Total Pageviews

Sunday, February 23, 2020

இந்திய கிறிஸ்தவர்களே ; இஸ்லாமியர்களே





ராமர் என்ற கிறிஸ்ணரே இயேசுவாக அவதாரமே வராத யூதர் அரபியர் வெள்ளைக்காரர்களை நல்வழிப்படுத்த வந்தார் என்கிற உண்மையை உணர்க

சொந்த பாட்டணையும் பாட்டியையும் உடப்பிலே போட்டுவிட்டு யூதனின் ஆப்ரகாம் ஈசாக்கு யாக்கோபு இஸ்மாயிலை பாட்டன் பாட்டி என சொல்கிற பாவத்திலிருந்து வெளியேறுக

அல்லாஹ் உங்கள் கண்ணை திறக்கட்டும்

இயேசு உங்கள் கண்ணை திறக்கட்டும்

போலி யூதனாக வாழ்வது போதும்

போலி அரபியனாக வாழ்வது போதும்

ஆப்ரகாமுக்கு முன்னமே நான் இருக்கிறேன் என இயேசு சொன்னாரே அப்போது கல்லெடுத்தவர்களின் பிள்ளையாய் இராதேயும்
யோவான் 8:58 அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

ஆப்ரகாமுக்கு முன்பே இயேசுவின் முந்திய அவதாரங்களால் பண்பட்ட இந்துசமயங்கள் இறைவனிடமிருந்து வந்தவை

பாபேலின் பிரிவினை ஆவியால் மதக்குழப்பம் செய்யாதீர்கள்

நாராயணனை வழிபட்டாலே இயேசுவை வழிபட்ட புண்ணியம் உண்டாகும்

இறைவா என வழிபட்டாலே அல்லாஹ்வை வழிபட்ட புண்ணியம் உண்டாகும்

குரானில் இத்ரீஸ் நபி எனப்படுபவர் நூவ் நபியின் தாத்தா

இந்தியாவில் வந்த அகத்தியரின் தாத்தா அத்ரி மகரிசி எனப்படுபவரே இவர்

அத்ரி நபி பரத்துக்கு அழைக்கப்பட்டு சமுதாய சட்டங்களை பூமிக்கு கொண்டு வந்தார்

அத்ரியை சட்டநாதர் என இந்துகோவில்களில் வைத்துள்ளனர்

இவர் பரத்திற்கு சென்று வந்த்தால் அத்ரி பரமேஸ்வரன் எனப்படுகிறார்

நூவ் ம் அகத்தியரும் ஒருவர்

இவர். கும்பம் செய்து ஜலப்பிரளயத்தில் உயிர்களை காத்த நிகழ்வே கும்பகோணத்தில் கும்பமேளாவாக கொண்டாடப்படுகிறது

அகத்தியர் உருவாக்கிய வழிபாடு முருகன்

மாயோன் சேயோன் வழிபாடு

மாயவன் அரூவமான அல்லாஹ்

சேயோன் அவனது பிரதிநிதியாக பூமிக்கு இறைதூதர்கள் வருவார்கள் என்பதாகும்

3000 நபிமார்கள் பூமிக்கு வந்துள்ளார்களே அதில் அரபு தேசத்தை சுற்றிலும் வந்த சிலரின் வரலாறு மட்டுமே குரானில் சொல்லப்பட்டு மிகுதியானவர்கள் இந்தியாவில் வந்தவர்கள் என்பதால் சொன்னாலும் அரபியர்க்கு புரியாது என சொல்லாமல் விட்டுவிட்டதாக குரானில் உள்ளது

முருகன் என்றால் மலக்கு நபி என்று அர்த்தம்

மலக்கு ( தேவர்) ஒருவர் தூதுப்பணிக்காக பூமியில் அவதரித்து வந்தால் முருக்கி வருவதால் அதாவது தேவர் என்ற நிலையிலிருத்து மனிதனாக மாறி வருவதால் முருகன்

பூமியில் வந்த முருகர்களில் கடைசி ஜோடி யூதர்களையும் அரபியர்களையும் நல்வழிப்படுத்த வந்த ஈசா நபியும் முகமது நபியும் ஆகும்

அதற்கு முன்பே இந்தியாவில் இந்த ஜோடி (நர நாராயண ஜோடி ) ராமர் லஷ்மணராகவும் ; கிறிஸ்ணர் அர்ச்சுணராகவும் வந்துள்ளனர்

ராமரும் கிறிஸ்ணரும் இயேசுவும் ஒருவரே

லஷ்மணரும் அர்ச்சுணரும் முகமதுவும் ஒருவரே

குரான் 10:19. மனிதர்கள் யாவரும் (ஆதியில்) ஒரே இனத்தவராகவே அன்றி வேறில்லை; பின்னர் அவர்கள் மாறுபட்டுக் கொண்டனர்..

30:30. ஆகவே, நீர் உம்முகத்தை தூய (இஸ்லாமிய) மார்க்கத்தின் பக்கமே முற்றிலும் திருப்பி நிலைநிறுத்துவீராக! எ(ந்த மார்க்கத்)தில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே அவனுடைய (நிலையான) இயற்கை மார்க்கமாகும்; அல்லாஹ்வின் படைத்தலில் மாற்றம் இல்லை; அதுவே நிலையான மார்க்கமாகும். ஆனால் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.

உலகின் ஆதிமனிதர்களான தமிழர்களும் இந்தியர்களும் கடைபிடிக்கும் இயற்கை மார்க்கமே ஆதி இஸ்லாம்

அதில் கலந்துவிட்ட சீர்கேடுகளை கலைய வேண்டுமே தவிர இந்துமத்த்தை அழிக்க முடியாது

இறைவனிடமிருந்து வந்த ஆதி மார்க்கமாம் இந்து மதத்தை அழிப்போம் என்ற எண்ணத்தை கைவிடுங்கள்

2:285. (இறை) தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள்: “நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை; (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்” என்று கூறுகிறார்கள்

மலக்குகளையும் அவனுடைய வேதங்களையும் நம்பவேண்டும்

மலக்குகள் என்றால் தேவர்கள் 33 கோடி பேர் உள்ளனர்

இதில் ஆதம் என்ற சிவனை என்னை வணங்குவது போல வணங்க வேண்டும் என அல்லாஹ் கட்டளையிட்ட போது சிவனை வணங்க மறுத்த 6 கோடி பேர்கள் சைத்தானாக மாறிவிட்டனர்

அல்லாவுக்கு உடன்பட்ட மலக்குகளில் ஒரு பிரிவு சைத்தானாக மாறியதே அவர்கள் ஆதம் என்ற சிவனை வணங்கமாட்டோம் என அடம் பிடிப்பதாலேயாகும்

இணை வைப்பு கூடாது என சொல்லும் குரானே ஆதம் என்ற சிவனுக்கு சுஜூது செய்க என இணைவைப்பு கட்டளை இட்டிருக்கிறது

7:11. நிச்சயமாக நாமே உங்களைப் படைத்தோம்; பின்பு உங்களுக்கு உருக்கொடுத்தோம். அதன்பின், “ஆதமுக்கு ஸுஜுது செய்யுங்கள் (சிரம் பணியுங்கள்)” என்று மலக்குகளிடம் கூறினோம்; இப்லீஸைத் தவிர (மற்ற மலக்குகள்) யாவரும் (அவருக்குத்) தலைவணக்கம் செய்தார்கள்; அவன் (மட்டும்) தலைவணக்கம் செய்தவர்களில் ஒருவனாக இருக்கவில்லை.


அல்லாவைத்தவிர யாரையும் வணங்காதே என்ற விளக்கம் மனிதர்களாக உருவாக்கிக்கொண்ட இலாஹா க்களை குறிக்கிறதே தவிர மலக்குகளை அல்ல

அல்லாஹ் வையும் அவனது மலக்குகளையும் வழிபடுவதே முழுமையானது

அல்லாஹ் வை மட்டுமே வழிபட்டு ஆதமையும் வழிபடாத தவறால் இசுலாமியர் சைத்தானுக்கு இடம் கொடுத்தவர்களாகவே இருக்கிறீர்கள்

மலக்குகளை மட்டுமே வழிபட்டு அல்லாஹ் வை வழிபடாத்தால் இந்துமதமும் சீர்கேட்டில் உள்ளது

மதம் மாற்றுவதால் யாதொரு நற்பலனுமில்லை

இரண்டும் ஒன்றினால் ஒன்றை சீர்திருத்திக்கொள்வதே வரப்போகிற அல்மஹ்தியின் சமாதான பாதை

உலகை மூழ்கடிக்கும. சமர வேதம் என்ற ஆன்மீக பேரலை


அல்லாஹ் என்ற அரபுசொல் இறைவன் கடவுள் என மக்களால் குறிக்கப்படும் பொதுச்சொல்லாகும்

உலகம் முழுவதிலும் உள்ள பல மதத்து மக்களாலும் பொதுவார்த்தையாக அழைக்கப்படுபவரே வணங்கப்படுபவரே அல்லாஹ்

இசுலாத்துக்கென்று ஒரு தனி கடவுள் இருப்பதாகவும் அவரை முஸ்லீம்கள் மட்டுமே வணங்குவதாகவும் நாடுபிடிக்க முற்பட்ட கலீபாக்கள் அரசர்கள் இஸ்லாமியரை ஏமாற்றிவிட்டனர்

சகலராலும் தங்கள் இதயத்தில் வணங்கப்படும் இறைவனே அல்லாஹ்

லா இலாஹா இல் அல்லாஹ் என்பதை அல்லாவைத்தவிர வேறு தெய்வம் இல்லை என்பதாக மேலோட்டமாக அரபியர்கள் கற்பித்து விட்டார்கள்

இலஹா என்றால் அரபியில் வழிபடப்படும் தேவர்கள் என்று அர்த்தம்

இல் அல்லாஹு என்பதை அல்லா இல்லாத லா இலாஹா தேவர்கள் யாருமில்லை என்பதே சரியான அர்த்தம்

பரத்திலே அரூவமான இறைவனுக்கு அடுத்த நிலையில் உருவமான தேவர்கள் இருக்கிறார்

இறைவன் எதையாவது செய்ய வேண்டுமானால் பேசுகிறார் ; அந்த காரியத்தை அதற்குரிய மலக்குகள் செய்கிறார்கள்

மலக்குகள் மூலமாக அல்லாமல் அல்லா அவராக எந்த காரியத்தையும் செய்வதில்லை

முகமதுநபியுடன் அல்லா நேரடியாக வசனம் இறக்கினாரா அல்லாவின் சார்பாக காப்ரீயேல் தானே இறக்கினார்

இங்கு காப்ரீயேல் குரானை இறக்கவில்லை ; அல்லா காப்ரீயேல் மூலமாக இறக்கினார்

அல்லாஹ் இல்லாத தேவர்கள் யாருமில்லை என்பதே பாங்கின் சரியான அர்த்தம்

அதை அல்லாவைத்தவிர இறைவன் யாருமில்லை என அரபியர்கள் இஸ்லாமியர்களை ஏமாற்றி விட்டார்கள்

உலகில் உள்ள சகல மக்களலும் மதங்களாலும் வணங்கப்படும் தேவர்கள் அனைவரும் அல்லாஹ் வால் படைக்கப்பட்டு அல்லாஹ் வால் பயன்படுத்தப்படுகிறவர்களே

அல்லாஹ் இல்லாத தேவர்கள் யாருமில்லை

33 கோடி தேவர்களில் 6 கோடி பேர்களே அசுரர்களாக மாறியவர்கள்

உலக மக்களால் வணங்கப்படும் தேவர்களில் யார் தேவர் யார் சைத்தான் என்றால் அல்லாஹ்வோடு ஆதமையும் வணங்கினால் தேவர்கள்

ஆதமை வணங்காதவர்கள் சைத்தான்கள் என குரான் 2 : 285 சொல்கிறது

யார் மலக்கு யார் சைத்தான் என கண்டுபிடிக்குமளவு அரபியர்கள் எந்த ஆன்மீக அணுபவமும் இல்லாதவர்கள்

இசுமாயிலுக்கு பிறகு முகமதுநபி வரை ஒரு இறைதூதர் கூட வராமல் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த கூட்டம்

குரானில் சொல்லப்படும் நபிகள் அனைவரும் யூதர்கள்; ஒருவர் கூட அரபியர் இல்லை

ஆன்மீக பின்னணி எதுவும் இல்லாமல் அடித்து உதைத்து இசுலாத்திற்கு மாற்றப்பட்ட அரபியர்கள் குரானுக்கு தப்பு தப்பாக விளக்கம் சொல்லிவிட்டார்கள்

சிவனே ஆதம் என கண்டுபிடிக்காவிட்டாலும் பரவாயில்லை ; அல்லாஹ் வுடன் ஆதமையும் வணங்காவிட்டால் சைத்தானுக்கு பிரியமானவர்களாக இருப்போம் என்பதை இன்றளவும் உணராதவர்கள் அரபியர்கள்

முகமது ரசூல் அல்லாஹு என்பதில் அல்லாஹ்வை முகமதுநபியை குருவாக வைத்து வழிபடுகிறோம் என்பதால் இதை ஒரு மார்க்கம் அதாவது பாதை என்றுதானே முகமதுநபியே சொன்னார்

உலக மக்களால் வழிபடப்படும் அல்லாஹ் வை முகமதுநபியை குருவாக வைத்துக்கொண்டு வழிபடும் ஒரு மார்க்கமே இஸ்லாம்

அதை மதமாக மாற்றி தங்கள் நாடுபிடி ஆசையை தீர்த்தவர்கள் காலிபாக்கள்

முகமதுநபி இஸ்மாயிலின் பிள்ளைகளாக 100 மேற்பட்ட குலமாக சிதறிக்கிடந்த அரபியர்கள் மீதுமட்டுமே ஜீகாத் செய்தார் ; அடித்து உதைத்து இஸ்லாத்துக்கு மாற்றினார்

அரபியர்கள் யூதர்கள் இல்லாத மற்ற இனத்துமக்களை ஒருவரை கூட முகமதுநபி மதமாற்றம் செய்யவில்லை

இறைவனை வணங்க இஸ்லாம் ஒரு மார்க்கம் என்றால் வேறு மார்க்கங்களும் பூமியில் இருக்கிறது என்றே அர்த்தம்

தேவர்களை குருவாக வைத்து வழிபடும் மார்க்கம் ஒன்றிருக்குமானால் அவர்களை காபீர்கள் என கொன்றதும் கொத்தடிமைகளாக வைத்ததும் ஜிசியா வரிவாங்கியதும் கொடூரமாக நடந்ததும் பாவமாகாதா

முகமதுநபியிடம் இறைவன் பேசினால் மட்டுமே செய்தார்

இறைவன் தங்களிடம் பேசாமல் ; குரானை வாசித்துவிட்டு அதற்கு தங்கள் அறியாமையால் தப்புதப்பாக விளக்கம் கற்பித்து பூமியில் அரபியர்கள் செய்த அட்டூழியங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் பொறுப்பு ஏற்கமாட்டார்

மதினாவிலிருந்து படைநடத்தி மக்காவை வெற்றி கொண்ட முகமதுநபி கபாவில் இருந்த சிலைகள் அனைத்தையும் வெளியேற்றுகிறார் ; ஆனால் அங்கிருந்த அஸ்த்ரக் கல்லை மட்டும் வெளியேற்றவில்லை

அந்த அஸ்த்ரக் கல் ஆதம் என்ற சிவனுக்கு பரத்திலிருந்து வழிபாட்டு மூர்த்தமாக கொடுக்கப்பட்டது

பரத்திலிருந்து பூமிக்கு மனிதர்களாக மாறி வந்த சிவனும் அவரில் பாதியாளான பார்வதியும் முதலில் வந்த இடம் சிவனொளிபாத மலை என இலங்கையில் உள்ளது

சிவனும் பாதியாளுமே ஆதம் அவ்வாவாகும்

அங்கிருந்து ராமேஸ்வரம் மற்றும் லெமூரியா கண்டம் முழுவதும் மனுகுலமாக தமிழர்களை உற்பத்தி செய்தனர்

அப்போது நீண்ட நாள் உத்திரகோச மங்கையில் வாழ்ந்தனர்

அடுத்து வட இந்தியா முழுவதிலும் மனுகுலம் பரவியது

அப்போது இமயமலையை வாசஸ்தலம் ஆக்கியிருந்தனர்

அதன்பிறகு இன்றைய மக்காவிலுள்ள அரபாத் சமவெளியில் வசித்து கிழக்கு ஆசியா முழுவதிலும் மனுகுலம் பரவியது

பிறகு ஆப்ரிக்காவில் மனுகுலம் பரவியது

பிறகு பட்டமங்கலம் வந்தனர்

சிவன் மீண்டும் ஒளிதேகம் பெற்று அதிதேவர் ருத்திரன் என்ற மைக்கேலாக பரலோகம் போனார்

வைரவன்பட்டி திருப்பத்தூர் ஆதிவைரவர் கோயில் அடையாளமாகும்

மக்காவில் சிவன் இருந்த காலத்தில் அவருக்கு பரத்திலிருந்து இறைவன் என்ற அல்லாஹ் வழிபாட்டு மூர்த்தமாக அஸ்த்ரக் கல்லை கொடுக்கிறார்

இந்த அஸ்த்ரக் கல்லே லிங்க வழிபாட்டின் முதல் லிங்கமாகும்

லிங்கம் என்பதன் விளக்கம் அரு உருவம்

அரூவமான இறைவனை ஒரு கல்லில் அடையாளப்படுத்தி வழிபடுதல் அரு உருவ வழிபாடாகும்

படைக்கப்பட்ட மனிதர்கள் விலங்குகள் சாயல் இல்லாத ஒரு கல் ; இயற்கை வழிபாடு

30:30. ஆகவே, நீர் உம்முகத்தை தூய (இஸ்லாமிய) மார்க்கத்தின் பக்கமே முற்றிலும் திருப்பி நிலைநிறுத்துவீராக! எ(ந்த மார்க்கத்)தில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே அவனுடைய (நிலையான) இயற்கை மார்க்கமாகும்; அல்லாஹ்வின் படைத்தலில் மாற்றம் இல்லை; அதுவே நிலையான மார்க்கமாகும். ஆனால் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.

பஞ்சபூதங்களை படைத்து அதன் மூலமாகவே பூமியில் மனிதர்கள் படைக்கப்படுகிறார்கள்

அந்த பஞ்சபூதத்தின் அடையாளமாகவே லிங்கம் இருக்கிறது

சரியாக சொன்னால் ஜடவழிபாடே ஆதியில் அல்லாஹ் வால் அணுமதிக்கப்பட்டது

உருவ வழிபாடே தடைசெய்யப்பட்டது

யாத்திராகமம் 20:4 மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்

சொரூபம் உருவ வழிபாடு தடைசெய்யப்பட்டது ; ஆனால் ஜட வழிபாடு அணுமதிக்கப்பட்டது

18. அதிகாலையிலே யாக்கோபு எழுந்து, தன் தலையின்கீழ் வைத்திருந்த கல்லை எடுத்து, அதைத் தூணாக நிறுத்தி, அதின்மேல் எண்ணெய் வார்த்து,

உலகம் முழுவதிலும் நடுகல் வழிபாடு தொன்மையானது

மெக்காவின் அஸ்த்ரக் கல் ஜட வழிபாடு சிவனால் ஆரம்பிக்கப்பட்டதால் அதை சிவலிங்கம் என்கிறார்கள்

இந்துமத சிவலிங்க கோவில்கள் அனைத்தும் மக்கீஸ்வரத்தின் அடிப்படையில் வந்த கோவில்கள் ஆகும்

சிவனுக்கென்று மனித ரூபம் உண்டு ; அதை சிலையாக செய்து வழிபடாமல் ஆதி இயற்கை - ஆதி இஸ்லாம் வழியில் உள்ளவையே சிவன் கோவில்கள் ஆகும்

லிங்கவழிபாட்டில் இருவர் வருகிறார்கள்

ஒருவர் வழிபடப்படும் அல்லாஹ்

மற்றவர் யாரை குருவாக வைத்து வழிபடுகிறோம் என்பதாகும்

சிவனை குருவாக வைத்து அல்லாஹ் வை வழிபடுவதால் இது சிவலிங்கம்

குரானில் அல்லாஹ் வை வணங்குவதுபோலவே ஆதம் என்ற சிவனை வணங்கு என கட்டளை வந்தது

7:11. நிச்சயமாக நாமே உங்களைப் படைத்தோம்; பின்பு உங்களுக்கு உருக்கொடுத்தோம். அதன்பின், “ஆதமுக்கு ஸுஜுது செய்யுங்கள் (சிரம் பணியுங்கள்)” என்று மலக்குகளிடம் கூறினோம்; இப்லீஸைத் தவிர (மற்ற மலக்குகள்) யாவரும் (அவருக்குத்) தலைவணக்கம் செய்தார்கள்; அவன் (மட்டும்) தலைவணக்கம் செய்தவர்களில் ஒருவனாக இருக்கவில்லை.

ஆக சிவனையும் அல்லாஹ் வையும் இணைத்து வழிபடுவதே சிவலிங்கமாகும்

அல்லாஹ் வால் மனிதர்களுக்கு கொடுக்கப்பட்ட முழுமையான வழிபாடு அஸ்த்ரக் கல் வழிபாடு

அதாவது சிவலிங்க வழிபாடு

இந்தியாவில் இதன் மூலமந்திரம் ஓம் நம சிவாய

சிவனை வழிபடுகிறேன் என மந்திரம் இல்லை

சிவாய - சிவனாக வெளிப்பட்ட அல்லாஹ் வை வழிபடுகிறேன் என்பதே மூலமந்திரம்

மக்கா வழிபாடு ஆப்ரகாமும் சாராயும் ஈரானிலிருந்து நாடோடியாக வரும்போதே : ஹாஹாரை சந்திக்கும் முன்பே யூதர்களும் அரபியர்களும் பிறக்கும் முன்பே நடைமுறையில் இருந்தது

18. அன்றியும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சரசமும் கொண்டுவந்து,

19. அவனை ஆசீர்வதித்து: வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனுடைய ஆசீர்வாதம் ஆபிராமுக்கு உண்டாவதாக.

மக்கா கோவிலில் ஆதியில் ஆதம் என்ற சிவன் உண்டாக்கிய வழிபாடுகளில் ; பின்னாட்களில் அங்கு வாழ்ந்த அரபியர்கள் சேர்த்துக்கொண்ட வழிபாடுகளைத்தான் முகமதுநபி ஒழித்தாரே தவிர புதிய இறைவழிபாட்டை முகமதுநபி கொண்டுவந்தது போல தவறான கருத்தை அரபியர்கள் புகுத்தி விட்டார்கள்

ஹஜ் யாத்திரையின் போது இந்து சைவநெறிக்குரிய வெள்ளாடை உடையமைப்பு ; கோவிலை ஏழு முறை வலம் வருதல் என்பதெல்லாம் அரபிக்களுக்கு புரியாது

ஆனால் இந்திய முஸ்லீம்களே இது உங்கள் மூதாதையர் நடைமுறை என்பதை உலக முஸ்லீம்களுக்கு புரிய வையுங்கள்

அப்படியில்லாமல் புதிதாக மதம் மாறிய கிறிஸ்தவர்களும் இசுலாமியர்களும் தங்கள் நாட்டில் உள்ள வழிபாடுகளை ஒழித்துவிட்டு அல்லாவை வழிபட வேண்டும் என்ற தவறுக்குள் கிடக்கிறார்கள்

அஸ்த்ரக்கல்லை ஆதமை வணங்குவதாக முகமதுநபி மதித்தார்

அதனிடம் குதிரையில் அமர்ந்து காலாட்டிக்கோண்டே தொலைத்துவிடுவேன் என வீரவசனம் பேசினார் உமர் ரலி

உமர் ரலியின் அறியாமையை சாத்தான் பயன்படுத்திக்கொண்டான்

அல்லாஹ் வுக்காக அடுத்த தேவர்களை அவமதி ; அடுத்த வழிபாட்டுக்கார்ர்களை கொன்றால் சொர்க்கத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லாஹ் அலைகிறார் எனவும் சைத்தான் ஸ்ட்ராங்காக இசுலாமியர்க்கு ஓதி விட்டான்

அல்லாவை வழிபட்டாலும் சைத்தானுக்கு இடம் கொடுத்தவர்களாக வாழ்வதால் இன்று இசுலாமிய நாடுகளில் மக்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை

அரபுக்களின் சொந்த வழிபாடுகளை ஒழித்து அரபுக்களுக்கு முந்திய சைவ வழிபாட்டை முகமதுநபி நிலைநிறுத்தியிருக்க ; அரபுக்களின் முஸ்லீம்களின் சொந்த வழிபாட்டை மற்றவர்களின் மேல் திணிக்க அட்டூழியங்கள் செய்ய அல்லாஹ் அத்தாட்சி கொடுத்திருப்பதாக நம்பித்திரிகிறார்கள்

குரான் இறைவனால் இரக்கப்பட்டிருந்தாலும் ஆன்மீக அணுபவம் அற்ற அரபிக்கள் தப்பு தப்பாக விளக்கம் சொல்லி வைத்ததால் இசுலாமியர் அல்லாவை விட சைத்தானுக்கு சொந்தக்காரர்கள் ஆகிவருகிறார்கள்

இந்தநிலையில் இருந்து தப்ப வேண்டுமானால் இந்து மதத்தின் ஆதி வேதங்களை உணர்ந்து குரானை அணுகினால் சரியான வெளிச்சம் கிடைக்கும்

நாராயணன் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் ஆதிசக்தியின் நாமத்தினாலும் ஆதிசேஷனின் நாமத்தினாலும் அல்லாஹ் ; பூமியிலே சமாதானத்தை உண்டாக்க வல்ல சமரச வேதாந்தி என்ற அல்மஹதியை விரைவில் அணுப்புவீராக

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி








Friday, February 21, 2020

நிர்வாண ஸஷ்டகம்



ஆதி சங்கரர் 8 வயதில் துறவுக்கு அனுமதி தன் தாயிடம் பெறுகிறார்

தன் குருவை தேடி கால்நடையாக வட இந்தியாவில் பயணிக்கிறார்

உஜ்ஜையினியில் அவருக்கு முன் குறிக்கப்பட்ட குருவானவர் தென்படுகிறார்

சீடனின் தகுதியை அறிந்துகொள்ள நீ யார் என வினாவுகிறார்

9 வயது குழந்தை தன்னைப்பற்றி சொன்னவையே இவ்வார்த்தைகள்

1)மனோ புத்யஹங்கார சித்தா நினாஹம்
ந ச ச்ரோத்ர ஜிஹ்வே ந ச க்ராண நேத்ரே
ந ச வ்யோம பூமிர் ந தேஜோ ந வாயு:
சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்

2)ந ச ப்ராண சங்க்யோ நவை பஞ்சவாயு:
ந வா சப்த தாதுர் நவா பஞ்சகோச:
ந வா பாணி பாதம் ந சோபஸ்தபாயு:
சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்

3)ந மே த்வேஷ ராகௌ ந மே லோப மோஹௌ
மதோ நைவ மேநைவ மாத்ஸர்ய பாவ:
ந தர்மோ ந ச அர்த்தோ ந காமோ ந மோக்ஷ:
சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்

4)ந புண்யம் ந பாபம் ந சௌக்யம் ந துக்கம்
ந மந்த்ரோ ந தீர்த்தம் ந வேதா ந யக்ஞ:
அஹம் போஜனம் நைவ போஜ்யம் ந போக்தா
சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்

ந ம்ருத்யுர் ந சங்கா ந மே ஜாதிபேத:
பிதா நைவ மே நைவ மாதா ச ஜன்மா
ந பந்துர் ந மித்ரம் குருர் நைவ சிஷ்யா:
சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்

5)அஹம் நிர்விகல்போ நிராகாரரூபோ
விபுத்வாச்ஸ சர்வத்ர சர்வேந்த்ரியானாம்
ந ச சங்கடம் நைவ முக்திர் ந மே யா
சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்

இந்தப்பாடலுக்கு அர்த்தம் உணரும் முன்பு முருகன் தன்னைப்பற்றி அருணகிரி நாதரிடம் யார் என சொன்னதாக கந்தரலங்காரத்தில் பாடல் ஒன்று உள்ளது

தேனென்று பாகென்றுவமிக் கொணாமொழித் தெய்வ வள்ளி கோன்
றெனக்குப தேசித்த தொன்றுண்டு கூறவற்றோ
வானன்று காலன்று தீயன்று நீரன்று மண்ணுமன்று
தானன்று நானன் றசரீரி யன்று சரீரியன்றே

நீ யார் தெரியுமா ? நீ மண்ணா இல்லை நீ நீரா இல்லை நீ காற்றா இல்லை நீ நெருப்பா இல்லை ஆகாயமா அதுவும் இல்லை

எல்லாம் தானான கடவுளா அதுவும் இல்லை . ஆதியிலே வெளிப்பட்ட சத்தம் அசரீரியா என்றால் அதுவுமில்லை ஏனென்றால் அது சகலவற்றையும் தன்னுள் தாங்கும் பரமாத்மா

அப்ப யார்தான் நான் ?

நீ சரீரி .

என்ன முருகன் குழப்புகிறார் ?

நீ பஞ்சபூதமோ அதனால் ஆன உடல் அல்ல .

அல்லது காற்றைப்போன்ற உயிருமல்ல

அல்லது கடவுளா அதுவுமில்லை பரமாத்மாவா அதுவும் இல்லை

பிறகு யாராம் ?

தனித்துவமான ஜீவாத்மா . அதற்கென்று ஒரு சூக்கும சரீரம் இருக்கிறது

அது அழிவற்றது .

கீதை 2:20 ஆத்துமாவை பொறுத்தளவில் அதற்கு பிறப்போ இறப்போ எப்போதுமில்லை ! புதிதாய் வருவது அல்லது இல்லாமல் போவது என்பதும் அதற்கு இல்லை ! ஆத்துமா பிறப்பு இறப்பை கடந்தது ; நித்தியமானது ;எப்போதும் இருப்பது ஏற்கனவே இருந்தது ! உடல் அழிந்தாலும் ஆத்துமா அழிவதேயில்லை !!

அதிதேவர் சிவனுக்கு அடுத்த நிலையில் சிவனின் அம்சமான நான்கு சிவகுமாரர்கள் இருக்கிறார்கள்

1)அருள்நந்தி சிவம்
2)பரஞான சிவம்
3)மெய்கண்ட சிவம்
4)உமாபதி சிவம்

இந்த நால்வரே சனகாதி முனிவர்களாக தட்சினாமூர்த்தியாக சிவன் உபதேசித்த போது உபதேசமும் பெற்றவர்கள்

சமயக்குரவர்களாக பூமிக்கு வந்தவர்களும் இந்த நால்வரே

பரத்திலே ருத்ரனான உள்ள அதிதேவர் சிவன் இனி பூமிக்கு நேரடியாக வருவதில்லை

இந்த நால்வரே சிவனின் பிரதிநிதியாக பலமுறை பூமிக்கு வந்தும் போய்க்கொண்டும் உள்ளனர்

பூமியில் இவர்கள் யாரேனும் அவதரித்து இருந்தால் பூமியைப்பொறுத்து அவரே சிவனைப்போன்றவர்

சிவனின் பிரதிநிதி ; ஆனாலும் சிவன் அல்ல

மற்ற எல்லா மனிதர்கள் ; ஞானிகள் ; யோகிகளைக் காட்டிலும் சிவனுக்கு இணையானவர்

சிவனோடு கூடி இருப்பவர்

சிவ + யோகம் = சிவோகம்

ஆதிசங்கரர் அந்த மெய்கண்ட சிவனே ஆவார்

ஆகவே சிவனோடு கூடியிருப்பவர் என்ற முறையில் சிவோகம் சிவோகம் என்றார்

சிவோகம் என்ற சமஸ்கிரதம் சொல்லாக மட்டும் பார்க்கிற அஞ்ஞானிகள் சிவோகம் என்றால் நான் சிவம் நான் சிவம் என ஆதிசங்கர்ர் சொன்னதாக தரிக்கித்திரிகிறார்கள்

அவர்களின் ஞான மாயை அவர்களை படுகுழியில் தள்ளிவிடுகிறது

ஆதி சங்கரரே நான் சிவன் என சொல்லிவிட்டார் ; அதைப்போல நானும் சிவனாகி விட்டேன் என துருத்தி அஹம்பாவத்தின் பிள்ளைகள் ஆகி விடுகிறார்கள்

சமஸ்கிரதம் என்பது தமிழின் அடிப்படையில் நின்று பல மொழிக்காரர்களையும் ஈர்க்கும் வண்ணம் சிவன் உருவாக்கிய மொழி

அதை சரியாக புரியவேண்டுமானால் தமிழ் படுத்தி பார்க்கவேண்டும்

சிவோகம் = சிவ + யோகம்

யோகம் என்றால் கூடியிருத்தல் ; இயைந்து இருத்தல் ; ஒன்றாக இருத்தல் என அர்த்தம்

சிவ + யோகம் என்றால் சிவனும் நானும் கூடியிருக்கிறோம் என்பதாகும்

பூமியிலே வந்த சிவகுமாரர்களில் ஒருவரான இயேசுவும் இதே வார்த்தையை சொன்னார்

நானும் பிதாவும் ஒன்றாக இருக்கிறோம் = சிவோகம்

யோவான் 10:30 நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்

அதுபோல மெய்கண்ட சிவமானவர் பூமியில் ஆதிசங்கரராக அவதரித்து வந்திருப்பதனால் தான் சிவகுமாரன் என்றார்

1)நான் மனமா அதின் புத்தியா அதின் அகம்பாவமா அதின் ஞானமா என்றால் நிச்சயமாக இல்லை

அல்லது உடலின் ஐம் புலன்களா என்றால் அவைகளுக்கும் அப்பாற் பட்டவன்

அல்லது ஆகாயம் ; காற்று ; நீர் ; நிலம் ; நெருப்பா என்றால் பஞ்ச பூதங்களையும் கடந்தவன் நான்

ஆனந்த ரூபன் சிவன்

அடியேன் சின்ன சிவன்

சிவனோடு ஒன்றி இருப்பவன்

2) நான் உயிர் இல்லை அல்லது தச வாயுக்களும் இல்லை அல்லது ஏழு தாதுக்களும் இல்லை

ஐம் புலன்களின் நுகர்ச்சிகளும் இல்லை
மனதை மூடியுள்ள ஐவகை கோசமுமல்ல

அடியேன் சின்ன சிவன்

சிவனோடு ஒன்றி இருப்பவன்

3)என்னிடம் மறுப்பும் வெறுப்பும் இல்லை ; விருப்பமோ ஆர்வமோ இல்லை

என்னிடம் பேராசையும் பெருநஷ்டமும் இல்லை ; கர்வமும் குரோதமும் இல்லை ; இன்பமோ துன்பமோ இல்லை

என்னை கட்டுப்படுத்தும் நியதிகளும் இல்லை ; பலன் விளைவுகளும் இல்லை ; தேவைகளும் இல்லை ; தேவையற்றவைகளும் இல்லை

அடியேன் சின்ன சிவன்
சிவனோடு ஒன்றி இருப்பவன்

4)நான் பாவ புண்ணியங்களை கடந்தவன் ; இன்பமோ துன்பமோ என்னை பாதிப்பதில்லை ;

வேதமோ வேள்வியோ ; மந்திரமோ தீர்த்தமோ அவசியமற்றவன்

அறிதல் உணர்தல் புரிதல் இம்மூன்றிர்க்கும் அப்பாற்பட்டவன்

அடியேன் சின்ன சிவன்
சிவனோடு ஒன்றி இருப்பவன்

5)நண்பர்களைம் பகைவர்களைம் பேதம் பிரிப்பதில்லை
ஜன்ம ஜன்மாங்களில் குறிப்பிட்ட தந்தையோ தாயோ எனக்கு இல்லை
உறவிணர்கள் நண்பர்கள் குரு சீடன் என்ற பந்தபாசமும் இல்லை

அடியேன் சின்ன சிவன்
சிவனோடு ஒன்றி இருப்பவன்

6)மல மாச்சர்யங்கள் விருப்பு வெறுப்புகளை கடந்தவன் ; தன்னில் தானே லயித்து உலகத்தோடு ஒட்டாதிருப்பவன் ; இன்ப துன்பங்களால் பாதிக்கப்படாதவன்

அடியேன் சின்ன சிவன்
சிவனோடு ஒன்றி இருப்பவன்







ஜெகஜனனி



இன்று ஒரு கிராமத்து கோவிலை பார்த்தேன்

சின்னச்சாமி தடாதகை பிராட்டியார் கோவில் என எழுதியிருந்தது

சின்னச்சாமி என்றால் சின்ன சிவன் அதாவது நான்கு சிவகுமாரர்களில் ஒருவர்

குறிப்பாக அர்ச்சுனரை குறிக்கும் என்றறிவேன்

யார் இந்த தடாதகை என்று யோசித்துக்கொண்டிருந்தால் கடைசியில் அது மீணாட்சியாம்

ரெம்ப நாளாக இந்த மீணாட்சி சின்னகாளி என்ற சந்தேகம் இருந்தது

சிவனுக்கு மனைவி காளீஸ்வரி என்றால் சின்ன சிவனுக்கு மனைவி சின்ன காளி மருதகாளி ராஜகாளி திரேவ்பதி ஒரே நபரே

இன்று தெளிவாயிற்று

இந்தப்பாடலும் கூட ஜெகஜனனி ஜெகத்திலே ஜனித்தவளே என்கிறது

காளியின் அம்சம் அதாவது சின்ன காளி திரெவ்பதியாக துவாபர யுகத்திலே பூமியிலே ஜனித்தாள்

போகரின் மனைவியாக தெத்துப்பட.டி ராஜகாளியாக வாழ்ந்தாள்

கலியுக ஆன்மீக தலைநகராம் மதுரையின் அரசியாக கோலோச்சினாள்

கலியுகத்தில் பூமி அசுர்ர்களுக்கு ஒப்புக்கொடப்பட வேண்டுமே

அதற்காக கண்ணகியை வைத்து மதுரை தீக்கிரையாக்கப்பட்டு சாபத்தீட்டானது

அதனால் மனம் வெதும்பி மதுரையை விட்டு திருவாச்சூருக்கு இடம் பெயர்ந்து மருதகாளியாக தனிமைப்பட்டு உள்ளாள்

கலியுகத்தை முடித்து வைக்க சமரச வேதாந்தியாக என்ற அல்மஹதியாக வெளிப்பட உள்ள அர்ச்சுணன் என்ற போகர் என்ற சொக்கன் இவளை மீண்டும் மதுரை அழைத்து வந்து அரியணையில் அமரச்செய்யும் நாளில் சத்தியயுகம் பிரகடனப்படுத்தப்படும்






முருகா எனும் நாமங்கள்



அருணகிரிநாதரின் கந்தரலங்கார பாடல் விருத்தமாக பாடப்பட்டுள்ளது

Bombay Jayashri Ramnath மிக உருக்கமாக பாடியுள்ளார்

விளிக்கு துணை திருமென்மலர் பாதங்கள்
மேன்மை குன்றா மொழிக்கு துணை
முருகா எனும் நாமங்கள்
முன்பு செய்த பழிக்கு துணை பண்ணிருதோளும் பயந்த
தனிவழிக்கு துணை
செங்கோடமும் மயூரமுமே

முருகா எனும் நாமங்கள்

குமரன் சிவகுமாரன் என்பது பரத்திலே தேவராக உள்ள ஒரு நபர் பூமியிலே மனிதனாக அவதரித்து வருவதை குறிக்கிறது

முக்கியமாக நர நாராயணர்கள் பூமிக்கு மும்முறை வந்துள்ளனர்

திரேதா யுகத்தில் ராமராகவும் லஷ்மணராகவும்

துவாபர யுகத்தில் கிறிஸ்ணராகவும் அர்ச்சுணராகவும்

கலியுகத்தில் இயேசுவாகவும் முகமதுநபியாகவும்

இந்த ஆறு நாமங்களே முருகா எனும் நாமங்கள் & பண்ணிரு தோள்கள்

இந்த ஆறு நாமங்களும் பாவங்களை மன்னிக்க அதிகாரம் பெற்றவை

மத்தேயு 9:6 பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி: நீ எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்றார்.






நம்பி கெட்டவர் எவரையா ?


நம்பிக்கெட்டவர் எவரையா ?

பாபநாசம் சிவன் அவர்களின் பாடல்

பல ஆன்மீகர்கள் வாழ்வில் ஒரு பாபம் சாபம் வந்து உறுத்தும்போது அறிவு ஞானம் எல்லாம் வீண் என்பது போல உணர்வுக்கு அடிமையாகி முடங்கி விடுகிறார்கள்

அறிவைக்கொண்டு அவரவர் மனதிற்கு விளக்கம் சொல்ல முடியாது

அப்படிப்பட்ட நிலையில் எளிமையாக மனிதர்களை உயர்த்துவது ; மனதை வசப்படுத்துவது பக்தியோகிகளின் இசையே ஆகும்

நாலு நல்ல பாட்டுகளை உணர்ந்து பாடுபவர்களின் குரலில் கேட்டால் மனது ஆசுவாசப்படும்

சங்கீதக்காரர்கள் என சகல மதங்களிலும் ஆத்மாக்கள் வந்துகொண்டேதான் இருக்கிறார்கள்

Dr. Shobana Vignesh அவர்கள் மிக எளியவர்களுக்கும் பலனளிக்கட்டும் என்ற அக்கறையோடு சங்கீத உலகில் சாதனைகள் செய்து வருகிறார்

அதுவும் வள்ளல்பெருமானின் பாடல்களை விருத்தமாக பாடி பிரபலப்படுத்தியும் வருகிறார்

வாழ்க வாழ்க

மயிலாப்பூர் என்று கேள்விப்பட்டதால் அதன் முக்கியத்துவம் உணராதவர்களில் ஒருவனாகத்தான் இருந்தேன்

சில ஆண்டுகளுக்கு முன்பு கோவிலுக்குள் சென்று அமர்ந்து நல்ல தியானமும் சித்தித்தது

தலை வெப்பமேறி கண்கள் எரிச்சல் பட்டதால் அங்கிருந்த கலையரங்கத்தில் தூணில் சாய்ந்தவாறு ஆசுவாசப் படித்திக்கொண்டிருந்தேன்

அப்போது பிராகாரத்தில் மயில் போல அசைந்தாடி எட்டு வைத்து ஆங்காங்கே நின்று ஒருவர் வணக்கம் செய்து கொண்டிருந்தார்

உண்மையிலேயே அப்படி ஒருவர் அங்கிருக்கலாம் அல்லது எனக்கு மட்டுமே கண்ணில் தெறிபவராகவும் பல நிகழ்வுகள் உண்டு

ஸ்தல வரலாறு கல்வெட்டுகளில் உண்டா என தேடியபோது அன்னை மயிலாக மாறி சிவனை சேவித்து வழிபட்ட ஸ்தலம் அதனால் மயிலை என்பது புரிந்தது

நம்பிக்கெட்டவர் எவரையா
உமை நாயகனை
திருமயிலையின் இறைவனை

சிவனும் உமையும் சாதாரண மனிதர்களாக மாறி ஆதம் அவ்வாவாக உலகம் முழுவதிலும் மனித இனங்களை உற்பத்தி செய்தார்கள்

பெண்களை மயிலின் ஒயிலுக்கு ஒப்பிடுவார்கள்

அன்னையோ மயிலாகவே மாறி சிவனை மனம் மகிழ செய்துமுள்ளார்

சிவநாமத்தால் அருட்பெருஞ்ஜோதி

சிவநாமத்தால் அருட்பெருஞ்ஜோதி






Wednesday, February 19, 2020

இரக்கம் வராமல் போனது என்ன காரணம் ?










இரக்கம் வராமல் போனது என்ன காரணம் ?

பாண்டிய அமைச்சராக இருந்த திருவாதவூறார் குதிரை வாங்கி வார பொக்கிசத்தை எடுத்துக்கொண்டு தொண்டி போகிறார்

வழியில் பட்டமங்கலத்தில் கனவில் தோன்றிய சிவன் ; இப்படியே திருப்பெருந்துறை சென்று அங்கு கோவில் கட்டு என பணிக்கிறார்

அதற்கு கீழ்படிந்து பணத்துடன் எஸ் ஆகி
திருப்பெருந்துறை சென்று கோவில் கட்டிக்கொண்டிருக்கிறார்

ஒற்றர்கள் பணத்துடன் காணாமல் போன மாணிக்கவாசகரை கண்டுபிடித்து இன்னும் ஒரு வாரத்தில் குதிரைகளுடன் மதுரை வராவிட்டால் கொல்லப்படுவாய் என கெடு வைக்கிறார்கள்

நாளக்கு காலை மைதானத்தில் நிற்கும் குதிரைகளை மதுரையில் ஒப்படை என்கிறார் சிவன்

அதுபோல மதுரை வந்த குதிரைகள் மிக நேர்த்தியாய் இருந்ததால் குதிரைகளுக்கு வரவேற்பு நடந்தது

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தோடு வரவேற்ற குதிரைகள் இரவு நரிகளாகி ஊளையிட்டு தப்பித்து ஓடின

இவ்வளவு பித்தலாட்டத்திற்கு சிறையிலடைக்காமல் விடுவானா பாண்டியன்

சிறைபட்ட மாணிக்கவாசகர் என்ன நினைத்திருப்பார்

இறைவனுக்கு கீழ் படிவது ; எந்த சிக்கலுக்கும் அவரிடமே முறையிடுவது ; ஒருகால் அவர் காக்காமல் போனாலும் அதை ஏற்றுக்கொள்வது

அடுத்த பிறவி எடுத்து விட்டதை தொடர்வது

இதுவே முக்தர்களின் மன நிலை

ஆனாலும் ஏமாற்றுவது குற்றம்தானே

மாணிக்கவாசகரை இச்செயல் செய்ய ஏவிய சிவனே குற்றத்தை ஏற்று பிரம்படி பட்டார்

பிட்டுக்கு மண் சுமந்த கதை கேள்விப்பட்டிருப்பீர்களே

அப்போது பாண்டிய நாடே பிரம்படி பட்டது

அந்த நிகழ்வு பிட்டுத்திருவிழாவாக மதுரையில் கொண்டாடப்படுகிறது

பக்தியோகிக்கு நன்றோ தீதோ இறைவனே பொறுப்புதாரி

சங்கீதம் 138:7 நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும் நீர் என்னை உயிர்ப்பிப்பீர்; என் சத்துருக்களின் கோபத்துக்கு விரோதமாக உமது கையை நீட்டுவீர்; உமது வலதுகரம் என்னை இரட்சிக்கும்.

அந்த மாணிக்கவாசகரே வள்ளல்பெருமானாகவும் வந்தார்