Total Pageviews

Sunday, November 20, 2011

இறைபணி யார் செய்யலாம்???

பரம்பரை பூசாரிகள் கோவிலை ஆதிக்கம் செய்வது புத்தருக்கு முன்பிருந்த நிலை!அவர்கள் ராமரையும் க்ரிஸ்ணரையும் சிலைவழிபாட்டுக்குள் கொண்டுவந்து விட்டனர்!அந்த நிலையில் அதனை புத்தர் உடைத்தார்!துறவிகள் அருள்பணி செய்யும் நிலையை அறிமுகப்படுத்திணார்!அதுவும் பின்னாளில் சீர்கெட்டது!

யூதர்களிலும் இது நடந்தது கோவிலில் பணி செய்ய லேவியின் பரம்பரையினருக்கு மட்டும் உரிமை அளிக்கபட்டது!அவர்கள் அதனை வியாபாரமாகவும் வரட்டுத்தனமாகவும் சடங்காச்சாரமாகவும் மாற்றி கடவுளை பொதுமக்களிடம் விட்டு பிரித்தனர்!

புத்தரைபோலவே இயேசுவும் மதவாதிகளை கடுமையாக சாடியவர்!
மத்தேயு 23:13 மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, மனுஷர் பிரவேசியாதபடி பரலோகராஜ்யத்தைப் பூட்டிப்போடுகிறீர்கள்; நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை பிரவேசிக்கப் போகிறவர்களைப் பிரவேசிக்கவிடுகிறதுமில்லை.
மத்தேயு 23:15 மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள்; அவன் உங்கள் மார்க்கத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள்.
15. அவர்கள் எருசலேமுக்கு வந்தார்கள். இயேசு தேவாலயத்தில் பிரவேசித்து, ஆலயத்தில் விற்கிறவர்களையும் கொள்ளுகிறவர்களையும் துரத்திவிட்டு, காசுக்காரருடைய பலகைகளையும், புறா விற்கிறவர்களுடைய ஆசனங்களையும் கவிழ்த்து,
17. கடவுளின் வீடு எல்லா ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும் என்று எழுதியிருக்கவில்லையா? நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள் என்று அவர்களுக்குச் சொல்லி உபதேசித்தார்.
---------இயேசுவின் காலத்தில் பரம்பரை ஒழிக்கபட்டது!அங்கும் துறவிகள் ஆதிக்கம் வந்து(RC) அதிலும் சீர்கேடுகள் வந்து கிரஹஸ்தர்கள் அருள் பணி செய்யும் நிலையாக தற்போது உள்ளது!(PROTESTANT)
-------தற்போது `குரான்` கோவிலை பொதுமக்கள் குழுவின் நிர்வாகத்திலும் வேதம் அறிந்தோர் இறைபணி செய்வதாகவும் வழிகாட்டியுள்ளது!காணிக்கை அனைத்தும் கோவிலுக்கே என்கிற நிலையை மாற்றி `ஏழைவரி`-தங்கள் வருவாயில் 2% ஏழைகளுக்கும்.கோவிலுக்கும் பகிர்ந்து கொடுத்தாலும் அது கடவுளுக்கு செலுத்தப்பட்ட காணிக்கையே என அங்கீகரித்துள்ளது!அருள்பணி செய்வோர் பொதுமக்களை ஏமாற்றி ஆளுகை செய்யாதிருக்கவே இந்த ஏற்ப்பாடு!
குரான்9:34. ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக (அவர்களுடைய) பாதிரிகளிலும்,சந்நியாசிகளிலும் அநேகர் மக்களின் சொத்துக்களைத் தவறான முறையில் சாப்பிடுகிறார்கள்; மேலும் அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மக்களைத்) தடுக்கிறார்கள்; இன்னும் எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ; (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக!.









No comments:

Post a Comment