Total Pageviews

Sunday, January 6, 2013

வருடப்பிறப்பு ??




வருடப்பிறப்பு என்பது நாள் , மாதம் மற்றும் வருட கணக்கு என்று மட்டும் எடுத்துக்கொண்டால் அது ஒரு குறியீடு மட்டுமே

அந்த குறியீடை ஒவ்வொரு சமுதாயமும் மொழி ,இனம் , மதம் என்ற அடிப்படையில் அவரவருக்கு ஒரு நிகழ்வை ஞாபகப்படுத்தும் ஒரு நாளை போட்டுக்கொண்டார்கள் ! இப்படித்தான் உலகம் முழுவதிலும் பல வருடப்பிறப்புகள் நடைமுறையில் உள்ளன

ஆனால் உலகம் முழுமையும் ரோமானியர்களின் கிரிகேரியன் காலண்டர் என்னும் தற்போதைய ஆங்கிலேய காலண்டர் பெரும்பான்மை ஆங்கீகாரத்துடன் நடைமுறையில் உள்ளது !

கலியுகத்தின் புரதாண பேரரசுகள் என்பவை ஐந்து
1)எகிப்திய சாம்ராஜ்ஜியம்
2)பாபிலோனிய பேரரசு
3)மேதிய-பாரசீக பேரரசு
4)கிரேக்க பேரரசு
5)ரோம பேரரசு

இதில் முதல் மூன்று பேரரசுகள் ஆசியாக்கண்டத்திலும் அடுத்ததாக ஐரோப்பியர்களின் - அதாவது கும்ப முனி அகத்தியர் என நம்மால் அழைக்கபடும் நோவாவின் மூன்றாம் மகன் காமின் சந்ததியரான ஐரோப்பியர்கள் வசம் உலக ஆதிக்கம் தற்போது சென்று விட்டது ! ஐரோப்பியர்களில் இன்றளவும் இறைதூதர்கள் வந்ததில்லை ; இனிமேலும் வரப்போவதில்லை ! ஆனால் ஆசியக்கண்டத்து யூத இயேசுவை அவர்கள் வெள்ளைக்காரர் போல சுவீகரித்து ரோம மதகுருமார்களால் ரோம மதத்தில் இணைத்து உருவாக்கபட்ட ரோம-கத்தோலிக்க மதம் உலகில் ஆதிக்க மதமாய் கோலோச்சியபோது ஜனவரி 1 வருடப்பிறப்பாக ஆக்கபட்டது !

கிரிகேரியன் காலண்டர் ஆரம்பத்தில் 40 நாட்கள் 10 மாதங்கள் வீதம் 400 நாட்கள் உள்ளதாய் இருந்துள்ளது ! அதில் ரோமப்பேரரசன் அகஸ்ட்டஸ் சீசர் தன் பெயரில் ஆகஸ்ட் என ஒரு மாதமும் அவரது மருமகன் ஜூலியஸ் சீசர் ஜூலை என ஒரு மாதமும் சேர்த்து 12 மாதமும் 367 நாட்களும் என்று ஆக்கினார்கள் ! ரோமர்கள் ஓரளவு கிரகங்கள் சூரிய குடும்பத்தை பற்றிய வானவியல் அறிந்தவர்கள் ஆதலால் பூமி சூரியனை சுற்றி வருவதன் அடிப்படையில் இந்த காலண்டரை அமைத்தார்கள் ! இந்த வானவியல் சாஸ்த்திரம் என்பது ஆதியில் தமிழர்களுக்கும் கிரேக்கர்களுக்கும் வணிக தொடர்புகள் இருந்ததால் தமிழர்களிடமிருந்து கிரேக்கர்களுக்கும் பின்பு ரோமர்களுக்கம் சென்றது ! அதனாலேயே தமிழ் வருடப்பிறப்பான தை மாதத்தை ஒட்டியே ஜனவரியை அமைத்துக்கொண்டார்கள் ! பூமி சூரியனை சுற்றி வருவதின் அடிப்படையில் ஆதிமனிதர்களான தமிழர்கள் தை முதல் நாளையே வருடப்பிறப்பாக தைப்பொங்கலாக கொண்டாடி கடவுளை வழிபட்டனர்

பூமி சூரியனை நீள் வட்ட பாதையில் சுற்றிவருவதை விஞ்ஞானம் நிருபித்துள்ளது ! அப்படி நீள்வட்ட பாதையில் சுற்றும் போது அந்தப்பாதையின் ஒரு அந்தம் சூரியனுக்கு அருகாகவும் மற்றொரு அந்தம் சூரியனுக்கு தொலைவாகவும் அமையும்

சூரியன் அருகிலிருந்து பூமி விலகி செல்லும் போது மீண்டும் பூமி சூரியனை நோக்கி இழுக்கப்படும் ஒரு நாள் ! சூரியனை விட்டு விலகிசெல்லும் பூமி சூரியனை நோக்கி திரும்பும் நாளே தை

விலகி சென்று கொண்டிருந்த பூமிக்கும் சூரியனுக்கும் இடையே செயல்பட்டுக்கொண்டிருந்த விலக்கு விசை மாறி ஈரப்பு விசை செயல்படும்போது பூமி சூரியனை நோக்கி இழுக்கப்படுகிறது

அப்போது வெளியே தெரியாத ஒரு துள்ளல் பூமி சந்திக்கும் . தை தை என்றால் துள்ளுவது  ; ஜெர்க்

அதனால்தான் இந்த மாதத்தை தை என்றார்கள்

கழிவு என்பது மார்கழி

தை பிறந்தால் தடைகள் நீங்கி புதியவழிகள் பிறக்கும்


இன்னும் அதில் உத்திராயணம் ; தட்சினாயணம் என நுனுக்க கணக்கையும் அதில் போட்டர்கள்

பூமியின் மீது சூரியன் உதிப்பது பூமியின் தெற்குப்புறமாக இருந்து சூரியன் கொஞ்சம்கொஞ்சமாக வடக்கை எட்டும் - இது உத்திராயணம் ! அதுபோல வடக்கிருந்து தெற்கை எட்டும் - இது தட்சினாயணம்

தை முதல் ஆனி வரை உத்திராயணம் ! இக்காலங்களில் பூமி சூரியனை நோக்கி இழுக்கபடுகிறது ! ஆடி முதல் மார்கழி வரை தட்சினாயணம் ! இக்காலங்களில் பூமி சூரியனால் விலக்கபடுகிறது !

ஆன்மீகரீதியாக முன்னது ஏறுகாலம் பின்னது இறங்குகாலம் ! வாழ்க்கையிலும் இது பிரதிபலிக்கும் ! வாழ்வுக்கு மட்டுமல்ல ; பூமிக்குரிய வாழ்விலிருந்து விடுபட்டு விண்ணேற்றத்தை விரும்புவோர் மரணத்தை உத்திராயணத்திலேயே விரும்புவோர் ! ஏனெனில் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் விலக்கு விசை செயல்படும் போது ஆத்துமா அதை மீறி விண்ணேற்றம் என்பது கடிணமானது ! பீஸ்மர் அதனாலேயே தை வரை போர்க்களத்தில் அம்புப்படுக்கையில் உயிரை பிரியவிடாமல் வைத்திருந்தார்

உத்திராயணம் அல்லது சந்திரனால் பூமியின் மீது ஈர்ப்பு விசை அதிகமாக கொடுக்கப்படும் அம்மாவாசை ; பெளர்ணமி அன்று உயிர்நீப்போர் விண்ணேற்றம் வாய்ப்பு அதிகம் என்பது இதன் வெளிப்பாடு தவிற அனைவருக்கும் என்று பொருள் கொள்ளகூடாது ! அதற்கான ஆத்ம தகுதியில்லாதவர்கள் பூமியில்  நித்திரையில் இருந்தாக வேண்டும் அல்லது மறுபிறவிஎடுத்தாகவேண்டும்

கீதை 8:23 பரதவர்களுள் சிறந்தோனே ! இப்பூவுலைகை விட்டு கடறும் யோகிகள் பலர் மீண்டும் இப்பூமிக்கு திரும்ப வருவார்களா அல்லது வரமட்டார்களா என்பதை அவர்கள் கடறும் காலத்தை பொருத்து நிர்னயைக்கலாம் என்பதை உணக்கு அறிவிக்கிறேன்

கீதை 8:24 யார் உண்ணதமான கடவுளை உணர்ந்து அறிந்தவர்களோ அவர்கள்   ஒளிமயமானவரான கடவுளின் ஆதிக்கத்திற்குள்ளாகி ஒளிமயமாகி பரலோகத்தை அடைவர் ! வளர்பிறையிலோ அல்லது உத்திராயணத்திலோ ஒரு நாளின் பரிசுத்தமான பகல்நேரத்தில் அவர்கள் பூமியை கடறுவார்கள் ! அவர்கள் திரும்ப வருவதில்லை

கீதை 8:25 யோகிகள் ; பக்திமான்களில் யார் உண்ணதமான கடவுளை உணர்ந்து அறியாதவர்களோ அவர்கள் புகைமயமாகி சந்திரனை அடைவர் ! தேய்பிறையிலோ அல்லது தட்சினாயணத்திலோ ஓர் இரவில் அவர்கள் பூமியை கடறுவார்கள் ! அவர்கள் திரும்ப பூமிக்கு வருவார்கள் ! பிறவியை தொடர்வார்கள்

உத்ராயனத்தில் சூரியன் எவ்வாறு பூமியின் மீது தெற்கிலிருந்து வடக்காக பயணிக்கிறது ?

பூமி தனது அச்சில் 23.5 * டிகிரி சாய்ந்துள்ளதை அறிவோம் ! இந்த சாய்வால் பூமியில் பருவகாலங்கள் மாறி காற்றின் திசையும் மாறுகிறது

அதுமட்டுமல்ல மார்கழி கடைசியில் பூமியின் தென்துருவம்  வடதுருவத்தை விட சூரியனை நோக்கி சாய்வதால் தைமுதல் பூமி சூரியனை  நோக்கி ஈர்க்கபடுகிறது ! சூரியனை அக்கிணி நட்சத்திரத்தில் அதாவது சித்திரை பின்னேழு வைகாசி முன்னேழு காலத்தில் பூமி நெருங்கி எதிர்பக்கமாக கடந்து ஆனி முடிவில் பூமியின் வடதுருவம் சூரியனுக்கு அருகாக வருகிறது

இப்படி தை ஆரம்பத்தில் சூரியனை நோக்கி தென்துருவம் இருந்த நிலையிலிருந்து ஆனி முடிவில் வடதுருவம் சூரியனை நோக்கியும் தென்துருவம் விலகியும் இருக்கும்

சூரியன் வாடதுருவம் போன்றது அதனை பூமியின் வடதுருவம் நெருங்கியவுடன்  சூரியனுக்கும் பூமிக்கும் விலக்கு விசை உண்டாகி பூமி விரட்டபடுகிறது ! அதுவே தட்சினாயணம் ! ஆடி முதல் மார்கழி வரை இவ்வாறு பூமி விலகும் போது வடதுருவம் சூரியனை பார்த்து இருந்த நிலையில் இருந்து மெதுவாக சாய்ந்து  மார்கழியில் தென்துருவம் சூரியனை பார்த்தவுடன் தென்துருவத்திற்கும் சூரியனுக்கும் ஈர்ப்புவிசை உண்டாகி பூமி ஈர்க்கபடுகிறது


இவ்வாறு விசை மாறுவதாலேயே இம்மாதத்தின் பெயர் `` மார்கழி`` ! மாறுபாடான விலக்கு விசை கழிகிறது ! அத்தோடு துருவ மாற்றமும் உண்டாகிறது ! வாழ்விலும் பல சிக்கல்கள் உண்டாகி தீர்வில்லாத நிலை இருக்கும் ! அவை தைபிறந்தால் மாறிவிடும் ! கார்த்திகை மார்கழி மாதங்கள் முன்னேற்றத்திற்கு உதவியாய் இராது என்பதாலேயே - அல்லது அசுரர்களின் தடை அதிகமாய் இருக்கும் என்பதாலேயே இம்மாதங்களை அசுரர்களை வெல்ல சக்தி கொடுக்கும் சற்குருவான முருகன் அல்லது பெருமாள் மூலமாக கடவுளை வழிபாடு செய்வதை தமிழர்கள் செய்தார்கள்


தை என்றால் உற்சாகமாக துள்ளிகுதிப்பது என்பது பொருள் ! தை மாதம் முதல் வாழ்வில் ஒரு முன்னேற்றம் இயல்பாகவே உண்டாகும் ! தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது அதுவே

திருவிழாவில் ரங்கராட்டிணம் சுற்றும் போது அருகிலிருந்து பாருங்கள் ; இருபக்கமும் பாதியில் இழுவை மாறும் போது பெட்டிகள் ஒரு சிறு வெட்டுவெட்டி திசை மாறும் . ஒரு துள்ளல் இருக்கும் ! அதுபோலவே பூமியும் துருவம் மாறி ஈர்ப்புவிசை விலக்கு விசை உண்டாகும் போது ஒரு துள்ளல் இருக்கும் ! அதுவே தை ! மற்றும் ஆடி என பெயர் வைத்தார்கள் ! ஆடியில் விசை மட்டுமல்ல பூமி ஏற்கனவே சுற்றிய நீள்வட்ட பாதையிலும் மாறுதல் உண்டாகிறது இவ்வாறு இரண்டு மாற்றங்கள் இருப்பதாலேயே காற்றும் அதிகமாக வீசும் ! ஆடி என பெயர் வைத்தார்கள் ! ஆடிப்பட்டம் தேடி விதை என்றார்கள் ! ஏனென்றால் ஆடிக்கு பிறகு வெப்பம் குறைந்து மழை வந்து பயிரை விளைய வைக்க உகந்தகாலம் ! வசந்த காலமும் கூட !
இந்த துருவமாற்றம் நிகழும் நாளை கருத்தில் கொண்ட தைவருடப்பிறப்பே ஒட்டுமொத்த மனித இனத்திற்கும் எல்லாவகையிலும் உலகியல் மற்றும் ஆண்மவியல் வாழ்வுக்கும் சரியானது ! ஆதி மனிதர்களான தமிழர்களால் லெமூரியாக்கண்டத்திலேயே கொண்டாடப்பட்ட ஒன்று

முதல் பொருள் முத்துப்பொருள் என்பார்கள் ! லெமூரியாக்கண்டத்து தமிழர்கள் கடவுளோடு நெருங்கிய தொடர்புடையவர்கள் ! அவர்கள் கைக்கொண்ட தத்துவங்கள் காலப்போக்கில் கலப்படம் அடைந்து அசுரர்களால் மாயைகள் - பொய்கள் கலந்துவிட்டன ! மாயை என்ற இருளால் மூடியுள்ள ஞான வெளிச்ச்சத்தை ஆழ்ந்து கண்டறிவதே இன்றைய தேவை

அந்த வகையில் தைப்பொங்கலை வருடப்பிறப்பாக கடைபிடிப்பதே உண்மையை உணர்ந்தோர் செய்யவேண்டுவது

சித்திரை பிறப்பு என்பது சூரியன்  பயணத்தின் அடிப்படையானது சூரியனின் நட்சத்திர கூட்டமான மேஸ ராசியின் கதிர்வீச்சு சூரியனின் மூலமாக ஊடுருவி பூமியின் மீது விழும் மாதமாகும்

பூமியின் இயக்கத்தை முக்கியப்படுத்தினால் அது தை வருடப்பிறப்பு . சூரியனின் இயக்கத்தை முக்கியப்படுத்தினால் அது சித்திரை வருடப்பிறப்பு என்பதைத்தவிர ஆன்மீக ரீதியாகவோ உலகியல் ரீதியாகவோ சித்திரையில் எந்த விசேசமும் இல்லை !

உலகம் முழுவதிலும் லெமூரியாக்கணத்திலிருந்து மனிதர்கள் பரவினார்கள் என்பதாலேயே தையை ஒட்டியே பெரும்பாலான மனிதர்களால் கடைபிடிக்க படும் ஜனவரி வருடப்பிறப்பு வருகிறது


சித்திரை வருடப்பிறப்பு யூதர்களால் தான் முதல்முதலில் அறிமுகம் செய்யப்பட்டது ! அவர்கள் அடிமைகளாக எகிப்த்தில் இருந்தார்கள் ! அப்போது மோசே அல்லது மூசா என்ற இறைவனின் அடியவர் - இறைதூதர் மூலமாக யூதர்கள் எகிப்திய பேரரசனிடமிருந்து விடுதலை பெற்று விடுதலை பயணம் புறப்பட்டு இன்றைய இஸ்ரேல் நாட்டை வந்தடைந்தார்கள் ! அந்த நிகழ்வை வைத்து திருவிழாவும் ஆண்டுக்கணக்கும் சித்திரையில் வந்தது

பின்னாளில் அந்த யூதர்களில் பூசைத்தொழில் மட்டும் செய்த லேவி கோத்திரத்தார் அங்கு ஒரே ஒரே கோவில் மட்டும் இருந்ததால் பிழைப்பு தேடி பல நாடுகளுக்கும் சென்று அங்கும் பூசைத்தொழில் மட்டும் செய்தார்கள் ! அப்படி இந்தியாவிற்கு வந்த யூதர்களே இங்கு வந்து திராவிட ஞானிகள் உருவாக்கி வைத்திருந்த சதுர்வேதங்களையும் சமஸ்கிரதத்தையும் கற்றுக்கொண்டு ஆன்மீக ஆதிக்கம் செய்த ஐயர்களாகும்

அவர்களது பூர்வீக வருடப்பிறப்பான சித்திரையை இந்துமதத்தில் திணித்துவிட்டனர் ! சாலிய வாகனர் காலத்தில் ஐயர்கள் சோதிட சாஸ்திரத்தை முன்னிருத்துகிறோம் ; சூரியன் தனது தாய்வீடான மேஸ ராசியில் பயணிக்கிறது என மயக்கிவிட்டனர் . ஆனால் அதில் இஸ்ரேலில் கொண்டாடப்படும் பாஸ்கா பண்டிகை மற்றும் புத்தாண்டையும் உள்குத்தாக வைத்துகொண்டார்கள் . மற்றபடி சித்திரைக்கு இந்தியாவில் எந்த முக்கியத்துவமும் இல்லை

பின்னாளில் உகாதி  தெலுங்கு , என மொழிமொழிக்கு ஒரு வருடபிறப்பும் ஹிஜ்ரியை வைத்து முஸ்லீம்களும் ஒரு வருட பிறப்பை வைத்துக்கொண்டார்கள் ! அதற்கு ஒரு சம்பவத்தை காரணமாக கூறுவார்கள் ! ஆனால் அவைகளில் பெரிய முக்கியத்துவம் ஏதுமில்லை !

ஆகவே உலகம் உய்ய வழிகாட்ட வேண்டிய ஆதி தமிழரின் தத்துவங்களை வாழ்வில் கடைபிடிப்போம் ! உலகிற்கு சொல்லுவோம் !!

ஆன்ம வாழ்விலும் உலகியல் வாழ்விலும் பல திருப்புமுனைகளை உண்டாக்க வல்ல தையை தையின் முதல்நாளை பொங்கலிட்டு சற்குருவாம் சூரியநாராயணன் மூலமாக  இறைவனை வழிபாடு செய்தும்  கோத்திரரிஷிகளின் ஆசி வேண்டி குலதெய்வ கோவிலுக்கும் சென்றும் இவ்வருடம் முழுமைக்கான ஆசிகளை பெற்றுக்கொள்வோம்   


உண்மையை உணர்க !!



--- யுகபுருஷன் இறைதூதர் ராமரின் உபதேசங்கள் ---


சேர்த்துவைத்த செல்வம் யாவும் ஒரு நாள் ஒன்றுமில்லாமல் அழியக்கூடியவை . உயர்ந்து நின்றவை ஒரு காலத்தில் சரிந்து தரை மட்டமாகின்றன . எவ்வளவுக்கெவ்வளவு நெருங்கி பழகுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு பிரிவு நிச்சயம் . சேர்ந்திருந்தவை ஒரு நாள் பிரிந்து விடுகிறது . எத்தகைய வாழ்க்கையும் மரணத்தை முடிவாக கொண்டது .

பழுத்து கனிந்த பழம் தரையில் வீழ்ந்து தான் ஆக வேண்டும் . அதுபோல் பூமியில் பிறந்த மனிதனும் இறந்துதான் ஆகவேண்டும் . இறப்பது நிச்சயம் ; இருப்பது நிச்சயமில்லை !
எவ்வளவு உருதியாக வீட்டைக்கட்டினாலும் காலப்போக்கில் வீடு இடிந்து அழிவதுபோல நாளடைவில் மூப்புக்கும் மரணத்துக்கும் வசமாகி முடிவெய்துகிறான் !

கோடைக்காலத்தில் சூரியனின் செங்கிரணங்கள் தண்ணீரை வற்ற செய்வதுபோல இரவும் பகலும் மாறிமாறி வந்து உலகிலுள்ள உயிரிணங்களின் ஆயுளை அபகரித்து செல்லுகின்றன .!
சூரியன் உதிக்கும் போது , ``பொழுது விடிந்துவிட்டது ; வேலை செய்து பணம் சம்பாதிக்கலாம் `` என்று மக்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள் . சூரியன் மறையும் போதும் , `` சம்பாதித்ததை கொண்டு சுகமாயிருக்கலாம் `` என்று மகிழ்கிறார்கள் . ஆனால் சூரிய உதயம் மற்றும் மறைவின் போது தன் வாழ்நாளில் ஒரு நாள் குறைந்து விட்டது என்பதை உணர்வதில்லை !

ஒன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டிருக்கும் புதிய புதிய பருவ காலத்தின் ஆரம்பத்தை கண்டு மனிதன் மகிழ்கிறான் . ஆனால் தன் ஆயுட்காலமும் கழிவதை அவன் உணர்வதில்லை !

கடலில் வெவ்வேறான இடங்களில் மிதந்த இரண்டு கட்டைகள் எப்போதோ ஒன்று கூடுகின்றன . சிறிது நேரம் சேர்ந்தவாறே மிதந்தும் செல்லுகின்றன . பிறகு பிரிந்தும் சென்றுவிடுகின்றன . அதுபோலத்தான் மனைவி , மக்கள் , சுற்றத்தார் , செல்வம் யாவும் ஒன்று சேர வேண்டிய காலத்தில் ஒன்று சேருகின்றனர் ; பிரிய வேண்டிய காலத்தில் பிரிந்தும் விடுகின்றனர் !

சேர்க்கை எவ்வாறு நிகழ்கிறதோ அதுபோல பிரிவும் நிகழ்கிறது !

இயற்கையை மீறுவது என்பது யாராலும் முடியாது ! உயிரிணங்கள் தோன்றியபடியே இருப்பதில்லை ; முதுமையடைந்து இறந்துவிடும் !

இறந்ததை எண்ணி வருந்தலாமே தவிர திரும்ப கொண்டுவர மனிதரால் இயலாது . தன்னுடைய முறை வரும்போது மரணத்திலிருந்து தப்பித்துக்கொள்ளவும் முடியாது !
ஒரு யாத்திரை கூட்டத்தை பார்த்த வழிப்போக்கன் , `` நானும் உங்களுடன் வருகிறேன் `` என்று சொல்லி அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுகிறான் . அதிலிருந்து சிலர் பிரிந்தும் விடுகிறனர் . ஒரு நாள் அவனும் பிரிந்து விடுகிறான் . பின்னர் வேறொரு கூட்டத்திலும் சேர்ந்து கொள்ளுகிறான் !

அதுபோல நம்முடைய பெற்றோரும் பாட்டன்மார்களும் ஏற்கனவே இந்த கூட்டத்தில் சேர்ந்து பிரிதும் விட்டனர் ! நாமும் ஒரு நாள் பிரியத்தான் வேண்டும் . பின்பு வேறோர் பிறவியில் வேறொரு கூட்டத்தில் இருப்போம் . ஆகையால் பிரிவால் வருந்துவதால் என்ன பயன் ? இதில் புலம்புவதற்கு என்ன இருக்கிறது ?

ஆற்று வெள்ளத்தைப்போலவே ஆயுள் எப்போதும் ஒரு திசையில் போய்க்கொண்டுள்ளது . அது திசை மாறி வந்த வழியில் பாய்வது ஒருபோதும் நடவாது . மனிதனின் ஆயுட்காலமும் இடைவிடாமல் சுருங்கிக்கொண்டே இருக்கிறது . மரணத்தை தடுக்கவே முடியாது . இடையில் மனிதர்கள் அற்ப சந்தோசத்தை நாடி ஓடுகிறார்கள் . சந்தோசம் வேண்டும் ; அதை தர்ம வழியில் மட்டுமே பெற முயலவேண்டும் ! அதர்ம வழியில் பெற்ற சந்தோசம் ஒரு நாள் - ஒரு பிறவியில் துனபத்தை கொண்டுவந்தே தீரும் !

கிடைத்ததைக் கொண்டு மகிழ்பவர்களே நீடிய சுகத்தை அடைந்தவராவார் ! இருப்பதில் திருப்தியுற்றிரு ! இல்லாததில் நோகாதிரு ! கடவுளிடம் கேள் ! கிடைத்ததில் மகிழ்வுற்றிரு !! நன்றி செலுத்த கற்றுக்கொள் !!