Total Pageviews

Sunday, March 2, 2014

ஆதி மனிதர்கள் கல்லறை ராமேஸ்வரத்தில் உள்ளது !

பைபிளிலும் குரானிலும் முதல் மனிதன் என்று குறிப்பிடப்படும் ஆதமின் இரண்டு ஆண்மக்களின் கல்லறை ராமேஸ்வரத்தில் உள்ளது !

ஆதி மனிதர்கள் மிக உயரமானவர்கள் ! ஒவ்வொன்றும் 60 அடி நீளமுள்ள இரண்டு மனிதர்களின் கல்லறை காலம்காலமாக இப்பகுதி மக்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது ! குரானில் ஆபில் மற்றும் ஹாயின் என் பெயர் குறிக்கப்பட்ட இவ்விருவரும் ஹலரத் அலை அதாவது புணிதமானவர்கள் என பட்டமளிக்கபட்டதால் இந்த கல்லறைகளை முஸ்லீம்கள் தர்காவாக மற்றி பராமரித்து வருகிறார்கள் !

இங்கிருப்போரிடம் பேச்சு கொடுத்தபோது சொர்க்கத்திலிருந்து ஆதமும் அவ்வாவும் பூமிக்கு துரத்தப்பட்டபோது அவர்கள் இலங்கை சிவனொளி பாதமலை  அல்லது  மகேந்திரமலைக்கு முதலாவது   வந்ததாகவும்  ஆதம் அந்த  மலையில்  இறைவனிடம்  மன்னிப்பு கோரி ஒற்றைக்காலில் தவம்  செய்த  பாத சுவடு அங்கிருப்பதாகவும் அங்கு இறைவனிடம் ஒப்புரவு ஆன பிறகு  அங்கிருந்து ராமேஸ்வரம் வந்து அவர்கள் வசித்தபோது முதலாவது இவ்விரண்டு ஆண்மக்கள் பிறந்ததாகவும் தெரிவித்தனர் !

ஆதம் என்றால் மண்ணிலிருந்து உண்டாக்கப்பட்டவன் என்று குரான் குறிப்பிடுகிறது ! இந்து வேதங்கள் சொல்லும் ஆதிமனிதனான மனு என்பவரும் மண்ணிலிருந்து உண்டாக்கப்பட்ட மண்ணு அதாவது மனு வும் ஒரே நபர் என்பது உண்மை இந்து தர்மத்தின் படியாக எப்போதெல்லாம் பிரளயம் உண்டாகி பூமியில் மனுக்குலம் அழிந்தாலும் மீண்டும் யார் மூலமாக மனுக்குலம் தழைக்கிறதோ அவர் மனு  ! பைபிளிலும் குரானிலும் சொல்லப்படும் ஆதம் என்ற  சிவன் முதலாம் மனு என்றால் அதில் ஜலப்பிரளயத்தின் பின்பு மனிதகுலம் தழைத்த  நோவாவும் ஒரு மனு

புணிதர்கள் என குரானால் ஒத்துக்கொள்ளப்பட்ட மனுவும் அவரது பிள்ளைகளும் கடைபிடித்த மனுதர்மமே உலகின் ஆதி இசுலாம் - இந்துதர்மமாகும்  !

குரானிலும் பைபிளிலும் ஆதாமைப்பற்றி தெரிவிக்கப்படுள்ளதால் அவர்களை வெளிநாட்டுகாரர்களாக இந்திய முஸ்லீம்களும் கிரிஸ்தவர்களும் பாவித்துக்கொள்வது தவறானது ! அவர்கள் தமிழர்களே !

இலங்கையும் ராமேஸ்வரமும் ஆதியில் மிக அருகாக இருந்து பின்னாளில் பிரிந்தவை ! ராமேஸ்வரத்தில் உள்ள கோதண்டராமர் கோவிலிலேயே ராமரிடம் ராவணனின் தம்பி விபீஸணன் சரணடைந்ததாக வரலாறு ! சேதுக்கரையிலிருந்து பாலம் மூலமாக ராமேஸ்வரம் வந்து ராமர் பாசறையில் இருந்த போது ராவணனை பிரிந்து விபீசணர் ராமரிடம் சரணடைந்தார் ! இலங்கை யுத்தம் முடிந்த பிறகு இலங்கையும் ராமேஸ்வரமும் பாலத்தால் இணைக்கப்படிருந்ததை விபீஸணரின் வேண்டுகோளுக்கிணங்கி ராமர் தனுசின் கோடியை - வில்லின் முனையை -- கொண்டு அடித்து உடைத்தார் அந்த இடமே தனுஸ்கோடி ! அத்தோடு யுத்தம் நடந்து பெருந்திரளான மனிதர்கள் அழிக்கப்பட்ட பூமி கடலுக்குள் அமிழ்த்தப்பட்டது இலங்கையும் ராமேஸ்வரமும் கடலால் பிரிக்கப்பட்டது ! ஆதி மனிதர்களின் பூமி என்பதாலேயே ராமேஸ்வரத்தில் முன்னோர்களுக்காக ஆத்ம சாந்தி வழிபாடு நடைமுறை ஸ்ரீராமரால் துவக்கப்பட்டது !

ராவணனின் மகளான சீதையால் மண்ணிலிருந்து பிடித்துக்கொடுக்கப்பட்ட லிங்கத்தை ராவணனாக ஆவாகித்து ஆத்ம சாந்திக்காக ஸ்ரீராமரால் கடவுளிடம் வேண்டுதல் செய்யப்பட்டது ! அந்த லிங்கம் ராமர் வழிபட்ட லிங்கமல்ல ; ராவணனது ஆத்மாவிற்கு அருள் பாலித்த ராவணேஸ்வர லிங்கம் ! இன்றும் ராமேஸ்வரம் கடலிலிருந்து எடுக்கப்பட்ட மண்ணை தங்களின் பெற்றோரின் நிணைவாக லிங்கமாக பிடித்துக்கொடுப்பதை லிங்க பூசை என ஓதுகிறார்கள் !

இந்த வாசகங்கள் அந்த ஆத்மா தூய்மையடையட்டும் என வேண்டுவதாக உள்ளது !

இந்த லிங்க பூசை தவிர மற்றைய சாங்கியங்கள் ஓதுவோர் தங்கள் பிழைப்புக்காக இட்டுக்கட்டியவையாக உள்ளது !



மேலதிக குறிப்புகள் :

ராமரின் காலம் திரேதா யுகம் 30000 ஆண்டுகளுக்கு முற்பட்டது !

பைபிள் 4000 ஆண்டுகளுக்கு முன்பு கடவுளால் சொல்லப்பட்டதை கேட்டு மோசே என்பவரால் எழுதப்பட்டது ! அதில் முதல் மனிதனான ஆதாம் முதல் ஜலப்பிரளயத்தால் பூமி மூழ்கடிக்கப்பட்ட நோவாவின் காலம் வரை 10 தலைமுறைகள் உள்ளன ! அவர்கள் ஒவ்வொருவரும் 1000 ஆண்டுகள் வரை வாழ்ந்தவர்கள் என்பதால் ஏறக்குறைய 10000 ஆண்டுகள் கடந்துள்ளன ! மோசேயால் எழுதப்பட்டதால் அவர்கள் யூதர்கள் அல்லது அரபியர்கள் என்பதாக தவறாக கருதிக்கொண்டுள்ளனர் ! இவர்கள் எங்கு வாழ்ந்தார்கள் என்ற குறிப்பு பைபிளிலும் குரானிலும் இல்லை !

சிவன் முதலானோர் பங்கு கொண்ட முதலாம் தமிழ் சங்கம் இருந்த தென்மதுரையும் லெமூரியாக்கண்டமும் கடல் கொண்டு அழித்ததாக வரலாறு உள்ளது ! இந்த முதல்யுகமே  மேற்கண்ட குறிப்பு ஆகும் ! ஆதாம் முதல் நோவா வரையிலாணவர்கள் லெமூரியாக்கண்டத்து தமிழர்களே !

ஆதாம் அல்லது மனு 900 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்தவர் ! கடவுள் அவரை படைக்கும்போதே அவருக்கு தேவதூதர்கள் பனிவிடை செய்யவேண்டும் என பணித்தார் ! அவரில் பாதியாளாக பாரியாள் அல்லது பார்வதி உண்டாக்கப்பட்டார் ! சிறு தவறால் அவர் பூமிக்கு அணுப்பப்பட்டாலும் சிவனொளி பாத மலையில் ( இலங்கையில் உள்ளது ) கடும்தவம் செய்து கடவுளோடு ஒப்புறவானார் ! அதன் பிறகு அவர் கடவுளோடு வாழ்ந்தார் ! அவருக்கு தேவதூதர்கள் சேவை செய்தனர் ! மண்ணுலகில் அவர் வாழ்ந்த காலத்தில் அவர் இறைவனின் பிரதிநிதியாக மனிதர்களுக்கு வழிகாட்டினார் .அவரை குருவாக வைத்து கடவுளை வழிபடும் பழக்கம் இருந்தது . அவர் முழு தகுதி பெற்று அழியாத ஒளி சரீரமாக தனது தேகத்தை மாற்றும் தகுதி பெற்றார் . வைரம் போன்ற ஒளி சரீரம் பெற்றதாலேயே அவரை வைரவன் என்றார்கள் . அப்படி ஒளி சரீரம் பெற்று கடவுளிடம் பரலோகம் சென்றார் ! அங்கு அவருக்கு வானவர்களின் யுத்த சேனைக்கு தலைமைப்பதவி அதாவது ருத்ரன் அல்லது மீகாயேல் பதவி வழங்கப்பட்டது அதனாலேயே அவர் கடவுளுக்கு இணையானவராக அலை என்ற பட்டம் குரானால் வழங்கப்பட்டுள்ளது !

குரானில் இறைதூதர்கள் அதாவது நபிகளில் இரண்டு வகை உள்ளது ! ஆதாம் ; மோசே , இயேசு முதலானோர் ( அலை ) என்றும் மற்ற நபிகள் ( சல் ) என்றும் குறிக்கப்பட்டிருப்பர் ! முஹமது நபி ( சல் ) போன்றோர் மரித்தபின்பு பூமியிலேயே நியாயத்தீர்ப்புக்காக காத்திருப்பவர்கள் ! இன்னும் விண்ணுலகம் செல்லாதவர்கள் ! ஆனால் அலை என குறிக்கப்பட்டோர் விண்ணுலகம் சென்றவர்கள் ! கடவுளை நெருங்கியவர்கள் !

அவ்வறு தேவதூதர்கள் புடை சூழ பல அற்புத அதிசயங்களை செய்த ஆதாமே மேரு மலையில் வாழ்ந்ததை சிவனாக உலகம் புணைந்து கொண்டது ! ஆனால் அவர் சதா கடவுளை தியானிக்கிறவராகவே வாழ்ந்தார் ! சற் குருவாக பூமிக்கு வழிகாட்ட இவர்களுக்கு தகுதி உள்ளது ! சிவனே தன்னை குருவாக தட்சிணாமூர்த்தியாகவே அறிவித்துக்கொண்டார் ! இவர்கள் மூலமாக அருப இறைவனை வழிபடுவதே ஆதி சனாதன வழிபாடு !

சிவனை குருவாக வைத்து கடவுளை வழிபடுவதற்கு பதிலாக சிவனையே குலதெய்வ வழிபாடாக வழிபடும் முறை தலைதூக்கியபோது : அத்தகைய வழிபாட்டுக்கார்கள் தங்களின் பெயருடன் ஈஸ்வரன் என இணைத்துக்கொண்டனர் -- ராவணனைப்போல ! ஓரிறைவனையே துதிக்கிறோம் சிவனின் நாமத்தினாலே என்ற தூயனெறியே ஓம் நமோ சிவாய . ஓம் சிவாய நம என்றால் சிவனாக பெளிப்பட்ட ஓரிறைவனையே துதிக்கிறோம் என்றே அர்த்தம்  ! ஆனால் சிவனையே வழிபடுவதாக உலகம் அதை திரித்துக்கொண்டது

அந்த வழிபாட்டு முறையை அழித்து மீண்டும் அருப - ஏக இறைவனை வழிபடும் வைணவ நெறியை நிலைனாட்ட இறைவனது தூதராக - நாராயணனது அவதாராமாக பூமிக்கு வந்தவரே ஸ்ரீராமர் !

வைணவமே உலகின் முதலாவது ஏக இறை வழிபாட்டு நெறி ! அதன் மகா மந்திரம் `` ஓம் நமோ நாராயணாய `` ஓரிறைவனையே துதிக்கிறோம் நாராயணன் நாமத்தினாலே என்பதாகும் !

அதுபோல ஆதாமை ; சிவனை குருவாக வைத்து ஏக இறைவனை துதிக்கும் மந்திரம் ``ஓம் நம சிவாய `` சிவனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே  நமஸ்கரிக்கிறோம்  என்பதாகும்



நாராயணனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணனாய

சிவனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ சிவாய

சேஷனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ சேஷாய

நாராயணியாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணியாய

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி 





1 comment:

  1. ஆதி மனிதர்கள் கல்லறை ராமேஸ்வரத்தில் உள்ளது !

    ReplyDelete