Total Pageviews

Sunday, March 2, 2014

திருப்பாவை 5





திருப்பாவை - 5

பரலோகத்தில் - வைகுண்டத்தில் ஒரு நாள் என்பது பூமியில் ஒரு வருடம் !

தேவர்களும் ; ஒளி சரீரம் பெற்று மரணமில்லா பெரு வாழ்வு பெற்ற ஆத்மாக்களும் வாழும் அந்த லோகத்தில் மார்கழி மாதம் முழுவதும் வைகறை பொழுது ! அதாவது அவர்கள் பிரார்த்தனை தியானம் செய்யும் நேரம் !

எனவே இம்மாதம் முழுவதும் புனிதமானது ! பக்தி ; தியானம் ; பிரார்த்தனைக்கு உரியது !

மாகாகுரு ஆண்டாள் - மனிதர்கள் பாடி துதிக்கவும் ; பின்பற்றவும் ; ஞானம் பெறவும் திருப்பாவை அருளினார் !!

அதில் சிறந்த முன் உதாரணம் உள்ளது !!

போய பிழையும் புகுதருவா நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய் !!

பாவமன்னிப்பு - சற்குருவாகிய நாராயணனது நாமம் - ராம நாமம் ; கிரிச்னரின் நாமம் ; இயேசுவின் நாமம் சகல பாவங்களையும் தீர்க்கும் !!

இந்தியாவில் திரேதா யுகத்திலும் ; துவாபர யுகத்திலும் வெளியரங்கமான இந்த உண்மை ; வெளிநாடுகளில் வாழும் மற்ற சமுதாயத்திற்கும் இயேசுவின் மூலமாக கலியுகத்தில் வெளிப்படுத்தப்பட்டது !!

வேதம் எதுவும் வெளிப்படுத்தப்படாத ஐரோப்பியர்களுக்கு இயேசுவின் நாமத்தால் - குமாரன் அதாவது ராமன் என்ற நாமத்தால் இந்த உண்மை கடந்து சென்றது

இந்தியாவில் ஸ்ரீ என்றால் இறைவனை குறிக்கும் ; அதுபோல இஸ்ரேலில் ஜெ என்றால் இறைவனை குறிக்கும்

ராம் என்றால் குமாரன் - பிரதிநிதி என்று அர்த்தம்

ஸ்ரீராம் என்பதும் ஜெரோம் என்பதும் ஒரே அர்த்தம் உள்ள சொல் .

இயேசு தன்னை குமாரன் - ராமன் ராமன் என்றுதானே சொல்லிக்கொண்டார்

ராமநாமம் சகல பாவங்களையும் தீர்க்கும்

காசியில் இறப்போரின் காதில் சிவ்னார் ராமா ராமா என்ற மந்திரத்தை ஓதுவாராம்

அதனால் அடுத்த பிறவியில் அந்த ஆத்மாக்கள் ஆன்மீக செறிவுள்ளவர்களாக பிறக்கிறார்களாம்

கலியுகத்தில் ஐரோப்பியர்கள் விஞ்ஞானத்தின் மூலமாக ஆதிக்க சக்தியாக மாறியதால் இந்தியாவில் ஏற்கனவே இருந்த உண்மையை அவர்கள்தான் முதலில் கண்டுபிடித்ததது போல சொல்லிவிட்டார்கள் !

ராமநாமம் சகல பாவங்களையும் தீர்த்து நாம் கடைத்தேற வழிகாட்டும்

விஷ்ணுசகஸ்ரநாமத்தில் பீஷ்மர் பாண்டவர்களுக்கு நாராயணனது ஆயிரம் நாமங்களையும் அவற்றின் மகிமைகளையும் பற்றி உபதேசிக்கிறார்

அதில் வந்து கலந்து கொண்ட சிவ்னார் சொல்கிறார் ; ஆயிரம் நாமங்களையும் விட ராமா ராமா என்ற நாமமே சிறந்தது என்கிறார்

ஸ்ரீராம ராம ரமேதி ரமே ராமே மனோரமே
சகஸ்ரநாம தத்யுல்யம் ராமநாம வராணனே

அதிதேவர் சிவன் திருவாய் மலர்ந்த வாக்கு இது - ஆயிரம் நாமங்களை சங்கல்பம் செய்வதை விட ராமநாமம் ஒன்றே சகல பாவங்களையும் தீர்க்க கூடியாது என்பதுவே இதன் சாரம் !!

இயேசுதான் முந்தய யுகங்களில் ராமராகவும் கிரிச்னராகவும் இந்தியாவில் அவதரித்தார் ; இந்து தர்மம் என்ற செழுமையான வேதம் நிர்மாணித்தார்

வேதமே வராத ஆப்ராகாமிய வாரீசுகளுக்கும் ஐரோப்பியர்களுக்கும் மட்டுமே யூதம் ; கிறிஸ்தவம் ; குரான் !

அவைகள் இந்து தர்மத்தில் வந்து அடங்க வேண்டியவை !

அதற்கான காலகட்டம் - சமரச வேதம் வெளியரங்கமாகும் நாள் நெருங்கிக்கொண்டுள்ளது !

நாரயணன் நாமத்தினாலே கடவுள் தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் தமது அருளால் நிரப்ப வேண்டுகிறேன் !

நாராயணனாக வெளிப்பட்ட அந்த ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணாய !!

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி