Total Pageviews

Sunday, August 21, 2011

மனிதர்கள் தெய்வமாக முடியுமா ?

by Kirubanandan Palaniveluchamy on Sunday, August 21, 2011 at 12:42am

மனிதர்கள் தெய்வமாகவே முடியாது கடவுளுக்கு அடியவர்களாக இருக்க கற்றுக்கொண்டால் வாக்களிக்கப்பட்ட பரலோகத்திற்குள் நித்தியஜுவனுடன் பிரவேசிக்க முடியும் மனிதனும் தெய்வமாகலாம் என வாக்களித்து கடவுளுக்கு இனையானவர்களாக தன்முனைப்பை மனிதர்களுக்கு கற்றுக்கொடுத்து கடவுளுக்கு அந்நியமாகும்படி அசுரர்கள் மாயம் செய்கிறார்கள் மணிதர்களுக்கு இச்சைகளை அழகாக்கி காட்டி ஒருவர்க்கு ஒருவர் தீமைகள் செய்து பாவம் சம்பாதிக்கவும் கடவுளிடமிருந்து அன்னியமாகவும் அசுரர்களே பின்னணியிலிருந்து செயல்படுகிறார்கள் தீமை செய்கிறவர்களுக்கு பக்க பலமாக உள்ள அதே அசுரர்கள்  நற்குனம் உள்ள அநேகரை நீங்களும் தெய்வமாகலாம் என்கிற மாய வலைக்குள் தள்ளி நரகததீர்ப்பிற்கு தகுதியுள்ளவர்களாக்குகிறார்கள் .தேவ தூதர்களில் யார் கடவுளை மட்டும் பிரதானபடுத்தாமல் நாங்களும் கடவுளுக்கு இனை ஆகிவிட்டோம் நாங்களும் தனித்து செயல்படுவோம் என ஆணவம் கொண்டார்களோ அவர்களே தள்ளப்பட்டு அசுரர்களாய் ஆனவர்கள் இறுதி தீர்ப்பு நாளில் தாங்கள் நரகத்தில் தள்ள பட்டு அழிவுக்கு உட்படுவோம் என்பது அசுரர்களுக்கு நன்கு தெரியும் அந்நாளில் கடவுளால் படைக்கப்பட்ட மனிதர்களில் அநேகர் தேவ தூதர்களாக  தகுதி அற்றவர்கள் தங்களோடு அழிவதற்கு தான் தகுதி உள்ளவர்கள் என கடவுளை நிர்பந்தபடுத்துவதும் மனிதர்களை அழிவுக்கு உள்ளாக்குவதும் அசுரர்களின் லட்சியமாகும் தகுதியுள்ள மனிதர்கள் தேறினால் இறுதிதீர்ப்பு நாள் வந்துவிடும் என்பதால் தீயவர்களுக்கு தீய வழியிலும் நல்லவர்களுக்கு நயவஞ்சகமாகவும் உபதேசம் செய்து கொண்டே உள்ளனர் இறை அச்சமற்றவர்களுக்கு அக்கிரமத்தையும் இறை அச்சமுள்ளவர்களுக்கு நாங்களும் தெய்வமாகிவிட்டோம் நீங்களும் தெய்வமாகலாம் என வஞ்ச புகழையும் வழங்குகின்றனர் இறந்து போன புகழ்பெற்ற நபர்கலெல்லாம் தெய்வமாகி விட்டதாக ஜாலம்செய்கிறார்கள் எளிதில் மனிதர்களை மயக்கும்வழி இது .கடவுள் தான் பெரியவர் என்கிற பக்தியின் உச்சத்தை அடைந்து விட்டால் இந்த மாயதிலிருந்து தப்பலாம் கடவுளே கதி என இருக்கிற மனதாழ்ச்சி மிக உன்னத குணமாகும்