Ram-in Sanscrit,Hindi,all Indian Languages Rom in Hebrew&all basic Languages means the THE PROPHET who came to Earth with authority from GOD-the Creator
Total Pageviews
Saturday, July 11, 2020
காப்ரீயேல் பரமாத்மா என்றால் மீகாயேல் ஜீவாத்மா
6:98. உங்கள் அனைவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து உண்டாக்கிப்பின் (உங்கள் தந்தையிடம்) தங்க வைத்து, (பின்னர் கர்ப்பத்தில்) ஒப்படைப்பவனும் அவனே. சிந்தித்து விளங்கிக் கொள்ளக் கூடிய மக்களுக்கு நிச்சயமாக நம் வசனங்களை விவரித்துள்ளோம்.
படைக்கப்பட்டவைகள் அனைத்தும் யாருக்குள் படைக்கப்பட்டிருக்கிறதோ அவர் அல்லாஹ் வை அடுத்த பெரியவர்
இந்த ஜிப்ரீளை சாதாரண வேலைக்காரன் என்பதாக ஆப்ராகாமியர் தங்கள் அஞ்ஞானத்தால் புரிந்துள்ளார்கள்
வெட்டவெளி அருவமான அல்லாஹ் என்றால் அதற்குள் 100 ளில் 1 பங்கு பிரபஞ்சம் . இந்த பிரபஞ்சத்திற்குள் சகல படைப்புகளும் படைக்கப்படுகின்றன
மூலப்பொருள் - பரமாத்மா - காப்ரியேல் என்ற நாராயணன்
கீதை 10 : 6 எல்லா லோகங்களிலும் வாழும் சகல ஜீவராசிகளும் என்னிலிருந்தே வந்தவை !!
கீதை 10 : 7 யாறொருவன் இந்த உண்மையை -- எனது மறைசக்தியை ; மகிமையை உணர்ந்து விசுவாசிக்கிறானோ அவன் சந்தேகம் தெளிந்தவனாக திடமான பக்திதொண்டில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்வான் !!
கீதை 10 : 8 எல்லா பவ்தீக மற்றும் அமானுஸ்ய உலகங்களின் ஆதாரம் நானே ! ஒவ்வொன்றும் என்னிடமிருந்தே வெளிப்படுகின்றன ! மிகச்சரியாக புரிந்துகொண்ட ஞானவான்கள் முழு இதயத்தோடு என்னை பின்பற்றி பக்தி தொண்டாற்றுவார்கள் !!
இதே கருத்தை குரானின் வசனங்களும் மெய்பிக்கின்றன
17:85. (நபியே!) “உம்மிடம் ரூஹை (ஆத்மாவைப்) பற்றி அவர்கள் கேட்கிறார்கள். “ரூஹு” என் இறைவனுடைய கட்டளையிலிருந்தே உண்டானது; இன்னும் ஞானத்திலிருந்து உங்களுக்கு அளிக்கப்பட்டது மிகச் சொற்பமேயன்றி வேறில்லை” எனக் கூறுவீராக.
யோவான் 1:1. ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
2. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.
3. சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.
வார்த்தையானவர் என்பதே காப்ரீல் - நாராயணன்
அல்லாஹ் எதைப்படைத்தாலும் பரமாத்மாவுக்குள் பரமாத்மாவிலிருந்தே எடுத்து படைக்கிறார்
அதிலிருந்து அல்லாஹ் வின் முழு சாயலில் உருவாக்கப்பட்டவர் ஆதம் என்ற சிவன் என்ற மீகாயேல்
மீகாயேல் என்றால் இறைவனை போன்றவர் என்று அர்த்தம்
அதனால்தான் ஆதம் படைக்கப்பட்டவுடன் அதற்கு முந்திய படைப்புகளான வானவர் அனைவரும் ஆதமை தொழுதுகொள்ளுங்கள் என கட்டளை போட்டார்
காப்ரீல் பரமாத்மா என்றால் மீகாயேல் ஜீவாத்மா
ஆதியாகமம் 1:26 பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்.
ஆதியாகமம் 2:7 தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.
2:34. பின்னர் நாம் மலக்குகளை நோக்கி, “ஆதமுக்குப் பணி(ந்து ஸுஜூது செய்)யுங்கள்” என்று சொன்னபோது இப்லீஸைத்தவிர மற்ற அனைவரும் சிரம் பணிந்தனர்; அவன்(இப்லீஸு) மறுத்தான்; ஆணவமும் கொண்டான்; இன்னும் அவன் காஃபிர்களைச் சார்ந்தவனாகி விட்டான்.
ஆதம் என்ற சிவன் படைக்கப்படும் முன்பு தேவர்கள் அனைவரும் அல்லாஹ் வுக்கு கீழ்படிந்தே இருந்தனர்
சில மலக்குகள் ஷைத்தானாக மாறியதற்கு காரணமே அல்லாஹ் வோடு சிவனையும் வனங்கமாட்டோம் என கலகம் செய்ததாலேயே ஆகும்
ஆகவேதான் முழுமையான வழிபாடு அல்லாஹ் வை மட்டுமே வழிபடுவது அல்ல . அரைகுறை ஞானத்தால் ஆப்ரகாமியர் இந்த தவறை செய்கிறீர்கள்
2:98. எவன் அல்லாஹ்வுக்கும், அவனுடைய மலக்குகளுக்கும், அவனுடைய தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீக்காயிலுக்கும் பகைவனாக இருக்கிறானோ, நிச்சயமாக (அவ்வாறு நிராகரிக்கும்) காஃபிர்களுக்கு அல்லாஹ் பகைவனாகவே இருக்கிறான்.
ஆகவேதான் ஜிப்ராயேலே இந்துமத நாராயணன் என தெரியாமலும் மீகாயெலே சிவன் என தெரியாமலும் அவர்களை பகைத்து கோவில்களை இடித்த காலிபாக்கள் முகலாயர்கள் நரகத்திற்கு சென்று விட்டார்கள்
ஆனால் முகமதுநபியோ முழு உண்மையை உணர்ந்தவர் இந்துமத கோவிலகளை தாக்கவில்லை
ஆபிரகாம் வழி ஜெருசலோம் பைத்துஸ்மக்தஸ் அல்லாவை மட்டும் வழிபடும் கோவில் என்பதால் அதற்கு பதிலாக ஆதம் உருவாக்கிய அஸ்த்ரக் சிவலிங்க கோவிலை வழிபட அல்லாஹ் விடம் வேண்டினார் . உலகின் முதல் சிவலிங்க கோவில் மக்கீஸ்வரமேஆகும்
2:147. (கிப்லாவைப் பற்றிய) இவ்வுண்மை உம் இறைவனிடமிருந்து வந்ததாகும்; ஆகவே (அதனைச்) சந்தேகிப்போரில் ஒருவராக நீர் ஆகிவிட வேண்டாம்.
2:143. இதே முறையில் நாம் உங்களை ஒரு நடு நிலையுள்ள உம்மத்தாக (சமுதாயமாக) ஆக்கியுள்ளோம்; (அப்படி ஆக்கியது) நீங்கள் மற்ற மனிதர்களின் சாட்சியாளர்களாக இருப்பதற்காகவும், ரஸூல் (நம் தூதர்) உங்கள் சாட்சியாளராக இருப்பதற்காகவுமேயாகும்; யார் (நம்) தூதரைப் பின்பற்றுகிறார்கள் யார் (அவரைப் பின்பற்றாமல்) தம் இரு குதிங் கால்கள் மீது பின்திரும்பி செல்கிறார்கள் என்பதை அறி(வித்து விடு)வான் வேண்டி கிப்லாவை நிர்ணயித்தோம்; இது அல்லாஹ் நேர்வழி காட்டியோருக்குத் தவிர மற்றவர்களுக்கு நிச்சயமாக ஒரு பளுவாகவே இருந்தது; அல்லாஹ் உங்கள் ஈமானை (நம்பிக்கையை) வீணாக்கமாட்டான்; நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிகப்பெரும் கருணை காட்டுபவன், நிகரற்ற அன்புடையவன்.
அல்லாஹ் வோடு ஆதம் நபியையும் வழிபடுங்கள் என்ற ஆதி கட்டளையை யார் ஏற்று நல்லாடியார்களாக ஆவீர்களா அல்லது அல்லாஹ் வை ஏற்றுக்கொள்வோம் ஆதமை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என ஷைத்தானியர்களாக மாறுகிறீர்களா என்கிற ஆழமான விடயம் மக்காவா அல்லது ஜெருசலோமா என்பதில் உள்ளது
உண்மையில் மக்கவே சாலோம் தேசமாகும் . அங்கு ஆதமால் உருவாகி நடைமுறையில் இருந்த மேல்க்கிசெதெக் ஆசாரியனுக்கு ஆப்ரகாமே தசம பாகம் கொடுத்து வழிபட்டுள்ளார்
ஆதியாகமம் 14:18. அன்றியும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சரசமும் கொண்டுவந்து,
19. அவனை ஆசீர்வதித்து: வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனுடைய ஆசீர்வாதம் ஆபிராமுக்கு உண்டாவதாக.
20. உன் சத்துருக்களை உன் கையில் ஒப்புக்கொடுத்த உன்னதமான தேவனுக்கு ஸ்தோத்திரம் என்று சொன்னான். இவனுக்கு ஆபிராம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான்.
சாலோம் என்றால் சமாதான ஸ்தலம் என்றுபெயர்
என்ன சமாதானம் என்றால் இக்கோவில் ஆதம் மூலமாக அல்லாஹ் வை வழிபடும் கோவிலாகும்
ஆகவேதான் மனிதர்கள் தங்கள் மூதாதையர்களை அல்லாஹ் வுக்கு இணையாக்கி வைத்திருந்த 300 க்கும் மேற்பட்ட சிலையை உடைத்தாலும் அதமுக்கு அடையாளமான அஸ்த்ரக் லிங்கத்தை உடைக்கவில்லை
ஆனால் ஆதி இசுலாத்தை மறந்து மூஸா மூலமாக உருவான கோவில் ஜெருசலோம்
ஜெரு என்றால் எதிர்ப்பாக என்று அர்த்தம்
சாலோமாகிய மக்காவை புறக்கணித்து உருவாக்கப்பட்டது ஜெருசலோம்
அத்தோடு தான் வாழ்நாளில் ஒருமுறையாவது மக்காவுக்கு ஹஜ் செய்வது கடமையாக்கப்பட்டதன் உண்மை இதுவே
தாங்கள் வாழுமிடத்தில் பள்ளிவாசலில் அல்லாஹ் வை மட்டுமே தொழும் முஸ்லீமகளே ஒருமுறையாவது அல்லாஹ் வோடு அஸ்த்ராக சிவலிங்கத்தை வணங்காவிட்டால் உங்கள் வணக்கம் பூர்த்தி ஆகாது என்ற கடமையின் பின்னணி இதுவே
ஆகவே அசட்டுத்தனமாக அரபியர்கள் சொல்லிக்கொடுத்த அல்லாஹ் வைத்தவிர அனைத்தும் சைத்தான்கள் என்ற அறியாமையை விட்டு வெளியே வருக
முகமதுநபியால் வாக்களிக்கப்பட்ட அல்மஹ்தியின் மும் மதசமரச வேதத்தின் குரலுக்கு செவிசாய்ப்போன் பாக்கியவான்
Subscribe to:
Post Comments (Atom)
காப்ரீல் பரமாத்மா என்றால் மீகாயேல் ஜீவாத்மா
ReplyDelete