Total Pageviews

Saturday, January 14, 2012

விவேகானந்தரது ஆசை நிறைவேர பிரார்திப்போம்!

                             உலகை மூழ்கடிக்கும் ஆன்மீக பேரலை இந்தியாவிலிருந்தே புறப்படும் என்பது விவேகானந்தரது முன்னறிவிப்பு !அதற்காகவும் அவர் இந்தியாவின் அடியில் இருந்த தீவிற்கு (விவேகானந்தர் பாறை )நீந்தி சென்று ஒரு நாள் முழுவதும் கடவுளை தியானித்தார் !அவரது ஆசை நிறைவேற நாமும் கடவுளை வேண்டவேண்டும் !
                            உலகை முழுவதும் அரவணைக்க என்றால் உலகம் முழுவதும் கடவுளால் இறைதூதர்கள் மூலம் ஆங்காங்கே வெளிப்படுத்த பட்ட எல்லா கொள்கைகளையும் அரவணைத்த ---எல்லாவற்றையும் ஏற்று அதனை அடுத்த வளர்சியை நோக்கி அழைக்கிற கொள்கையாக மட்டுமே இருக்க முடியும்! நான்தான் சரி மற்றவர்கள் தங்கள் கொள்கையை விட்டு விட்டு வாருங்கள் என்றால் சண்டை தான் மிஞ்சும்!                                      
                             இந்து -கிறிஸ்தவ -முஸ்லீம் கொள்கைகளின் உண்மைகளை உள்வாங்கிய ஒரு கொள்கையால் மட்டுமே அதனை சாதிக்க முடியும்! காந்தி அரசியல் பணி முடிந்து தனது ஆன்மீக பணியை நிலைநாட்டும் முன் கொல்லப்பட்டது --உலகை மூழ்கடிக்கும் ஆன்மீக பேரலை அவர் மூலமாக வெளிப்பட இருந்த ஒரு வாய்ப்பு பறிபோனது!
நாமும் விவேகானந்தரின் ஆசையை கடவுளிடம் பிரார்திப்போம்!
எல்லாம் வல்ல ஏக இறைவன் தனது இறைதூதரை இந்தியாவிற்கு அணுப்புவாராக!!!

No comments:

Post a Comment