Total Pageviews

Monday, November 7, 2011

இறைதூதர்கள் வரும்போது ????

இறைதூதர்கள் வரும்போது மனிதர்கள் அசுரர்களால் தூண்டப்பட்டு எதிர்ப்பார்கள் கொடுமைப்படுத்துவார்கள்

அவர்கள் சென்றுபோன பிறகு இறைதூதர்களை கடவுளுக்கு இணைவைத்து இவர்தான் கடவுள் இவரை கும்பிட்டால்போதும் என மாயத்தை பரப்புவர்
இரண்டுமே கடவுளுக்க விரோதமானவை இந்த பூமியில் இறைதூதர்கள் மூலம் பரலோகராஜ்ஜியம் --இறைபேரரசு கோலோச்சுகிரது!
அப்படிப்பட்ட தூதர்கள் பிறக்கும் போதும் அசுரர்கள் தடை செய்ய பலமுயற்சி செய்தார்கள்
ராமர் பிறக்கும் முன் யாகங்களை பாழடிப்பதற்க்கு கடும் முயற்ச்சி செய்தனர் ஏனெனில் யாகத்தின் மூலம் ராமர் பிறப்பு அசுரர்களுக்கு தெறிந்திருந்தது, க்ரிஷ்ணர், இயேசு பிறக்கும் முன் குழந்தைகள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர்!முஹமது `ஜிப்ரீல்`-தேவதூதனால் கடவுளின் தூதர் என அபிசேகிக்கபட்டதும் அவரை கொல்ல கடும்முயற்சி மேற்கொள்ளப்பட்டதால் `ஹஜ்`-ஊரை விட்டு ஓடினார்!விவேகானந்தர்,வள்ளலார் சாவில் மர்மம் நீடிக்கிறது!காந்தி கொல்லப்பட்டார்!
அவர்கள் உயிரோடு இருக்கும் போது தங்களை கடவுளாக கூறியதில்லை!கடவுளை சதா வழிபடுகிறவர்களாக, எதற்க்கும் கடவுளை முன்னிறுத்துபவர்களாக பக்தியோகம்,கர்மயோகம்,மனிதனேயம்,சமூகநீதி,அன்பு,பொறுமை,சகிப்புதண்மை ஆகியவற்றை உபதேசித்து முன்மாதிரியாகவும் திகழ்ந்தனர்!
அவர்கள் சென்றுபோனதும் அவர்களின் சீடர்களுக்கு துர்உபதேசம் செய்து தங்கள் குருவின் மீது தங்களுக்கு இறுக்கும் அன்பை வெளிக்காட்டுகிற சாக்கிலே அவரையே கடவுளுக்கு இனைவைத்து இவறை வழிபட்டாலே போதும் என்கிற மாயை பரவுகிறது
அவர்கள் சென்றுபோனதும் அவர்கள் உபதேசத்தை கடைபிடிப்பதை மறக்கசெய்கிற சதியாக அவர்களை வழிபட்டால்போதும் என சீடர்களுக்கு துர்உபதேசம் செய்வது அசுரர்களே இந்த மாயைக்கு மனிதர்கள் எளிதில் மயங்கி துதிபாடிகளும் பிழைப்புவாதிகளும் தலைவர்களாகி பரலோக ராஜ்ஜியத்தின் திறவுகோலை கைப்பற்றிக்கொள்கிறார்கள் அதில் தானும் பிரவேசிப்பதில்லை பிறரையும் பிரவேசிக்கவிடுவதில்லை