Total Pageviews

Wednesday, July 12, 2017

வெளிநாட்டு வேதங்களில் பரமாத்மா



ஆப்ரகாமிய வேதங்களில் கடவுள் தேவுதூதர்கள் மனிதர்கள் மட்டுமே 

அறியப்படுகிறார்கள்

ஆனால் இந்திய வேதங்களில் பரமாத்மா என்ற ஒன்றைப்பற்றிய மெய்யறிவு உள்ளது

அருபமான கடவுளை அடுத்து அவரால் உண்டாக்கப்பட்ட அனைத்தையும் - பிரபஞ்சம் உயிரினங்கள் அனைத்தையும் முழுமையாக தன்னிலே அடக்கி கொண்டுள்ள அந்த ஒன்று


பரமாத்மா


அது உருவங்கள் அருப உருவங்கள் அனைத்தையும் தன்னுள்ளே
அடக்கியுள்ள அருஉஇருவம் .

பரமாத்மா கடவுளல்ல ; ஆனால் உண்டான அனைத்தும் அவர்
மூலமாகவே உண்டாக்கப்படுகிறது . அவர் மூலமாக இல்லாமல்
கடவுள் எதையும் உண்டாக்கவில்லை 


ஆகவே அந்த ஒன்று கடவுளுக்கு இணையானது . அதுவே
இயேசுவாக வந்தது . அதனால்தான் இயேசு கடவுளை பிதா என்றார்


காந்தியின் முந்தய பிறவியும் இயேசுவின் பிரியமான சீடனுமான
யோவான் மற்ற சீடர்களைக்காட்டிலும் இந்த நுட்பங்களை தெளிவாக
எழுதியுள்ளார்




யோவான் 1
1.      ஆதியிலே வார்த்தை தேவனிடத்திலிருந்தது, .
2.      அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.
3.       சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.
              
14. அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.
கடவுள் ஆகுக என்று பேசினார் . அந்த வார்த்தையால் சகலமும் உண்டாயிற்று . இவை தனித்தனியே ஆங்காங்கு உண்டாகவில்லை . சகல சிருஸ்டிகளையும் ஒன்றின் மூலமாக அந்த ஒன்றுக்குள்ளேயே உண்டாக்கியிருக்கிறார் . அந்த ஒன்றுதான் இந்திய வேதங்களின் படி பரமாத்மா . அந்த பரமாத்மாதான் நாராயணன் என அடையாளப்படுத்தப்பட்டு காலப்போக்கில் அவருக்கு ஒரு உருவமும் கற்பித்தார்கள் நரல் + ஆயணன் நர நர என பேசுவதால் உண்டாவது சத்தம் . சத்தமாக வெளிப்பட்டவன் என்பதே நாராயணன் என்பதின் அர்த்தம்
அந்த நாராயணனுக்கும் கடவுளுக்கு ஒப்பான மகிமை உள்ளது என்பதே அந்த 14 வசனத்தின் பொருள் (அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.) கடவுளிடமிருந்து வெளிப்படவைகள் எல்லாம் அவருக்குள்ளேயே இருப்பதால் அவரை பிதாவுக்கு ஒரே பேறானவர் என்று முக்கியப்படுத்தப்பட்டுள்ளது
குரானிலும் இயேசு கடவுளின் வார்த்தையனவர் என்பது ஒத்துக்கொள்ளப்பட்டுள்ளது .

4:171. வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்; நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான்; இன்னும் (குன் ஆகுக என்ற) அல்லாஹ்வின் வாக்காக இருக்கின்றார்; அதை அவன் மர்யமின்பால் போட்டான்; (எனவே) அவரும் அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மா தான்; ஆகவே, அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; இன்னும், (வணக்கத்திற்குரிய இறைவன்) மூன்று என்று கூறாதீர்கள் - (இப்படிக் கூறுவதை விட்டு) விலகிக் கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும் - ஏனெனில் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவன் தான்; அவனுக்கு எவரும் சந்ததியாக இருப்பதிலிருந்து அவன் தூய்மையானவன். வானங்களிலும்;, பூமியிலும் இருப்பவையெல்லாம் அவனுக்கே சொந்தம். (காரியங்கள் அனைத்துக்கும்) பொறுப்பேற்றுக் கொள்வதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.
 
ஆனால் அதை புரிந்துகொள்ளும் பக்குவம் முகமது நபிக்கும் அருளப்படவில்லை . கடவுளுக்கு எதையும் இணை வைக்காதீர்கள் என்ற உபதேசத்தை உலகில் அழுத்தி சொல்ல அவர் பயன்படுத்தப்பட்டதால் அருவமான கடவுளின் முழு வெளிப்பாடும் அடங்கியுள்ள ஒருவரை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை . அவரும் ஒரு இறைதூதர் மட்டுமே என சாதாரண மனிதனாக கற்பிக்கிறார்கள் . அவர் இறைவனால் படைக்கப்பட்டவர் என்பதின் அர்த்தமே அவரும் தூதர்தான் என்பது . ஆனால் அவர் சாதாரண மனிதனல்ல . அல்லாவுக்கு கொடுக்கப்பட்டுள்ள அதே அடைமொழி அலை என்பது ஈசா அலை என்று கொடுக்கப்பட்டுள்ளது , ஆனால் முகமது நபிக்கு ஸல் என்ற பட்டம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது . ஆனாலும் அவர்கள் இந்த வித்தியாசத்தை புரிந்துகொள்ள பக்குவம் இல்லை 
66:12. மேலும், இம்ரானின் புதல்வியான மர்யமையும் (அல்லாஹ் உதாரணமாக்கினான்) அவர் தம் கற்பைக் காத்துக் கொண்டார்; நாம் (அவரில்) நம் ரூஹிலிருந்து (ஆத்மாவிலிருந்து) ஊதினோம். மேலும், அவர் தம் இறைவனின் வார்த்தைகளையும், அவனுடைய வேதங்களையும் மெய்ப்பித்தார் - (ஏற்றுக் கொண்டார்); இன்னும், அவர் (அல்லாஹ்வை வணங்கி) வழிபட்டவர்களில் ஒருவராகவும் இருந்தார்.
இயேசு அல்லாவின் ஆத்மா . அதாவது பரமாத்மா .
மனிதர்களெல்லாம் பரமாத்மாவிலிருந்து உருவாக்கப்படும் ஜீவாத்மாக்கள் என்றால் இயேசு பரமாத்மா .
நாம் எல்லோரும் கடவுளால் படைப்பட்டது போல அவரிளிருந்தும் படைக்கப்பட்டுளோம் 
சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.

6:98. உங்கள் அனைவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து உண்டாக்கிப்பின் (உங்கள் தந்தையிடம்) தங்க வைத்து, (பின்னர் கர்ப்பத்தில்) ஒப்படைப்பவனும் அவனே. சிந்தித்து விளங்கிக் கொள்ளக் கூடிய மக்களுக்கு நிச்சயமாக நம் வசனங்களை விவரித்துள்ளோம்.
இயேசுவின் வார்த்தைகளை இப்போது புரிந்துகொள்ளுங்கள் :
யோவான் 10 
9. நானே வாசல்
30. நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்

யோவான் 14:6  நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
என்னால் மட்டுமே ஒருவன் கடவுளிடம் வரமுடியும் என்பதை இயேசுவால் மட்டுமே என அவரை மட்டுமே அறிந்த கிறிஸ்தவர்கள் சொல்கிறார்கள் . ஆனால் அந்த இயேசு யார் என்றால் கடவுளின் வார்த்தையாகிய பரமாத்மா – நாராயணன் .
அந்த நாராயணன் முந்தய யுகங்களிலும் பூமியில் அவதரித்துள்ளார்
கீதை 4 :1 யுகபுருஷன் கிருஷ்ணர் கூறினார் : நான் இந்த அழிவற்ற விஞ்ஞானமாகிய யோகமுறைகளை ஆதியிலே மனிதர்களின் தகப்பனான மண்ணு /மணுவிற்கு உபதேசித்தேன் !!! அவர் தமது மகனான இஷ்வாகிற்கு உபதேசித்தார் !! 

கீதை 4 :2 இந்த உண்ணதமான விஞ்ஞானம் வழிவழியாக சீடர்களின் பாராம்பரியத்தால் பெறப்பட்டு; ராஜரிஷிகளாகிய அரசர்களால் உணர்ந்து கடைபிடிக்க பட்டு வந்தது! இருப்பினும் நாளடைவில் இந்த பாராம்பரியம் உடைந்து இன்றைய தினம் காணப்படுவது போல இந்த உண்ணதமான விஞ்ஞானம் அறியப்படாமலேயே போயிற்று!!!

கீதை 4 :3 உண்ணதமான கடவுளோடு இயைந்து ஒருமித்து வாழும் அந்த ஆதி கலையை இன்று நான் உனக்கு உபதேசிக்கிறேன்!!! ஏனென்றால் நீ எனது நண்பனும் சீடனும் அத்தோடு உயிரோட்டமுள்ள நித்திய ஞானத்தை உணர்ந்து கொள்ள தகுதியுள்ளவனுமாய் இருக்கிறாய்!!! 
கீதை 4 :4 அர்ச்சுனன் கேட்டான்: தாங்கள் பிறந்திருப்பது இப்போது! அப்படியிருக்க ஆதியிலே இந்த விஞ்ஞானத்தை எப்படி மனுவிற்கு உபதேசித்தீர்கள்?

கீதை 4 :5 கிரிஷ்ணர் கூறினார்: நீயும் நானும் பலபிறவிகள் இப்பூமியில் வந்துள்ளோம்!! ஆனால் அவை பற்றிய உணர்வு உனக்கு அருளபடவில்லை!! எனக்கு மறைக்க படவில்லை!!!

கீதை 4:6 நான் பிறப்பற்றவனாகவும்; அழிவற்ற எனது ஆத்துமசரீரம் நித்தியஜீவனுள்ளதாகவும் இருந்தாலும் நான் அதனை தாழ்த்தி யுகங்கள் தோறும் இப்பூமியில் அவதரிக்கிறேன்! எனென்றால் நானே இப்பூமிக்கு கடவுளின் பிரதிநிதியும்; பூமியில்உள்ள அனைத்து உயிரிணங்களின் யுகபுருஷனும் ஆவேன்!!

கீதை 4:7 எப்போதெல்லாம் எப்போதெல்லாம் ஆன்மீக மதிப்பீடுகள் தொய்வடைந்து அதர்மம் தலைவிரித்தாடுகிறதோ அப்போதெல்லாம் நான் பூமிக்கு இறங்கி வருகிறேன்!!

கீதை 4:8 பக்தர்களை ரட்சிக்கவும் தீமை புரிந்து பூமியில் குழப்பம் செய்வோரை அழிக்கவும் மீண்டும் தர்மத்தை நிலைநாட்டவும் யுகங்கள்தோறும் யுகங்கள்தோறும் இப்பூமியில் அவதரிக்கிறேன்!!

கீதை 4:9 யார் பூமியில் வெளிப்படும் எனது சரீரத்தின் தோற்றத்தையும்; நித்தியஜீவனுள்ள எனது ஆத்துமாவையும் உணர்ந்து அதன் செயல்பாடுகளில் தன்னை இனைத்துக்கொண்டு ஒத்திசைவாய் வாழ்கிறானோ அவன் இந்த லவ்கீகவாழ்வில் மீண்டும்மீண்டும் அல்லலுறுவதில்லை;மாறாக எனது நித்தியத்தின் மனநிலையை எய்துவான்!! நித்திய ஜீவனை அடைந்து என்னோடுகூட வாசம் செய்வான்!!
இயேசுவும் நான் என்று பல இடங்களில் பேசியுள்ளார் . இந்த நானை பரமாத்மா என்று புரிந்துகொள்ளவேண்டும்
எந்த வேதங்களிலும் காலப்போக்கில் மனிதர்கள் தங்கள் வார்த்தைகளை கலக்கின்றனர் .
பகவத்கீதை என்பது பல ஆண்டுகள் பேச்சாக ; கிராமிய நாடகமாக இருந்து எழுத்தாக்கம் செய்யப்பட்டது . அதனால் அதில் மனிதர்கள் தங்களுக்கிருந்த குறைந்த அறிவோடு சில வார்த்தைகளை அர்த்தப்படுத்திக்கொண்டார்கள் . அதனால்தான் அதை நாராயணன் கடவுளைக்குறித்து உபதேசித்ததாக சீர்படுத்தி அடியேன் மூலமாக தமிழ்பெயர்ப்பு செய்யப்பட்டுவருகிறது  
கீதை 9:25 யார் ஞானிகளையும் மஹான்களையும் வழிபடுகிறார்களோ அவர்கள் அவர்கள் பிறவியெடுத்துள்ள இடத்தில் பிறப்பர் ! யார் முன்னோர்களை வழிபடுகிறார்களோ அவர்களும் அவர்கள் பிறவியெடுத்துள்ள இடத்தில் பிறப்பர் ! யார் அசுரர்களை வழிபடுகிறார்களோ அவர்களும் அவர்களின் ஆதிக்கம் உள்ளோரிடத்தில் பிறப்பர் ! ஆனால் யார் என் மூலமாக கடவுளை வழிபடுகிறார்களோ அவர்கள் எனது நித்திய இடத்தை அடைந்து மரணமில்லா பெரு வாழ்வு  பெறுவர் !!

No comments:

Post a Comment