Total Pageviews

Saturday, November 12, 2011

சொர்க்கத்தில் ஒரு வாசஸ்தலம்! ???

1. உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; கடவுளிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்.
2. என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்.
3. நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.----இயேசு(யோவான்14 அதிகாரம்)

சொர்க்கத்தில் ஒரு வாசஸ்தலத்தில் இயேசுவும் அவரின் தகுதி பெற்ற சீடர்களும் இருப்பார்கள்!அப்படியானால் மற்ற வாசஸ்தலத்தில் யார் இருப்பார்கள்?

மற்ற வாசஸ்தலங்களில் மற்ற இறைதூதர்களும் அவர்களின் தகுதி பெற்ற சீடர்களும் இருப்பார்கள்!இந்த உண்மை பலருக்கு தெரியவில்லை!

தெரிந்தால் தாங்கள்தான் பெருசு என பேச மாட்டார்கள்!

ஆதி இந்து மதம் ஒரு மனிதனுக்கு மூன்று படியாகிய வழிகாட்டிகளை முன் வைக்கிறது!

1)மாதா--தாய் ஒரு குழந்தைக்கு தன்னை எப்படி பேணுவது  என்பதை கற்றுக்கொடுக்கிறார்!
2)பிதா--தகப்பன் உலகவாழ்க்கையை எப்படி பேணுவது  என்பதை கற்றுக்கொடுக்கிறார்!
3)குரு--கடவுளை தேடி ஆண்மீக வாழ்க்கையை எப்படி பேணுவது  என்பதை கற்றுக்கொடுக்கிறார்!
4)கடவுள்--கடவுளோடு நடக்க கற்றுக்கொள்ளும் போது கடவுளும் நம்மை வழினடத்தி தன்னை அறியத்தருகிறார்!தன் அன்பில் நனைக்கிறார்!வாக்களிக்கப்பட்ட பரலோக பாக்கியத்திற்க்கு தகுதியாக்குகிறார்!

***பொருளிளார்க்கு இவ்வுலகில்லை(மாதா,பிதா)
  அருளிளார்க்கு அவ்வுலகில்லை(குரு,கடவுள்)
***குரு இல்லாத வித்தை பாழ்

               இன்று எத்தனையோ குருமார்கள் திறமையான வியாபாரிகளைப்போல வலம் வருகிறார்கள்!சின்ன குருடன் பெரிய குருடனுக்கு வழிகாட்ட முடியும் எங்கிர அளவில் அதுவும் பலனளிக்கும்!

               ஆனால் இறைதூதர்கள் கடவுளால் அணுப்பபட்டவர்கள்!ஒவ்வொரு காலகட்டத்தில் பூமிக்கு வந்தவர்கள்!ராமர்,க்ரிஸ்ணர்,இயேசு பூமிக்கு அவதாரமாக வந்தவர்கள்!சுய முயர்ச்சியால் தகுதி அடைந்து இறைதூதர்களாக அபிசேகிக்க பட்டவர்கள் ஏராளம்!இந்தியர்களில் புத்தர்,மஹாவீரர்,குருனானக்,ராமக்ரிஷ்ன பரமஹம்சர்,விவேகானந்தர்,வள்ளலார் என பட்டியல் நீள்கிறது!யூதர்களில் இறைதூதர்கள் நிறைய!இத்தகைய தூதர்களில் முத்திரை மோதிரம் போன்ற சிறப்பு பெற்றவர் முஹமது!அவர் மூலம் அருளப்பெற்ற `குரான்` எல்லவிசயங்களையும் முழுமைப்படுத்தி சொல்லுகிறது!

ஆனால் அதனை புரிந்து கொள்ள தகுதியில்லாத முஸ்லீம்கள் அதனை வரட்டுசூத்திரமாக லவ்கீக வாழ்க்கை சம்பந்தப்பட்ட சடங்காச்சாரமாக மட்டுமே கடைபிடித்து உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்வது போல தொழுது வருகிறார்கள்!

க்ரிஸ்னர் அருளிய கீதையை புரிந்துகொண்டால் மாத்திரமே ,மோசே அருளிய தவ்ராத்தை புரிந்து கொள்ளமுடியும் ; இயேசு அருளிய இஞ்ஜீலை புரிந்து கொள்ளமுடியும் அதன் பிறகு  குரானை படித்தால் மட்டுமே குரானின் உள்ளார்ந்த முழு உண்மையை புரிந்து கொள்ளமுடியும்!

இந்த முற்றறிவை இந்தியர்களால் தான் செய்ய முடியும்!


உலகை மூழ்கடிக்கும் ஆண்மீக பேரலை இந்தியாவிலிருந்தே புறப்படும் என்பது விவேகானந்தரின் தீர்க்கதரிசணமாகும்!அந்த நாளுக்காகவும் அந்த இறைதூதருக்க்காகவுமே என்னை போன்றவர்கள் பிரார்தித்து வருகிறோம்!இந்த பிரார்தனையை ஏறெடுத்து பாக்கியம் அடைவீர்களாக!