Total Pageviews

Monday, January 9, 2012

கடவுள் வேறு மதங்கள் வேறு!

                        மதங்களின் வழியாக கடவுளை பார்த்தே பழகிவிட்டோம் !மதங்கள் எல்லாம் அந்த அந்த காலகட்டத்தில் ஒரு இறை தூதரால் கொடுக்கப்பட்டு அவரின் சீடர்கலால் கெடுத்து குட்டிய சுவர்கள் ஆனவை !மதங்களை அப்படியே ஏற்றுக்கொள்வதும் தவறு அப்படியே எதிர்ப்பதும் தவறு !

                      கெட்டுப்போன மதங்களின் உடாக உண்மையை கடவுளை தேடி கண்டு பிடிக்கவேண்டும் !கடவுள் உங்களை வெளிச்சமாக்க வேண்டுகிறேன் !கடவுள் இருக்கிறார் என நம்புவதும் செய்கிற செயலுக்கு விளைவை அவர் கொடுப்பார் என நம்புவதும் தீய செயல்களிடமிருந்து மனிதனை காப்பாற்றும் !

                       மனித நேயமற்ற பக்தி எப்படி மோசடியோ அதுபோல இறை அச்சமற்ற மனித நேயமும் மோசடியில் தான் முடியும் !வாயிலே சமுக சீர்திருத்தம் பேசினாலும் செய்கையிலே ஈவு இரக்கமற்ற சுயநலவாதிகளாகவே பலர் இருக்கின்றனர் !மதங்களின் கேடுகளை எதிர்க்கிற சாக்கில் இறை அச்சமற்ற கேட்டுக்குள் போய் முடிகிறார்கள் !மதங்களின் கேடுகளை எதிர்க்கவேண்டும் !உள்மனதில் இறை அச்சமுடன் இருக்க வேண்டும் !

                       ஒரு வேலை பெரியார் அப்படி இருந்திருக்கலாம்!சமுதாய கேடுகள் மதங்களோடு பின்னி பிணைந்து இருந்ததால் ஒரே அடியாக கடவுளை மற என்ற எதிர்மறை முடிவுக்கு வந்திருக்கலாம் !அவர் தன் கொள்கைக்கு நேர்மையானவராக சமூக சீர்திருத்தம் செய்வதற்கு தன்னை தியாகம் செய்தார்!ஆனால் அவரின் பாசறையில் வந்தவர்கள் எல்லாரும் இறை அச்சமற்ற சுயநலவாத கூட்டங்களாக கேடுகளை தைரியமாக  செய்கிரவார்கலாக மாறிவிட்டனர்!எவ்வித கொள்கையும் இல்லாமல் அரசியலை மட்டும் தொழிலாக வைத்து பெரும் பணக்காரர்கள் ஆனவர்கள் -கழக கூட்டங்களுக்கு பெரியார் தான் மூலமாகும் !எப்படி மதங்களெல்லாம் கெட்டு விட்டதோ அப்படி பெரியாரியமும் கெட்டு விட்டது !காரணம் இறை அச்சமற்றதுதான்!!இறை அச்சத்தை பெரியாரியத்துடன் கூட்டினால் அது நல்ல கொள்கையாக பரிணமிக்கும் !!!!

1 comment:

  1. ஓரிறைக் கொள்கையில் ஒன்று படுவோம் வாரீர் !!!

    "ஏய் அர்ஜுனா! எல்லாப் படைப்பினங்களையும் தனது சுய சக்தியால் இயங்க வைக்கின்ற இறைவன் சகல மக்களின் உள்ளங்களில் குடி கொண்டிருக்கிறான். நீ உனது உடலாலும், மனதாலும், அறிவாலும் அந்த ஓர் இறைவனிடம் மட்டும் சரணடைய வேண்டும். அவனுடைய அன்பு இருந்தால் தான் நிரந்தரமான சந்தியும் சமாதானமும் கிடைக்கும்."
    (பகவத் கீதை அதிகாரம் 18 : வசனம் 61 ,62 )
    To read further follow the below URL

    http://tamilahmadiyya.blogspot.in/2011/02/blog-post_17.html

    ReplyDelete