Total Pageviews

Sunday, May 22, 2016

கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 1




இந்தப்பிளேயரிலும் கேட்கலாம்
https://ia802704.us.archive.org/23/items/KandakottamDeivamanimaalaiPartI/Kandakottam%20Deivamanimaalai%20Part%20I.ogg

திருஓங்கு புண்ணியச் செயல்ஓங்கி அன்பருள் 

திறலோங்கு செல்வம்ஓங்கச்
செறிவோங்க அறிவோங்கி நிறைவான இன்பம்
திகழ்ந்தோங்க அருள்கொடுத்து
மருஓங்கு செங்கமல மலர்ஓங்கு வணம்ஓங்க
வளர்கருணை மயம்ஓங்கிஓர்
வரம்ஓங்கு தெள்அமுத வயம்ஓங்கி ஆனந்த
வடிவாகி ஓங்கிஞான
உருஓங்கும் உணர்வின்நிறை ஒளிஓங்கி ஓங்கும்மயில்
ஊர்ந்தோங்கி எவ்வுயிர்க்கும்
உறவோங்கும் நின்பதம்என் உளம்ஓங்கி வளம்ஓங்க
உய்கின்ற நாள்எந்தநாள்
தருஓங்கு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

பரம்ஏது வினைசெயும் பயன்ஏது பதிஏது
பசுஏது பாசம்ஏது
பத்திஏ தடைகின்ற முத்திர தருள்ஏது
பாவபுண் யங்கள்ஏது
வரம்ஏது தவம்ஏது விரதம்ஏ தொன்றும்இலை
மனம்விரும் புணவுண்டுநல்
வத்திரம் அணிந்துமட மாதர்தமை நாடிநறு
மலர்சூடி விளையாடிமேல்
கரமேவ விட்டுமுலை தொட்டுவாழ்ந் தவரொடு
கலந்துமகிழ் கின்றசுகமே
கண்கண்ட சுகம்இதே கைகண்ட பலன்எனும்
கயவரைக் கூடாதருள்
தரமேவு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

துடிஎன்னும் இடைஅனம் பிடிஎன்னும் நடைமுகில்
துணைஎனும் பிணையல்அளகம்
சூதென்னும் முலைசெழுந் தாதென்னும் அலைபுனல்
சுழிஎன்ன மொழிசெய்உந்தி
வடிஎன்னும் விழிநிறையும் மதிஎன்னும் வதனம்என
மங்கையர்தம் அங்கம்உற்றே
மனம்என்னும் ஒருபாவி மயல்என்னும் அதுமேவி
மாழ்கநான் வாழ்கஇந்தப்
படிஎன்னும் ஆசையைக் கடிஎன்ன என்சொல்இப்
படிஎன்ன அறியாதுநின்
படிஎன்ன என்மொழிப் படிஇன்ன வித்தைநீ
படிஎன்னும் என்செய்குவேன்
தடிதுன்னும் மதில்சென்னை கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே. 


வள்ளல்உனை உள்ளபடி வாழ்த்துகின் றோர்தமை
மதித்திடுவ தன்றிமற்றை
வானவரை மதிஎன்னில் நான்அவரை ஒருகனவின்
மாட்டினும் மறந்தும்மதியேன்
கள்ளம்அறும் உள்ளம்உறும் நின்பதம்அ லால்வேறு
கடவுளர் பதத்தைஅவர்என்
கண்எதிர் அடுத்தைய நண்என அளிப்பினும்
கடுஎன வெறுத்துநிற்பேன்
எள்ளளவும் இம்மொழியி லேசுமொழி அன்றுண்மை
என்னை ஆண் டருள்புரிகுவாய்
என்தந்தை யேஎனது தாயேஎன் இன்பமே
என்றன்அறி வேஎன்அன்பே
தள்ளரிய சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.


    வள்ளல் பெருமான் உலகம் உய்ய அடித்தளம் அமைக்க பரலோகத்தில் இருந்து அனுப்பப்பட்டவர் . முற்பிறவியிலேயே எலிஜா என்ற யூதராக மவுன்ட் கர்மேல் பர்வதத்தில் தபோவனம் அமைத்து ஆன்மீக சாதனை செய்தவர் . அப்பிறவியிலேயே அவர் முதன்முதலாக ஒளி சரீரம் அடைந்து ஏஞ்சல் சாண்டல்பான் என்ற தேவராக பரலோகம் ஏகி சப்த ரிஷி மண்டலத்தின் கால் பகுதியில் இடம் பெற்றவர்

    இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இருந்து சமரச வேதம் வெளியரங்கமாகவும் அடித்தளம் அமைக்கவும் ; சைவ மரபில் வளர்ந்த அடியவர்கள் பலர் அதிதேவர் சிவனை மட்டும் வழிபடுகிறவர்கள் என்ற நிலையிலிருந்து அருவ ஏக இறைவனை அருட்பெருஞ்சோதி என்ற அடைமொழியால் வழிபடுகிறவர்களாக தரம் உயர்த்தவும் இறைவனால் பூமிக்கு அனுப்பபட்டார் .

    கந்தர் கோட்டத்தில் ஒன்பது வயது சிறுவனாக அவர் பாடிய முதல் பாடலிலேயே அவர் சமுதாய சிந்தனையை வெளிப்படுத்துகிறார்

    அன்பர்கள் நிறைவான இன்பம் அடையவேண்டுமானால் என்னென்ன வேண்டுமாம் ? ஆன்மீக செறிவும் அறிவும் ஞானமும் தரம் உயர்ந்தால் மட்டுமே இறைவனால் போஷிக்கப்படும் செல்வம் ஆசிர்வாதமாக நிறையும் திரு ஓங்கும் செல்வம் என்பது இறைவனை சரணடைய சரணடைய புன்னியங்களாக பூமியில் நிறையும் அது இறைவனின் பேரருளால் வரப்போகும் சத்திய யுகத்தில் சாத்தியமாகும்

    மனிதர்களுக்கு மட்டுமல்ல இயற்கைக்கும் பூமிக்கும் இந்த ஆசிர்வாதம் அருளப்படும்
    ஏசாயா 43 :
    19. இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்.

    20. நான் தெரிந்துகொண்ட என் ஜனத்தின் தாகத்துக்கு வனாந்தரத்திலே தண்ணீர்களையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவதினால், காட்டுமிருகங்களும், வலுசர்ப்பங்களும், கோட்டான் குஞ்சுகளும் என்னைக் கனம்பண்ணும்.

    21. இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன்; இவர்கள் என் துதியை சொல்லிவருவார்கள்.

    23. வானங்களே, களித்துப் பாடுங்கள்; கர்த்தர் இதைச் செய்தார்; பூதலத்தின் தாழ்விடங்களே, ஆர்ப்பரியுங்கள்; பர்வதங்களே, காடுகளே, காட்டிலுள்ள சகல மரங்களே, கெம்பீரமாய் முழங்குங்கள்

    வள்ளல்பிரானும் செங்கமல மலர் ஓங்கும் வனம் ஒங்க அருள்கிடைக்கும் என்கிறார் , தாமரை தடாகம் என்பது குளிர்ந்த நீரோடும் தாமரையின் தண்டுகளும் வேர்களும் பின்னிப்பிணைத்து அமைதியாக தண்ணென்று இருக்கும் . அதில் அவ்வளவு எளிதாக யாரும் இறங்கி விடமுடியாது கால்கள் பின்னி மலரை பறிக்க விடாமல் தடுத்து கொன்று விடும் ஆகவேதான் மரு ஓங்கும் செங்கமலம் என்கிறார் பகையை வெல்லும் அருள் பாதுகாப்பு அது . வளர்கருணை மற்றும் அமுதம் ஆனந்தம் ஞானம் உள்விளைந்த ஒளி வடிவமானவன் முருகன் அவனே வரப்போகிற கல்கி ; சத்திய யுகத்தை நிறுவப்போகிறவன் அவனால் பறவுகிற மகிழ்ச்சியால் எல்லா உயிரினங்களும் நல்லிணக்கமாக மாறிவிடுமாம் .



    சத்திய யுகத்தை பற்றிய பல முன்னறிவிப்புகள் எல்லா மதங்களிலும் வந்துள்ளன .

    ஏசாயா 11 :

    1. ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும்.

    2. ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார்.

    3. கர்த்தருக்குப் பயப்படுதல் அவருக்கு உகந்த வாசனையாயிருக்கும்; அவர் தமது கண் கண்டபடி நியாயந்தீர்க்காமலும், தமது காது கேட்டபடி தீர்ப்புச்செய்யாமலும்,

    4. நீதியின்படி ஏழைகளை நியாயம் விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்செய்து, பூமியைத் தமது வாக்கின் கோலால் அடித்து, தமது வாயின் சுவாசத்தால் துன்மார்க்கரைச் சங்கரிப்பார்.

    5. நீதி அவருக்கு அரைக்கட்டும், சத்தியம் அவருக்கு இடைக்கச்சையுமாயிருக்கும்.

    6. அப்பொழுது ஓநாய் ஆட்டுக்குட்டியோடே தங்கும், புலி வெள்ளாட்டுக்குட்டியோடே படுத்துக்கொள்ளும்; கன்றுக்குட்டியும், பாலசிங்கமும், காளையும், ஒருமித்திருக்கும்; ஒரு சிறு பையன் அவைகளை நடத்துவான்.

    7. பசுவும் கரடியும் கூடிமேயும், அவைகளின் குட்டிகள் ஒருமித்துப்படுத்துக்கொள்ளும்; சிங்கம் மாட்டைப்போல் வைக்கோல் தின்னும்.

    8. பால் குடிக்குங்குழந்தை விரியன்பாம்பு வளையின்மேல் விளையாடும், பால் மறந்த பிள்ளை கட்டுவிரியன் புற்றிலே தன் கையை வைக்கும்,

    9. என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்குசெய்வாருமில்லை; கேடுசெய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரைஅறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.


    வரப்போகிற ஆண்டவரான முருகனின் பாதம் என் உள்ளம் ஓங்குகிற நாள் எந்த நாள் ?

    ஆனால் அஞ்ஞானிகள் நாத்தீகர்கள் கடவுள் இல்லை பாவபுண்ணியங்கள் இல்லை பகுத்தறிவால் பூமியில் சம்பாதித்து அதன் இன்பங்களை விஞ்ஞான முறைப்படி பழுதில்லாமல் அனுபவிப்பதே புத்திசாலித்தனம் என்கிறார்கள் அத்தகைய கயவர்களை நான் கூடி அவர்களைப்போல மாறாத படி அருள்செய்வாயாக

    பெண்கள் உடலின் இயல்பு வனப்புள்ளது . ஆனால் ஆதியில் படைக்கப்படும் போது பெண்மை அன்பிற்கும் ஆதரவிற்கும் மதிப்பிற்கும் உரித்தானதாகவே இருந்தது காமம் என்பது அப்போது இல்லை . மதிப்பிற்குரிய நேயத்தை கீழான காமம் கொச்சைப்படுத்தி விட்டது

    அந்த மயக்கத்தை கொடுக்கும் மனம் என்னும் பாவி மாளட்டும் நான் நித்திய ஜீவனோடு வாழ உன் உபதேசம் என்னை ஆட்கொள்ளட்டும்

    உலகில் வழங்கும் ஆறு மார்க்கங்களான வேதங்களை ஆறு முகம் ஒரு முகமாக்கும் ஞான சற்குருநாதா ; சலத்தையும் சமரசப்படுத்தும் சாந்த சொருபியே ; கந்தர்கோட்டத்தில் வளரும் ஞான மணியே

    ஞான சற்குருநாதா உன்னையன்றி எனக்கு வேறு போக்கிடம் இல்லை . வேறு சாதாரண தேவர்கள் என் முன் தோன்றி சில சித்துக்களை கொடுப்பதாக இருந்தாலும் நான் அவற்றை  நாடேன் . மேமையான சமரச சுத்த சன்மார்க்கத்தை எனக்கு அருள்வாயாக 

    நாராயணனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
    ஓம் நமோ நாராயணனாய

    ஆதிசேஷனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
    ஓம் நமோ ஆதிசேஷாய

    நாராயணியாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
    ஓம் நமோ நாராயணியாய

    சிவனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
    ஓம் நமோ சிவாய

    அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
    தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி








    Sunday, May 15, 2016

    வள்ளலாரின் பேருபதேசம்




    இந்தப்பிளேயரிலும் கேட்கலாம்
    https://ia801507.us.archive.org/18/items/Amala_201606VALLALAARLASTSERMON/02.பேருபதேசம்%20-%20easymp3.xyz.ogg


    (ஸ்ரீ முக வருஷம்,ஐப்பசி மாதம்,7ஆம் நாள்,புதவாரம், பகல் 8 மணிக்கு,மேட்டுக்குப்பம்
    என்னும் சித்திவளாகத் திருமாளிகையில் முதன் முதலில் கொடி கட்டினவுடனே
    நடந்த நிகழ்ச்சியின் குறிப்பு.)


    இங்குள்ள நீங்கள் எல்லாரும் இதுவரைக்கும் இருந்தது
    போல் இனியும் வீண்காலம் கழித்துக் கொண்டிராதீர்கள்,இது முதல் சாலைக்கு
    ஆண்டவர் போகின்ற பத்துத் தினமாகிய கொஞ்சக் காலம் வரையில் நீங்கள்
    எல்லாரும் நல்ல விசாரணையில் இருந்து கொண்டிருங்கள் அந்த விசாரணை
    எது வென்றால், நம்முடைய நிலை எப்படிப்பட்டது ? நமக்கு மேல் நம்மை அதிஷ்டிகின்ற
    தெய்வத்தினுடைய நிலை எப்படிப்பட்டது ? என்று விசாரிக்கவேண்டியது. அதற்குத்தக்கபடி,
    நீங்கள் ஒருமித்தாவது, அல்லது தனித்தனியாகவாவது, உங்களறிவிற்கும் ஒழுக்கத்துக்கும்
    ஒத்தவர்களுடன் கூடியாவது, அல்லது வேலாயுத முதலியாரைக் கேட்டால் மனுஷ்யதரத்தில்
    போதுமான வரையில் சொல்லுவார்-அவரிடம் அப்படிக் கேட்டாவது நல்ல விசாரணையிலிருங்கள்.


    அல்லது, தனியாகவும் விசாரிக்கலாம். இவ்விசாரைணை முகத்திலிருந்தால்,
    நமது ஆன்மஅறிவை விளக்கமின்றி மூடிக் கொண்டிருக்கின்ற அனந்தத் திரைகளில்
    அழுத்தமாயிருக்கின்ற முதல் திரையாகிய பச்சைத்திரை முதலில் நீங்கி விடும்.
    அது நீங்கினால், மற்றத் திரைகள் அதிகவிரைவில் நீங்கிப்போய்விடும்.


    அந்தப் பசுமை வர்ணம் எப்படிப்பட்டதென்றால், கருமைக்கு முதல் வர்ணமான
    பசுமை இருக்கின்றது. இப்படிப்பட்ட அழுத்தமான திரை நீங்கவேண்டுமென
    ஸ்தோத்திரித்தும், தெய்வத்தை நினைத்தும், நமது குறையை ஊன்றியும்
    இவ்வண்ணமாக, இருக்கின்றபோதும் படுக்கின்றபோதும் இடைவிடாது
    இவ்விசாரத்தோடு ஆண்டவர் நமக்குண்மை தெரிவிக்க வேண்டு மென்கின்ற
    முயற்சியுடனிருந்தால் தெரிய வேண்டியதைத் தெரிந்து கொள்ளலாம்.


    அவ்விசாரம் பரம், அபரம் என்ற இரண்டு வகையாயிருக்கின்றது. இவற்றில்
    பரம் பரலோக விசாரம், அபரம் இகலோக விசாரம். இவ்விரண்டில் இகலோக
    விசாரம் விசார மல்ல. சாதாரணமாக ஒருவன் வி-சாரம் செய்து
    கொண்டிருக்கின்றானே யென்றால்,அவ்விசாரம் விசாரமாகாது, உண்மை
    விசாரமுமல்ல. ஏனெனில், விசார மென்கின்றதுற்குப் பொருள், வி-சாரம் என்பதில்
    வி-சாதாரண உலக _விசாரத்தை மறுக்க வந்தது, அது மேலும் பரலோக
    விசாரத்தையே குறிக்கும் பொருட்டு வந்தது. 

    ஜலத்திலிருக்கின்ற பாசியை நீக்குவது
    போல், நமது ஆன்மாவைத் தெரியவொட்டாமல் மூடியிருக்கின்ற பச்சைத் திரையாகிய
    ராகாதிகளை விசார அதியுஷ்ணத்தாலல்லது, மற்ற உஷ்ணங்களால் நீக்கமுடியாது.


    அந்த உஷ்ணம் யோகியினுடைய அனுபவதில் தெரியும். அதை மனுஷ்ய தரத்தில்
    உண்டு பண்ணுவதற்குத் தெரியாது. அந்த விசாரத்தைவிட ஆண்டவரை ஸ்தோத்திரம்
    செய்கின்றதிலும் தெய்வத்தை நினைகின்றதிலும் அதிக உஷ்ணம் உண்டாகும்.


    யோகிகள் வனம், மலை, முழை முதலியவற்றிற்குப் போய்,நூறு, ஆயிரம் முதலிய
    வருஷகாலம் தவஞ் செய்து, இவ்உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்ளுகிறார்கள்.


    இப்படித் தவம் செய்து உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்ளுகிறதைப் பார்க்கிலும்,
    தெய்வத்தை ஸ்தோத்திரம் செய்கின்றதிலும் நினைக்கின்றதிலும், இதை விடக் கோடிப்
    பங்கு, பத்துகோடிப் பங்கு அதிகமாக உஷ்ணம் உண்டு பண்ணிக் கொள்ளலாம்.


    எவ்வாறெனில், ஒரு ஜாம நேரம், மனத்தில் இக விசார மின்றிப் பர விசாரிப்புடன்
    ஆன்ம நெகிழ்ச்சியோடு தெய்வத்தைச் சிந்தித்துக் கொண்டாவது அல்லது ஸ்தோத்திரம்
    செய்து கொண்டாவதிருந்தால், நாம் பெற வேண்டியதைப் பெற்றுக் கொள்ளலாம்.


    ஆதலால், இவ்வுலகத்தில் வி-சார மென்கின்ற உண்மை தெரியாது, விசாரமென்று
    வழங்கி, அதைத் துக்கமென்றே சொல்லுவார்கள். நாம் அப்படி அர்த்தம் பண்ணக்கூடாது.
    அவர்கள் பண்ணுகின்றது-துக்கமே விசார மென்கின்றது. அது தப்பு,


    அவ்வர்த்தமுமன்று. சார மென்கின்றது துக்கம்.வி-சார மென்கின்றது துக்க
    நிவர்த்தி. வி-உபசர்க்கம். சாரமென்கின்ற துக்கத்தை நிவர்த்தித்து ஆதலால்,
    விசார மென்கின்றது முன் சொன்னபடி பரலோக விசாரத்தையே குறிக்கின்றது.


    ஆதலால் இடைவிடாது நாம் விசார வசத்தராயிருக்க வேண்டியது. மேலும் வி-சார
    மென்பது:- வி-விபத்து; சாரம் நீக்குதல், நடத்தல். ஆதலால்
    இடைவிடாது நன்முயற்சியின்கண் பயிலுதல் வேண்டும்.


    மேலும், சிலர் ‘இது ஆண்டவர் வருகின்ற தருணமாக இருக்கின்றதே!
    இத்தருணத்தில் முயற்சி செய்வானேன் ? ஆண்டவர் வந்தவுடனே பெற வேண்டியதை
    நாம் பெற்றுக்கொள்ளப்படாதோ ? ‘ என்று வினவலாம். ஆம், இஃது தாம் வினவியது
    நலந்தான். ஆண்டவர் வரப்போகின்றதும் சத்தியந்தான். நம்மவர்களின் திரை
    நீங்கப் போகின்றதும் சத்தியந்தான். நீங்களெல்லவரும் பெற வேண்டியதைப்
    பெற்றக்கொள்ளுகின்றதும் சத்தியந்தான். 


    ஆனால், முன் சொன்ன ரகசம்பந்தமான
    பச்சைத்திரை இரண்டு கூறாக இருக்கின்றது. யாவெனில்:- அசுத்தமாயாதிரை,
    சுத்தமாயாதிரை யென்னும் இரண்டுமாம். இவை கீழ்பாகத்திலொரு கூறும்
    மேற்பாகத்திலொரு கூறுமாக இருக்கும். இவை கீழ்ப்பாகத்திலுள்ளது
    அசுத்தமாயதிரை. மேற்பாகத்தில் சுத்தமாயாதிரை இருக்கும். இவற்றில்
    அசுத்தமாயாதிரை இகலோக போக லட்சிய முடையது. சுத்தமாயாதிரை பரலோக
    சாத்தியத்தையுடையது. இவற்றில் ஆண்டவர் வந்து அனுக்கிரகஞ் செய்கின்ற போது,
    முயற்சியில்லாத சாதாரண மனுஷ்யர்களுடைய கீழ்ப்பாகத்திலிருக்கின்ற அசுத்தமாயை
    யென்னும் பச்சைத்திரையை மாத்திரம் நீக்குவார். ஆதலால், அக்காலத்தில்
    நாம் அத்திரை நீங்கியவுடன் கூடிய வரையில் சுத்தமாய்ப் புனிதர்களாக
    இருக்கலாமேயல்லது, பெற வேண்டியதைப் பெற்றுகொள்ளுகிறதற்குக் கூடாது.
    மேலும், பஞ்சகிருத்திய விபவங்களும் இதர சித்தி முதலியவயவையும்
    ஆன்மானுபவத்தையும் செய்யவும் பெறவும் கூடாது. பின்னும் நன்முயற்சி செய்தே
    மேலேற வேண்டும்.


    மேலும், இத்தருணம் இங்கு உண்டாகும் கூச்சல் முதலியவையும்
    அடுத்தவர்களுக்குப் பக்குவம் வருவிக்கவும் பாவிகளை விலக்கவும் உண்டாயின.
    ஆதலால் நாம் எல்லாரும் இத்தருணம் இப்போதே விசேஷ நன்முயற்சியுடனே
    இருந்தால், ஆண்டவர் வருகின்றபோது, நம் கீழ்ப் பாகத்திலுள்ள
    அசுத்தமாயாதிரையோடு கூடி மேற்பாகத்திலிருக்கின்ற சுத்தமாயையினுடைய பச்சைத்
    திரையும் நீங்கிப்போய்விடும். கருமையிற் பச்சை வண்ண முடையது அசுத்தமாயாதிரை.
    பொன்மையிற் பச்சை வண்ண முடைய சுத்தமாயாதிரை. நீங்கினபிறகு, மற்ற எட்டுத்
    திரைகளும் அதிக விரைவில் நீங்கிப் போய்விடும். (இத்திரைகளின் விவரத்தைத்
    திருவருட்பெருஞ்ஜோதி அகவலில் கண்டுணர்க. )


    மேலும்,இது நீங்கினவுடனே ஒருவன்
    பஞ்சகிருத்திய முதலானவையுஞ் செய்வான். ஆதலால், ஒவ்வொருவரும் முயற்சியுடனே இருந்தால், அதற்குத் தக்க லாபத்தைப்
    பெற்றுக்கொள்ளலாம்.
    இதற்கு மேற்பட, நாம் நாமும் முன் பார்த்தும் கேட்டும் லட்சியம்
    வைத்துக்கொண்டிருந்த வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள்
    எதனிலும் லட்சியம் வைக்கவேண்டாம். ஏனென்றால், அவைகளில் ஒன்றிலாவது
    குழுஉக்குறி யன்றித் தெய்வத்தை இன்னபடி என்றும், தெய்வத்தினுடைய உண்மை
    இன்னதென்றும், கொஞ்சமேனும் புறங்கவியச் சொல்லாமல், மண்ணைப் போட்டு
    மறைத்து விட்டார்கள். அணுமாத்திரமேனுந் தெரிவிக்காமல், பிண்ட லட்சணத்தை
    அண்டத்தில் காட்டினார்கள். யாதெனில், கைலாசபதி என்றும் வைகுண்டபதி
    என்றும் சத்தியலோகாதிபதி யென்றும் பெயரிட்டு, இடம், வாகனம், ஆயுதம், வடிவம்,
    ரூபம் முதலியவையும் ஒரு மனுஷ்யனுக்கு அமைப்பதுபோல் அமைத்து, உண்மையாக
    இருப்பதாகச் சொல்லியிருக்கின்றார்கள். 


    ‘தெய்வத்தக்குக் கை, கால் முதலியன
    இருக்குமா ? ‘ என்று கேட்பவர்க்குப் பதில் சொல்லத் தெரியாது விழிக்கின்றார்கள்.
    இஃது உண்மையாக இருப்பதாகவே முன்னும் பின்னும் உள்ள பெரியவர்களென்று
    பெயரிட்டுக் கொண்டிருந்தவர்களும் உண்மையை அறியாது, அப்படியே கண்ணை
    மூடிக்கொண்டு உளறியிருக்கிறார்கள்.

    ஆனால், ஆதியிலே இதை மறைத்தவன் ஒர்
    வல்லவன். அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை.
    அவன் பூட்டிய அந்தப் பூட்டை ஒருவரும் திறக்க வில்லை. 
    இதுவரைக்கும்
    அப்படிப்பட்டவன் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை.
    அவைகளில்
    ஏகதேச கர்மசித்திகளைக் கற்பனைகளாகச் சொல்லியிருக்கின்றார்கள்.அதற்காக
    ஒவ்வொரு சித்திக்கும் பத்து வருஷம் எட்டு வருஷம் பிரயாசை எடுத்துக்கொண்டால்,
    அற்ப சித்திகளை அடையலாம். அதற்காக அவற்றில் லட்சியம் வைத்தால்,
    ஆண்டவரிடத்தில் வைத்துக் கொண்டிருக்கின்ற லட்சியம் போய்விடும்.


    ஆண்டவரிடத்தில் வைத்த லட்சியம் போய் விட்டால் நீங்கள் அடையப்போகின்ற பெரிய
    பிரயோஜனம் போய்விடும். அல்லது, அதில் முயற்சிசெய்து, அவ்வளவு காலம் உழைத்து,
    அந்த அற்பப்பிரயோஜனத்தைத் தெரிந்து கொண்டு, அதனால் ஒரு லாபத்தை ஏகதேசம்
    அடைந்தால், முக்கிய லாபம் போய்விடும். 


    ஆகையால், அவைகளில் லட்சியம்
    வைக்காமல், ஆண்டவரிடத்திலேயே லட்சியம் வைக்க வேண்டியது. முன் சொன்ன
    ஏகதேச சித்தி கற்பனையென்கின்றது வாசகப் பெருவிண்ணப்பத்தாலும்
    இயல் வேதாகமங்கள் புராணங்கள் என்ற அருள் விளக்கமாலைப்
    பாசுரத்தாலுமுணர்க. *


    *இயல்வே தாகமங்கள் புராணங்கள் இதி காசம்
    இவைமுதலா இந்திரசா லங்கடையா உரைப்பார்
    மயல்ஒருநூல் மாத்திரந்தான் சாலம் என அறிந்தார்
    மகனே நீ நூலனைத்தும் சாலம் என அறிக
    செயல் அனைத்தும் அருளொளியால் காண்கஎன எனக்கே
    திருவுளம்பற்றிய ஞான தேசிகமா மணியே திரு அருட்பா 4176


    மேலும் அதிற்கண்ட குறிப்பையுந் தெரிந்து கொள்ளுங்கள்.


    இது போல் வியாகரணம், தொல்காப்பியம், பாணிநீயம் முதலியவைகளில்
    சொல்லிருக்கின்ற இலக்கணங்கள் குற்றமே. எவ்வாறெனில் தொண்ணூறு
    தொள்ளாயிரம் என்கின்ற கணிதத்தின் உண்மையை நான் சொன்ன பிறகு தெரிந்து
    கொண்டிர்களல்லவா ? இப்படியே ஒன்று, இரண்டு முதல் நூறு முதலான
    இலக்கங்களுக்கும் உகர இறுதி வருவானேன் ? ஒருவாறு சித்தர்கள் காரணப் பெயராக
    இட்டிருக்கிறார்கள். தொல்:- நூறு தொண்ணூறென்றும்,தொல்:- ஆயிரம்
    தொள்ளாயிரமென்றும் வழங்குகின்றன. தொல் என்பது ஒன்று குறையத் தொக்கது.
    தொன்மை தொல்லெனப் பிரிந்தது. வழக்கத்தில் தொள்ளாயிரம் தொண்ணூறு
    என மருவியது. இதற்குப் பத்திடத்திற்கு ஒரிடம் குறைந்த முன் ஆயிரமென்றும்,
    ஒன்று குறைந்த பத்தென்றும் ஒருவாறு கொள்க. இப்படி நான் சொன்னது போல்
    சொன்னால் சிறு குழந்தைகள் கூட அறிந்து கொள்ளும்.


    இதுபோல், சைவம், வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம்,
    சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லட்சியம் வைக்க வேண்டாம். அவற்றில்
    தெய்வத்தைப் பற்றிக் குழூஉக் குறியாகக் குறித்திருக்கின்றதே அன்றிப் புறங்கவியச்
    சொல்லவில்லை. அவ்வாறு பயிலுவோமேயானால் நமக்கு காலமில்லை. ஆதலால்
    அவற்றில் லட்சியம் வைக்கவேண்டாம். ஏனெனில், அவைகளிலும்- அவ்வச்சமய
    மதங்களிலும் அற்பப் பிரயோஜனம் பெற்றுக் கொள்ளக்கூடுமே யல்லாது, ஒப்பற்ற
    பெரிய வாழ்வாகிய இயற்கையுண்மை என்னும் ஆன்மானுபவத்தைப் பெற்றுக்
    கொள்கின்றதற்கு முடியாது. ஏனெனில் நமக்குக் காலமில்லை. மேலும்,
    இவைகளுக்கெல்லாம் சாட்சி நானேயிருக்கின்ளறேன். நான் முதலில் சைவ
    சமயத்தில் லட்சியம் வைத்துக் கொண்டிருந்தது இவ்வளவுவென்று அளவு
    சொல்லமுடியாது. அது பட்டணத்துச் சவாமிகளுக்கும் வேலாயுத முதலியாருக்கும்
    இன்னும் சிலருக்கும் தெரியும்.
    அந்த லட்சியம் இப்போது எப்படிப் போய்விட்டது.
    பார்த்தீர்களா! அப்படி லட்சியம் வைத்தற்குச் சாட்சிவேறே வேண்டியதில்லை.


    நான் சொல்லி யிருக்கிற-திருவருட்பாவில் அடங்கியிருக்கிற ஸ்தோத்திரங்களே
    போதும். அந்த ஸ்தோத்திரங்களையும் மற்றவர்களுடைய ஸ்தோத்திரங்களையும்
    சபைக்குக் கொண்டு வந்தால், அவைகளே சாட்சி சொல்லிவிடும்.


    ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போதுதிருந்த தென்றால்,
    அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது.


    இப்போது ஆண்டவர் என்னை ஏறாதநிலைமேல் ஏற்றியிருக்கின்றார்.
    எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது.
    ஆதலால் நீங்களும் விட்டு விட்டிர்களானால், என்னைப் போல்
    பெரிய லாபத்தைப் பெறுவீர்கள். இதுவரைக்கும் விடாமல் வைத்துக்
    கொண்டிருந்தவர்கள் ஏதாவது லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களா ?
    பெற்றுக் கொள்ளவில்லை. நான் அப்படி அந்தச் சமயத்தில் வைத்திருந்த
    லட்சியமே என்னை இந்த நிலையில் தூக்கி விட்டதென்றாலோ, அந்த லட்சியம்
    தூக்கி விடவில்லை. என்னை இந்த இடத்தக்குத் து‘க்கிவிட்டது யாதெனில்;
    அக்காலத்திலேயே எனக்குத் தெரிவிக்க வேண்டியதைத் தெரிவித்தாரென்று
    வாசகப் பெரு விண்ணப்பத்தினும், ‘எத்தேவரையும் நின் சாயையாய்ப்
    பார்த்ததேயன்றித் தலைவவே றெண்ணியதுண்டோ* ‘


    *மாயையாற் கலங்கி வருந்திய போதும்
    வள்ளல் உன் தன்னையே மதித்துன்
    சாயையாப் பிறரைப் பார்த்ததே அல்லால்
    தலைவ வேறெண்ணிய துண்டோ
    தூயபொற் பாதம் அறியநான் அறியேன்
    துயர் இனிச் சிறிதும்இங் காற்றேன்
    நாயகா எனது மயக்கெலாம்தவிர்த்தே
    நன்றருள் புரிவதுன் கடனே, -திருவருட்பா 3635.


    என, ‘தேடியதுண்டு நினதுருவுண்மை ‘ என்னும் தொடக்கமுடைய
    பதிகத்திலும் விண்ணப்பித்திருக்கின்றேன். மேலும் அவர் தெரிவித்த உண்மைப்
    பெருநெறி ஒழுக்கம் யாதெனில். ‘கருணையும்
    சிவமே பொருளெனக் கானும் காட்சியும் பெறுக ‘ **


    ** கருணையும் சிவமே பொருள்எனக் காணும்
    காட்சியும் பெறுகமற் றெல்லாம்
    மருள் நெறி எனநீ எனக்கறி வித்த
    வண்ணமே பெற்றிருக் கின்றேன்
    இருள்நெறி மாயை வினைகளால் கலக்கம்
    எய்திய தென்செய்வேன் எந்தாய்
    தெருள்நிலை இன்றிக் கலங்கினேன் எனினும்
    சிறுநெறி பிடித்த தொன்றிலையே. –திருவருட்பா 3503
    என்றது தான்.


    என்னை யேறாநிலைமிசை யேற்றி விட்டது யாதெனில் தயவு.
    தயவு என்னுங் கருணைதான் என்னைத் தூக்கி விட்டது.


    அந்தத் தயவுக்கு ஒருமை வரவேண்டும். அந்த ஒருமை இருந்தால் தான் தயவு வரும்.
    தயவு வந்தால்தான் பெரிய நிலைமேல் ஏறலாம். இப்போது என்னுடைய அறிவு
    அண்டாண்டங்களுக்கு அப்பாலும் கடந்திருக்கிறது.அது அந்த ஒருமையினாலேதான்
    வந்தது. நீங்களும் என்னைப்போல் ஒருமையுட னிருங்கள். என்னிடத்தில் ஒருவன்
    வசப்படாத முரட்டுத்தனமாய் எப்படி யிருந்தாலும், அவனுக்கு நல்ல வார்த்தை
    சொல்லுவேன்; மிரட்டிச் சொல்லுவேன்;தெண்டன் விழுந்து சொல்லுவேன்;
    பொருளைக் கொடுத்து வசப்படுத்துவேன்; அல்லது ஆண்டவரை நினைத்துப்
    பிரார்த்தனை செய்வேன்.இப்படி எந்த விதத்திலேயாவது நல்வழிக்கு வரச் செய்து
    விடுவேன்.


    நீங்கள் எல்லவரும் இப்படியே செய்தல் வேண்டும் இராத்திரிகூட ‘நான் இல்லாமல்
    இந்த ஜனங்கள் க்ஷணநேரம் இருக்க மாட்டர்களே என்று,என்று… ‘ ஆண்டவரிடத்தில்
    விண்ணப்பித்துக் கொண்டேன். அது இங்கே இருக்கிற ஜனங்கள் மட்டில் மாத்திரம்
    மல்ல. உலகத்திலிருக்கின்ற எல்லா ஜனங்களையும் குறித்தே விண்ணப்பித்துக்
    கொண்டேன். ஏன் அப்படி ஆண்டவரிடத்தில் விண்ணப்பித்துக் கொண்டேன் என்றால்
    எல்லவரும் சகோதரர்களாதலாலும், இயற்கை யுண்மை யேகதேசங்களாதலாலும்
    நான் அங்ஙனம் ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமை வைத்துக் கொண்டிருக்கிறேன்,


    இப்போது நீங்கள் இதுவரைக்கும் ஒழுக்கத்துக்கு வராமல் எவ்வளவு
    தாழ்ந்த மனுஷ்யர்களா யிருந்தாலும்-சாலைக்குப் போகக் கொஞ்ச தின
    மிருக்கின்றது-அதற்குள்ளாக நீங்கள் நீங்களும் நல்லொழுக்கத்திற்கு
    வருவதோடுகூட,மற்றவர்களையும் நமது ஒழுக்கத்திற்கு வரும்படி எவ்வித தந்திரமாவது
    செய்து நம்மவர்களாக்கிக் கொள்ள வேண்டியது. நீங்கள் கொஞ்ச தினத்திற்கு
    அப்படி செய்து கோண்டிருங்கள். நானும் ஆண்டவரிடத்தில் இவ்வுலகத்தில் உள்ள
    எல்லா ஜ“வர்களும் நன்மையடையப் பிரார்தித்தும், ஆண்டவரிடத்தில் கேட்டுக்
    கொண்டும் வருகின்றேன். ஆதலால் நீங்கள் அப்படிச் செய்துகொண்டிருங்கள்.


    சமயந் தவிர மதங்களில் உள்ள வேதாந்தி, சித்தாந்தி, யென்று
    பெயரிட்டுக் கொண்ட பெரியவர்களும் உண்மை அறியாது, சமயவாதிகளைப் போலவே
    ஒன்று கிடக்க ஒன்றை உளறுகிறாரக்ள். ஆதலால் நீங்கள் அஃது ஒன்றையும்
    நம்பவேண்டாம் எவைகளிலும் தெய்வத்தைப் புறமுகமாகப் புலப்படச் சொல்லவில்லை
    ‘தெய்வத்தை தெரிந்து கொள்ளாது இவ்வுலகத்தார் என்னைத் தெய்மெனச்
    சுற்றுகின்றார்கள், ஐயோ! நம் சகோதரர்கள் தெய்வத்தைத் தெரிந்து
    கொள்ளாததினாலேயல்லவா நம்மைச் சுற்றுகிறார்கள்! ‘என்று நான் உள்ளும் புறமும்
    பரிதாபப்பட்டுக் கொண்டே இருந்தேன், ‘ இருக்கின்றேன், இருப்பேன். தெய்வத்தை
    ஏன் தெரிந்துகொள்ள வில்லை யென்றால்: ஒரு பதார்த்தத்தை அனுபவித்தாலல்லது
    அந்தப் பதார்த்ததினுடைய ருசி தெரியாது. ருசி தெரியாத பதார்த்தத்தின் மேல் இச்சை
    போகாது. அதுபோல்,தெய்வத்தை உள்ளபடி அனுபவித்தாலல்லது, தெய்வத்தினிடத்தில்
    பிரியம் வராது. ஆதலால், தெய்வத்தைத் தெரிந்து கொள்ளவேண்டு மென்கிற முக்கிய
    லட்சியத்திலிருந்து கொண்டு விசாரஞ் செய்துகொண்டிருங்கள்.


    அந்த விசாரம் செய்வது எப்படியென்றால் அண்டத்தில் சூரியன் சந்திரன் நட்சித்திரங்கள்-
    இவைகள் எப்படிப்பட்டன ? இவைகளினுடைய சொரூபசுபாவம் என்ன ?
    இவை முதலான அண்ட விசாரமும், பிண்டத்தில் நாம் யார் ? இத்தேகத்தின்கண்
    புருவம் கைம்மூலம் இவைகளிலும் இவை போன்ற மற்ற இடங்களிலும் உரோமம் உண்டாவானேன் ?
    நெற்றி முதலான இடங்களில் அது தோன்றாதிருப்ப தென்ன ?
    கால் கைகளிலுள்ள விரல்களில் நகம் முளைத்தலும் அந்நகம் வளர்தலும்-இவை போன்ற மற்றத்
    தத்துபங்களினது சொரூப, ரூபசுபாவங்களும் என்ன வென்றும் பிண்ட விசாரமுஞ் செய்துகொண்டிருங்கள்.


    இப்படி இடைவிடாது விசாரஞ் செய்துகொண்டிருந்தால், இவ்வுலகத்தின்கணுள்ள ஜனங்கள் அதைக்
    குறித்துக் ஏளனமாகச்சொல்லுவார்கள். அப்படிச் சொல்வது அவர்களுக்குச் சுபாவம். ஏனெனில்,
    அவர்களுக்கு உண்மைதெரியாது. ஆதலால் நீங்கள் அதை லட்சியம் செய்யக்கூடாது.


    இப்படியே ‘காதில் இரண்டு பெரிய பொத்தல் செய்து வர விடுத்தவர் ஆணுக்குக் கடுக்கனிடுதலும்
    பெண்ணுக்கு மூக்குத்தி முதலியவை போடுதலும் தமக்கு சம்மதமானால் காதிலும் மூக்கிலும்
    அதற்கு வேண்டிய பொத்தல்களிட்டு வரவிட்டிருக்க மாட்டாரா ‘ என்று விசாரித்துத் தெரிந்து கொள்ளுகின்ற
    பட்சத்தில், காதில் கடுக்கனிடவும் மூக்கு முதலியவற்றில் நகையிடவும் சம்மதம் வருமா ? இப்படி விசாரித்துப்
    பிரபஞ்ச போதத்தின் கண் அலட்சியம் தோன்றினால், நிராசை உண்டாம், ஆதலால், சரியை,முதலிய
    சாதகம் நான்கில், நான்காவது இனத்தில் சரியை, கிரியை யோகம்,ஞானம் என்கின்ற நான்கில்
    மூன்றாவது படியாகி ஞானத்தில் யோகம் செய்கின்ற பலனாகிய நிராசை யென்னும் படி உண்டாகின்றது.
    ஆகையினாலே, இந்த விசாரத்திலிருந்து கொண்டிருங்கள்.


    இவ்விசாரஞ் செய்துகொண்டிருந்தால், ஆண்டவர் வந்தவுடனே கண்டமாக உங்களுக்குத்
    தெரிவிக்க வேண்டியதைத் தெரிவிப்பார். மறுபடியும் உங்களுக்கு உரிமை வந்தவுடனே அகண்டமாகத் தெரிவிப்பார்.
    ஆதலால் நீங்கள் இந்த முயற்சியிலிருங்கள். இரண்டரை வருஷமாக நான் சொல்லிக்கொண்டு வந்தேன்.
    இனிச் சொல்பவர்கள் சில நாள் தடைப்பட்டிருப்பார்கள். நீங்கள் இது வரைக்கும்
    இருந்தது போல் இராதீர்கள். இது கடைசி வார்த்தை. ஜாக்கிரதையாக மேற்சொன்ன பிரகாரம்
    விசாரஞ் செய்துகொண்டிருங்கள்.
    மேலும், சமய மதங்களில் தெய்வத்தினது உண்மையைக் குழூஉக்குறியால் குறித்து,
    அக்குறிப்பையும் வெளிப்படையாகத் காட்டாது சிவாயநம என்றும், நமசிவாய என்றும், இது
    போன்ற அனந்த வர்ணங்களைச் சேர்த்து ஒன்று, இரண்டு, மூன்று, ஐந்து, ஆறு, எட்டு, பத்து,
    பதின்மூன்று, பதினைந்து, பதினாறு இருபத்து நான்கு முதலிய சங்கையில் மந்திரங்களாய்
    அமைத்து வழங்கி வருவிக்கவிட்டு நடந்து வரகின்றது. அவ்வவ்மந்திரங்களின் அர்த்தம்
    பலவாக விரியும் ஆதலால்… நாம் அடைய வேண்டுவது முடிவான ஆன்மலாபமாகிய சிவானுபவமே
    யன்றி வேறில்லை.

    இங்குள்ள எல்லவர்க்கும் சுவர்க்க நரக விசாரமில்லை. சுவர்க்க நரக
    விசாரமுள்ளவர்கள் தங்கள் கருத்தின்படி பலவகைச் சாதனங்கள் செய்து அற்ப பிரயோஜனத்தை பெற்று,
    முடிவில் தடைப்பட்டுத் திருவருட்டுணையால் கருணை நன் முயற்சி யெடுத்துக் கொண்டு, பின் முடிவான
    சித்தி இன்பத்தைப் பெறுவார்கள். அஃது அருமை.
    இத்தருணம் ஆண்டவர் எல்லாவற்றையும் நீக்கி, எல்லோரும் மேலான இன்பத்தை அடையும்
    பொருட்டு, முடிவான இன்பானுபவத்திற்குச் சாதக சகாயமான திருவருள் மகாவாக்கியத் திருமந்திரத்தை
    தமது உண்மையை வெளிப்படக் காட்டும் மகாமந்திர வாக்கியத்தை–எனக்கு வெளியிட்ட அவ்வண்ணம்,
    எனது மெய்யறிவின்கண் அனுபவித்தெழுந்த உண்மையறிவனுபவானந்த இன்பத்தை
    நீங்கள் எல்லவரும் என்போல் ஐயம், திரிபு, மயக்கம் இன்றி அடைய என்னுள்ளே எழுந்து
    பொங்கிய ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமையைப் பற்றிக் குறிப்பித்தேன் குறிப்பிக்கின்றேன்; குறிப்பிப்பேன்.


    நமது ஆண்டவர் கட்டளை யிட்டது யாதெனில் நமக்கு முன் சாதனம் கருணை யானதினாலே,
    ஆண்டவர் முற்சாதனமாக
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி


    என்னும் திருமந்திரத்தை வெளிப்படையாக எடுத்துக் கொண்டார். தயவு, கருணை, அருள் என்பவை
    ஒரு பொருளையே குறிக்கும். ஆதலால் பெரிய தயவுடைய அறிவே பூரண இன்பமாம். பேரறிவேயாம்.


    இஃது வாச்சியார்த்தம். இவ்வண்ணம் சாதனம் முதிர்ந்தால், முடிவான இன்பானுபவம் பெறுவதற்குத்
    தடையில்லை. ‘சந்தமும் வேதமொழி யாதொன்று பற்றின் அதுதான் வந்து முற்றும் ‘ என்னும் பிரமாணத்தால்
    உணர்க.


    மேலும், இதுகாறும் தெய்வத்தின் உண்மையைத் தெரியவொட்டாது, அசுத்த
    மாயாகாரிகளாகிய சித்தர்கள் மறைத்து விட்டார்கள். சுத்தமாயாகாரியாகிய தெரிந்த பெரியோரும்
    இல்லை. சன்மார்க்கமும் இல்லை. சன்மார்க்கம் இருந்தால், அனுபவித்தறியாத அனபவமும்
    கேட்டறியாத கேள்வியும் நாம்கேட்டிருப்போம். மேலும் இறந்தவர்கள் மீளவும் எழுந்து
    வந்திருப்பார்கள் ஆதலால், கேட்டறியாத கேள்விகளைக் கேட்கும்படி ஆண்டவர் செய்தது இத்
    தருணமே. ஆதலால் இத்தருணம் இக்காலமே சன்மார்க்கக் காலம்.


    இதற்குச் சாட்சியாக இப்போதுதான் சன்மார்க்கக் கொடி கட்டிக்கொண்டது.
    அக்கொடி இப்போதுதான் கட்டிக்கொண்டது.


    அக்கொடி உண்மையில் யாதெனில்; நமது நாபி
    முதல் புருவமத்தி ஈறாக ஒரு நாடியிருக்கின்றது: அந்த நாடி நுனியில் புருவமத்தியின் உட்புறத்தில்
    ஒர் சவ்வு தொங்குகின்றது; அதன் அடிப்புறம் வெள்ளை வர்ணம்; மேற்புறம் மஞ்சள் வர்ணம்;
    அச்சவ்வின் கீழ் ஒர் நரம்பு ஏறவும் இறங்கவும் இருக்கின்றது இக்கொடி நம் அனுபவத்தின்கண்
    விளங்கும். இவ்அடையாளக் குறிப்பாகவே இன்றைய தினம் வெளி முகத்தில் அடையாள வர்ணமான
    கொடி கட்டியது. இனி எல்லவர்க்கும் நல்ல அனுபவம் அறிவின்கண்தோன்றும்.
    உண்மை சொல்ல வந்தனனே என்று உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்துகொள்வாரில்லை.
    கொடி கட்டிக் கொண்டபடியால், இனி எல்லோரும் உண்மையை அறிந்துகொள்வார்கள். முன் உள்ளவர்கள்
    உண்மையைத் தெரியவொட்டாது மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள். இத்தருணம் ஆண்டவரும்
    தெரிவித்தார். தெரிவிக்கின்றார், தெரிவிப்பார். நீங்கள் எல்லவரும் உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள்


    இப்போது நான் சொல்லிவந்த பிரகாரம் ஜாக்கிரதையுடன் உண்மையறிவாய் விசாரம் செய்துகொண்டிருங்கள்.
    அவசியம் இதற்குக் காரணமான தயவிருக்க வேண்டியது. அந்தத் தயவு வருவதற்கு ஏதுவான
    உரிமையும் கூட இருக்க வேண்டும். இப்படி இருந்து கொண்டிருந்தால் பெற்றுக் கொள்வீர்கள். இது சத்தியம்,
    சத்தியம், சத்தியம். இஃது ஆண்டவர் கட்டளை.


    எல்லோர்க்கும் தாய், தந்தை, அண்ணன், தம்பி, முதலான ஆப்தர்கள் செய்யபட்ட உதவி
    எவ்வளவோ, அதற்குக் கோடி கோடிப் பங்கு அதிகமாக உதவி கொடுக்கும்படியான
    இடம் இந்த இடம். (சித்திவளாகம் என்கின்ற மேட்டுக்குப்பம்) இஃது ஆண்டவர்
    கட்டளை.


    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி


    திருச்சிற்றம்பலம்
    பேருபதேசம் முற்றிற்று







    நாராயணன் நாமத்தினாலும் ஆதிசேஷனனின் நாமத்தினாலும் நாராயணியின் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் கடவுள் தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் தமது அருளால் நிரப்ப வேண்டுகிறேன்



    அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
    தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி






    Saturday, March 19, 2016

    அசுரர்களின் பிடியிலிருந்து விடுபட




    64: வீணே பலி கவர் தெய்வங்கள்பால் சென்று, மிக்க அன்பு
    பூணேன், உனக்கு அன்பு பூண்டுகொண்டேன், நின்புகழ்ச்சி அன்றிப்
    பேணேன், ஒரு பொழுதும், திருமேனி ப்ரகாசம் அன்றிக்
    காணேன், இரு நிலமும் திசை நான்கும் ககனமுமே.

    இன்றைய அம்மன் கோவில்கள் அனைத்திலும் எப்படியோ சிவனுக்கு முக்கியத்துவம் குறைந்து நுழைவு வாயிலில் தட்சன் என்ற கருப்புசாமியின் ஆதிக்கம் கோலோச்சிக்கொண்டுள்ளது

    இதில் ஓரளவு உண்மையும் உள்ளது ஆனால் ஆதியில் ஞானிகள் உருவாக்கிய காரணம் மாறி தலைகீழாக நடைமுறையில் உள்ளது என்பதே சமரச வேதத்தின் வெளிப்பாடாகும்

    தட்சனுக்கும் ஆதிமனிதன் சிவனின் பாதியாள் பாரியாள் பார்வதிக்கும் தந்தை மகள் உறவு உண்டான பிறகு ஏற்பட்ட குழப்பத்தால் முதல் மனுஷி தீயில் விழுந்து தற்கொலை செய்துகொண்டாள்

    சிவனின் வாழ்வில் துக்கமான ஒரு காலகட்டம் . தாடியும் மீசையுமாக சடையாண்டியாக அவர் தவ வாழ்வுக்குள் சென்றுவிட்டார்

    சுடலையாண்டி என்றும் சொல்வார்கள் சுடுகாட்டில் பிரிவுத்துயர் தாழாமல் ஆண்டியாக கடும் தவத்தில் ஆழ்ந்துவிட்டார்

    அந்தந்த காலகட்ட நபராக சிவனை நாம் உபவாசித்தால்  அதே தன்மைகள் துன்பங்கள் துயரங்கள் நம் வாழ்வில் இருந்தாலும் விடுதலை உண்டாகும்

    நம் பாவங்களின் பலனாக துயரங்கள் நம்மை அடாது வாட்டினால் நான்கு அதிதேவர்கள் நாமத்தினால் கடவுளே அதிதேவர் சடையாண்டி கண்களில் தயவு உண்டாக்குவீராக என்று வேண்டிவாருங்கள் நாம் மேடேறும் வழி திறக்கும்

    ஏனென்றால் சோகத்தை அவர் ஆழ்ந்த தியானத்தால் ஆனந்தமாக மாற்றினார் . கடவுளின் தெய்வீக பேரன்பில் மூழ்கி திளைக்க கற்றோமானால் நமது பாவங்களோ உலகமோ எதையும் கடந்துவிட முடியும்

    அவரின் தவ வாழ்வு நிறைவடைந்த போது அதிதேவர் நாராயணியே பார்வதியாக தீயிலிருந்து வெளிவந்து அவரது வாழ்வில் இணைந்தார் அவர் வாழ்வை ஒளியாக்கினார்


    பிள்ளைகள் அன்னையில்லாமல் தவிப்பதை போக்கவும் சிவனை ஆறுதல் படுத்தவும் அதே தீயிலிருந்து அன்னை நாராயணி பார்வதியைப்போல வெளிப்பட்டு வந்து கிருபை செய்தாள்


    தீக்குள் போனது மனுஷி ஆனால் வந்ததோ அதிதேவர் அதனால்தான் இவளை மாரியம்மா என்றனர் மாரியம்மா மாறி வந்தவள்


    குலதெய்வங்களின் அடிப்படை கூட இந்த நிகழ்வுகளை ஒட்டியதாகவே இருக்கிறது இன்று எல்லா குலங்களிலும் குலதெய்வம் அவர்கள் வீட்டு பெண் ஒருவர் தீயில் விழுந்து மாண்டதாகவே பெரும்பாலும் இருக்கும்


    மாண்டது மனுஷியாக இருந்தாலும் அந்த பேரை சொல்லிக்கொண்டு அன்னையே தன் தரத்தை தாழ்த்திக்கொண்டு குலதெய்வமாக வந்து உலக வாழ்வுக்கும் ஆறுதல் தருகிறாள்


    மனிதர்கள் தப்பும்தவறுமாக கூட முதலில் வாழவேண்டும் வாழ்ந்தால்மட்டுமே ஞானம் அடையமுடியும்


    ஆகவே குலதெய்வம் என்ற நிலையில் ரெம்ப தரம் தாழ்ந்து அன்னையே வருகிறாள்


    இவ்வாறு உலக வாழ்வுக்கு அவள் ஊக்கம் தருவது உலக மாயைகளில் ஊறி திளைக்கட்டும் என்று அல்ல ; அதிலிருந்து மீண்டு பரத்திற்கு உய்யட்டும் என்பதற்கே


    மனிதர்கள் மட்டும் மனம் திருந்தி உய்வது அல்ல ; அசுரர்களும் திருந்துவதே அன்னையின் நோக்கம்


    ஆகவேதான் அன்னை கருப்புசாமிகள் போன்ற அசுரர்களையும் அண்ட இடம் கொடுத்துள்ளார்


    கருப்பர்கள் நல்லவர்களே அவர்கள் ஆதியில் தேவதூதர்களே


    அவர்களுக்கும் கடவுளுக்கும் ஏற்பட்ட பிரச்சினையே சிவனின் படைப்பு


    தொடர்பாகவே தங்களுக்கு பிற்பாடு படைக்கப்பட்ட சிவனை கடவுளுக்கு


    இனையாக மதிப்பளித்து வணங்கு என கடவுள் கட்டளையிட்டதை


    ஏற்றுக்கொள்ள மனம் இல்லை


    அதனால்தான் கலகம் செய்து அசுரர்களாக மாறினார்கள்


    பைபிளிலிருந்தும் குரானிலிருந்தும் புரிந்துகொள்ள வேண்டியது இதுவே


    கருப்பசாமி நாராயணனை மதிப்பார் அன்னையை மதிப்பார் சிவனை


    மட்டும் மதிக்கமாட்டார்


    அன்னையின் தனிப்பட்ட கோயிலில் கோவிலுக்கு வெளியே காவலுக்கு
    நிற்பார் ஆனால் சிவன் கோவிலில் இருக்கமாட்டார்

    தேனி மாவட்டத்தில் சங்கிலிகருப்பர் கோவில் ஒன்று கூளையனூர்
    கிராமத்தில் உள்ளது

    அதன் பரம்பரை பூசாரியை சந்தித்து விபரம் கேட்டேன்

    சங்கிலி கருப்பு கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முப்புரத்தை
    காத்தவர் அவரை சிவனும் நாராயணனும் நாராயணியும் சேர்ந்து
    அச்சானி இல்லாத தேர் ஒன்றில் சங்கிலியால் கட்டிவைத்துவிட்டனர்
    ஆனாலும் அந்த தேரையே தூக்கிகொண்டு எங்கும் பரப்பார் என்றார்


    அபிராமி அந்தாதியில் முப்புரத்தை சிவனும் அன்னையும் தீ வைத்து
    எரித்ததைப்பற்றி இரண்டு மூன்று இடங்களில் குறிப்பு வருகிறது

    முப்புரத்தை அடக்கியதால் அன்னை திரிபுரசுந்தரி ராஜராஜேஸ்வரி
    எனப்படுகிறாள்


    முப்புரம் என்பது மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை அல்லது
    ஆணவம் கன்மம் மாயை என்ற மூன்று அடிப்படை அசுர குணங்களை
    குறிக்கிறது


    இந்த மூன்று ஆசைகளை அசுரர்கள் மாயக்கோட்டையாக மனிதர்களின்
    மனசில் கட்டி பூமியில் சகல சீர்கேடுகளையும் நடத்திவருகிறார்கள்


    இதை ஆதமும் அன்னையும் ஞானத்தீயால் எரித்ததுபோல நாமும்
    ஞானத்தால் எரித்து அசுரர்களை கட்டவேண்டும்


    அவர்களுக்காக இறைவனிடம் பாவமன்னிப்பை கேட்டு பலி செலுத்தும்
    பழக்கமே ஆதியில் இருந்தது


    அதிலும் சைவபலியாக அம்மனின் திரிசூலத்தில் எலுமிச்சை கணியை
    சொருகி இறைவா அசுரர்களை மன்னித்து நல்வழிப்படுத்துவீராக என
    வேண்டுதல் செய்யவேண்டும்


    அந்தப்பழக்கத்தை கருப்புசாமிக்கே அசைவபலி செலுத்தி மதுமாமிச
    விருந்து கொண்டாடுவதாக மனிதர்கள் மாற்றிக்கொண்டார்கள்


    பரலோக ராஜ்ஜியத்திற்கு விரோதமான சாமிகள் என்பதால் கருப்புசாமி
    என பெயர்


    வைணவத்திலும்  அசுரர்களை யாராலும் அடக்கமுடியவில்லை அப்போது
    வைகுண்ட ஏகாதசி அன்று நாராயணன் மோகினியாக அவதாரமெடுத்தார்
    அதைப்பார்த்து அசுரர்கள் சிந்தை மங்கி முழித்துக்கொண்டு நின்றனர்
    அப்போது சிவன் அவர்களை அழித்துவிட்டார் என்பார்கள்


    அன்னையின் கோவிலுக்கு வெளியே கருப்பசாமி ஏன் முழித்துக்கொண்டு
    நிற்கிறார் என்பதற்கு இதுவும் ஒருகாரணம்


    ஆதிநிலை எதார்த்தத்தை சொல்கிறேன் தனிப்பட்ட முறையில்
    இறைவனுக்கும் அசுரர்களுக்கும் பிரச்சினைக்கு காரணம் கடவுளின்
    மகிமையை அவர் சிவனுக்கு கொடுத்தபோதே அசுரர்கள் முரண்பட்டார்கள்


    சிவனும் ருத்ரனாக உயர்ந்தபோது அவர்களை உண்டு இல்லை என
    கடுமையாக நடந்துகொண்டார்


    ஆனால் தாய்மையானவளோ ரெண்டும்கெட்டானைப்போல கொஞ்சம்
    அவர்களை போஸித்தே வருகிறாள்


    மாமனாருக்கம் மருமகனுக்கும் ஆகாமல் போனால் பெண்ணானவள்
    என்ன செய்வாள்


    அன்னை நாராயணி அப்படித்தானிருக்கிறாள்


    அவள் அசுரர்களுக்கு இடம் கொடுத்து காளியாக சண்டியாக சிவனை
    மிதிக்கவும் செய்வாள் துர்த்தேவதையாக இருப்பாள்


    பாவத்தில் வீழ்ந்த மனிதன் பதில் விளைவுகளை தாங்கமுடியாமல்
    இறைவனை நாடும்போது அவளே நம்மை ஆதரித்து பாவத்திலிருந்தும்
    விடுதலை ஆக்குவாள் பவதாரிணி என்பார்கள் சிவனை ஆராதிப்பவளாக
    இருப்பாள்


    மாயையை தருபவளும் இவளே நாம் வேண்டாம் இந்த துர்க்குணங்கள்
    என்று திருந்தினாலோ மாயையை போக்கி ஞானமுமளிப்பாள்


    ராமகிருஷ்ண பரமஹம்சரின் குரு பவதாரணியேயாகும்


    அந்த அன்னையின் அடியவர்கள் அசுரர்களுக்காக பாவமன்னிப்பை
    இறைவனிடம் கோரவேண்டும் என்பது அன்னையின் சித்தம்


    சிவனின் அம்சமான மனிதன் அசுரர்களுக்காக பாவநிவாரன பலியாக
    ஏலுமிச்சை கனியை அறுத்து வேண்டுதல் செய்யவேண்டும் இந்த
    பழக்கத்தை சிலநாட்களாக கடைபிடிக்கும்போது அசுரர்கள் நல்லிணக்கம்
    ஆவதை உணர்கிறேன்


    ஆனால் ஞானிகள் உருவாக்கிய நடைமுறையை நாமோ தவறாக
    கடைப்பிடித்து வருகிறோம் இன்று அம்மன் கோவில்களில் சிறப்பு
    கொடுக்கிறோம் என்பார்கள் அங்கோ கோவிலுக்கு வெளியே
    இருக்கும் கருப்புசாமிக்கு உயிர்ப்பலி செலுத்தி மதுமாமிசம்
    உண்பார்கள் பிறகு அப்படியே கோவிலுக்குள்ளும் போய்
    தீட்டுப்படுத்துவார்கள்

    அபிராமி அந்தாதியும் இதைக்கண்டிக்கிறது

    வீணே பலிகவர் தெய்வங்களுக்கு பக்தி செய்யமாட்டேன் உன்னையே அன்பு செய்வேன் என்கிறது

    இந்த பூமியும் காற்று மண்டலமும் பரலோகமும்
    அன்னையே உன் மேன்மையால் தாய்மையால் நிரம்பியிருக்கிறது

    65: ககனமும் வானும் புவனமும் காண, விற் காமன் அங்கம்
    தகனம் முன் செய்த தவம்பெருமாற்கு, தடக்கையும் செம்
    முகனும், முந்நான்கு இருமூன்று எனத் தோன்றிய மூதறிவின்
    மகனும் உண்டாயது அன்றோ?--வல்லி. நீ செய்த வல்லபமே. 



    66: வல்லபம் ஒன்று அறியேன், சிறியேன், நின் மலரடிச் செய்
    பல்லவம் அல்லது பற்று ஒன்று இலேன், பசும் பொற் பொருப்பு--
    வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய். வினையேன் தொடுத்த
    சொல் அவமாயினும், நின் திரு நாமங்கள் தோத்திரமே.

    வானமும் பூமியும் ககனமும் காணும்படியாக மன்மதனையும் அவன் வில்லையும் அம்பையும் ஞானத்தீயால் சிவன் சுட்டெரித்தார் முதல் மனுஷியான பார்வதி தற்கொலை செய்த பிறகு கடும் தவவாழ்வு மேற்கொண்ட சிவன் சகல மனிதர்களையும் ஆட்டிப்படைக்கும் காமம் என்ற அசுர குணத்தை ஞானத்தால் சுட்டெரித்து கடந்தார் அப்படி அவர் காமத்தை கடந்த பிறகே அன்னை நாராயணி என்ற அதிதேவர் அவருக்கு பார்வதியைப்போல வந்து இணையானார்

    இந்த உறவு மனுஷ ரீதியான உறவு அல்ல அன்பும் ஆறுதலும் இதமும் பராமரித்தலுமே பெண்மையாகும் . அதில் ஆண்பெண் பேதம் என்ற விசத்தை கலந்தது அசுரர்களே ஆகும் . உலகத்தின் சகல பாவங்களுக்கும் ஊற்றுக்கண் காமமே ஆகும்

    அன்னையின் பிரகாசத்தை தரிசிக்க வேண்டுமானால் உள்ளது உள்ளபடி அன்னையை உணரவேண்டுமானால் சிவனைப்போல மன்மதனின் வில்லையும் அம்பையும் சுட்டெரிக்கவேண்டும் காமத்தை கடர வேண்டும் அதற்கு அவளிடமே அழுது மன்றாடவேண்டும்

    அவளே பவதாரிணி பாவங்களை பரிகரிக்கிறவள் மனிதனை முருகனாக மாற்றுகிற வல்லமை உள்ளவள்

    முருகன் எப்படி உருவாக்கப்பட்டார் என ஸ்கந்தபுராணம் கூறுகிறது ?

    முருகனை உருவாக்க முதலாவது அன்னை ஆறு கார்த்திகை பெண்களை வெளிப்படுத்துகிறாள் . இந்த கார்த்திகை பெண்கள் உலக வாழ்வுக்கு அடிப்படையான ஆறு குணங்களை குறிப்பவர்கள் காமம் மோகம் குரோதம் லோபம் மதம் மாச்சரியம் எனப்பட்ட இக்குணங்களே உலக வாழ்வை நடத்துகிறது ஆனால் பாவங்களை பெருக்கி துன்ப துயரங்களுக்கு காரணமாகவும் ஆகிறது

    இந்த கார்த்திகை பெண்களுக்கு சிவன் முதலாவது குருகீதையை உபதேசிக்கிறார் அப்போது அதை செவி சாய்க்கும் மனநிலை இல்லாமல் பராமுகமாக அவர்கள் இருந்ததால் சிவன் அவர்கள் கல்லாகும்படியாக சபித்துவிடுகிறார் திருக்கோஸ்டியூருக்கு அருகில் உள்ள பட்டமங்கை என்ற பட்டமங்கலத்தில் இப்படி எத்தனை ஆண்டுகள் அவர்கள் கல்லாக இருந்தார்களோ அப்படித்தான் மனித ஆத்மாக்களும் உலக வாழ்வில் நல்லதையும் கெட்டதையும் செய்துகொண்டு கல்லாக கிடக்கிறது




    பலபிறவிகளுக்கு பிறகு அந்த ஆத்மா போதும் போதும் உலக ஆசாபாசங்கள் என உணரத்தொடங்குகிறதோ அப்போது சற்குருநாதர் சிவன் மீண்டும் பட்டமங்கைகளை உயிர்பித்து குருகீதையை உபதேசிக்கிறார்

    சிவன் ஞான உபதேசத்தால் அடிப்படை ஆறு அசுர குணங்களை ஆறு தெய்வீக குணங்களாக மாற்றுகிறார் அன்பு நேயம் பொறுமை ஈகை பரந்தமனம் நல்லிணக்கம் என்ற ஆறு தெய்வீக குணங்களாக பரிணமிக்கும்

    சிவனின் ஞானக்கண்ணிளிருந்து உண்டான தீப்பொறிகளால் உண்டான ஆறு குழந்தைகள் இவர்களே இவர்களை பக்குவம் பெற்ற ஆறு கார்த்திகைப்பெண்களும் வளர்க்கிறார்கள் அதன்பிறகே ஆறு குழந்தைகளும் ஒருவராக முருகனாக மாறுகிறார்கள்

    இதற்கு வல்லமை அளித்தவள் அன்னை நாராயணி என்கிறது அந்தாதி

    முந்நான்கு பணிரெண்டு முகங்களை ஆறு அசுர குணங்களையும் ஆறு தெய்வீக குணங்களையும் மூதறிவால் இருமூன்று ஆறுமுகனாக மாற்றி செம்மையான ஒரே முகமாக முருகனாக மாற்றினார்களாம்

    மனித குருமார்கள் அனைவரும் உபகுருனாதர்களே . இவர்களையே செம்படித்துக்கொண்டு திரியாமல் ஆவிமண்டல குருநாதர்களுக்காக ஏங்கி அந்த அனுபவம் பெற்ற பிறகே சற்குருநாதர்கள் நான்கு அதிதேவர்களின் பிரசன்னத்தை அடைய முடியும் அப்போதே நாமும் முருகனைப்போல ஆகி பரலோக பாக்கியம் பெறமுடியும்



    67: தோத்திரம் செய்து, தொழுது, மின் போலும் நின் தோற்றம் ஒரு
    மாத்திரைப் போதும் மனத்தில் வையாதவர்--வண்மை, குலம்,
    கோத்திரம், கல்வி, குணம், குன்றி, நாளும் குடில்கள் தொறும்
    பாத்திரம் கொண்டு பலிக்கு உழலாநிற்பர்--பார் எங்குமே.


    68: பாரும், புனலும், கனலும், வெங் காலும், படர் விசும்பும்,
    ஊரும் முருகு சுவை ஒளி ஊறு ஒலி ஒன்றுபடச்
    சேரும் தலைவி, சிவகாம சுந்தரி, சீறடிக்கே
    சாரும் தவம், உடையார் படையாத தனம் இல்லையே.

    தெய்வீக அன்பு தெய்வீக அழகு ஆகிய அன்னையின் அருட்பொழிவை உணர்ந்து தரிசித்தல் ஒன்றே உலக மாயைகளிலிருந்து விடுபடும் வழி அது சித்திக்காதோர் எப்படியோ மாயைகளில் சிக்கி உலக வாழ்வில் அழுந்தி பாவத்திலும் துக்கத்திலும் விழுவர் அவளை அறிந்து கொள்வதே தவம்

    பஞ்ச பூதங்கள் நிலம் நீர் நெருப்பு காற்று விண் ஆகியவையும் இவை உருவாக்கும் ஐந்து உணர்வுகள் ஒளி ஒலி மனம் சுவை தொடுதல் ஆகியவையே சகல குணங்களுக்கும் உடலுக்கும் அடிப்படை இவைகளை ஆள்கிறவள் அன்னை . சிவகாமியாக நற்குணங்களின் தலைவியாக அவளை சரணடைவோர் மாத்திரமே பாவங்களை வென்ற பரிசுத்த வாழ்வால் உண்டாகும் நற்சீர் அடைய முடியும்


    69: தனம் தரும், கல்வி தரும், ஒருநாளும் தளர்வு அறியா
    மனம் தரும், தெய்வ வடிவும் தரும், நெஞ்சில் வஞ்சம் இல்லா
    இனம் தரும், நல்லன எல்லாம் தரும், அன்பர் என்பவர்க்கே--
    கனம் தரும் பூங் குழலாள், அபிராமி, கடைக்கண்களே,

    நாராயணனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
    ஓம் நமோ நாராயணனாய

    ஆதிசேஷனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
    ஓம் நமோ ஆதிசேஷாய

    நாராயணியாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
    ஓம் நமோ நாராயணியாய

    சிவனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
    ஓம் நமோ சிவாய

    அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
    தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி