Total Pageviews

Monday, August 20, 2012

உலக வாழ்க்கை !!

உலக வாழ்க்கை !!

--குரு ராமகிருஸ்ண பரமஹம்சரின் உபதேசங்கள் -----

மகா மாயையின் வழிகள் அறிவுக்கு எட்டாதவை ! கடவுளை எளிதில் அடைய அது விட்டுவிடுமா என்ன ? பற்று கொள்வதற்கு உறவினர் யாருமே இல்லாத ஒருவன் இருந்தால் அவனிடம் ஒரு பூனையை கொடுத்து அதனிடம் பற்றுகொள்ள செய்து விடுகிறது . அவனும் அந்த பூனையை உலகம் என்று எண்ணிக்கொண்டு அதற்கு வேண்டிய பாலுக்காக அலைந்த வண்ணம் , ``நான் என்ன செய்யட்டும் ? பாலையும் மீனையும
் தவிர , இது வேறு எதையும் உண்ண மறுக்கிறதே ! `` என்று சொல்லியபடி அதைப்பராமரிப்பதிலேயே வாழ்நாளை செலவிடுகிறான் !

இந்த நிலையற்ற உலகை இறைவனுடன் தொடர்பு படுத்தியே பார்க்க வேண்டும் ; அவ்வாறே செயல்படவும் வேண்டும் . ஒரு கையினால் இறைவனுடைய திருவடிகளைப் பிடித்துக்கொண்டு , மற்ற கையால் உலகச் செயலகளை செய்ய வேண்டும் !

நம்மை வாழ்க்கையாகிய அறியாமையில் வைத்திருப்பதும் இறைவனே , நம்மைத்தன்னிடம் அழைத்து முக்தி அளிப்பதும் அவரே !!

No comments:

Post a Comment