்பிட்ட குணம் ---தாது உண்டு !சித்த வைத்தியம் என்பதின் அர்த்தம் ஒரு குறிப்பிட்ட வியாதி குறிப்பிட்ட குணத்தால் வருவது ;அதனை குறிப்பிட்ட குணம் உள்ள மூலிகைகளை கொடுப்பதன் மூலமாக குணமாக்கலாம் என்பதுதான் !அகத்தியர் முதலான மாமுனிவர்கள் மூலிகைகளின் குணங்களை ஆய்ந்தறிந்து வகைப்படுத்தியுள்ளனர் !நல்ல குணங்கள் மட்டுமல்ல கெட்ட குணங்களை உண்டாக்கும் மூலிகைகளும் உண்டு !ஒரு மூளிகையையை அளவுக்கு அதிகமாக சேர்த்தாலும் கெடுதல் உண்டாகும் !


ஓருயிர் முதல் ஐந்தறிவு மிருகங்கள் வரை எல்லாமும் உயிரினமே !மிருகங்கள் பாலுட்டி வளர்ப்பதால் மனிதனை நெருங்கிய படைப்பு மட்டுமல்ல அவைகளின் மீது மனிதனுக்கு விருப்பும் &வெறுப்பும் வருகிறது !அவற்றின் ரத்தத்திலிருந்து ஊரும் பாலை (ரத்தத்தையே ) குடிக்கும் மனிதன் அவற்றின் அளியப்போகிற உடல் மீது மட்டும் என்ன பரிதாபம் ?உடல் மீது அன்பு செலுத்தும் மனிதன் முதலில் அதன் பால் மீதும் அன்பு செலுத்த வேண்டுமல்லவா ? மிருகத்தை விட கீழ் அறிவுள்ள பயிர்களும் மீதும் அன்புசெழுத வேண்டாமா ?
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாட வேண்டாமா ?இறை உணர்வில் வளர்ந்து முற்றியதால் வல்ளலார் வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடும் நிலைக்கு வந்தார் .நமக்கு அந்த வளர்ச்சி ஏற்படததாலேயே மிருகத்தின் அவலக்குரலை மட்டும் கேட்டு கலங்குகிற நிலையில் உள்ளோம் !அதுவுமற்ற கல்நெஞ்சக்காரர்களை விட நமக்கு நல்ல மனம் ---இளகிய மனம் என்பதை ஒத்துக்கொள்கிறேன் .ஆனால் குழந்தையாகவே இருப்பது சவ்கரியம்; ஒன்னாங்கிலாசுக்கு மட்டுமே போய் வருகிறேன் என்றால் தலைவாரி பூச்சூடி அனுப்பி வைப்போமா ?அது போல அன்பிலே வளர்ந்து எந்தப்பயிரையும் கொன்று உண்ணவே கூடாது என்று சொல்வீர்களானால் நானும் ஓ போடுவேன் !

ஆனால் தேவ ஞானமானது :
 3. நடமாடுகிற ஜீவஜந்துக்கள் யாவும், உங்களுக்கு ஆகாரமாய் இருப்பதாக; பசும் பூண்டுகளை உங்களுக்குத் தந்ததுபோல, அவைகள் எல்லாவற்றையும் உங்களுக்குத் தந்தேன்.

    4. மாம்சத்தை அதின் ஜீவனாகிய இரத்தத்தோடே புசிக்கவேண்டாம்.
------------நன்கு கவனியுங்கள்! ரத்தத்தை புசிக்கலாகாது!அது தரையிலே சிந்தப்படவேண்டும் !ரத்தத்தை தரையிலே ஊற்றிவிட்டால் அதன் ஜீவன் தரைக்குள் சென்று சாந்தியடைந்து விடுகிறது .பயிரை அருத்தவுடன் அதன் ஜீவன் வேர் வழியாக தரைக்குள் சென்று சாந்தியடைவதைப்போல !ரத்தமில்லாத மாமிசமும் பயிரும் ஒன்று தான் !
அசைவம் ----ஜீவன் கலந்த உணவு !மிருக ஜீவனை உட்கொண்டால் மிருகத்தன்மை மனிதனிடம் கூடி ஒருவரை ஒருவர் அழித்து வாழ்கிற மனநிலை வந்துவிடும் அதனை மட்டுபடுத்த சாத்வீக உணவு சைவ உணவு என்று ஞானிகள் சொன்னார்கள் !அவர்களின் குறிக்கோள் மிகவும் உயர்ந்தது !மனித அறிவாள் விளைகிற ஞானம் ---ஞானிகள் ,மகான்கள் தாங்கள் முயற்சியால் எட்டுகிற ஞானம் குரையுள்ளது !முற்றரிவாலனாகிய கடவுள் ஒருவரே தனது தூதர்கள் மூலமாக முற்றரிவை வெளிப்படுத்த வல்லவர் !நோவாவின் காலம் பல யுகத்திற்கு முன்பு !கடவுள் கொடுத்த வேதம் --அறிவுரை இது !ரத்தமாகிய ஜீவனை தரையிலே ஊற்றிவிட்டு ,தண்ணீரில் கழுவி மாமிசத்தை புசிப்பதும் சைவ உணவே !ஒரிஜினல் அக்மார்க் சைவ உணவே !ரத்தத்தை புசிப்பதும் குடிப்பதும் மிருக ஜீவனை மனிதனுக்குள் கலந்து அவனை அரக்கனாக --அசுரர்களுக்கு எளிதில் இடம் கொடுக்கிரவனாக மாற்றிவிடும் !

மோசே மூலமாக கொடுக்க பட்ட வேதத்தில் இன்னும் தெளிவாக ரத்தகலப்பற்ற உணவுக்கு வழிமுறை சொல்லப்பட்டுள்ளது !

1)தானாய் செத்தது ,பிரமிருகங்களால் பீறுண்டு செத்தது ,விபத்தில் அடிபட்டு செத்தது இவைகளும் உன்னலாகாது
 2)மிருகங்களில் உன்னத்தகுதியானவை என்பதற்கு ஒரு வரையறை ------அது அசை போடவேண்டும் !

அசை போடுகிற மிருகங்கள் என்றால் அது தாவர பட்சி மட்டுமே !மிருகத்தை மிருகம் அடித்து சாப்பிடுபவை ரத்தத்தோடு மாமிசத்தை பட்சிக்கிரவை !அதனை உன்னலாகாது !

அசை போடுகிற மிருகங்கள் எல்லாவகையான மூலிகைகளையும் முதலில் மேய்ந்து அரைகுறையாக முளிங்கிவிடும் .பிறகு தண்ணீரும் குடிதுவிடும் .பிற்பாடு ஒரு இடத்தில படுத்து தான் உண்டவைகளைஎல்லாம் வாய்க்கு கொண்டுவந்து அசைபோட்டு நன்கு அரைத்து அதனை சரிவிகித உணவாக ---சித்த வைத்தியர் சகல மூலிகைகளையும் கல்புடமிடுவதைப்ப்போல் -----மாற்றி பின்னர் செரிமானத்திற்கு அனுப்புகிறது !அதனால் உருவாகும் மாமிசமும் ,பாலும் ஜீவனிளிருந்து உருவாக்கப்படும் கனிகளைப்போன்றவையே !தாவரத்தின் விளைவை போல ,பல தாவரங்களை உண்ட ஜீவனின் விளைவை மட்டுமே உண்ணவேண்டும் என்பது இறைவனின் அருட்கொடையாகும் !மனிதனின் ஆதிதொளிலே விவசாயமும் ,கால்நடை வளர்ப்பும்தான் !சொல்லப்போனால் கால்நடைகளுக்கு மேய்ச்சல் தேடித்தான் மனிதன் உலகம் முழுமைக்கும் குடிபெயர்ந்து பரவிசென்றான் .இந்த இரண்டும் மனிதனின் உழைப்பால் விளைந்த செல்வங்கள் மட்டுமல்ல ;அவனின் உணவுக்கு உரியவையே !


அசை போடாதவைகள் 1)பன்றி 2)முயல்3)சகலவித காட்டு மிருகங்கள்


1 & இரண்டும் விரைவில் அளுகக்கூடியவை.பன்றிக்கு தனியாக தோல் இல்லை சதையிளிருந்து தொலை பிரிக்கமுடியாது !எளிதில் கிருமிகள் உட்புகுந்து உயிரோடு இருக்கும் போதே புழு இருக்கும் முயலும் அப்படியே இவைகளை உண்டால் மனிதனின் மாமிசமும் விரைவில் நோய்வாய்ப்படும் !இந்த உண்மை தெரியாமல் ---பைபிளை கையிலே வைத்திருந்தாலும் அருவருப்பான நாட்டுபண்ணியைத்தான் கடவுள் உன்னவேண்டாம் என சொல்லியிருக்கிறார் என சாக்கு சொல்லிக்கொண்டு வெள்ளைப்பன்னியாய் விரட்டிவிரட்டி உண்பார்கள் ---இது தவறு !

மனித ஞானத்தால் தாவரவுணவு மட்டுமே சைவ உணவு என தீர்மானித்தது மட்டுமல்ல தங்களை சாதாரண மனிதர்களை விட புநிதர்கலாக காட்டிகொள்ளவும் ,உயர்வுதாழ்வு உண்டாகவும் சிலர் பயன்படுத்திக்கொண்டனர் !மனிதன் மீது அன்பு செலுத்துவது கடவுள் மீதான பக்தியின் வெளிப்பாடு என்று சொன்னால் தாங்கள் மிருகங்களின் மீதும் அன்பு செலுத்துகிறவர்கள் என சுயநீதி பாராட்டவும் பயன்படுத்துகின்றனர்


கிராமத்திலே கேளுங்கள் ---மனிதனுக்கு எந்தெந்த உருப்பிலே வியாதியோ ஆட்டின் அந்த உறுப்பை உண்டால் அந்த வியாதி குனமாகுமென்பார்கள் !இது அனுபவ கைமருந்து ஆகும் !ஏழைகளுக்கு எளிய செலவில் சரிவிகுதி சத்துணவு புலால் உண்பதுதான் !

தெளிவுரை :
1)ரத்தத்தை விலக்கிய புலால் உணவு சைவ உணவே !
2)தானாய்செத்தது ,பீருண்டுசெத்தது.அடிபட்டுசெத்ததை உன்னலாகாது!
3)அசை போடாத எந்த மிருகத்தையும் உன்னலாகாது!
4)இருப்பினும் முடிந்த அளவு தாவர உணவே சிறந்தது !

ஒரு ஹதீசுக்கு விளக்கம்

3275. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ரமளானுடைய ஸகாத் பொருளைப் பாதுகாத்திடும் பொறுப்பை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம் ஒப்படைத்தார்கள். அப்போது (இரவில்) ஒருவன் வந்து அந்த (ஸகாத்) உணவுப் பொருளை அள்ளலானான். உடனே, நான் அவனைப் பிடித்துக் கொண்டேன்; 'உன்னை அல்லாஹ்வின் தூதரிடம் இழுத்துச் சென்று முறையிடுவேன்" என்று கூறினேன். (அறிவிப்பாளர் முழு நிகழ்ச்சியையும் விபரமாகச் சொல்கிறார்..) இறுதியில் அவன், 'நீங்கள் படுக்கைக்குச் செல்லும்போது ஆயத்துல் குர்ஸீயை ஓதுங்கள். (அவ்வாறு ஓதினால்) உங்களுடன் பாதுகாவலர் (வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார். காலை நேரம் வரும் வரை ஷைத்தான் உங்களை நெருங்க மாட்டான்" என்று என்னிடம் சொன்னான். (இதை நபி(ஸல்) அவர்களிடம் சொன்னபோது,) 'அவன் பொய்யனாயிருந்தும், உங்களிடம் உண்மை பேசியுள்ளான். அவன் ஷைத்தான் தான்" என்று கூறினார்கள்.
Volume :3 Book :59

இதைப்பற்றி இன்னும் விரிவாக நான் சொல்லுகிரேன்:
முதல் நாள் இரவில் ஒருமனிதன் தானியத்தை வந்து அள்ளும்போது அபூ அவர்கள் தடுத்து வா உள்ளே நபியிடம் கொண்டு செல்வேன் என இழுத்த போது `தன் பிள்ளைகள் வறுமையில் வாடுவதால் இப்படி திறுடினேன் என சொன்னபோது மனம் இளகி விட்டுவிட்டார்!காலையில் நேற்றிரவு என்ன நடந்தது என நபி கேட்டார்கள்.அப்போது நபி அவன் பொய் சொல்லி உன்னை ஏமாற்றிவிட்டான் என சொன்னார்கள் அண்றிரவும் அதுபோல நடந்தது இரக்கபட்டு விட்டுவிட்டர் அபூ! மறுநாள் நேற்றிரவும் விருந்தாளி வந்தானா எனக்கேட்டு இன்றைக்கு வந்தால் விடாதே என எச்சரித்து விட்டார்!அன்றும் அதுபோல விருந்தாளி வந்தவுடன் அபூ உறுதியாய் பிடித்துக்கொண்டு நபியிடம் இழுத்த போது குர்ஸ்ஹியை ஓதும்படி கூறியவுடன் விட்டுவிடுகிறார்! ஆகா குரானை ஓதும்படி சொல்கிறானே நமது  ஆள் என்று நம்பி விட்டார் மறு நாள் மீண்டும் விசாரித்து விட்டு நபி பெருமானார் உண்மையை உரைத்தார்கள்:வந்தது சாத்தானென்று!

இதில் கற்றுக்கொள்ள வேண்டுவது?

நீங்கள் சொல்லுவது குர்ஸ்ஹியை ஓதினால் தேவதுதர்கள் பாதுகாப்பு கொடுப்பார்கள் என்பது மட்டுமே!
ஆனால் கீதையின் சாரத்தை புரிந்த என் விளக்கத்தை கேளுங்கள்
1) நபி அவர்கள் பீடத்தில் அமர்ந்திருக்கிற பள்ளிவாசலுக்கே சாத்தான் வருகிரான்.

 2)அங்கு பண்டிகைக்காக சேர்த்து வைத்திருக்கும் தானியத்தை குறைவடைய செய்ய முயற்சி செய்கிரான்.

3)திரும்பதிரும்ப பொய் சொல்லியாவது இரக்கத்தை தூண்டி தனக்கு இடம் கொடுக்க முயற்சி செய்கிரான்

4)பிடி பட்ட போது குரானின் சிறப்பையே சொல்லி தப்பிக்கொள்ளுகிறான் . சாத்தானும் வேதம் ஓதும் என்பதை நிரூபிக்கிறான் 

1)எவ்வளவு அருள் ஆற்றல் நிறைந்த இடத்திர்க்கும் -மனிதனிடத்தும் சாத்தான் வருவான்! தனக்கு  இடம் கொடுக்க வைக்க  முயலுவான்

2)நமது நற்க்குணத்தினால் பிரார்த்தனையால் விளைந்த பலனை முடிந்தளவு குறைவடைய செய்ய முயர்சிசெய்வான்!

3)அதர்க்காக நமது பலகீனமான உணர்வுகளை பயன்படுத்துவான் -தூண்டி விடுவான் ஒரு முறை தவறு செய்து விட்டால் மீண்டும் மீண்டும் அதனையே தூண்டுவான் பாவசெயல்களுக்கு  ஆசை காட்டுவது மட்டுமல்ல;அதனை சுய சாக்கு சொல்லி அழகாக்கி காட்டிக்கொண்டே இருப்பான்

4)அப்படியே மீறி அப்பாவத்தை செய்யக்கூடாது என முடிவெடுத்தால் வேதத்தின் ஒருபகுதியை ஓதி நீ பெரிய குற்றவாளி உன்னை கடவுள் தண்டிக்காமல் விடமாட்டார் என குற்றம் சாட்டுவான்!அதனால் பாவ சுரனை அற்றுப்போய் முழுக்க
நனைந்து விட்டோமே முக்காடு எதர்க்கு என பலர் முழுக்குற்றவாளியாய்
போய்விடுவர்!

கொஞ்சம் கவனியுங்கள்:மூன்று நாளலவும் திரும்ப திரும்ப அபூ அவர்கள் நபி எச்சரித்தும் சாத்தானுக்கு துணை போய்க்கொண்டிருந்தார்!இரக்கபட்டு விட்டார்!நபி பொய் என்று சுட்டியும் இரக்கபட்டு விட்டார்!அவனை விடவே கூடாது என நபி கண்டித்தும் குரானை சொன்னான் விட்டுவிட்டேன் என்று சொன்னார்!

இரக்கபட்டு சாத்தானுக்கு ஒத்துழைத்தார் பின்னர் குரானுக்காகவும் ஒத்துழைத்தார்!


பிறகு குரானின் சிறப்பை சாத்தானே சொல்லிவிட்டான் அதனை நான் கண்டுபிடித்துவிட்டேன் என இந்த ஹதீசில் தம்பட்டம் அடித்தாரே தவிற தான் சாத்தானுக்கு ஒதுப்போனதை பற்றி கடைசிவரை புரிந்து கொள்ளவே இல்லை!
இப்படித்தான் குரானை மட்டும் படிக்கிரவர்கள் வாழ்க்கை அறைகுறையாய் போய் கொண்டு உள்ளது!முந்தய வேதமான கீதையை,பைபிளை குரானின் வெளிச்சத்தில் படித்து பின் கீதையின் வெளிச்சத்தில் பைபிளை குரானை படித்தால் நன்றாக புரிந்து கொள்ளமுடியும்

நாராயணன் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் சேஷனனின் நாமத்தினாலும் காமாஷியின் நாமத்தினாலும் கடவுள் தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் தமது அருளால் நிரப்ப வேண்டுகிறேன்

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி