Total Pageviews

Sunday, March 29, 2020

லலித சகஸ்ரநாமம் பாடல் 112 -Lalita Sahasranamam (Verse 112)





VimarshaRupini : விமர்ச ரூபிணி - விமர்சிக்கப்படும் ரூபம் உள்ளவள் – ஈர்ப்பதால் கணக்கிடப்பட்டுக்கொண்டே இருக்கப்படுபவளாம்

அன்னையின் அம்சமான பெண்கள் அனைவருமே ; அவர்கள் உலாவும் போது காண்போர் அனைவராலும் ஏதாவது கணக்கீடு செய்யப்பட்டுக்கொண்டுதானே உள்ளார்கள்
சாதாரண பெண்களுக்கே அப்படி என்றால் சர்வ அழகுள்ள அன்னை ஆராதிக்கப்படாமல் இருப்பாளா ?

Vidya : வித்யா – வித்தைகளின் உறைவிடமானவள் – அறிவின் ஞானத்தின் பிறப்பிடமானவள்

நாம் பார்க்கிற ஒன்றை கணக்கீடு செய்யாமல் – விபரங்களை சேகரிக்காமல் அதைப்பற்றிய அறிதல் – அறிவு வராது

ஒன்றை பற்றிய பல பல விபரங்களே அறிவு ; அதைப்பற்றிய ஆழமான அனுபவமே ஞானம்

அன்னையின் அழகு ஈர்ப்பு மட்டுமல்ல ; அவளைப்பற்றிய பல பல பரிமாணங்களை அவள் உணர்த்திக்கொண்டே இருப்பதால் பக்தனுக்கு ஞானம் பயிற்சியாகிறது

அறிவின் பாதையில் ஞானத்தின் பாதையில் அவள் நம்மை பயிற்சி கொடுக்கிறாள்

ஆகவே அவளே வித்யை

VIydAdi JagatprasUh : வியாதி ஜகத் பிரசூஹ் – உலக வாழ்வின் மீதும் அதன் ஆடம்பரங்கள் மீதும் மோகத்தை கொடுக்கிறவளும் ; அதனால் பாவங்களை செய்ய வைத்து துன்பத்தை ; நோயை வரவழைத்துக்கொள்ள வைக்கிறவளூம் அவளே

Sarva vyAdhi prashamani : சர்வ வியாதி பிராசாமணி – அப்படி நோவுகளில் உலழும் போது அதில் படிப்பினையை கொடுத்து ஞானத்தை கற்றுக்கொடுக்கிறவளூம் இவளே

அந்தந்த நோவுகளுக்கு ஏற்ற படிப்பினை என சர்வ நோவுகளுக்கும் சர்வ படிப்பினையை நமக்கு கற்பிக்கிறவள்
Sarvamrutyu nivArini : சர்வ மிருத்யோ நிவாரணி _ சர்வ நோவுகளாலும் நாம் அழிந்து விடாதபடி நம்மை தற்காத்து விடுவிக்கிறவளூம் இவளே ; தற்காத்து ஞானத்தை நல்கி பாவங்களிலிருந்து ஒவ்வொன்றாக நம்மை விடுவித்து விடுவாள்

பாவத்திலே நம்மை மூழ்க வைக்கும் போது அவள் காளி

சிவனையும் அவரால் உண்டான மனுக்குலத்தையும் மிதித்து இச்சைகளுக்கு ஆட்படுத்துகிறவளாக நாக்கை தொங்கிட்டவளாக சித்தரிக்கப்படுபவள்

அவளே பாவத்திலிருந்து நம்மை விடுவிக்கும் போது பவதாரிணி

அவளின் ஒரு கரம் சிவலிங்கத்தை ஆராதிக்கிறவளாக சித்தரிக்கப்படுபவள்






திருவெம்பாவை பாடல் எண் : 3




முத்தன்ன வெண்நகையாய் முன்வந் தெதிர் எழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதன் என் றள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழவடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டாற் பொல்லாதோ
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்


முத்தை போல புன்னைகையை சிந்தி கலகலப்பாக பேசுகிறவளே !

நல்லடியார்களை கண்டால் சிவன் மீது பற்று கொண்டவள் போல என் அத்தன் ; ஆனந்தம் நல்குகிறவன் ; அமுதம் போன்றவன் என்றெல்லாம் சிலாகித்து தித்திக்க தித்திக்க நீ பேசுவதெல்லாம் பசப்பு தானோ ?

இன்னும் நீ வாசல் திறக்கவில்லையே ?

பந்த பாசம் என உலக பற்றும் ; இறைவன் மீது பழசாகிப்போன பற்றும் என ஆற்றில் ஒரு காலும் சேற்றில் ஒரு காலுமாக அல்லாடுகிற இயல்புடையவளே

நம் மீதும் குடும்பத்தின் மீதும் புற்று போல வளர்க்கிற புன்மை கர்மங்களை தீர்த்து ஆட்கொள்ள வல்லவர் நாம் சிவனல்லவோ ?

பழவினைகள் எத்தனை பொல்லாப்பு செய்துவிடும் ; எல்லாம் நாம் அறிவோமோ

அறிவுள்ளவர்கள் கர்மங்களை களைய சிவ சற்குருநாதன் மீது பக்தி கொண்டு புகழ்கிறார்களே ; இறைவனை தேடுகிறார்களே ?

அவனை நாடினால் உலக வாழ்விற்கும் அத்தனையும் அருள்வான் என்று அறியீரோ

வெளிநாட்டு மக்களை நல்வழிப்படித்த இயேசுவாக அவதரித்து வந்த ஸ்ரீகிறிஷ்ணர் உலக வாழ்விற்கும் ஆன்ம வாழ்விற்கும் இடையில் அல்லாடீதீர்கள் என கூறியுள்ள அறிவுரையை கேளுங்கள் :

24. இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் முடியாது; ஒருவனைப் பகைத்து ஒருவனைச் சிநேகிப்பான். அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் முடியாது.

25. ஆகையால் என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப் பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா?

26. ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?

27. கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?

28. உடைக்காகவும் நீங்கள் கவலைப்படுகிறதென்ன? காட்டுப்புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்பதைக் கவனித்துப்பாருங்கள். அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை;

29. என்றாலும் சாலொமோன் ராஜா முதலாய்த் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்.

30. அற்ப விசுவாசிகளே! இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்குத் இறைவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா?

31. ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று கவலைப்படாதிருங்கள்.

32. இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்.

33. முதலாவது இறைவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.

34. ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும். (மத்தேயு : 6)