26/10/14 ஞாயிறு திருச்சியில் ஒரு உலகியல் நிகழ்ச்சிக்கு செல்லும்படியாக ஆயிற்று . அந்த பயணத்தை ஆன்மீக வாழ்வுக்கும் பிரயோஜனமுள்ளதாக மாற்ற சனி மாலையே திருவானைக்காவல் போய் சேர்ந்தேன்
என் கல்லூரி நண்பரும் சன்மார்க்க அன்பருமான ஆதி 8 மணியளவில் என்னை திருச்சி தருமசாலை ஸ்தாபகர் வடிவேல் சாமி அவர்களிடம் அழைத்து செல்ல வரும்வரை கோவிலில் அமர்ந்து தியானித்துக்கொண்டிருந்தேன்
ஆதி என்னை வந்து அழைத்து சென்றபோது திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளத்தின் வட வாசலில் வழக்கமான அன்னதானம் முடிந்து நாகநாதர் கோவில் சாலையில் பத்து பரதேசிகளுக்கு உபதேசம் செய்துகொண்டிருந்தார் வடிவேல்சாமி
உணவுக்காக வந்த பரதேசிகளுக்கு மத்தியில் இரண்டு மூன்று சித்த புருஷர்களும் இருந்தது தெரிந்தது . ஜனரஞ்சகமான சாலையில் வியாபாரமும் பொதுமக்களும் புலங்கிக்கொண்டிருக்க சாதாரண பொதுமக்களுக்கும் பரதேசிகளுக்கும் இரண்டு காதில் எறும்படியாகவும் அங்கிருந்த சித்த புருஷர்களுக்கும் கொஞ்சம் ஆழமான விசயங்களும் கலந்து அற்புதமான அருள் உரை பிரவகித்து வந்து கொண்டிருந்தது
நானும் அவர்களுடன் அமர்ந்து விட்டேன் . நல்ல அருள் சூழலில் ஆழ்ந்தேன் . ஏற்கனவே அவரின் உரை ஒன்றை நண்பர் ஆதி பதிவு செய்திருந்தார் . எவ்வளவு அற்புதமாக நடு ரோட்டு உபதேசம் பாருங்கள் நீங்களும் அனுபவியுங்கள் .
என் கல்லூரி நண்பரும் சன்மார்க்க அன்பருமான ஆதி 8 மணியளவில் என்னை திருச்சி தருமசாலை ஸ்தாபகர் வடிவேல் சாமி அவர்களிடம் அழைத்து செல்ல வரும்வரை கோவிலில் அமர்ந்து தியானித்துக்கொண்டிருந்தேன்
ஆதி என்னை வந்து அழைத்து சென்றபோது திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளத்தின் வட வாசலில் வழக்கமான அன்னதானம் முடிந்து நாகநாதர் கோவில் சாலையில் பத்து பரதேசிகளுக்கு உபதேசம் செய்துகொண்டிருந்தார் வடிவேல்சாமி
உணவுக்காக வந்த பரதேசிகளுக்கு மத்தியில் இரண்டு மூன்று சித்த புருஷர்களும் இருந்தது தெரிந்தது . ஜனரஞ்சகமான சாலையில் வியாபாரமும் பொதுமக்களும் புலங்கிக்கொண்டிருக்க சாதாரண பொதுமக்களுக்கும் பரதேசிகளுக்கும் இரண்டு காதில் எறும்படியாகவும் அங்கிருந்த சித்த புருஷர்களுக்கும் கொஞ்சம் ஆழமான விசயங்களும் கலந்து அற்புதமான அருள் உரை பிரவகித்து வந்து கொண்டிருந்தது
நானும் அவர்களுடன் அமர்ந்து விட்டேன் . நல்ல அருள் சூழலில் ஆழ்ந்தேன் . ஏற்கனவே அவரின் உரை ஒன்றை நண்பர் ஆதி பதிவு செய்திருந்தார் . எவ்வளவு அற்புதமாக நடு ரோட்டு உபதேசம் பாருங்கள் நீங்களும் அனுபவியுங்கள் .