Total Pageviews

Sunday, January 29, 2012

இயேசு குருவா? கடவுளா?

இதற்கு இயேசு சொன்ன பதிலே போதும்!!!

மத்தேயு 7:21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.

மத்தேயு 7:22 அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.

மத்தேயு 7:23 அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.


கடவுளை வழிபடுவது மட்டுமே இயேசுவால் முக்கியபடுத்த பட்டுள்ளது!இயேசுவை கடவுளின் தூதராக --மனிதர்களுக்கு குருவாக ஏற்றுக்கொள்ளும் படி அவர் அளைத்தாரே தவிர தன்னை வழிபடும்படி அவர் வழிகாட்டவில்லை!

இயேசுவிடம் வேதத்தின் சாரம் என்ன என கேட்ட போது அவரின் பதில் :
29. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கடவுள் ஒருவரே கடவுள் .

30. உன் தேவனாகிய கடவுளிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை.

31. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால்: உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே; இவைகளிலும் பெரிய கற்பனை வேறொன்றுமில்லை என்றார்.

எப்படி பிரார்திப்பது என்று இயேசுவிடம் கேட்ட போது:
9. நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது; பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக;

10. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.

11. எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்.

12. எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.

13. எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென், என்பதே!.

ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் கடவுளுடையவைகளே என்பது இயேசுவின் முடிவு !அவர் எப்போதும் கடவுளை பிரார்திக்கிறவராகவே வாழ்ந்து காட்டினார் !


பூமியின் முடிவு காலத்தில் இயேசு என்ன செய்வார் என பைபிள் சொல்லுகிறது :
I கொரிந்தியர் 15:24 அதன்பின்பு முடிவு உண்டாகும்; அப்பொழுது அவர் சகல துரைத்தனத்தையும் சகல அதிகாரத்தையும் வல்லமையையும் பரிகரித்து, தேவனும் பிதாவுமாயிருக்கிறவருக்கு ராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார்.


இயேசு பூமிக்கு வந்தது ;மீண்டும் வரப்போவது பூமியில் தாங்களும் கடவுளாகிவிட்டதாக சொல்லிக்கொண்டுள்ள அசுர ஆவிகளை பரிகரித்து கடவுளுக்கு ராஜ்ஜியத்தை உண்டாக்குவதற்கு!ஆனால் அவரின் வார்த்தைகளை திரித்து அவரும் கடவுளாகி விட்டதாக அசுர ஆவிகள் செய்கிற அதே வேலையை இயேசுவும் செய்வதாக கிறிஸ்தவர்கள் சொல்லுவது சரியா ?


இயேசு கடவுளின் ராஜ்ஜியத்தை பூமியில் ஸ்தாபிக்க வந்தவர் !தனது சுயராஜ்ஜியத்தை கட்டும் அசுரர்களை வெல்ல கடவுளால் அனுப்ப பட்ட இறைத்தூதர் !மனிதர்களுக்கு குரு !இயேசுவின் மூலமாக கடவுளிடம் பிரார்திப்பதே இயேசுவுக்கு பிரியமானது !


இயேசுவின் எச்சரிக்கையை கவனியுங்கள் :
மத்தேயு 7:23 அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.

வழிபாடு கடவுளுக்கு மட்டுமே !இயேசுவின் மூலம் வழிபடலாமே தவிர இயேசுவை வழிபட கூடாது !


0 Comments | Add Comment | Permalink RSS

ஞான மார்க்கத்தினருடன் ஒரு சம்பாஷனை!!!

நண்பரே !தங்களை வாழ்த்துகிறேன்!கீதையை கொஞ்சமாவது புரிந்திருந்த கண்ணோட்டத்தில் பைபிளையும் குரானையும் படித்த போது நான் புரிந்து கொண்டது வேறு ;அதனை சடங்காச்சாரமாக பின்பற்றும் கிறிஸ்தவர்கள் முஸ்லீம்கள் வியாக்கியானம் செய்வது வேறு என்பதை சொல்லி வருகிறேன் !பைபிளையும் குரானையும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டுமானால் கீதையை படிப்பது அவசியம் என்பதை அவர்களின் தளங்களில் சொல்லிவருகிறேன் !இந்தியர்களாகிய நாம் இன்னும் தெளிவு பெற பைபிளையும் குரானையும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன் !

உலகம் முழுவதும் ஒரே இறைவனே !தனது பிள்ளைகளாகிய மனிதர்களுக்கு உலகம் முழுவதும் கடவுள் தன்னை பற்றிய வெளிப்பாடுகளை கொடுத்திருக்க மாட்டாரா ??எங்களுக்கு மட்டுமே சொன்னார் என்பது போல மற்றவர்களை ஒதுக்குகிற கிணற்று தவளை மனப்பான்மையை விட்டு வெளி வருதலே இன்றைய தேவை !நான் இயேசுவை ஒரு இறைதூதராக மட்டுமே பார்க்கிறேன்!ஆனால் அவரை மனிதர்கள் தங்களின் தவறினால் கடவுளுக்கு இணை ஆக்கி பார்க்கிறார்கள் --இந்தியாவில் ராமரையும் கிரிஷ்ணரையும் இணை ஆக்கி விட்டதை போல !

இந்த பூமிக்கு என்று ஒரு யுக புருஷன் கடவுளிடம் உண்டு !அவர் கடவுளல்ல !அவரும் கடவுளின் தூதர் மட்டுமே !ஆனாலும் பூமியை பொறுத்தவரை கடவுளின் ஏக பிரதிநிதி --கணக்கு பிள்ளை என்பதை போல --இந்த நபரே ``குமாரன்`` என அழைக்கபடுகிரார்! ராம் என்றாலும் ஜெரோம் என்றாலும் ரஹீம் என்றாலும் ஒரே அர்த்தத்தில் இந்த குமாரன் என்ற பொருளில் வழங்கப்பட்டது !இவரையே போகர் தனது ஞானத்தால் உணர்ந்து தேவதூதன் என்கிற நிலையிலிருந்து மனித சரீரத்தில் அவதரிக்கிற முருகு -மாறி வருகிற முருகன் என்றார் !அது ஒரு உருவக உபதேசம் !இந்த முருகனாகிய யுக புருஷனாகிய இறைதூதன் யாரென்றால் திரேதா யுகத்தின் ராமன் ;துவாபர யுக கிருஷ்ணன் ;கலியுக இயேசு !இம்மூவரும் ஒருவரே !``அதர்மம் பெருகும் போது நான் மீண்டும் மீண்டும் அவதரிக்கிறேன் ``என்பது நிறைவேறியுள்ளது !இந்த நபரே கல்கி யுகத்தில் கல்கியாக வரபோகிறவர் !

கடவுள் எதையும் ஜோடுஜோடாகவே படைக்கிறவர்!அப்படி இந்த யுக புருஷனுக்கு நண்பனான ஒருவர் உள்ளார் !அவர் ராமருக்கு லக்ஷ்மணன் ;கிரிஷ்ணருக்கு அர்ச்சுனன் ;இயேசுவுக்கு முகமது நபி !இயேசு பரமேறுமுன் எனக்கு பின் வருகிற சத்திய ஆவியானவர் உங்களை சகல சத்தியத்திற்குள்ளும் நடத்துவார் என முன்னறிவித்தார் !அந்த சத்திய ஆவியானவராகிய ``ஜிப்ரீல் ``என்கிற தேவதூதன் முகமதுவை ஆட்கொண்டு இறக்கிய வேதம் தான் குரான் !முகமது ஒரு சாதாரண படிப்பறிவு இல்லாத இடையன் ! ஜிப்ரீல் என்ற ஆவியே முகமதுவை ஒரு கருவியாக பயன்படித்தி ஆப்ராமின் சந்ததியினருக்கு வாழ்க்கை நெறிமுறைகளும்  ஆட்சி நெறிமுறையும் குரானாக வழங்கப்பட்டது!லக்ஷ்மணன், அர்ச்சுனன், முகமது மூவரும் யுத்த வீரர்கள் --ஒருவரே!!! கீதையில் கிரிஷ்னர் அர்ச்சுனனிடம் இதற்கு முன்பும் நாம் இருவரும் இருந்திருக்கிறோம்;ஆனால் நான் முந்தய பிறவி ஞானத்துடன் இருக்கிறேன்;நீ அந்த ஞாபக சக்தி அருளப்படாதவனாக இருக்கிறாய் என்று சொன்னது இந்த யுகபுருஷ ஜோடி திரும்ப வரும் என்பதையே!ஒருவர் கடவுளை நெருங்கியவர்;உடன் அவருக்கு உதவியான சத்திரியன்!

உலகம் முழுவதிலும் கடவுளை மனித முயற்சியால் நெருங்கியவர்களும் கடவுளை பற்றிய வெளிப்பாட்டை கொடுத்துள்ளனர் !நம் இந்திய ஞானிகளை போல! ஆனால் கடவுளே தமது தூதர்களாக சிலரை தேர்ந்தெடுத்து தம்மை பற்றி வெளிப்படுத்தியுள்ளது எதுவோ அதுவே சிறந்தது!அப்படி வந்தது கீதையும் பைபிளில் பழைய ஏற்பாடும் குரானும் மட்டுமே!இவைகளில் அருள்நிலையில் கடவுளே பேசுவதாக வார்த்தைகள் இறங்கியுள்ளன !நான் என அதிகாரத்துடன் சொல்லப்படும் வார்த்தைகளை கடவுள் இறைத்தூதர்களான கிருஷ்ணர் ,இயேசு ,முகமது மூலமாக கடவுள் பேசியதாக எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர கிருஷ்ணர் இயேசு முகமது சொன்னதாக எடுத்துக்கொள்ள கூடாது !குர்ஆனில் இதைப்பற்றி தெளிவாக வசனம் இறங்கியுள்ளது !இறைதூதர்கள் கடவுளின் வாயே தவிர கடவுளல்ல !இவர்களையும் வணங்கக்கூடாது !வழிபாடு கடவுளுக்கு மட்டுமே!எல்லா புகழும் கடவுளுக்கே என்ற குரானின் முத்தாய்ப்பான வாசகத்தை மனதில் வைக்கவேண்டும்!!!

இயேசு ``நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன் ;என்னையன்றி ஒருவனும் கடவுளிடத்து வாரான் ``என்றார்!நான் கடவுளை அடைய பாதை --குரு என்றுதான் சொன்னார்!நான்தான் கடவுள் என்று சொன்னதாக கிறிஸ்தவர்கள் தவறாக திரித்து அப்பியாசிக்கின்றனர்!அதுபோலவே அவரது முந்தய அவதாரமான ராமரையும் கிரிஷ்ணரையும் குரு என்பதை மாற்றி கடவுளுக்கு இணையாக்கி நாம் அப்பியாசிக்கிறோம் !இது தவறு என குரான் சுட்டுகிறது!

இம்மூன்று வெளிப்பாடுகளையும் தொகுத்து பார்த்தால் ஒரே அடிப்படையில் செழுமையாக்க பட்டவை என்பது புரியும்!ஆனால் வேறுவேறானதாக அர்த்தப்படுத்தி சண்டை போடுகிறவையாக மனிதர்கள் மாற்றி கொண்டோம்! இறைதூதர்கள் சென்ற பிறகு அவர்களின் சீடர்கள் மூலமாக தங்களது விசத்தை சிறுகசிறுக கலந்து அவற்றை திரித்து தவறாக வியாக்கியானம் செய்வது அசுர ஆவிகளின் வாடிக்கை என குரான் சுட்டுகிறது! அதுதான் தற்போது நடந்து கொண்டுள்ளது!

எல்லா மதங்களும் இறைதூதர்களால் அடித்தளம் இடப்பட்டு வளர்க்கப்பட்டு பின்னாளில் அசுரர்களால் சீரழிக்க பட்டவையாய் இருக்கின்றன என்ற உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்!உண்மைகளை மட்டும் உள்வாங்கி முன்னேற கடவுள் அருள் வேண்டும்!பூமியில் மனிதர்கள் மூலமாக தேவ அசுர யுத்தம் நடந்து கொண்டேதான் இருக்கிறது!

இந்த யுத்த களத்தை புரிந்து கொள்ள பக்குவத்தை உண்டாக்கும் ஒரு சாதனம் தான் தியானம் யோகம் என்பது!அன்ன மயகோஷம் மனோமய கோஷம் இவற்றை விட்டு முன்னேறாமல் தியானம் யோகம் என்று கத்தியை மட்டும் தீட்டிக்கொண்டே இருப்பதால் பலன் என்ன ?கத்தியை தீட்டுவது விஞ்ஞான மய கோஷத்திர்க்குள் நுழைந்து தேவ அசுர யுத்த களத்தில் நுழைவதற்காக!அந்த நிலையில் ஒன்று கடவுள் சார்பாக கடவுளை உயர்த்தி பிடித்து அவரிடம் பிரார்திக்கிற பக்தனாக மாறி ஆகவேண்டும் !அல்லது கடவுளை மறைமுகமாக புறந்தள்ளி --அவரை ஒரு நபர் என்பதற்கு பதிலாக ஒரு பொருளாக்கி--இயற்கையாக சுட்டி மனித அறிவை கொண்டே சிறப்பான வாழ்க்கை வாழ்ந்துவிடலாம் என அசுர குருவின் அணியில் நிற்க வேண்டும்!

அசுரர்கள்  தேவதூதன் என்ற நிலையில் இருந்து அசுரனாக மாறியது நாங்களும்  கடவுளுக்கு இணையாகி விட்டோம் என்றதாலேயே!ஆதி மனிதனான ஆதாமை நீயும் கடவுளாகலாம் என உபதேசித்து கெடுத்தான்!இறந்து போன அனேக மனிதர்கள் பெயரை சொல்லி பல அற்புதங்களை தேவைகளை மனிதர்களுக்கு செய்து கொடுத்து மனிதர்களும் தெய்வமாகி விட்டதாக மாயம் செய்வதும் அசுர ஆவிகளே!

இயேசு அசுரனைப்ப்ற்றி ``அவன் ஒரு பொய்யன்;பொய்களுக்கு பிதாவாய் இருக்கிறவன்`` என்றார்!நான் அசுரன் கடவுளுக்கு விரோதி;கடவுளை போல ஆற்றல் உள்ளவன் என்னை வழிபட்டால் உங்களுக்கு எல்லாம் செய்வேன் என உண்மையை சொன்னால் மனிதர்கள் அவனை எற்றுகொள்ளமாட்டார்கள்!அதனால் அவன் எப்போதும் இறந்த மனிதர்கள் பெயரால்தான் பூமியில் செயல்பட்டு தன்னை வழிபடுகிற ஒரு கூட்டத்தை உண்டாக்குகிறான்!``ஆட்டின் தோலை போர்த்துக்கொண்டு ஓநாய்கள் உங்களிடத்து வரும்`` என இயேசு எச்சரித்ததும் இதுவே!சென்று பொன இறைதூதர்கள்,ஞானிகள்,மஹான்களின் பெயரை கடவுளுக்கு இணைவைத்து அவர்களை வழிபடுவது,அவர்களின் உபதேசத்தை திரித்து வியாக்கியாணம் செய்வது,மனிதர்களை கடவுளை வழிபடுவதிலிருந்து திசைதிருப்புவது,நான் பெரிசு நீ பெருசு என குழு உணர்வை தூண்டி சண்டை போட வைப்பது எல்லாமே அசுரர்களின் வேலையாகும்!

கடவுளை தேடு என்று சொல்லாமல் மனிதனும் தெய்வமாகிவிடலாம் என்கிற உபதேசம் அசப்பில் ஞானம் போல தெரிந்தாலும் ஞானமல்ல!அசுர குருவின் உபதேசம்!எல்லா ஞானத்தையும் பேசி முடிவில் கடவுள் என்ற நபரை புறந்தள்ளும்!தீயவர்களுக்கு துன்மார்க்கத்தை   உபதேசிக்கிற அசுரர்கள் நல்ல ஆத்துமாக்களை ஏமாற்ற வைத்திருக்கும் உபதேசம் ஞானம் போல தெரிகிற மாயாவாதம்-அல்லது சூனிய வாதம் !வள்ளலார் கடவுள் சார்பானவர்!அவர் ஏழு மாயத்திரைகளை நீக்கி அருட்பெரும் ஜோதியாய் விளங்கும் கடவுளை வழிபடு என்றார்!யுக முடிவில் கல்கி வருவார் என்றார்!ஆனால் வேதாத்திரி மாயாவாதி!அறிவுதான் கடவுள் என்று அசுர உபதேசம் செய்தவர் !!!கடவுளை வழிபடுவதிலிருந்து மனிதர்களை திசைதிருப்புகிறவர்!!!

No comments:

Post a Comment