Total Pageviews

Sunday, September 4, 2011

ஸ்ரீராம்-ஜெரோம் -ரஹீம்






(இங்கு க்ளிக் செய்து இசையை கேட்டுக்கொண்டே வாசிக்கவும்)
ஓம்- ஆமென்-ஆமீன் என்பதும் ஒரு அர்த்தமே! அதுபோல் ராம் -ரோம் -ரஹீம் என்பதும் ஒரு அர்த்தமே! ராம் என்றால் குமாரன் -பிள்ளை -கணக்குப்பிள்ளை போல ! கணக்குப்பிள்ளை முதலாளிக்காக எல்லா பொறுப்புகளையும் செய்கிறவர் ! அதுபோல் ஸ்ரீராம்-ஜெரோம் -ரஹீம்  என்றால் கடவுளின்பிள்ளை- கணக்குப்பிள்ளை அதாவது இறைதூதன் என்று பொருள் !

                        ஆதி  5 மொழிகளிலும் அவ்வப்போது வரபோகிற இறைதூதனை பற்றிய குறிப்பும் எதிர்பார்ப்பும் உண்டு உலகின் ஆதி 5 நதிக்கரை நாகரீகங்கலைப்பற்றி அறிவீர்கள் !ஆதி பாஷைகள் எல்லாம் கொஞ்சம்கொஞ்சம் வேறுபாடான உச்சரிப்புகளுடன் ஒன்றுபோல் இருப்பவை ! முதல் மனிதன் தமிழனே ! லெமூரியா கண்டத்திலிருந்து 5 நாகரீகங்களுக்கும் மனிதன் பரவி சென்றான் ! மொழி மருவி மாறினாலும் அடிப்படை மாறாமலேயே இருக்கும் !


எல்லா மனிதர்களோடும் கடவுள்  இறைதூதர்கள் மூலமாக இடைபட்டுள்ளார்  1300 இறைதூதர்கள் பூமிக்கு அனுப்பபட்டிருப்பதாக குரானில் சொல்லப்பட்டுள்ளது! `நாம் அநேக தூதர்களை பூமிக்கு அனுப்பியுள்ளோம்;நபியே அதில் சிலரைப்பற்றி மட்டுமே உமக்கு வெளிப்படுத்தியுள்ளோம்` என்ற வசணம் குர்ஆனில் உள்ளது
அவ்வாறு குர்ஆனில் குறிப்பிடப்படும் இறைத்தூதர்

அனைவரும் யூதர்களும் அரபியரும் மட்டுமே

அவர்களுக்கு யாரை தெரியுமோ அவர்களைப்பற்றி

 மட்டுமே இறைவன் பேசியுள்ளார்


இதனை ஆப்ரகாம் சந்ததி தவிர வேறு எங்குமே 

இறைத்தூதர் வந்ததில்லை என்பதுபோல 

கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் தவறுதலாக 

புரிந்து கொண்டு மிக அதிக எண்ணிக்கையில் 

இறைத்தூதர்கள் வந்து வளர்த்த இந்துதர்மத்தை 

கண்ணெடுத்தும் பாராமல் ஒதுக்கி வைக்கின்றனர்


கிருத யுகத்தில் ஆதாமும் ஏவாளும் ( சிவனும் 

பார்வதியும் ) முதல் ; முதல் ஜலப்பிரளயம் வரை 

வந்த அனைத்து இறைத்தூதர்களும் தமிழர்கள் 

என்பதும் அவர்கள் வளர்த்த ஆதிதர்மமே 

இந்துமதம் என்பதையும் அவர்கள் புரிந்து 

கொள்ளும் காலம் வந்திருக்கிறது இந்த 

பாரம்பரியத்தில் திரேதா யுகத்தில் ஸ்ரீராமரும் 

துவாபர யுகத்தில் கிரிச்னரும் கலியுகத்தில் 

இயேசுவும் பரமாத்மாவின் அவதாரமாக பூமிக்கு 

வந்தனர் 
ஸ்ரீராம் ஜெயராம் என்றால் கடவுளின் தூதர் 

அசுரர்களை வென்று ஜெயிப்பார் -அதர்மத்தை 

அளித்து தர்மத்தை பூமியில் நிலைநாட்டுவார் 

என்பதாகும் !ஜெயராம் தான் எபிரேய -கிரேக்கு 

பாஷையில் ஜெரோம் என உள்ளது !


பிள்ளை,குமாரன் என்கிற வார்த்தைகள் கடவுளின் தூதர்கள் என்கிற அர்த்தத்தில் எல்லா ஆதி மொழிகளிலும் பயன்படுத்த பட்டுள்ளது !ஆனால் இறைதூதர்கள் சென்றுபோன பிறகு அசுரர்கள் அதையே திருத்தி கடவுளுக்கு பிள்ளை என அவர் சொல்லிக்கொண்டார் ; உண்மை என்னவென எங்கள் அறிவால் நாங்கள் கண்டுபிடித்தோம் கடவுள்தான் எங்கள் ஆளாக வந்தார் என கடவுளுக்கு இனை வைக்கும் தவறுக்குள் மனிதர்கள் சென்று விடுகின்றனர்

அதுமட்டுமல்ல எங்கள் ஆள் மட்டுமே ஒரிஜினல் கடவுள் மற்றவர்களெல்லாம் பொய் என்றும் அவமதிக்கத்தொடங்குகின்றனர்

அசுர ஆவிகள்தான் இப்படிப்பட்ட பெருமைகளை கற்பித்து இவரை மட்டும் வழிபட்டால் போதும் அந்தக்கடவுளை வேறு எதற்காக கடவுளே என வழிபட வேண்டும்  என கற்பிக்கின்றன . கடவுளை வழிபடுவதை மட்டும் எப்படியாவது தடை செய்யவேண்டும் என்பது அசுரர்களின் நோக்கம்

தூதர்களின் உபதேசங்களை கடைபிடிக்க வேண்டியதில்ல ;குழிதோண்டி புதைத்து விடுங்கள்  இவருக்கு கூட்டத்தோடு கூட்டமாய் ஒரு கும்பிடு போட்டால் போதும் எல்லா நன்மைகளும் கிடைத்து விடும் என்கிற மாயத்தை பரப்புகின்றனர்!


இந்தியாவின் ராமன் முதல் புத்தர் வரை கடவுளாக்கப்பட்டதும் இயேசு இறை மகனாக்கபட்டதும் இவ்வாறே!எனவேதான் கணக்குப்பிள்ளை என்கிற வாசகத்தை பிரயோகப்படுத்தினேன்!பெரிய குடும்பங்கள் எல்லாவற்றிலும் சகல வரவுசிலவுகளையும் குடுக்கல் வாங்கல்களையும் கணக்குபிள்ளைகளே முதலாளிபோல நிர்வகிப்பார்கள்!ஆனாலும் அவர்கள் முதலாளிகள்ள! நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள் மட்டுமே! இறைதூதர்கள் நிலையும் இதுவே!

இந்த கணக்குபிள்ளைகள் மூலமாக முதலாளியை அணுகினால் எளிதில்  அனுகூலம் பெறலாம்

அதற்காக முதலாளியையே  ஒதுக்கி வைத்துவிட்டு கணக்குபிள்ளையை மட்டுமே நம்பிக்கொண்டிருக்கலாகத்து

இதுபோல  ஒரு  நிலையே  எல்லா  மதங்களிலும் உள்ளது

அவர்கள்  இறைவனை  மறந்து விட்டு அவரால்  அனுப்பப்பட்ட  இறைத்தூதர் ஒருவரை இவர்தான் உண்மைக்கடவுள் என்று சொல்லிக்கொண்டுள்ளனர்

நியாயதீர்ப்பு நாளில் கடவுள் தூதர்களிடம் பூமியில் உங்களை வழிபடும்படியாக ஒரு கூட்டத்தை ஏற்படுத்திக்கொண்டீர்களா என கேட்கப்படும் எனவும் அப்போது `நாங்களே சதா உங்களை வழிபடுகிரவர்களாக இருக்கும் போது நாங்கள் எங்களை வழிபடும்படி இவர்களிடம் கூறி தவறிழைக்கவில்லை !அசுரர்கள் இவர்களை வழிகெடுத்தார்கள் எங்களுக்கும் இவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கைவிரித்து விடுவார்களாம்` என எச்சரிக்கிறது குரான் !இயேசு சொல்லிய வார்த்தைகளும் இதுவே !


மத்தேயு
அதிகாரம் 7
21. பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. 22. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். 23. அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.


                                         ஏசு இவ்வளவு எச்சரித்தும் இறைமகன் ஏசு என்கிற சாக்கில் அவரையே வழிபடுகிறவர்களாக கிறிஸ்தவர்கள் சீர்கெட்டு விட்டனர் !அல்லது கடவுளையும் அவரது குமாரன் ஏசுவையும் சேர்த்து கும்பிடுகிறோம் என்பார்கள் ! எங்கள் மதத்தில் சென்றுபோனவர்களை புனிதராக்கி நாங்கள் கும்பிடலாம் ஆனால் உங்கள் மதத்தில் சென்று போனவர்களை நீங்கள் கும்பிடக்கூடாது என மதச்சன்டையும் போடுவார்கள் !இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய அசுர மாயங்கள் தான் !

இறை தூதர்கள் உயிரோடு இருக்கும் வரையில் அவர்கள் கடவுளை நோக்கி மனிதர்களை ஏவிக்கொண்டிருப்பர் கடவுளது நன்னெறியை அறத்தை பரப்புவர் முந்தைய தூதர்களின் கொள்கைகளை ஏற்றுகொண்டு வளப்படுத்தி செளுமைபடுத்துகிறவர்களாயும் அதர்மத்தை விடுத்தது தர்மத்தை நோக்கியும்  கடவுளை நோக்கியும் அழைக்கிரவர்களாகவும் இருப்பர்!

கிருஷ்ணர் ஒருபோதும் ராமரை மறுக்கவில்லை !அதுபோல் முகமது ஏசுவை மறுக்கவில்லை !அவர்களின் கொள்கைகளை திரித்த அசுர மாயத்தையும் சீடர்களின் மதக்கிறுக்கையும் தான் மறுத்தார்கள் !மதப்பெருமையை மறந்து கடவுளுக்கு ஏற்புடையவராகுங்கள் என்றார்கள்!

கடவுளின் வல்லமை இத்தூதர்கள் மீது இருக்கும் என்பதால் சகல எதிர்ப்புகளையும் மீறி தூதர்களால் தர்மத்தை நிலைநாட்ட முடியும் !எனவே தான் இந்தியாவிற்கு புதிய இறை தூதர் வேண்டுமென பிரார்த்தித்து வருகிறேன் !


ஓரிறைவனையே துதிக்கிறோம்
நாராயணன் நாமத்தினாலே    
ஓம் நமோ நாராயணா !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

ஓரிறைவனையே துதிக்கிறோம்
சிவனின் நாமத்தினாலே    
ஓம் நமோ சிவாய !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

நாராயணனாய் வெளிப்பட்ட அந்த
ஓரிறைவனையே துதிக்கிறோம்
ஓம் நமோ நாராயணாய !
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி